வியாழன், 11 ஆகஸ்ட், 2011

உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...?

ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் ஆதாயம் அடைந்தவர்கள் யார்? உள்நாட்டு, வெளி நாட்டு சதிகளின் முழுமையான தகவல்கள்தான் என்ன? திருச்சி வேலுச்சாமியின் சு.சாமி பங்களிப்பு குறித்து விசாரணைகள் இல்லையா? லிபியாவுக்கு ஓடிய நேட்டோ இலங்கைப்பக்கம் செல்லாததற்கு தனித்த காரணம் என்று ஒன்று உண்டா? இலங்கை அதிபரைப்பார்த்து அமெரிக்க அச்சப்படுவதற்கு தனித்த காரணம் உண்டா? அதேபோல் இந்தியா குறித்தும் ஏராளமான கேள்விக்கணைகள் உள்ளனவே? பதில் உண்டா? இந்தியாவுக்கு அதிக பயன் விளைவிக்காத உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறும் துணிவு உண்டா? குற்றம் சுமத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்கு கொடுத்த நீதிதானே இப்போது மீதம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்? சரியோ, தவறோ யாருக்காவது எப்படியாவது தூக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும் என்று சடங்கு ஆக்குவதா? (சடங்கு என்றால் காரண காரியம் கேட்கப்படாது)
சிங்களவனால் தமிழக மீனவர் (இந்தியா மீனவர்?) பாதிப்புக்குள்ளாவதை தடுக்க வேகமான முடிவுகள் எடுக்காத மத்திய அரசை ஏன் என்றாவது இதுநாள்வரை குறைந்தபட்சம் எழுத்து மூலமாகவாவது கண்டித்து, கேட்டிருப்பாரா இந்திய குடியரசுத்தலைவர்? அவர்தான் முப்படைகளுக்கும் தலைவர்?
உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...? குற்றவாளி தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறப்படுவது எல்லாம் என்னவாயிற்று?

வெள்ளி, 18 மார்ச், 2011

கழகத் தலைவர் கழகப் பொறுப்பேற்ற 33ஆம் ஆண்டு!

கழக உறவுகளின் ஒத்துழைப்போடு, அன்போடு
உயிரினும் மேலான என் லட்சியப் பயணம் தொடரும்!

கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை


அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப்பிறகு கழகப் பொறுப்பை ஏற்ற இந்த நாளில் (18.3.1978) தமது வெற்றிப் பயணத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், அவர்கள் உருவாக்கிய அரியதோர் புரட்சி இயக்கமாம் நம் திராவிடர் கழகத்தையும் பாதுகாத்து கடமையாற்றிய தியாகத்தின் புடம்போட்ட தங்கம் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் மறைந்த (16.3.1978) பிறகு, அய்யா, அம்மா ஆகியோரின் கட்டளைப்படியும், கழகப் பெருங் குடும்பமான பெரியார் தொண்டர்களாம் நம் இருபால் தோழர்களின் ஆணைப்படியும் நான் பொறுப்பேற்று, 32 ஆண்டுகள் முடிந்து, 33ஆம் ஆண்டுப் பணி தொடங்கும் நாள் இன்று (18.3.2011).

என்னைத் தூக்கிச் சுமந்த தோள்கள்

பெரியார் நூற்றாண்டு தொடங்கியது அப்போது; அது முதற்கொண்டு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும், வம்புகள், வசவுகள், வல்லடி வழக்குகள், இவை ஒருபுறம் நம்மை நோக்கி!

மற்றொருபுறம் நல்லெண்ணம் படைத்த சான்றோர்கள் பலரும் இந்த எளியவனுக்கு ஊக்கத்தையும், உற்சாகத் தையும் தந்து உயரத்தைக் காட்ட தத்தம் வாழ்த்துரை, பாராட்டுரை என்று அவர்தம் வலிமைமிக்க தோள்களில் என்னைத் தூக்கிக் காட்டி, பெரியார் இயக்கம் குன்றென உயர்ந்த இயக்கம், கோடிக்கணக்கான மக்களின் மான வாழ்வுக்கும், உரிமைப் போருக்கும் என உழைக்கும் ஒரே சமூக இயக்கம் என்பதால் இது தாழ்ந்துவிடவோ, வீழ்ந்து விடவோ கூடாது என்று, இனமானம் கருதி எமக்குப் பேராதரவு தரத் தவறவில்லை.

நம் கழகக் குடும்பங்களில் உள்ள நம்முடைய உறுப்பினர்கள், தாய் தந்தையர்களைப் போன்றும், உற்சாகம் குன்றா உடன்பிறவா சகோதரர்கள் போலவும் உள்ளனர். ரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசத்தைக் கொட்டிடும் குடும்பங்களாக ஆதரவு நல்கி, கொள்கைப் பாதையிலிருந்து துளியும் நழுவாமல், வழுவாமல் உறுதியுடன் நடைபோட்டு, பயணங்களில் சூறாவளிகளும் சுனாமிகளும் சுழன்றடித்தாலும் சோர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பெருந் துணையாக நிற்கின்றனர்!

கட்சி வேறுபாடுகளைக் கருதாமல், இன உணர்வோடு எமது பயணத்தை நடத்திட, என்றும் உரமூட்டும் நண்பர்கள் அனைத்துக் கட்சிகளிலும் ஏராளம் - உலகம் முழுவதும்!

எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி!

இவை எல்லாம் நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெருந்தொண்டினால் விளைந்த கதிர்மணி களைப் போன்றவை. எனவேதான் எத்தனை இடுக் கண்கள் வந்தாலும் எமது பயணம் எப்போதும் இலக்குத் தவறாத இனிய பயணமாகவே நடைபெற்றுக் கொண் டிருக்கிறது!

இளமைமுதல் இன்றுவரை யாமறிந்த கொள்கை, தலைமை, அது தந்த லட்சியப் பாதை - இவற்றைக் கட்டிக் காப்பதை கண்ணை இமை காக்கும் கடமைபோல் செய்து வரும் எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி; எவ்வளவு உற்சாகம்!

நாம் பதவிகளை, புகழை நாடாத மான வாழ்விற்கு சுயமரியாதை சுகவாழ்வினைப் பெரியாரால் பெற்றோம். துயர் வரினும் துணிவுடன் எப்போதும் பயணிக்கும் ஆற்றலை அதனால் பெற்றோம் என்று எண்ணி மகிழ்வதே - இப்பணிக்கு யாம் பெறும் ஊதியம் ஆகும்!
இடையில் உடல் நலம்கூட போதுமான ஒத்துழைப்பு தருவது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். மருத்துவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

கீர்த்தி பெறுவதற்கான கிரீடம் அல்ல எனக்கு அய்யா அம்மா தந்திட்ட பொறுப்பு. நேர்த்தியுடன், நேர்மையுடன் லட்சியங்களை செயல் களாக்கிக் காட்டிடும் செழுமிய பணியாற்றுவதற்கே என்று கருதி என்றும் உழைத்துக் கொண்டிருப்பவன் நான்.

எனது போனஸ் வாழ்வு!

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது, இப்பணிக்குக் கிடைத்த போனஸ் வாழ்வு - பொருளற்ற வாழ்வாகி விடக் கூடாது; பொறுப்புகளை சரிவர நடத்தும் பொன்னான வாய்ப்புள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற உறுதியும், ஒவ்வொரு கழகக் குடும்பத் தவரும் காட்டும் பரிவும், பாசமும் என்னை உழைத்துக் கொண்டே இரு; ஓய்வு என்பது ஒரு பணியிலிருந்து மறுபணிக்கு மாறுவதே என்ற உன்னதத் தத்துவத்தைப் போதிப்பதாக அமைந்துள்ளது.

நமது இலக்கு நோக்கிய இந்த இயக்கப் பணிகளில் - பயணத்தில் - அடைந்த வற்றைவிட, அடைய வேண்டியவை ஏராளம்!

எம் பணி தொடரும்!

தந்தை பெரியார் கொள்கை, மானுடத்தின் மகத்தான விடியலை ஏற் படுத்தும் புது நெறி; புரட்சி வழி என்பதால் அதனை உலகம் முழுவதும் பரவிடச் செய்ய, சோர்வறியாது உழைக்க, மேலும் உறுதி எடுத்துக்கொண்டு, இப் பணிக்கு எம்மை உற்சாகப் படுத்தும் கொள்கைக் குடும்ப உறவுகளுக்கும், சான்றோர்களுக்கும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். அடக்கத்தோடு அரும்பணி தொடர அனைவரது ஒத்துழைப்பையும் யாசிக்கிறோம்; உயிர் மூச்சுள்ள வரை, உயிரைவிட மேலான லட்சிய மான பெரியாரின் தத்துவங்கள், உலக மக்கள் நெஞ்சில் விதைக்க எம்பணி தொடரும் என்று உறுதி கூறுகிறோம்.

நாணயம் தவறாத நல்வாழ்வு என்ற கொள்கை வாழ்வாக அமையட்டும் நம் வாழ்வு!
உங்கள் தொண்டன், தோழன்,

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

- http://viduthalai.in/new/component/content/article/40-current-news/5645--33-.html?sms_ss=blogger&at_xt=4d836d8911ffcd66%2C0

செவ்வாய், 15 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-53

இவ்வாறு ராணியைச் செய்ய முடியாமல் போயிற்று. பல பாராக்கள் இருந்ததாலும், ராணியென்று நினைத்து வேறொருத்தி காலைப் பிடித்திழுத்ததாலும் அவர்கள் ஜீவித்துக் கரையேறினார்கள்.

இதை நன்குணர்ந்த தமிழ் மந்திரியானவர் ஒரு மாசம் காசி ராஜாவிடத்திலிருந்து தன் தொழிலை முறையாகப் பார்த்ததுடன், பார்ப்பனர்களுக்கும், காசி குண்டாக்க ளென்ற போக்கிரிக் கொலைகாரர்களுக்கும் பெரும் உதவிகள் செய்து, பெருந் தர்மாத்மா என்று பேர் வழங்கும்படிச் செய்தார்கள்.

இரண்டு மாதம் போக, ஒரு தந்திரமாகத் தஞ்சாவூர் ராஜனிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவும், அக்கடிதத்தில் வரைந்துள்ள விஷயங்கள் தஞ்சாவூர் ராஜாவினுடைய முத்து வியாபாரக் கப்பல் சமுத்திரத்தின்கண் அமிழ்ந்து போனதாகவும், அக்கப்பல் எவ்வளவோ கோடி ரூபாய்க்கு இரத்தினங்கள் நிறைந்த தென்றும், அவைகளை மூழ்கி எடுப்பவர்கட்குத் தினம் ஒன்றுக்கு ரூ.10-ம், பக்கா போஜனமும் அளிப்பதாகவும் பிறகு, எடுத்த பொருளிலிருந்து தகுந்த பங்கு கொடுப்பதாகவும், அதற்கு எவ்வளவு ஜனங்கள் கிடைத்த போதிலும் வேலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளுகின்றே னென்றும், ஆனால், குறைந்த அளவு ஒரு மணி நேரத்திற்கு மேல் எவ்வளவு நேரம் அதிகம் மூழ்கிப் பழக்கப்பட்டவர்களானாலும், அவர்களுக்கு அதிக சம்பளமும், பக்கா போஜனமும் கொடுக்கப்படவேண்டு மென்றும், இதற்கு ஜனங்களைச் சேர்ப்பதற்குத் தனிச் சம்பளங்கொடுப்பதென்றும் பிரசித்திப்படுத்தினார்கள்.

இவ்வாறு விளம்பரம் பண்ணவே, ஒரு மாதத்துக்குள் 370 ஜனங்கள் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரையிலும் தண்ணீரில் மூழ்கிப்போக வல்லவர்களாய்ச் சேர்ந்தார்கள். பிற்பாடு மந்திரியானவர் இவர்களிடம் கேட்டுக் கொண்டதாவது:

குறைந்தது அய்ந்நூறு பேராவது சேர்க்க முடியுமா? அப்படிச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய வேலை கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு அவர்களில் தலைவனாகிய ஒருவன், இப்போது காசியிலுள்ள ஜனங்களில் நீரில் மூழ்கப் பழக்கமுள்ளவர் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்.

அதிகமாய் இன்னும் வேண்டுமாயினும் கான்பூரிலும் கிடைப்பார்கள் என்று பதில் கூறினான். கான்பூரிலிருந்து ஜனங்களை அழைத்துவர நாளாகும். வேண்டுமானால் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி, நாம் நாளைக்குப் புறப்பட வேண்டும். வீட்டில் இருக்கிற பெண் மக்களுக்கு மாதச் செலவுக்கு ராஜாங்கத்திலிருந்து மாதப் பணங்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டியதிருக்கிறது என்று சொல்லி, இந்த ஜனங்கள் அத்தனை பேர்களையும் வைக்கோலினால் செய்த ஒரு பெரிய கோட்டைக்குள் ராத்திரி படுக்கச் செய்து, நாளை காலையில் 3 மணிக்கு யாத்திரை செய்ய வேண்டுமென்று, அவர்களுக்குச் சொல்லிவிட்டு, நடுநிசியாக 12 மணி நேரத்திலே சிப்பாய்களை வரவழைத்து, நீரில் முழுகி, முழுகிப் பழக்கப்பெற்றோர் படுத்துக்கொண்டிருக்கும் கோட்டையை ஒரே சமயத்தில் பலவிடங்களிலும் நெருப்பு வைத்து எரியச் செய்தனர். உடனே ஜனங்கள் எழுந்திருந்து ஓடிப்போக முயன்றபோது, வழி கிடைக்காமல் நெருப்பில் வந்து விழுந்து வெந்து மாண்டார்கள்.

அதிலும் தப்பி யோடிய சிலரைக் குண்டு போட்டுச் சுட்டுப் போட்டார்கள். அதற்குப் பிற்பாடு கங்காதேவி நகை போட்டவர்களை அழைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டாள். இப்பொழுதுங்கூட பூரணமாக நிற்கவில்லை. சில சமயங்களில் நகைகள் பெருக்க அணிந்துகொண்டு ஏமாந்து நீராடும் ஜனங்களைக் கங்காதேவி அழைப்பது வழக்கம்தான்.

இக்காலங்களில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், யாத்திரையாக வந்த ஜனங்கள் பார்ப்பனர்கள் சொல்லக்கூடிய கருமங்களையெல்லாம் செய்து, போகுந்தருணத்தில் அவர்களுடைய விலாசம் முதலியவற்றை எழுதின பின்பு விருந்திடுவதுண்டு.

இதில் இரண்டு பேர் மூன்று பேரானால் இராத்திரிக்கே கங்கையில் போய்விடுவார்கள். அவர்கள் கொடுக்கும் சில சாமான்களில் யாதோ கலந்து கொடுப்பதென்பது உலகப் பிரசித்தம்.

பிணங்களை எடுத்துக் கங்கையில் போடு வதற்கும் ஒருவனைக் கொலை பண்ணுவதற்குங்கூட மூன்று ரூபாயிலிருந்து அய்ந்து ரூபாய் வரைக்கும் போதுமாம். இதைக் காசி யாத்திரை போகிறவர்கள் நன்றாய் விசாரித்துத் தெரிந்து வரும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மேற்படி செய்கை செய்கிறவர்களில் கேதாரக் கட்டத்தில் கோவிந்தானந்தன் என்னும் பெயருள்ள ஒருவன் இன்னும் ஜீவித்திருக்கிறதாக ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.

இச்செய்திகளை நன்றாய் வாசித்துக் கவனத்தில் வைத்து விசாரித்து நம்பினால் போதும். தீர்த்த, ஸ்தலங்களும் நமது ஆலயங்களும், விபசாரம், பொய், திருட்டு, கொலைகள் என்கிற பஞ்சமா பாதகங்கள் செய்யும்படிக் கற்றுக்கொடுக்கும் ஒரு பஜார் அல்லது பள்ளிக்கூடமாக முடிந்ததைப் பற்றி யார்தான் வருந்தாமலிருக்க முடியும்?

வேதசாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள் ரிஷிபுங்கவர்களின் பிறப்புத் தன்மை
கலைக்கோட்டு ரிஷி மானுக்கும், கவுசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், வால்மீகி வேடனுக்கும், அகஸ்தியர் குடத்திலும், வியாசர் செம்படத் திக்கும், வசிஷ்டர் ஊர்வசிக்கும், நாரதர் வண்ணாத் திக்கும், காதனசல்லியர் விதவைக்கும், மதங்கர் சக்கிலிச்சிக்கும், மாண்டவியர் தவளைக்கும், சாங்கியர் பறைச்சிக்கும், காங்கேயர் கழுதைக்கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜம்புவந்தர் கரடிக்கும்,அஸ்வத்தாமன் குதிரைக்கும் பிறந்தனராம்.

(நிறைவு)

- http://viduthalai.in/new/page-3/5410---53.html?sms_ss=blogger&at_xt=4d7ef4666d2208af%2C0

ஞானசூரியன் தொடர்-52

வயது முதிர்ந்த ராணியோ, இருக்கப்பட்ட விலையுயர்ந்த எல்லா நகைகளையும் அணிந்து பல தாதிகளுடனும், ராஜஸ்திரீகளோடும் தனது புத்திரனாகிய ராஜனோடும், நான் இன்றைக்குக் கங்கையோடு சமமாகக்கலந்து வாழப் போகிறேனென்று யாத்திரை சொல்லிக் கங்கை வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அக் கிழராணியைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லோரும் ஒவ்வொருவருடன் ஒவ்வொருவரும் பலமாகக் கோத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். கிழ ராணியின் முப்பக்கங் களிலுமிருக்கிற பெண்கள் அடிக்கடி மாற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

இப்படியிருக்கப் பார்ப்பனப் புரோகிதர்கள் அங்குமிங்குந்திரிந்து ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டும் மார்பைத் தடவி நெடு மூச்சுவிட்டுத் துக்கித்துக் கொண்டும் இருந்தார்கள். அத்தருணத்தில் வரிசையாய் நின்று கொண்டிருந்த தாதிகளில் ஒருத்தியைக் கங்காதேவி நீரிலிழுத்துவிட்டாள். அவர்களோ, முன்னமே ஒருவருக்கொருவர் சேலையை முடிபோட்டுக் கொண்டிருந்ததாலும், கைகளை ஒருவருக் கொருவர் பலமாகக் கோத்து உறுதியாகப் பிடித்துக் கொண்டதனாலும், நாலு, அய்ந்து தாதிகள் உடனே கங்கையில் விழுந்துவிட்டார்கள். எல்லோரும் ஒன்றுபோல ஒருவருக்கொருவர் பலமாய்க் கைகோத்து இழுபட்டு விழுந்தவர்களையும் கூட விழுந்தவர்களையும் வலித்து இழுத்து யாவரும் கரையேறினார்கள்.

இவ்விதம் கங்கையில் இழுபட்டு விழுந்த தாதியும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டாள். பிறகு, ராணியிடத்தில் மந்திரியும், ராஜாவும் கலந்துபேசி, இனிக் கங்கைதேவி தங்களை இன்றைக்கு அழைத்துப் போகமாட்டாள்; நாளைக்கு எவ்விதமான பூசை போட்டாவது கங்கையை வரவழைப்போம். பிராமணர் களிடத்தில் வேண்டிய விசாரணை செய்து நன்றாகத் தெரிந்துகொண்டு கங்கையோடு தங்களை அழைத்துப் போகாததனால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித் தாயாராகிய ராணியை ஸ்நானம் பண்ண வைத்துத் தங்கள் வசிக்கும் விடுதிக்குச் சென்றுவிட்டார்கள். பிற்பாடு, மந்திரியும் ராஜாவும் கலந்து புரோகிதரையும் மற்றும் பல பார்ப்பனரையும் விசாரித்ததில், அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வருமாறு: கங்காதேவி பாவிகள்நிறைந்த இடத்திற்கு வரமாட்டாள். ஆதலால், ராணி தனியாகவே நீரில் இருக்கவேண்டும். கங்கையில் ஸ்நானத்திற்கு வரும் ஜனங்கள் சிப்பாய்களால் தடை செய்யப்படாமலிருக்க வேண்டும். பாக்கியுள்ள தாதிகளும், ராணியினுடைய சரீரத்தைத் தொடாமலிருக்க வேண்டும். மறைப்புக்குள் ராணி இருக்கக்கூடாது. சில பிராமணர்கள் அங்கிருந்து பூசை செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கங்கை வருவாள். இன்றைக்கு அங்கு வந்தவர்களில் யாரோ பாபிகளிருந்திருக்கலாம். ஆதலால், ராணியைக் கங்கா தேவி தொடாமற்போனதென்றாலும் மற்றொரு தாதியை இழுத்ததற்குக் காரணம், அவள் ஜென்மாந்திரத்தில் பெரிய புண்ணியம் செய்தவளாயிருப்பாள்.

பாவங்களில் யாதோ சிறிது சம்பந்தமிருக்கும். அதனால்தான் இவளை இச்சமயத்தில் அழைக்காமல் இருந்தது. இவ்வாறு விஷயங்களைச் சொல்லி முடித்த பின், அவர்கள் எல் லோரும் போய் விட்டார்கள்.

பிற்பாடு, மந்திரி யும், ராஜாவும் விலை யுயர்ந்த சாமான் களைச் சன்மானமாக எடுத்துக்கொண்டு போய்க் காசி ராஜாவைத் தரிசித்தபின், இந்தக் கங்காதேவி அழைப்பு விஷயத்தைப் பற்றிச் சிறிது சம்பாஷணை நடந்தது. அப்போது பல பிராமணர்கள் இருந்த காரணத்தால், காசி ராஜாவானவர், ராஜா கேட்ட விஷயத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து, இவ்விருவரையும் அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, காசி ராஜாவானவர் துக்கத்தோடு உள்ள விஷயத்தை உண்மையாய்ச் சொன்னார். அப்போதே இவர்களைத் தாக்கீது செய்து, நான் சொன்ன விஷயம் பிராமணர் களுக்குத் தெரிந்துவிட்டால், எவ்வாறாயினும் சூழ்ச்சி செய்து என்னைக் கொலை செய்துவிட எத்தனிப்பார்கள். அதனால் யான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. தாங்களும் இவ்வூரைவிட்டு ராணியை அழைத்துக் கொண்டு தங்கள் சுயராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுப் போங்கள் என்று சொன்னார். அதற்கு இந்த ராஜாவினுடைய மந்திரியார், நான் இதற்குத் தகுதியான ஏற்பாடு செய்து, தாங்கள் சொன்ன விஷயத்தைச் சரியாகத் தடுத்துவிடுகிறேன். எனக்கு மூன்று மாத காலம் மந்திரி வேலை கொடுங்கள் என்று சொன்னார். அதற்குக் காசிராஜா இசைந்து, அந்த மந்திரியாருக்குக் காசிராஜாவின் மந்திரியின் உத்தியோகத்தை ஆறு மாத காலத்துக்குப் பார்க்கும்படியாகக் கொடுத்துவிட்டார். கங்கையோடு சேரப்போன ராணியும், மகாராஜாவும், ராஜாங்கமும், திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிறகு இந்தத் தமிழ் மந்திரி, காசிக் கங்கையில் எவ்வாறு ஜனங்கள் இழுக்கப்பட்டுப் போகிறார்கள் என்பதை விசாரணையில் விளங்கிக் கொண்டார். அது விபரமாவது: காசி நகரத்தில் கருவெட்டல் நிறுத்தப்பட்ட பிற்பாடு, அந்நாட்டிலிருக்கும் பார்ப்பனர்களும் புரோகிதர் களும் அந்நாட்டில் பிரசித்திபெற்றுள்ள தோணியோட்டி களும் வஸ்தாதுகளாகிய ஒருவிதக் கொலைகாரச் சோம்பேறி மடையர்களும் ஒற்றுமையுடன் கலந்து செய்யும் நிகழ்ச்சியாம். தோணியோட்டிகளும், சோம்பேறிகளும் தண்ணீரில் 3 அல்லது 4 மணிநேரம் மூழ்கிக் கிடக்கப் பழகி, ஜனங்கள் ஸ்நானம் பண்ண இறங்கும்பொழுது கூடவே அவர்களும் இறங்கிக் காலைப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குக் கீழாகவே ஒரு மைல் தூரங்கொண்டு போய்க் கொலை செய்து, நகைகளைக் கொள்ளை கொள்ளுவதும் வழக்கமாம். இந்த நகையில் கொலை பண்ணுகிறவனுக்கும், புரோகிதனாகிய கங்கா புத்திரனுக்கும் சமமான பங்குள்ளதாம். -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5342---52.html?sms_ss=blogger&at_xt=4d7ef406fd124525%2C0

வெள்ளி, 11 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-51

தற்காலம் மாட்சிமை தங்கிய கனம் ஆங்கிலேய அரசாட்சியால் இக்கொடுஞ் செய்கைகள் தடுக்கப்பட்டிருக் கின்றன. இதுபோன்ற பல இந்துமதாச்சாரக் கொடுமை களும், காருண்ய கவர்ன்மெண்டாரால் தற்காலம் தடுக்கப் பட்டிருக்கின்றன. அதாவது சககமனம் (உடன் கட்டை யேறுதல்), காளிகோயில் நரபலி முதலியனவாம்.

காசியின் இரண்டாவது மோசம் அதாவது, அரசாங்கத்தாரால் அக்கருவெட்டல் தடுக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு சூழ்ச்சியால், அவ்வன்கணாளர்களாகிய பார்ப்பனர்களோவென்றால், யாத்திரைவாசிகளைக் கொலை செய்து ஜீவனோபாயம் சிறிது காலம் செய்து ஜீவித்து வந்தார்கள். அந்தச் சூழ்ச்சி எவ்வாறெனின், சில காலத்திற்கு முன் படிப்பும், நாகரிகமும் முறையாக இக்காலத்திலுள்ளது போலில்லை என்று எவர்களும் அறிவார்களல்லவா! அக்காலங்களில் தனவான்கள் ஆடைகளையும், ஆபரணங்களையும் மிகுதியாயணிந்த தமது தனப்பெருக்கத்தைப் பிறருக்கு அளிப்பது வழக்கம். இப்போதும் அது முற்றும் குறைந்தபாடில்லை. சில அறிவீனர்கள் தங்கள் தங்களுடைய குழந்தை களுக்கு அதிகமாக ஆபரணங்கள் அணியச் செய்து அழகு பார்க்குங்காரணத்தால் குழந்தைகள், திருடர்கள் கையினால் கொலையுண்டு போவதை அடிக்கடி கேள்விப் படுகிறோமல்லவா? அவ்வாறே அக்காலத்தில் காசி யாத்திரை செய்பவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் மிகுதியான நகைகளணிந்து காசிக்கு வருவார்கள். இங்ஙனம் யாத்திரைவாசிகளுக்கு உடனிருந்து கருமஞ் செய்விக்கும் குருக்கள் அல்லது பார்ப்பனப் புரோகிதர் களிடஞ் செல்லுவர். அப்புரோகிதர் நிலை யாதெனில், கொலை செய்யும் இரண்டு குண்டர்களையும் (தடிச் சோம்பேறிகள்) பல போக்கிரிகளையும் உடன் வைத்திருப்பார்கள்.

அக்குண்டர்களோ 3,4,5 மணிநேரம் ஜலத்தினுள் மூழ்கியிருக்குந் தன்மையில் பயிற்சி பெற்றவர்கள். இப்புரோகிதன் தன்னையடைந்த யாத்திரைக்காரர் களைஅழைத்துக் கங்கையில் சங்கற்ப ஸ்நானம் செய்யப்போகும் தருணத்தில் குண்டர்களிலொருவனை உடன் அழைத்துச் செல்வான். கங்கையை அடைந்து மூழ்குந் தருணத்தில் இக் குண்டனானவன் இவர்களுடன் தானுமொருவனாய், மூழ்கியவர்களில் மிகுதியாக நகை அணிந்திருக்கும் ஆணையாவது, பெண்ணையாவது ஜலத்திற்குள் ஒன்று அல்லது இரண்டு மைல்களுக்கப்பால் இழுத்துக் கொண்டு போய்விடுவான்.

எஞ்சி நின்றோர் ஸ்நானம் முடிந்த பின்னர் உடனிருந்து காணாமற்போன தமது அருமை மகனெங்கே? மகளெங்கே? என்று தேடித் திகைக்குங்கால், அந்தக் கங்கைக்கரையிலுள்ள பார்ப்பனர்கள் இக்குருக்களுடன் கூடிக் கொண்டு, மணியடித்து அர்ச்சித்துக் கற்பூரமேந்தி பற்பல வடமொழிப் பாட்டுகளைப் பிதற்றிக் கங்கைக்குப் பூஜை செய்வார்கள். அத்தருணம் கங்கைக்கரையில் பெருங்கூச்சலாகவே இருக்கும். காணாமற் போனவர் களுடைய பெயரைக் கேட்டு, அவர்களைக் கங்கா தேவியே வந்து அழைத்துச் சென்றாளென்றும், அவர்கள் மிகுந்த பாக்கியவான்களென்றும், அப்புண்ணியவான்களின் பொருட்டல்லவா எங்களுக்கும், உங்க ளுக்கும் அக்கங்கா தேவியின் தெரிச னங்கிடைக்கப்பட்ட தென்றும், இதனால் உங்களுடைய குடும் பம் இனிமேல் மிக க்ஷேமமடையுமென் றும் சொல்லிக் கங்கையின் பேரிலும் விஸ்வநாதர் பேரிலும் பாக்கள் பாடி, அவர்களுடைய துக்கத்தை மாற்றுவார்கள். பறிகொடுத்த யாத்திரைவாசிகள் மனங்கொதித்துக் கண்ணீர் வடிய, மெய்சோர்ந்து, கன்றிழந்த பசுவைப் போலும் கதறிக் காசி யாத்திரை போதுமென்றும், சொல்லித் தம் நாட்டிற்குத் திரும்புவார்கள். அந்தோ! இவ்வாறு சிறிது காலம் நடந்தேறிய பின்னர், கங்காதேவி புனிதர்களை அழைத்து அழியாப்பதவியாகிய சுக வாழ்க்கையை நல்குகிறாளென்ற வசனம் எங்கும் பிரசித்தமாய்விட்டது. அவ்வாறிருக்க, நமது தென்னாட்டு அரசர்களில் ஓர் அரசனுடைய தாயாரிடத்தில் பார்ப்பனர்கள் சென்று காசி மகிமைகளைப் பற்றிப் பலவிதமாகச் சொல்லி, அதற்குச் செல்ல வேண்டுமென்னும் ஆசையை எழுப்பவே, அந்த வயது முதிர்ந்த இராணி கங்கா தேவியிடம் போய், அழியாப் பதவிகளாக வேண்டுமென்று எண்ணங் கொண்டாள். என்னையும், கங்காதேவியார் கருணை புரிந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளுவாளா? என்று கேட்டதற்கு, அந்தப் பிராமணர்களுடைய விடை யாதெனில், ஓ மகாராணியே! பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்கிறவர்களையும், ஏராளமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கக் கூடிய புண்ணிய சீலர்களையும், மட்டுமேதான் அப்பதவிக்கு அழைப்பது வழக்கம என்று கூறினர். இவற்றைக் கேட்ட நாள் தொடங்கி அந்த இராணியானவள், அரண்மனை யிலுள்ள பொருள்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தும், நகைகளைப் புதிது புதிதாகச் செய்து அணிந்து கொண்டும் வந்தாள்! பிறகு தனது புத்திரனாகிய ராஜனோடும், ராஜ அங்கங்களோடும் புறப்பட்டுப் போய்க் காசியைச் சேர்ந்தாள்.

அப்பொழுது பார்ப்பனர்களும், ராஜபுரோகிதர்களும் கலந்து அநேக லக்ஷம் பெறுமான நகைகளை அணிந்து கொண்டிருக்கிற இராணியைக் கங்கையில் இழுத்துச் செல்வது எவ்விதமென்று யோசனை செய்து தீர் மானித்தனர். ஆனால், கங்கையோ ஸ்நானஞ் செய்யுமிடம் மிக ஆழமாயும், பல ராஜ ஸ்திரீகளும் அவரவர்களுடைய தாதிமார்களுஞ் சேர்ந்து ஸ்நானக் கட்டத்தில் நமது மகாராணியை இன்றைக்குக் கங்காதேவி அழைத்துக் கொண்டு போவாளென்று எதிர்பார்க்கிறதாயிருந்தாலும், ஸ்நானம் செய்யுமிடம் பெரிய கூடார, மறைவினால் முப்பக்கமும் மதில்போல் மறைக்கப்பட்டிருந்தது. அந்த மறைப்பைச் சுற்றிலும் பல சிப்பாய்களும், துப்பாக்கியுடன் பாராக் கொடுத்திருந்தனர். ஆதலால், இவர்களுடன் மற்ற ஜனங்களுமிறங்கி ஸ்நானஞ் செய்ய முடியாமற் போயிற்று. -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5184.html?sms_ss=blogger&at_xt=4d7a13e77e9ac6c6%2C0

வியாழன், 10 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-50

இவ்வாறு பவுராணிக மதத்திலுள்ள முக்தி முறைகளை ஜனங்களுக்குப் போதித்துப் பலவிடங்களிலும் பலவிதமாகப் பார்ப்பனர்கள் மனிதர்களைக் கொலைபுரிந்து ஜீவித்து வந்தார்கள். இப்படிச் செய்து வந்ததில், உதாரணமாக ஒன்றை மட்டும் எடுத்து விவரிக்கிறேன்.

காசி க்ஷேத்திரமென்கிற நகரத்தில் இறக்க முக்தி யென்று ஜனங்களுக்கு ஓதியுணர்த்தினர். அக்காரணத்தால் காசிக்கருவெட்ட லென்றவோர் படுகொலை நிகழுமிடமும் ஏற்பட்டு ஆங்குப்படு கொலைகளும் நடந்துள்ளன. எவ்வா றெனின், பார்ப்பனர்கள் இப்போது நடப்பதுபோலவே அங்குமிங்குஞ் சென்று, காசியிலிறக்க, தரிசிக்க, நினைக்கப் புண்ணியமுண்டென்றும், மோட்சம் உண் டென்றும் ஜனங்களுக்குப் போதித்து வந்தார்கள். ஆதலால், மனிதர்கள் இக்காலத்தில் போகிறது போலவே, காசிக்கு யாத்திரை போய் வந்தார்கள்.

அப் பொழுது காசி நகரத்திலுள்ள பார்ப்பனர்கள் கோடீஸ்வரர் களாக இருந்ததாகவும், சொல்லுகிறார்கள். தெய்வ பக்தியும், குரு விசுவாசமும் முற்காலத்தில் அதிகமாக மக்களுக்கு மூடத்தன்மையாக இருந்ததென்று தெரியவருகிறது.

அப்படியே தனப்பெருக்கும், ஞானமின்மையும் நிரம்பியி ருந்த காலம் அல்லவா? காசி யாத்திரையை எண்ணி யெண்ணி வயது முதிர்ந்தவர்களும், சிறுவயது உடைய வர்களும் குடும்பசகிதமாகக் காசி யாத்திரை செய்து புண்ணியம் சம்பாதித்து வருவோமென்றும், எண்ணிப் பணத்தை ஏராளமாய் எடுத்துக்கொண்டு குடும்ப சகித மாய்ப் போகும்பொழுது, வழியில் அக்காலத்திலுள்ள திருடர், வழிபறிப்போர் முதலாகிய பல ஈடையூறுகளையுங் கடந்து, காசி நகரத்தை அடைவார்கள்.

இக்காலத்தில் நிகழ்வதுபோலவே அக்காலத்தில் யாத்திரைக்காரர்களுக்கு உபகரிப்போராகிய பார்ப்பனர்களும், அவர்களுக்கு உடனிற்போரும் இவர்களை அழைத்து இனிமை கூறி, இட வசதி முதலானவைகளைச் செய்துவருவதும் வழக்கம்.

அவர்கள் பிறகு காசியிற் செய்யும் சடங்குகளாகிய ஸ்நானம், தரிசனம், சிரார்த்தம், யாத்திரை, சந்தர்ப்பணை, கோதானம், பூதானம் முதலிய கிரியைகளின் வழியாக இவர்களிடத்திலிருக்கிற தனத்தை, எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோலத் தந்திரமாய்க் கசக்கி எடுப்பது இவர்கள் நீண்டகால உத்தியோகமாம்.

இவற்றைச் செய்து முடித்த பின்னர், அவர்களிடம் பணங்களும் அழகுள்ள பெண்களும் இருக்கக் கண்டால், கீழ்வருமாறு உபதேசிக்க ஆரம்பிப்பார்கள். அஃதாவது பார்வதி சமேதாகப் பரமசிவனும் மற்றுமுள்ள தேவகணங் களும் ஒன்று சேர்ந்து வந்து மரணத் தருவாயில் காட்சி கொடுத்து முக்தி கொடுக்குமிடம் இவ்விடத்தில் ஒன்றி ருக்கிறது. அஃது பல இருடிகளும், இராஜாக்களும், பிராமணர்களும், தபசிகளும் தங்கள் சரீரத்தை இழந்து முக்தி பெற்ற இடமாகும்.

அவ்விடத்தை அடைந்து தரிசனஞ் செய்வது ஜென்மாந்திரங்களில் செய்த புண்ணியமில்லாமற் கிட்டுவது அருமை. பெரிய தபசிகளும், ஞானிகளும் பிராமண விசுவாசிகளும் ஆகிய புண்ணிய புருடர்களுக் காகவே அவ்விடம் சிவபெருமானால் அமைக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் கூட்டங்கூட்ட மாகப் பல வட மொழிப் பாட்டுகளை பிரமாணமாகப் பிதற்றி, யாத்திரைக் காரர்களுக்குப் போதிப்பார்கள்.

இதைக் கேட்ட யாத் திரைக்காரர்கள் விருப்புற்று, சுவாமிகளே! எங்களை அப்புண்ணிய இடத்தைத் தரிசிக்கச் செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்களாம். உங்கள் விருப்பின் படியே செய்து வைப்போம்; அதற்கு வேண்டிய பூஜோபகாரங்களைச் சேகரித்து, அங்குள்ளோர் உத்தரவு பெற்ற பின்னர் அழைத்துச் செல்லுவோம் என்பார்களாம். இது நிற்க.

அந்தக் கருவெட்டலென்ற இடமானது சிறியதாயும், மதிலாற் சூழப்பட்டது மாயிருக்க அதனுள், ஒரு பக்கத்தில் ஆழமுள்ள கிணறுக் கொத்த ஒரு பள்ளமும், அதன் மத்தியில் சிவலிங்கமொன்றும் அமைந்துள்ளது.

கிணற் றுக்கு மேல் சங்கிலியினால் உருட்டப்பட்ட ஒரு சக்கர முள்ளது. கிணறோவெனில், பாதி மூடியிருக்கும். அக் கிணற்றுக்குள் பல தீபங்களையும் ஏற்றி வைத்திருப் பார்கள். அக்கிணற்றைச் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து மந்திரோச்சாடனம் பண்ணிக் கொண்டு, வரும் யாத்திரைக்காரர்களுக்குத் தவசியைப் போல நடத்திக் காட்டுவார்கள்.

பிறகு குருக்களைக் கெஞ்சிக்கேட்டுக் கொண்டே யாத்திரைக்காரர்கள், கொலைக்களமென்ற றியாத, அந்த மோச இடத்துக்கு அழைத்துச் செல்லப்படு கிறார்கள். சென்ற பின்னர் இளம்பெண்களையும், சொத்துகளையும் தலைவாசலில் நிறுத்தி, மற்றுமுள்ள வயது சென்ற புருடர்களையும், பெண்களையும் (முக்கதி கொடுக்கும் கருவெட்டலென்ற மோச இடத்துக்குள்) தரிசிக்க வாருங்களென்று அழைத்துப் போவார்கள்.

அங்குச் சென்ற பின்னர் பள்ளத்திலுள்ள சிவ லிங்கத்தைக் காட்டி, பார்வதி சமேத பரமேசுவரரும், மற்றுமுள்ள தேவகணங்களும், சப்த ரிஷிகளும் இப்போது வருவார்கள்;

ஊன்றி நோக்குங்கள் என்று சொல்ல, ஒன்றுமறியாத இவ்வேழை யாத்திரைவாசிகள் அன்போடு அந்தப்பாவிப் பார்ப்பனனுடைய மோச உரையைக் கேட்டுக் கீழே தலைகுனிந்து பார்க்குந் தருணத்தே, மேல் தொங்கவிட்டிருக்கும் இரும்புச் சக்கரத்தை உருட்டி விடுவார்கள். அது கழுத்தைத் துண்டிக்க கிணற்றில் வீழ்ந்து இறந்துவிடுவார்கள்.

அந்தோ! அவ்வேழை மக்கள் இறந்த பின்னர், தலைவாசலில் நிறுத்திவைக்கப்பட்ட அவ்வாலிபப் பெண்களையும், சொத்துகளையும் அப் பார்ப்பன மக்கள் உரிமையாக அடைந்துவருவதும் வழக்கம். இப்பார்ப்பன மாக்கள் காசியில் இறக்க முக்தி என்று சொல்லுகின்ற வாக்கியத்தை அடியாகக் கொண்டு உபதேசித்து, இத்தகைய கொடுஞ்செயல்களைக் காசி நகரத்தில் அநேக காலமாக நடத்திக் கொண்டு வந்தார்கள்.

- http://viduthalai.in/new/page-3/5116.html?sms_ss=blogger&at_xt=4d78e2a249dc3e90%2C0

ஞாயிறு, 6 மார்ச், 2011

ஞானசூரியன் - தொடர்-49

என் சொல்லம்புதான் அவர்களை அடக்கின. ஆதலால், தாங்கள் பார்ப்பனராகிய எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யலாகாது. மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகத் தங்கள் தாளிணையில் சமர்ப்பிக்கிறேன். என்று சொன்னான்.

ஆடம்பரமான கோயில், அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி, அழகிய சிம்ஹாசனம், கையிலகப்பட்டதைக் கவர்ந்து கொண்டு கம்பி நீட்டியவர்கள் போக எஞ்சியிருப்பவர்களும், ஆபிசார(சூனியன்) மந்திரம் ஜபித்துக் கொண்டிப்பவர் களுமான பார்ப்பனர்கள, எரிந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான அக்கினிக்குழிகள், அவைகளிற் சொரியும்படிக் கொட்டி வைக்கப்பட்ட விலையுயர்ந்த பண்டங்கள், அக்கிரமமே உருவெடுத்து வந்த அர்ச்சகக் குருவின் அலங்கார வேஷம் இவைகளில் கவனம் செலுத்தி யிருந்த கஜினி, காணிக்கையைப் பெற்றுக்கொண்டு, எங்களைவிட்டுவிட வேண்டு மென்ற சொல்லைக் கேட்டவுடன், சிங்கத்தைப் போற் சீறி எழுந்து, அட காபிர் பன்றியே! என்னைப் பிச்சைக்காரனென்றா நினைத்தாய்? கல்லைக் கடவுளாக வணங்கும் கயவரைக் கருவறுக் கவன்றோ இங்குப் போந்துள்ளேன் என்று கர்ஜிக்க, கல்நெஞ்சக் குருவானவன் கண்களும், கருத்தும் கலங்கக் கஜினியின் காலில் விழுந்து, அய்யனே! இதெல்லாம் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்குள்ள ஏற்பாடுகள்; எங்களைக் காக்க வந்த கடவுளே, உயிர்ப்பிச்சை தந்தருள்க என்று பலதரம் அழுது வேண்டிக் கொண்டான். உடனே கஜினி, இல்லை, இல்லை; உங்களுக்கு நான் இரக்கங்காட்டேன். பகுத்தறிவில்லாப் பாமரர்களை ஏய்த்துப் பணத்தையும், மானத்தையும் பறித்த, மக்களின் பசிப்பிணியைப் போக்கத்தக்க பற்பல அரிய பண்டங்களை, அநியாயமாக அக்கினியிலிட்டு அவைகளைச் சாம்பலாக்கு கிற-அத்தீயையும், கல்லையும் கடவுளாக வணங்கும் நீங்கள், கடவுளுக்குத் துரோகிகளாதலால், உங்களுக்கு இரங்குவது தருமமன்று என்று கூறி, அப்பொக்கிஷத்தைக் காட் டெனச் சொல்லச் சிலவற்றைக் காட்டி, இவ்வளவுதான் உள்ளது எனப் பகர்ந்தனன்.

கஜினி இக்கோயிலைக் குறித்த விபரமனைத்தும் ஒற்றர்களின் எழுத்து மூலமாக முன்னரே தெரிந்திருந்தவ னாகையால், அவ்வெழுத்தைக் காண்பித்துக் குருவின் கைவிரலில் எண்ணெய்த் துணியைச் சுற்றித்தீ வைக்கச் சொல்ல, அவ்வாறே செய்யவே, அனைத்தையும் காட்டி விட்டான். கஜினியானவன், பொருள் எல்லாம் வாரி யெடுத்தவுடன், தன் படைகளை ஏவிக் கோயிலையும் இடிக்கச் செய்தான். ஆலயமானது அவனியோட வனியாய் அமர, அதுவரை அந்தரத்தில் நின்றிருந்த அற்புத லிங்க மூர்த்தியும் காந்தக்கல்லின் கவர்ச்சியினின்றும் விடுபட்டுத் தரையில் விழுந்து புரண்டது. இதைப் பார்த்த, அக்கொடிய துலுக்கனுக்குப் பின்னும் கோபம் அதிகரித்துத் தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் அவ்விக் கிரகத்தை ஓங்கி அடிக்க, அது சின்னபின்னமாகச் சிதறி உடைந்து, இரத்தம் பீறிட்டு ஓடுவதையொப்ப முத்து முதலிய ரத்தினங்களையும் கொட்டிற்று. பார்த்தான் கஜினிமுகம்மது; அழைத்தான் பார்ப்பனக்குருவை; அறைந்தான் அடியிற்கண்ட வண்ணம். அட பதரே! கல்லை வணங்குவது கடவுளுக்குச் சம்மதம் இல்லையென்று சொன்னேன். அவ்வுண்மையைக் கண் கூடாகப்பார்; கல்லை உடைத்தெறிந்த எனக்குக் களிப்பைத்தரும் நவ மணிகளையும், கல்லை வணங்கும் உங்களுக்குக் கடுந்துயரத்தையும் அளித்துவிட்டார்....

இன்னோரன்ன இழி மொழிகள் பேசிய பின், எல்லாப் பொருளையும் ஒட்டைமீது ஏற்றச் செய்து, அத்தோடு ஆறாயிரம் பெண்களையும், அய்யாயிரம் ஆண்களையும் பிடித்துக் கொண்டு தன் நாடு திரும்பினான். இப்பதினோராயிரம் கைதிகளில் எண்ணூறு (800) பேர் மட்டுமே பார்ப்பனர்கள்; ஏனையோர் நம்மவர்கள். ஏன் அவர்களுக்கு இந்தக் கதி வந்தது? பார்ப்பனனைக் குருவாக நம்பினதால்! இவர்களில் ஆண்களுக்குக் குதிரைக்குப் புல் வெட்டுதல் முதலிய வேலையையும், பெண்களுக்குத் துலுக்கச் சிப்பாய்களின் வைப்பாட்டியா யிருத்தலையும் செய்யக் கட்டளையிட்டான். உணவும் முறையே குதிரை தின்று மிகுந்த கடலை, கொள்ளு முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்குத் துலுக்கர் களின் எச்சிலுமாம். இவ்விதமாகப் பாரதநாட்டின் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் சென்றவுடன், அங்குள்ள பெரிய மவுல்வி பார்த்து, அய்யோ அரசரே! இக்காபிர்களுக்கு ஏன் தீனி போட்டு வைத்திருக்கிறீர்கள்? இது நமது நபிநாயகத்தின் திருவாணைக்கு ஏற்ற தல்லவே. ஆதலால், கொன்று விடும் என்று சொல்லச் சூத்திரத்திற்கு அடிமையான அக்கொடிய துலுக்கத் தலைவன், ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டுப் பெண்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான்.

இச்சரித்திரம் விரிவான புத்தக ரூபமாக உருதுமொழியிலும், குஜராத்தி மொழியிலும் எழுதி அச்சிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர், பாரத நாடு என்னும் நம் தாய் நாட்டிற்குச் செய்த தீங்குகள் பலவற்றுள் நம் தமிழ்ச் சகோதரர்களின் உணர்ச்சிக்காக ஒன்றை மட்டும் சுருக்கமாக உதா ஹரித்தேன். மற்றவையும், ஸ்தாலீபுலாக நியாயத்தால் (பதக்கு அரிசிக் சோற்றின் பதம் ஒரு சாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வது போல) தெரிந்துகொள்ளுங்கள்.

இதன் குறிப்பைத் தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்தியார்த்தப் பிரகாரத்தில் பதினோராவது அத்தியாயத்தில் பார்க்க.

காசிக் கருவெட்டல்

தில்லையைக் காண, காசியிலிறக்க, ஆரூர்ப் பிறக்க, எல்லையிற் பெரிதாம் அருணையை நினைக்கவெய்தலால் முக்தி என்றுரைக்க,

காஸீயாம்து மரணன் முக்திர்

ஜனனாத் கமலாலயே

தர்சனா தர்ப்ரஸரஸி

ஷ்மரணா தருணாசலே

என்பதை அருணாச்சல புராணத்திற் பார்க்க.

- http://viduthalai.in/new/page-3/4797.html?sms_ss=blogger&at_xt=4d7325da39c185d3%2C0

வெள்ளி, 4 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-48

பொன்னும், மணிகளும் மலை மலையாகக் குவிந்தன. இவ்விதமாக அறுநூறு ஆண்டுகளுக்கு அநியாயப் பார்ப்பனர்களின் அக்கிரமச் செலவுகள் அனைத்தும் போகப் பதினெட்டுக் கோடி ரூபாய்கள் பெரும்படியாக இரத்தினங் களும், இருபது கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள நகைகள், மற்ற பட்டாடைகள் முதலியனவும் மீதியாயின.

பதினோ ராயிரம் பார்ப்பன மக்கள் அங்கேயே குடியிருந்து, விலாப் புடைக்கத் தின்று, பார்ப்பனரல்லா தார் என்றென்றும் தங்களுக்கு அடிமைகளாகவே இருக்கும்படியான சூழ்ச்சி களைச் செய்து, கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் நமது நாட்டில் இருந்த அரசர்கள் பலரும் இக்கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் தலைவனுக்குச் சிஷ்யர்களாக இருந்தார்க ளெனத் தெரிகிறது. கூர்ஜர அரசர்கள் அறுவரும் சிஷ்யர்கள் என்பதைக் கூறவேண்டியதில்லை.

துலுக்கரின் வருகையும், ஆலயத்தின் அழிவும்

இத்தருணத்தில் இந்து மதத்தை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட துலுக்க அரசர்களின் முதல்வனான முகம்மது கஜினி என்பான், சோமநாத க்ஷேத்திரத்தைக் குறித்துக் கேள்விப்பட்டுக் கொள்ளையடிக்க எண்ணி, 25,000 (இருபத்து அய்ந்தாயிரம்) சைன்னியங்களோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

வழியிலே குஜராத் அரசர்களின் ஒற்றர்கள் உண்மையை உணர்ந்து, தங்கள் அரசர்களுக்கு அறிவிக்கவும், அவர் களும் ஆசானாகிய அர்ச்சகப் பார்ப்பானை அணுகித் துலுக்கனின் வருகையைச் சொல்லி, எங்களிடம் நாலரை லக்ஷம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை நாட்டில் வரவிடாமல் வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.

அக்குருவோ, கோழைப் பயல்களா! நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என்முன் தோன்றி, மிலேச்சன் வருகிறான்; அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாவண்ணம் காப்பாற்றுவோம். ஆனால், விசேஷமாக ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்ன தானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் முதலியனவும் நடைபெற வேண்டும் என்றும் சொல்லி மறைந்தார்கள்.

ஆதலால், யுத்தத்திற்குப் போகவேண்டாம். புராணங் களிலும், பிரமாண வாக்கிலும் உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படு கின்றன. இன்று தொட்டாவது நம்பிக்கையோடு ஒழுகுங்கள்; யுத்தத்திற்குச் செலவழியும் பொருளைப் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னான்.

அரசர்களும் தாம் கொண்ட கருத்தைக் கைநழுவவிட்டு, அர்ச்சகர்கள் ஆணைப்படி 1,008 யாகசாலைகள் உண்டு பண்ணி, அநேகப் பார்ப்பனர்களை வைத்து ஹோமங்களும், வருண ஜபமும் நடத்திக் கொண்டு வந்தான். அன்றியும் ஜோதிடம் தெரிந்தவர்களென்று பல பார்ப்பனர்களைக் கொண்டு சுபாசுப பலன்களை அவ்வக்காலங்களில் அரசர்களுக்குத் தெரிவித்தும் வந்தான். முகம்மது கஜினியும், சைன்னியங்களும் எட்டு மைல்க ளுக்கப்பால் வந்துவிட்டார்கள்.

கஜினி முதலில் பயந்தானெனினும், தன்னை எதிர்க்க யாரும் வராததைக் கண்டு உண்மையை உணர்ந்துவர ஓர் ஒற்றனை அனுப்பி னான். துலுக்கர் களின் வருகையை உணர்ந்த பார்ப்ப னர்கள் ஏற்கெனவே இருக்கும் 11,000 (பதினோராயிரம்) பேர்வழிகளும் தற்போது வந்திருப்பவர்களும் கலந்து யோசித்து 800 (எண்ணூறு) பேர் தவிர, மற்றவர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

கஜினியின் வேவுக்காரன் துலுக்கனாகையால், அவன் நெருப்பெரிந்து கொண்டிருக்கும் தீக்குழிகளையும், நெய், கோதுமை முதலிய தின்பண்டங்களை அக்குழிகளில் பலர் சொரிந்து கொண்டிருப்பதையும், பலர் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு ஜபம் செய்வதையும் பார்த்து வியப்படந்தவனாய்த் தன் தலைவனை அணுகி, அரசே, பெரிய தீக்குழிகளில் பலர் கோதுமை முதலிய தானியங் களையும், நெய்யையும் சந்தனக் கட்டை முதலிய மற்றும் பல விலையுயர்ந்த பொருள்களையும் போட்டு எரிக்கிறார்கள். அன்றியும் மனிதர்களின் தலைகள் பல தண்ணீரில் அசையாமல் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஊரெல்லாம் புகையால் மூடிக் கொண்டிருக்கின்றன. வேறொன்றுங் காணேன் எனத் தெரிவித்தான். 1கஜினியும் அறிவிலிகளாகிய அவர்களை அடக்குவதில் அச்சமொழிந்த வனாய்ச் சைன்னியங்களோடு நேராகப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, குருவானவன் ஏனைய அரசர்களைப் போலத் துலுக்க அரசனையும் வசப்படுத்த எண்ணியவனாய்த் தான் ஊர்ந்து வருகிற முத்துப் பல்லக்கைச் சிங்காரித்துச் சீடர்களும், கோயில் தாசிகளும் புடைசூழ எதிர் கொண்டழைத்து வரும்படி அனுப்ப, கஜினியும் அப்பல்லக்கைத் தன் ஒட்டைமீது போடச் செய்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தான். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமிக்கு எதிரிலேயே கஜினிக்காகப் பெரிய சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அவ்வாசனம் அய்ம்பது லக்ஷ ரூபாய்கள் மதிப்புள்ளதும், வியாசபீடம் எனப் பெயர் வாய்ந்ததுமாம்.

கோயில் மூர்த்தியானது விலையுயர்ந்த ஆடையாபரண அலங் காரங்களால் மிக அழகு செய்யப்பட்டிருந்தது.

கஜினிக்கும், குருவுக்கும் சம்பாஷணை

கஜினி ஆசனத்தில் உட்கார்ந்தபின், பேதை அரசர்களை ஏமாற்றும் பேய்ப் பார்ப்பனர்களின் முதல்வனான குருவானவன் கஜினியைப் பார்த்து, ஓ இராஜாதிராஜனே!

தங்களின் நேர்மையான ஆட்சியன்றோ பிராமணர்களாகிய எங்களைக் காப்பாற்றுவது? நாவிஷ்ணு; ப்ருதிபீதி (விஷ்ணுவல்லாதவன் அரசனன்று) விஷ்ணுவின் அவதாரமாகிய தங்களைக் குறித்து இங்குள்ள போலி ராஜாக்கள் என்னென்னவோ உளறினார்கள்.

1. அப்பொழுது அங்கிருந்த முகம்மது கஜினியினுடைய குருவாகிய மவுல்லி ஒருவர் இது காபரினுடைய ஜின்னு(பிசாசு)களின் வேலையாகும்.

குரான் வாசித்துப் போனால், பிசாசுகளெல்லாம் ஓடிவிடும். நாம் ஜெயமடையலாம் எனத் தைரிய வார்த்தைகள் கூறியனுப்பினார்.

- http://viduthalai.in/new/page-3/4705.html?sms_ss=blogger&at_xt=4d70d839d5dc6674%2C0

புதன், 2 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-47

அன்பர்களே! இக்காரணங்களால் ஆகமங்கள் பிற் காலங்களில் எழுதப்பட்டனவென்று தெரிகிறது. அப்படி யிருந்தும் மாமிசத்தை விட்டுவிட அவைகளுக்குச் சம்மதமில்லை. ஆனால், யாவனொருவன் ஆகமம், வேதம், ஸ்மிருதி முதலிய நூற்களொடு நமது மற்ற நூற்களிலும் பல கெடுதிகள் உண்டென்று தெரிந்து, அவை யாவும் உள்ளதுதான், முறையே வேண்டியதுதானென்று நம்பி, மறுபடியும் அதுவே நமது நூல் என்று ஒத்துக்கொண்டு, தீரனாயிருப்பவன்தான் இந்து மதத்தை முறையாக நம்பினவன். ஆனால், அந்த நம்பிக்கைபோல் நடக்கவும், (பஞ்சமாபாதகங்கள் சரியென்று ஒப்புக்கொள்வதோடு, ஒரு பிராஹ்மணனையும், அய்யர், அய்யங்கார்களையும்) நிந்தனை செய்யாமல், தனது முன்னேற்றத்தையும் விரும்பாமல் இருக்கவேண்டும்; அவன் தீரன்.
பார்ப்பன வழிபாட்டால் வந்த கேடு,

சோமநாதபுரம் கோயில்
ஸௌராகாவனே
வாராணஸ்யாம் துவிஸ்வேசம்
த்ரியம்பகம் ஷ்ட்ரே ஸோமநாத்ம்ச
ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்;
உஜ்ஜயின்யாம் மஹாகாளம்
ஓங்காரமம லேஸ்வரே
பரல்யாம் வைஜநாதம்ச
டாகின்யாம் பீமசங்கரம்;
ஸேதுபந்தேது ராமேசம்
நாகேசம் தாருகௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம்
குஸ்ருணேசம் சிவாலயே
சவுராஷ்ட்ர தேசத்தில்(குஜராத்தின் ஒரு பகுதி)

சோமநாதமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனமும், உஜ்ஜயினி யில் மஹாகாளமும் அமலேசுவரத்தில் ஓங்காரமும், பரலியில் வைஜநாதமும், டாகினியில் பீமசங்காரமும், சேதுபந்தத்தில் (இராமேச்சுரம்) ராமேசமும், தாருகா வனத்தில் நாகேசமும், காசியில் விஸ்வேசமும், கோதாவரிக் கரையில் திரியம்பகமும், ஹிமாலயத்தில் கேதாரமும், சிவாலயத்தில் குஸ்ருணேசமும் ஆகப் பன்னிரண்டு.

இவை முதலிய புராண வசனங்களால் இத்தலம் ஜோதிர்லிங் காலயங்கள் பன்னிரண்டினுள் முதன்மையான தாகக் கருதப்படுகின்றது. கல்வியறிவற்றவர்களும், கபடு சூதின்றியவர்களுமான பார்ப்பனரல்லாத மக்கள், பார்ப்பனர்களின் பொய்க்கூற்றை நம்பி, இத்தலத்தில் அநேக சித்திகள் நடக்கின்றனவென்று இங்குப் போந்து, இங்குள்ள பார்ப்பனர்களுக்கு விசேஷமான தட்சணைகளைக் கொடுத்து வந்தார்கள்.
இத்தலத்தின் உற்பத்தி

பார்ப்பனர்கள் பிறரைக் கெடுத்துச் சுயநலத்தைப் பாதுகாக்க எழுதி வைத்துக் கொண்ட ஆபாசச் சுவடிக ளான வேதங் களும், ஸ்மிருதிகளும் முறையே கடவுளா லும், கடவுளின் அருள்பெற்ற பெரி யோர்களாலும், திருவாய் மலர்ந்தருளப்பட்டன என்ற பார்ப்பனப் பொய்க்கூற்றை நம்பி, அதன்படி பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய்த் தனமும், மானமுமிழந்து வந்த பார்ப்பன ரல்லாதாரை மீட்க அவதரித்த ஸ்ரீபுத்தபகவான், மகாவீர சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸத் தர்மமானது (உண்மை நெறி) மக்களை நல்வழியிற் செலுத்தி வந்ததைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் அந்நன்னெறியை ஒழிக்கச் செய்த சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. இது சத்தர்ம (புத்த சமயம்) சந்திரனுக்கு இராகுவாகிய சங்கராச்சாரியார் பிற குடிமக்களைக் கெடுக்க ஊரூராய்த் திரியும் (திக் விஜயம்) காலத்துக் குஜராத்திலுள்ள பார்ப்பனர்களும் தாமும், கலந்து பேசியதன் பயனாக ஓரிடத்தில் சிவலிங்கமொன்றைப் புதைத்துவைத்துக் கைலாச நாதராகிய பரமசிவன் புத்த, ஜைனர்களை ஒடுக்கவும், பார்ப்பனத் தொண்டர்களைப் பாதுகாக்கவும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி, கூர்ச்சர (குஜராத்) தேசத்தில் சிவலிங்க ரூபமாகப் பூமிக்குள் இருக்கிறார். அவரைப் பிரதிஷ்டித்துப் பூஜை பண்ணுங்கள்; பவுத்தர்கள் நாசமாவார்கள்; உலகம் க்ஷேமத்தை அடையும் என்று கணேசன், விஷ்ணு, துர்க்கை, பைரவன் முதலிய தேவதைகள் சொப்பனத்தில் வந்து தங்கள் தங்களிடம் சொல்லிச் சென்றதாகக் கதைகட்டி, அந்நாட்டு (குஜராத்தி) அரசர்களுக்கு ஒவ்வொருவனும் தனித்தனியாகச் சென்று அறிவிக்க, அரசர்களும் ஒரே விஷயத்தைப் பல தேவதைகள் வெவ்வேறு கிராமத்தவர்களான பார்ப்பனர்கள் வாயிலாக நமக்கு அறிவித்தார்கள்.

ஆதலால் இது முற்றிலும் உண்மையென்று நம்பி, அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆலயங்கட்ட ஆணைதர, அங்ஙனமே ஆலயங்கட்டுங்கால் பார்ப்பனர்களும் சம்பக பாஷாணமென்னும் காந்தக் கல்லினாற் கர்ப்பக்கிரகத்தின் உட்புறத்தில் வேலை செய்து முடித்துச் சிவலிங்கமானது ஒரு புறத்திலும் சாராமல் அந்தரத்திலேயே நின்று கொண்டிருக்கும்படிச் செய்தார்கள். அக்காலத்தில் அந்நாடு ஆறு பேரரசர்களால் ஆளப்பட்டு வந்தது. உண்மையறிய ஆற்றலற்ற அவ்வரசர்கள், ஈதென்ன விந்தை! மூர்த்தி நிலம் தொட வில்லையே எனக்கேட்க, பார்ப்பனர்கள் சாதாரண மனிதர்களால் பிரதிஷ்டிக்கப்பட்ட லிங்கமானலன்றோ தரையில்படும்? கைலாசநாதர் தானாகவே லிங்க ரூபமாக எழுந்தருளிய தால், தரையில் படவில்லை என்று சொல்ல, அக்கூற்றை அங்ஙனமே நம்பி ஏமாந்து விட்டார்கள். அதிக விமரிசையாக ஆலயத்திற்கருகிலேயே அன்ன சத்திரங்கள், வேத பாட சாலைகள் முதலிய பார்ப்பனர்களுக்காகக் கட்டப்பட்டன.

- http://viduthalai.in/new/page-3/4550.html?sms_ss=blogger&at_xt=4d6e3987100b2ba9%2C0

செவ்வாய், 1 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-46

பசு, பூமி, தானியம், அடிமைகள் முதலியவற்றை இல்லத் திற்கு வேண்டுமளவாக அவருக்களித்திடுக வென்றும், பாலஸ்தாபன விதிப்படலத்தில் முன்னர் மொழிந்தவாறு வஸ்திரம் முதலியவற்றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து, அவ்வுத்தமம் முதலிய மூவகைத் தட்சணைகளையும், அவருக்குதவுகவென்றும்,

வாஸ்து சாந்தி விதிப் படலத்தில் அவ்வாசிரிய தட்சணை அம்மூவகையுமென்றுங் கூறினமை யாலும்; இன்னும்; பலவேதுக்களாலும் கல்வி, அறிவு ஒழுக்கங் களோடு கூடினவரும் அவை கூடாதாருமாகிய பலரும் வைகியுள்ள இப்பூமியின்கண் ஒரு கூட்டத்தாரையே, ஒரு சிலரையே பெரிதும் உயர்த்தலும்,அவரைப்போல ஏனையோர் இனிது தாழ்ந்தவரென்றாலும், அதருமங்கொண்டு படலம் படலமாக அவ்வொரு சிலர் சீவனோபாயத்தோடு பல கருமங்களையும் விதிக்க வந்த புத்தகமே அவ்வாகம புராண பாகமெனவும்;

ஸ்மார்த்தர் பெரிதும் சுயநலங்கருதி எழுதியுள்ள ஸ்மிருதிகளை யொத்த இப்பாகப் படலம் யாவும் சிவபெருமான் கூறியருளினவென்பது, அருளவாம் எல்லோ ரும் இனிதுய்தி பெற வேண்டுமென்னுந் திருவுளப் பெருங் கருணைத் தடங்களாய்த் தரும தேவதை மீதெழுதரு தலைமைப் பொருளாய் வழங்கும். அவனது கடவுட்டிறத்தை யிழுக்கத்துட்படுத்துவதாமாகலின், அது சால்பிற்றன்றென வும் நடுவு நிலைமை யொம்புநர் பலரும் நவில்கின்றனர்.

நடுவு நிலையோம்பல் எமக்குங் கடமையே போந்த நியதிகளை யெவரெவ்வாறு கொள்ளினும் கொள்ளட்டும். இவை ஈசன் கட்டளையென்று கூறற்கே எமது நெஞ்சம் பெரிதுமஞ்சுகிறது. போந்த தந்த்ராவதார படலத்தில், இல்லறத்து ஆதிசைவரே எல்லாக் காரியங்களிலும் அதிகார முடையவர் என்றதும் பேராசைக்கு இடனா யிருத்தல் உய்த்துணரத் தக்கதாம்.

இவ்விரு பக்கங்களில் கூறிய வசனம் முருகக் கடவுளரது இரும்பெரும் பக்தராகிய பாம்பன் சுவாமிகள் கூறியுள்ள தாகும். இப்பெரியார் பார்த்தளவும், ஆகம நூலைப்பற்றி அதிஹிப்ருயம் சொல்லிவிட்டது. ஆனால், கர்மகாண்டம் பூர்வபாகம் என்றார். சித்தாந்த பாகம ஞானகாண்டமும் சூத்திரர்கள் அதன்கிட்டே போகலாகாது. இஃதிவ்வாறிருக்க, முன் நான்காவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிற விஷயங்கள் சுருக்கமாக அய்ந்தாவதத்தியாயத்தில் சொல்லி முடிக்கிறேன்; கவனியுங்கள்! காமிகாகமம் அத்தியாயம் 19, வாஸ்து தேவ பலிபடலம்.

பக்கம் 454, சுலோகம் 4.

1. கருத்து: எமன் பொருட்டுப் பாயசத்தைக் கொடுக்க வேண்டும். கந்தர்வரிடத்தில் கந்தம் கூறப்படுகிறது. ப்ருங்க ராஜருக்கு சமுத்திரத்தில் உற்பத்தியான மத்ஸ்யத்தையும் மிருகரிடத்தில் மத்ஸ்யத்தோடு கூடின அன்னத்தையும் நிருதியின் பொருட்டு பிண்ணாக்கு அன்னத்தையும், எண் ணெயையும் புத்திமானானவன் கொடுக்க வேண்டும். (இதைக் கொடுக்காதவன் புத்திகட்டை) இது சைவர் களுக்குச் சொந்தம்.

2. பலி விஷயத் தில் அசுரர்க்குப் பன்றி மாமிசம் கொடுக்க வேண்டு மென்பது.

3. சேஷருக்கு எள்ளரிசியும், ரோக ருக்கு உயர்ந்த மத்ஸ் யமும், வாயுவிற்கு மஞ்சள் நிற த்வஜமும் சமர்ப் பிக்க வென்பது.

4. ருத்திர மூர்த்தியின் பொருட்டு மாமிசான்னமும் ஆகும். ருத்திர புத்திரர் பொருட்டு நுரையும், ஆபருக்கு மத்ஸ்யத்தையும், ஆபவத்ஸரென்பவருக்கு மாமிசத்தையும் கொடுப்பிக்கவேண்டும்.

5. சிவபக்தர்கள் சூலத்திலிருக்கிற சாகியின் பொருட்டு நெய்யையும், மாமிசத்தையும் கொடுக்கவேண்டும். புத்திமானால், விதாரிகையின் பொருட்டு மிகவும் லவணத்தையும் கொடுக்கவேண்டும்.

6. பூதனையின் பொருட்டு விசேஷமாக எள்ளன் னத்தைக் கொடுக்கவேண்டும். பாராக்ஷஸியின் பொருட்டுக் காரமணியன்னத்தைக் கொடுக்கவேண்டும். வீடுகளில் மாமிசன்னமும் ஆகும்.

7. பாஹய தேவதைகளான எண்மருக்கும் மாமிசங் களின் அன்னம் பலியாகக் கூறப்படுகிறது.

8. தேவக்கிருஹத்தில் அவிசும், ராஜக்ருஹத்தில் மாமி சான்னமும் கொடுக்கத்தக்கது. சூத்திரக்கிருஹத் தில் கள் கூறப்பட்டது. மற்றவிடத்தில் தேன் சேர்க்க வேண்டும். (மச்சத்திற்குப் பதிலாக மாவு சேர்க்கவென்பது.)

9. பூஜை அந்த விஷயத்தில் சிவத்விஜர்கள் கிடைக் காவிடில், அனுசைவர்களாவது ப்ராஹ்மணர்களாவது ஆகும். தேவாலயத்திலும், கிராம முதலான விடங்களிலும் சிவத்விஜர் விசேஷப்பட்டவராகவிருக்கிறார். தன் வீட்டில் அனுசைவர் அல்லது மஹாசைவர் அல்லது அவாந்தரச் சைவர்களாவது ஆசாரியர்களாக இருந்து வாஸ்துஹோமம் செய்யலாம்.

10.வாஸ்து பூஜை குறைவுபடின் ஒவ்வோரிடமும் கெடுதியடை கின்றது. ஆகையால், ஆசாரியார், கிராமம், வீடு, சாலை, தேவாலயாதிகளில் வருடாவருடம் வாஸ்து ஹோமம் செய்தல் வேண்டுமென்பது.

11. காமிகம், தந்த்வதார படலம் பக்கம் 32, யாமனத்திலும், மாத்ரு தந்திரத்திலும், பாஞ்சராத்திரத்திலும், பவுத்தத்திலும் அருஹத் மதத்திலும் லாகுளத்திலும் வைதிக மதத்திலும் மற்றும் வேறாய வழிகளில் அந்தந்த சாஸ்திரங்களால் தங்க ளுக்குச் சொந்தமாகிய ஆகம சாஸ்திரப்படி ஆதிசைவர்கள் தீக்ஷை முதலிய அந்த லிங்க ஸ்தாபனம் முதலானவற்றைச் செய்யலாம்.

- http://viduthalai.in/new/page-3/4511.html?sms_ss=blogger&at_xt=4d6cf8a8590deab6%2C0

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-45

ஆகையால், ஓ பண்டிதரே! இடையூறை விளைவித்து நஷ்டப்படுத்த வேண்டாம்! 1சுவாஹா.

இது ஒரு வேடிக்கைக் கதையாயினும் ஆகுக. வேதங் களின் கருத்து இப்படியேயாம். இவ்விதமாக உடல் வருத்த மின்றி வயிற்றை நிரப்பிவரும் ஒரு சிலர் வேதங்களும் புராணங்களும் எல்லாம் தங்களுடையனவென்றும், தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத்தான் சொர்க்கவாசலைத் திறந்துவிடுவோம்; மற்றவர்களை நரகத்திற்கு அனுப்புவோம் என்றிவ்வாறு சொல்லுகிறார்கள். நமக்கு அவர்களின் சொர்க்கமும் வேண்டாம். நரகமும் வேண்டாம். புராணங்களும், வேதங்களும் உணர்த்துகிற விஷயம் இதை ஊன்றிப்படித்தால் அறிந்து கொள்வீர்கள். ஆதலால், அவைகளும் நமக்கு வேண்டாம். அவர்கள் பூமி தேவர்களாகவே வாழ்ந்துகொள்ளட்டும். ஆனால், நாமும் ஏனைய (பிற நாட்டிலுள்ள) மனிதர்களைப் போலாவது வாழ வேண்டாமா? அதற்காக முன்னேற்ற வழியில் முயற்சிப் போமாக. இம்மைக்கு வேண்டிய கல்வி, தொழில் முதலியவை களில் அவரவர்களின் இயற்கைக் குணத்திற்கேற்றவாறு நமது சிறுவர்களைப் பழக்க வேண்டும். மோட்சத்துக்கு உலகப் பற்றையொழித்தவன்தான் அதிகாரி. அதற்குத் தத்துவசாஸ்திர ஆராய்ச்சியும், நல்லோர்களின் கூட்டுறவும் வேண்டும். அதற்கு வேண்டிய நூற்கள் பல நம் மூதாதை யர்கள் இயற்றியிருக்கின்றனர்.
ஆதலால், இந்துக்கள் என்று நம்பியிருந்த மூட நம்பிக்கையை இதுமுதல் விட்டுவிட்டு, நம்மவர்கள் ஒவ்வொருவரும் விலகி விடுபட்டு, முன்னேற்றமடையும் வழியைக் கூறியுள்ளேன். இவ்வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, இதன்படி ஒழுகி, அதனால் நற்பயனையடையுமாறு சர்வேசுவரனாகிய ஞானகுரு அருள் புரிவானாக: (இத்தோடு மலையாள பாஷையில் முன்னமே இயற்றிய அப்ரஹ் மணோத் போதனம் முற்றிற்று)
அய்ந்தாவது அத்தியாயம்

ஆகமம் வேதஸ்மிருதியோடொத்தது
முனீந்திரர் - முனித்தலைவர் - அத்திரி, விஸ்வாமித்திரர், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர், மரீசியென்னும் எழு வரையும் மொழிகின்றது. முனிவர் - ரிஷி (மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள்; உண்டு பண்ணினவர்கள்.)

சித்தர் - மனிதர், ஜனகர், சனந்தனர், சனக்குமாரர், கபிலர், பிருகு, பஞ்சசிகர், சிவன், உருத்திரன் பவானி, பிரமன், விஷ்ணு, அக்னி, வாயு, எமன், சூரியன், சந்திரனென்னும் பதினெண்மரும் சித் தர்களென்று ததே மன்ஷ்யாஸனக என்றெழுதிச் சொல் லுஞ் சுலோகங்களின் வாயிலாக மேலைப் படலமே விளம்புகின் றது. இப்படலத்தின் திருபுண்டரதாரண அங்குலம் - அந்தணருக்கு 6, அரச ருக்கு 4, வைசியருக்கு 2, சூத்திரர் களுக்கு பெண்களுக்கும் 1 என விதிக்கப்பட்டமையாலும், இந்நூல் வருணத்திற்கும் வேறாய ஜாதியாருக்கும் அவ்வொன்று மின்றென்றமை யானும் அந்தணர் உத்தரீயம் (மேல் வேஷ்டி) அணியலாம். சூத்திரர் அஃதணிய வொண்ணாதென்றமையானும், சாலா லட்சண விதிப்படலத்தில் அந்தணர் முதலிய மூவருணத்தார் வீடுகள் இரட்டைத்தூண் நிறுவியும் மற்றையோர் வீடு ஒன்றைத் தூண் நிறுவியும் கட்ட கட்டுப்பாடாம். அந்தண ருக்கு 11 அடுக்கும், அரசருக்கு 5 அல்லது 7 அடுக்கும், வைசியர், சூத்திரர்க்கு 3 அடுக்குள்ள வீடுகளுரியன வென்றமையானும், பூகர்ஷண விதி படலத்திற் பயிரிடற் குரிய உழவு முறை - அந்தணர்க்கும், அரசருக்கும் 32, வைசியருக்கு 15, சூத்திரருக்கு 7 என்றமையானும்; ஆலயங் களிலும், கிராமங்களிலும், சிவத்துவிசரே (ஆதிசை வரென்னும் பிராமணர்) சிறந்தவர். தட்சணை பெறற்குரி யோரென்றாமையானும்; தந்தராவதார படலத்தில் ஆதி சைவ விப்பிரர்களாகிய ஆசார்ய பரம்பரையில் இவ்வாக மங்களை ஓதலும், ஓதுவித்தலும் இவ்வுலகம் செய்யத் தக்கன. மற்றவரைக் கொண்டு அவை செய்யத்தக்கனவல்ல. சூத்திரர், சவருணர் முதலியோரும், சிற்பிகளும், சித்திரம் தீட்டுவோரும் சைவாகமங்கள் படிப்பது பாவமென்றமை யானும், பூபரிக்ரஹ விதிப்படலத்தில் அவ்வாதி சைவ ஆசாரியார் முதலியோரைப் பூசித்து, அவருக்குத் தட்சணை கொடுத்திடுகவென்றும், பூகர்ஷண விதிப்படலத்தில் நிலத்தையுழுபடை கொண்டுழும்போதும் அவ்வாசாரி யாருக்குத் தக்ஷிணையாக 5 (நிஷ்கம்) வராகனெடைப் பொன்னும் மோதிர உபகாராகப் பசு, எருது முதலியனவும் ஈந்திடுகவென்றும், கர்ப்பந்யாச விதிப்படலத்தில் வஸ்திர மும், பொன்னும் மோதிர முதலிய அணிகளுமாகிய இவற் றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து உத்தமமாகப் பதினைந்து வராகனும் மத்திமமாக 10 வராகனும் அதமமாக 5 வராகனும், அவருக்குத் தட்சணையாக கொடுத்திடுக

- http://viduthalai.in/new/page-3/4351.html?sms_ss=blogger&at_xt=4d6b78cc85205ddb%2C0

வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-44

இத்தகைய உணர்ச்சி எப்போது உயிர்களுக்கு உண்டா கின்றதோ, அப்போதே முக்தி, பரமாத்மாவுடன் ஒற்றுமை நிர்வாணம் கைகூடுகின்றது என்று உபனிஷத்துகள் கூறுகின்றன. ஆனால், இது சங்கராச்சாரியாரின் கொள்கையே ஆகும். நீலகண்டர், இராமாநுஜர், மத்வர் முதலிய பலரும் பல திறப்பட்ட கொள்கைகள் உடையவர்கள். இவர்கள் அனைவரும் உபனிஷத்துகளையே முதல் நூலாக ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். ஒரு சொல்லிற்குப் பல பொருள்களையுணர்த்தும் வட மொழியானது மேற்கண்டவர் களின் மதியை மயக்கிப் பல துறைகளில் அலையச் செய்ததே இதற்குக் காரணம். ஆனால், சங்கராச்சாரியாரின் கொள்கைப்படி ஜீவனுக்கு இத்தகைய ஞானம் (பிரமம், சத்தியம், உலகம், மித்யை) வேண்டுமே ஒழிய, அவனுடைய செய்கை

எப்படியேனுமிருக்கலாம்.
அனுமேத ஸஹஸ்ராண் யப்யத:
குருதே ப்ரஹ்ம காத லக்ஷாணி:
பரமார்த்த விந்த புண்யைர் நச
பானபர் லிப்யத க்வாபீ (பரமார்த்தசாரம்)

பொருள்: ஆட்டையறுத்து ஆயிரம் யாகங்கள் செய்யினும், லக்ஷம் பிரம்மஹத்தி(பார்ப்பனக் கொலை) செய்யினும், உண்மையை அறிந்தவன் புண்ணியத்தினாலும், பாவத்தினாலும் பற்றமாட்டான். இது பரமார்த்தசாரம் என்னும் நூலில் உள்ளது. (இந்தப் பிரமாணம் உணர்ந்ததனால்தான் ஆரியர்கள் குற்றமற்ற பவுத்தர்களைப் பல தடவைகளில் ஆயிரமாயிரக்கணக் காகக் கொல்வித்தார்கள் போலும்)
கீதையிலும், ஜ்ஞானாக்நி: ஸர்வகர்மானி பஸ்மஸாத் குருதேர்ஜுன, ஞானத்தீ எல்லாக் கருமங்களையும், எரிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறது. புத்த பகவான் நல்லொழுக்கத்தினாலும், புத்த தத்துவ சாக்ஷாத் காரத்தினாலும் மனத்தூய்மை அடைந்தவனே மோட்சத்துக்கு அதிகாரி என்று சொல்லியிருக்கிறார். சூன்னியவாதம் மித்திய மிக ஸுத்ரம், ராகத்வேஷ மோஹக்ஷ யாத்பரி நிர்வாணம் காமம், வெகுளி, மயக்கம் இவைகளின் நீக்கமே முக்தியைத் தரும் என்பது இதன் பொருள். புத்தபகவான் திருவாய் மலர்ந்தருளிய தத்துவ சாஸ்திரங்களை எல்லோரும் எளிதில் உணர்ந்து பயனையுமடையலாம்.

வைதிகர்களைக் குறித்த ஒரு கதை

வைதிகர்களைக் குறித்த ஒரு கதை, இச்சமயம் நினைவிற்கு வந்ததையும் இங்குக் கூறிவிடுகிறேன்.

தென்னாட்டிலிருந்த ஒரு பிரபுவானவர் தம் குடும்பத்தில் அடிக்கடி மரணம் முதலிய கெடுதிகள் நேருவதைக் குறித்து வருந்திப் பண்டிதரான ஒரு பார்ப்பனனை வரவழைத்துத் தம் குடும்பத்தை க்ஷேமமடைவிக்கும் படிக்குப் பிரார்த்தித்தார். அவன் இவரது ஜாதகத்தைக் கொண்டு வரச் செய்து பார்வை யிட்டு, இத் தகைய துன்பங்கள் யமனது வாகன மாகிய எருமைக்கடாவின் கோபத்தால் உண்டாயினவென்றும், ஆதலால், அதன் தாயான பெண் எருமையை மகிழ்வித்தால், தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பிறகு பிள்ளையினால் தொந்தரவு உண்டாகமாட்டாதென்றும், அதற்கேற்ற யாகம் ஒன்று செய்யவும், அந்த யாக முடிவில் கொம்பு, குளம்பு இவைகளைத் தங்கத்தினால் பொதிந்த பெண் எருமைகளும் தன்னாலி யன்றவாறு பிற பொருட்களும் (சுவர்ணதானம், கோதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம் முதலியன) தட்சணையாக வழங்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

பிரபுவும் கட்டளையைச் சிரமேற்றாங்கி யாகமும் நடைபெற்றுக் கொண்டே வந்தது. சில நாள்கள் சென்றதும் வித்து வானாகிய மற்றொரு பார்ப்பனன் அவ்வூருக்கு வந்தவன், யாகம் நடைபெறுவதைக் கேள்வியுற்றுத் தனக்கு ஏதேனும் தட்சணை கிடைக்கு மென்றெண்ணி யாக சாலைக்கு வந்தான். வந்தவிடத்தில் எந்த நூலிலும் இல்லாத புது முறைப்படி யாகம் நடைபெற்று வரவே, சந்தேகத்துடன் ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்ததைப் பார்த்த பழைய புரோகிதன், வந்தவன் சொந்தக்காரனிடம் உண்மையைத் தெரிவித்து வரும்படியில் மண்ணைப் போட்டு விடுவானோயென்று பயந்தான். இரகசியமாக ஒன்றும் சொல்லவும் தக்க இடமில்லை. உடனே, சமயோஜிதமான ஒரு புத்தி ஏற்பட்டது. ஹோமத்திர வியங்களைக் கையில் எடுத்து இம்மந்திரத்தைச் சொல்லி நெருப்பில் போடும் பாவனையாக வந்தவனுக்குத் தன் கருத்தை வெளியிட்டுப் பிரபுவின் முகத்தில் கரி தடவி, இருவரும் சேர்ந்து தட்சணைப் பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மந்திரமாவது:
மஹா மூர்க்கஸ்ய யாகோயம்

மஹசீத தக்ஷிண:
மமாப்யர்த்தம் தவாப்யர்த்தம் விக்நம்
மாகுரு பண்டித ஸ்வாஹா
பொருள்: இந்த யாகம் செய்வோன் அறிவிலிகளுக்குத் தலைவனாவான். இதற்கு அநேக எருமைகள் தானமாக வழங்கப்படும். அவைகளில் உமக்குப் பாதியும், எனக்குப் பாதியும்.

- http://viduthalai.in/new/page-3/4129.html?sms_ss=blogger&at_xt=4d663f18a82e9104%2C0

புதன், 23 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-43

வடமொழியின் ஆபாசம்

வடமொழியானது புலவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு பொருள்களைக் கற்பிக்க இடமுள்ளதாயிருக்கிறது. உபநிஷத்துகளை எழுதியவர்கள் கனவில்கூட நினைத்திராப் பொருள்களைச் சங்கராச்சாரியார் எழுதி, அவைகளைத் தம் மதமாக்கி, வேதத்தின் முடிவில் உள்ளவைகள் என்று உறுதிப்படுத்தினார்.

இதைப் போலவே காவியங்களிலும் மாறுபட்ட உரைகளைப் பார்க்கலாம். ஸ்புடபின்னார்த்த முதாஹாத்தச (மாகம்) என்று தொடங்கிய சுலோகங்களில் நிந்தையும், ஸ்துதியும் இருப்பதாக வியாக்கியானங்களால் தெரிகின்றது. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற பழமொழிக்கொப்பாக ஆபாசக் களஞ்சிய மாகிய வேதத்தை அறிவாளிகள் வெறுத்துத் தள்ளுவதைப் பார்த்த பார்ப்பனர்கள், வேதம் குற்றமற்றது என்று ஸ்தாபிக்கவேண்டி, சமஸ்கிருத பாஷைக்கு எதிர்பாராத பல அர்த்தங்களையும் உண்டு பண்ணி நிகண்டுகள் எழுதி வைத்தார்கள்.

இவ்வகைக் காரணங்களால் வடமொழியானது தத்துவசாஸ்திரம் எழுதத்தக்க மொழியன்று. தத்துவ நூற்கள் பார்ப்பனரால் எழுதப்பட வில்லை. அவைகளின் உண்மைக் கருத்துகளை உணர்ந்து கையாளப்படவு மில்லை. தத்துவத்தை முதன் முதலாக மனிதர்களுக்குப் போதித்தது 1பகவான் புத்தனேயாம். பிறகு சமணர்களின் நூற்கள் குரங்கின் கையிலகப்பட்ட பூமாலையைப் போல பார்ப்பனர் களின் கையிலகப்பட்டு உபனிஷத்து ரூபமாகச் சிதைவுற்றுக் கிடக்கின்றது.

மொழிகளுக்கு முரண்பட்ட பல பொருள்களைக் கற்பித்த தால் உண்டாகும் உயர்வும், தாழ்வும் அறிய விரும்புவோர், தஸாயன சாஸ்திரத்தில் சொற்களுக்கு முரண்பட்ட பொருட்களை உணர்த்துகிற பெயர்களை வைத்துப் பார்க்கட்டும். இவ்வைந்து வார்த்தைகளுக்கும் மார்ஜனில் காணுகிறபடிக்குள்ள பொருள்கள் இருந்தால், இந்த ரஸாயன சாஸ்திரம் என்ன பயனைத்தரும்?

புத்த பகவானுடைய தத்துவ சாஸ்திரம் ரஸாயன சாஸ்திரத்தின் உருவைச் சிதைத்து, வேதத்தில் உள்ளது எங்களுக்குச் சொந்த மானது என்று பிராமணர்கள் எழுதி வைத்திருக்கின் றார்கள். இதனால் மனிதர்களுக்கு ஒருபயனும் இல்லை. வடமொழியைப் படித்தும் பேசியும் வந்த பழைய காலத்திய பார்ப்பனப் பண்டிதரின் வஞ்சகத் தன்மைக்கு ஒரு சொல்லிற்குப் பல பொருள்களைப் உணர்த்துகிற இம் மொழியே உதாரணம். முன்னுக்குப் பின் முரணாகவும் சமயத்திற் கேற்றபடி பொருள் மாற்றிக் கூறுவதும் நல்லோர்களின் செய்கையல்லவே.

ஆனால், இந்துக்களின் பழைய சொத்து இதற்கு முன் கூறிய வாக்கியங் களைப் போன்ற பல வாக்கியங்கள் அடங்கிய வேதங் களும் ஸ்மிருதிக ளுமே. வேதத்தில் ஸோம(கள்ளு)த்தைக் குறித்துப் புகழ்ந்து பாடியுள்ள பல பாடல் களும், பசு யாகத்தின் மந்திரங்களும், இவை போன்ற பல விஷயங்களும், இதில் எடுத்துக்காட்டவில்லை. பௌண்ட ரீகம் என்னும் பெயரால் ஒரு யாகமுண்டு. அது விதவை யினுடையவும் பிரம்மச்சாரி யினுடையவும் சேர்க்கையால் நிறைவேறத்தக்கது.

இத்தகைய ஆபாச வாக்கியக் களஞ்சியத்தை அறிவாளிகள் எங்ஙனம் பிரமாணமாக ஒப்புக்கொள்ள இயலும்?

உபநிஷத்துகளில் பெரும் பகுதியும் புத்த பகவானுக்குப் பிறகு உண்டு பண்ணியவைகள் என்றும், அதற்குமுன் இரண்டொன்று உண்டாயிருந்தால், அவைகள் க்ஷத்திரியர் களின் சொத்தாக இருந்தனவென்றும் முன்னரே கூறியுள்ளோம்.

அத்தியாயத்ம வித்தைக்கு இராஜ வித்தையென்றும், மற்றொரு பெயருண்டு. இதனால் இது க்ஷத்திரியர்களின் சொந்தமென்றும் நன்கு விளங்குகிறது. 1ராஜ வித்தியாராஜ குஹயம் பவித்திரமித முத்தமம் என்கிற கீதா வாக்கியத்தால், கிருஷ்ணன் இவ்வுண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றார். கரும காண்டத்தைத் தழுவி நடக்கிற 2மீமாம்ஸ கர்கள் உபனிஷத்துகளை வேதப் பிரமாணமாக அங்கீகரிக்கமாட்டார்கள்.

முதன் முதலாக உபனிஷத்துகளை வேதத்தில் சேர்த்து ஒப்புக்கொள்ள வில்லை. பிறகு கருமகாண்டத்தில் மனிதர்களுக்கு நம்பிக்கை குறையவே பழைய குருட்டு நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் பொருட்டு உபனிஷத்துகளும் வேதங்களேயென்றும், ஆனால், முடிவில் இருப்பதால் கருமகாண்டப் படிக்குள்ள யாகம் முதலிய சடங்குகளை நிறைவேற்றி மனத்தூய்மை அடைந்தவன்தான் உபனிஷத் துகளை உணர்ந்து அவை களின்படி ஒழுக உரிமை உள்ளவன் என்றும் பொய்க்கதையைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

எக்காலத்தும் அழியாமலும் அனைத்திற்கும் காரணமாயும் இருக்கிற பரம்பொருள் ஒன்றே! என்றும், நிலைத்திருப்பது இவ்வுலகத் தோற்றம் மாத்திரமே.

1. அரசர்களின் வித்தை - அரசர்களின் இரகசியப் பொருள்.

2. இவர்கள் சங்கர மதத்தைப் பிரசன்ன புத்தமதம் (வைதிகப் போர்வையுடைய பவுத்தர்கள்) என்று சொல்லுவார்கள். இதனால் பவுத்த சமயக் கூற்றுவனாயிருந்த சங்கரர், பவுத்தர்களின் தத்துவ நூற்களை வடமொழியில் எழுதி, உபனிஷத்துகள் என்ற பெயரைக் கொடுத்தார் என்று எண்ண இடமிருக்கிறது.

- http://viduthalai.in/new/page-3/4072.html?sms_ss=blogger&at_xt=4d651bb4297cb722%2C0

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம்


செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்




விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் 17.2.2011 மாலை செஞ்சி பேருந்து நிலை யம் அருகில் கெடார் சு.நடராசன் மூன்றாம் ஆண்டு நினைவு பகுத் தறிவுப் பிரச்சாரக்கூட் டம் எழுச்சியுடன் நடை பெற்றது.

விழுப்புரம் மாவட் ட தலைவர் ப.சுப்பராயன் தலைமையில் செஞ்சி நகர தலைவர் சு. அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பி னர்கள் நல்லாசிரியர் த.தண்டபாணி, புலவர் அ.எத்திராசன், சவுந்தரி நடராசன் முன்னிலை யில் கடலூர் மண்டல தலைவர் வ.சு. சம்பந்தம், கழக பேச்சாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ் சாக்ரடீஸ் சிறப்புரை யாற்றினார்.

விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசுபதி வரவேற்றார். செக்கடிக்குப்பம் பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன் பகுத் தறிவுப் பாடல்களைப் பாடினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், சென்னை சண்முகப்பிரியன், காணை ஒன்றிய செய லாளர் ரமேசு, கலையர சன், மலையரசன் குப்பம் சுப்பிரமணி, ஆறுமுகம், செஞ்சி நகர துணைச் செயலாளர் இரகுநாதன், மேல்மலையனூர் ஒன்றியத் தலைவர் மதியழகன், சிட்டிபாபு, மகளிரணி கலைச் செல்வி பசுபதி, பெரியார் பிஞ்சு கள் மதிவதனி, ஆற்ற லரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வழக்கு ரைஞர் அணி செயலா ளர் ந.விவேகானந்தன் நன்றி கூறினார்.

செஞ்சி யில் பகுத்தறிவுப்பிரச் சாரக்கூட்டம் நடைபெற்ற போது பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு கேட்டதோடு, சிறப்பு ரையாற்றிய தமிழ் சாக்ரடீசுக்கு மாலை அணிவித்துப் பாராட் டினர்.

- http://viduthalai.in/new/page-4/4005.html?sms_ss=blogger&at_xt=4d63be075829a2e0%2C0

திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் - தொடர்-42

இதன் விடை:
ஊர்த்வ மேனமுச் ச்ரயதாத்
கிரௌபாரம் ஹரன்னிவ
அதாஸ்ய மத்ய மேஜது
கீதே வாதே புனன்னிவ

பொருள்: முன்போலவே, இவள் என்ற இடத்தில் இவன் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

ஹோதாவென்பவன் மற்றொருத்தியை நோக்கிக் கூறுவது:
யதஸ்யா அம்ஹுபேத்யா
சூது ஸ்தூல முபாதஸத்
முஷ்காவி தஸ்யா ஏஜதோ
கோசபே சகுலாவிவ

பொருள்: எப்போது லிங்கம் யோனிக்குள் நுழை கின்றதோ, அப்போது நீர் நிறைந்திருக்கும் மாட்டுக் குளம்பில் இரண்டும், மீன்களிலிருந்து அசைவது போல் விதைக் கொட்டைகள் இரண்டும் வெளியில் அசைந்து கொண்டிருக்கும்.

இதன் விடை:
யத் தேவாஸோ லலாமகும்
ப்ரவிஷ்டீ மின மாவிஷு;
ஸக்த்னா தேதிச்யதே நாரீ
சத்யஸ் யாக்ஷி புவோ யதா

பொருள்: எப்போது ருத்விக் முதலியோர் புணர்ச்சி செய்யவிரும்பி லிங்கத்தை யோனிக்குள் நுழைக் கின்றார்களோ, அப்போது பெண்ணின் அங்கங்கள் ஆணினால் மறைக்கப்பட்டிருக்கும். ஆயினும், தொடை யைப் பார்த்துப் பெண்ணை வேறு பிரித்து அறிந்து கொள்ளலாம்.

க்ஷத்தா என்பவன் வெறொருத்தியிடம் கூறுவது:
யத்தரிணம் யவமத்திநபூஷ்டம் பசுமன்யதே
சூத்ரா யதர்ய, ஜாரா நபோஷாய தனாயதி

பொருள்: பயிரை மேயும் மானைப் பார்த்து பயிர்ச் சொந்தக்காரன் மான் சுகத்தையடையுமே யென்று எண்ணாமல், இம்மான் பயிரைத் தின்றுவிட்டதே யென்று வருத்தப்படுவதைப் போல் ஆரியர்களால் புணர்ச்சி செய்யப்பட்ட தன் மனைவியைப் பார்த்து சூத்திரன் துன்புறுகிறான்.

இதன் விடை:
யத்ஹரிணோ யவமத்தி
நபுஷ்டம் பகுமன்யதே:
சூத்ரோ யதர்யாயை ஜாரோ
நபோஷ மனுமன்யதே

பொருள்: முற்கூறியவாறு ஆரிய ஸ்தீரியைப் புணர்ந்த சூத்திரனைப் பார்த்து, ஆரியர்களும் வெறுப்படைகிறார்கள்.

இத்தகைய வாக்கியங்களால் ஆரியர்கள் 1வியபி சாரத்தை விளையாட்டாகவே நினைத்து வந்தார்கள் என்பதும், இவர்களுக்குப் புறம்பானவர்கள் தீய ஒழுக்கமென்று வெறுத்து வந்தார்கள் என்பதும் அறியக் கிடக்கின்றது.

இவ்விதமாக ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா தவைகளும் ஆபாசங்களுமான வாக்கியங்கள் நிரம்பியிருக்கிற வேதங்களின் சொரூபத்தை நம்மவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு மேற்கூறிய உதா ரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டன. இவைகள்தாம் யாக மந்திரங்கள். இவைகளைச் சொல்லி யாகம் செய்தால், பிராமணன் சுவர்க்கத்தை அடைவான். இச்சொற்களைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயமும், மெழுகும் உருக்கிவிடுவது பார்ப்பனரின் வழக்கம். ஆனால், நல்லோர்களுக்கு இத்தகைய ஆபாச வார்த்தைகளைக் கேட்பதே ஈயம் உருக்கிவிடு வதைக் காட்டிலும் கஷ்டமாயிருக்குமென்பதில் அய்யமில்லை.

ஆரிய சமாஜத்திற்குத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி முற்கூறிய வாக்கியங்களுக்கு வேறு பொருள் கூறுகிறார். மஹீதராசாரியரைக் கண்டிக்கவும் செய்கிறார். அது, நம்மவர்களை ஏமாற்றி ஆரியமதத்தை நம்பச் செய்யவே ஆகும். ஆரிய சமாஜம் தோன்றி நாற்பது வருடங்களே ஆகின்றன. இக்காலத் தும் ஒரு சிலரே ஆரிய சமாஜத்தைத் தழுவுகின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்னிருந்த பிராமணரனை வரும், இக்காலத்தவரின் பெரும் பகுதியினரும் மஹீதர பாஷ்யத்தை ஒத்துக் கொள்ளுகின்றனர். ஆதலால், இதில் மேற்கோள்களாகக் கூறப்பட்டிருக்கும் வாக்கியங்களின் உரை மஹீதரரின் பாஷ்ய மொழி பெயர்ப்பேயாகும். தயானந்த மதப் பிரகாரம் 196 கோடி ஆண்டுகளாக இப்படி நடந்ததென்று சொல்ல வேண்டும். இந்த வேதத்திற்கு மாறிப் பொருளுரைக்க வந்தவர் 40 ஆண்டு காலம்தான் ஆகிறது. புத்த, சமணக்காலத்தில் மஹீதர பாஷ்யமே இருந்தது.

- http://viduthalai.in/new/page-3/3858.html?sms_ss=blogger&at_xt=4d6205b83e2ee8db%2C0

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-41

ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்
பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித்தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.
1ஸ்வர்க்கே லோகே ப்ரோணுவாதாம்

பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:
(ஃ) வருஷா வாஜி ரேதோதாரேதோ ததாது

பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக் கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.ஃ

உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா
வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன

பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.

2அத்வர்யு முதலிய அய்வரும் (அத்வர்யு பிரஹ்மா, ஹோதா, உத்காதா, க்ஷதா) குமாரிகளும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிற வாக்கியங்கள் வருமாறு:

முதலில் அத்வர்யு குமாரியை விளித்துத் தனது விரலால் அவளின் அல்குலைச் சுட்டிக்காட்டிப் பரிஹாசமாகச் சொல்லுகிறான்:

3யகாஸகௌ சகுந்தகா ஹலகிதி வஞ்சதி;
ஆஹந்தி கபே பஸோ நிகல்யா பீதி தாரகா

பொருள்: பெண்கள் விரைந்து நடக்கும்போதும், புணர்ச்சிக் காலத்திலும் யோனிக்குள் ஹலஹலாவென்னும் ஒலியுண்டாகிறது. பிறகு வீரியம் வெளிப்படுகிறது.

இதற்குக் குமாரியானவள் அத்வர்யுவின் லிங்கத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு விடையளிக்கிறாள்.

யகாஸகௌ சகுந்தகா
ஹலகிதி வஞ் சதி;
விவக்ஷத இவ தேமுக மத்வர்யோ
மநாஸ்த்வ மபி பாஷதா

பொருள்: அத்வர்யுவின் லிங்கத்தை விரலால் சுட்டிக்காட்டிக் கொண்டு, நுனியில் துவாரத்தையுடைய இது உன் வாய்போலிருக்கிறது. ஓ அத்வர்யுவே! அதிமாகப் பேச வேண்டாம்.

பிரஹ்மா மஹிஷியினிடம் சொல்வது:-
மாதாசதே பிதாசதே அகரம் வ்ருக்ஷஸ்ய ரோஹத:
ப்ரதிலா மீதிதே பிதா கபே முஷ்டி மதம் ஸயத்

பொருள்: மஹிஷியே! உன்தாயும், தந்தையும் கட்டிலின் மேல் ஏறிக்கொண்டு, உன் தாயின் பக்கத்தில்(யோனி) தந்தையார் முஷ்டியை (லிங்கம்) செலுத்தியதனால் நீ பிறந்தனை.

இதற்கு மஹிஷியின் விடை:
மாதாச பிதாச தேக்ரே வ்ருக்ஷஸ்ய க்ரீடத
விவக்ஷத இவதே முகம் ப்ரஹ்மன்
மாத்வம் வதோ பகு

பொருள்: உன் பிறவியும் இவ்வாறே, அதனால் அதிகமாகப் பேசாதே.
உத்காதா, குமாரிகளில் ஒருத்தியை நோக்கிச் சொல்லுவது.
ஊர்த்வமேனா முச்சராபய கிரௌ
பாரம் ஹரன்னிவ;
அதாஸ்யா மத்ய மேததாம் சீதே
வாதே புனன்னிவ

பொருள்: மலைக்குமேல் சுமையை ஏற்றுவது போலவும், குளிர்ந்த காற்று வீசுங்கால் தானியத்தின் பதர் தூற்றுவது போலவும் இவளை உயரத் தூக்கிப்பிடியுங்கள். இவளுடைய இடை அகலமாக ஆகட்டும்.

1. அதிவாஸேன ப்ரச்சாதயதி ஸ்வர்க்கே லோக இதி (காத்யாயன சிரவுத சூத்திரம்) ஸ்வர்க்கே லோக என்ற மந்திரத்தச் சொல்லி துணியைப் போட்டு மூடுகிறார்கள். ஏஷவை ஸ்வர்க்கோ யத்ரபசும் ஸம்ஜ்ஞபயந்தி எங்குப் பசு யாகம் செய்யப்படுகிறதோ அவ்விடம் சுவர்க்கமாம்.

(ஃ) அஸ்வசிச்ன முபஸ்தே குருதே வ்ருஷாவாஜீதி, (அஸ்வலிங்கம் ஹஸ்தேன த்ருத வாஸ்வ யோனித்வரா அர்ப்ப யதீத் யர்த்த) மஹிஷியானவள் குதிரையின் குறியைக் கையினால் பிடித்துத் தன் யோனித் துவாரத்தில் வைக்கிறாள் என்பது இதன் பொருள்.

2அத்வர்யு ப்ரஹ்மோத் காத்ருக்ஷத்தார குமாரீபத்நீபி; ஸம்வதந்தே யகாஸகா விதி தசர்ச் சஸ்ய த்வாப்யாம் ஹயே ஹயே ஸாவித்யா மந்தர்ய. (காத்யாயன சிரவுத சூத்திரம்)

3அத்வர்யு முதலியவர்கள் குமாரி பத்தினிகளுடன் பரிகாசமாகப் பேசுகிறார்கள். இம்மந்திரங்கள் 90 பாட்டுகள் அடங்கியது. யஜுர் வேதம் அத்தியாயம் 23-இல், 20-லிருந்து மஹீதர பாஷ்யத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

- http://viduthalai.in/new/page-3/3680.html?sms_ss=blogger&at_xt=4d5e818aefb9516d%2C0

பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு


பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு தமிழர் தலைவர் வெளியிட, பொருளாளர் பெற்றுக்கொண்டார்



சென்னை, பிப்.16- பகுத்தறிவு ஆசிரியரணி முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் விழுப்புரம் மாவட்டத் தலைவருமாகிய பெரி யார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் மறைவையொட்டி நினைவு நூலாக பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீட்டு விழா பெரி யார் திடலில் இன்று (16.2.2011) காலை நடை பெற்றது. தமிழர் தலை வர் கி.வீரமணி நூலை வெளியிட, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக் கொண்டார். தலைமை நிலைய செய லாளர் வீ.அன்புராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசு பதி, ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர். நூல் வெளி யீட்டு விழாவையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் நூறு தமிழர் தலைவரிடம் வழங்கப் பட்டது.

http://www.viduthalai.in/new/home/archive/3566.html

-

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-40

1அத்தகைய கொடுந்தொழில்கள் பிரிட்டிஷ் அரசாங்கத் திற்குப் பயந்து ஏடுகளிலும் வஞ்சகப் பார்ப்பனரின் உள்ளங்களிலும் அடைக்கலம் புகுந்திருக்கின்றன. இத் தகைய கொடுமைகளைக் காப்பாற்ற எண்ணியே ஹோம் ரூல் வேண்டுமென்கிறார்கள். எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டுமென்கின்றவர்களைத் தேசத் துரோகிகள் என்று வசை மொழிகளால் அலங் கரிக்கின்றனர். பல மனிதர்களை மிருகங்களைக் காட்டிலும் தாழ்வாகச் சில மனிதர்கள் நினைத்து வருகிற காலம் வரையில் சகோதரர்களே, உங்களுக்கு ஹோம் ரூல் வேண்டாம். நீங்கள் விரும்பினாலும், ஆங்கிலேயர்கள் கொடுக்க மாட்டார்கள்.

கொடுத்தாலும் இந்துக்களாகிய நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். ஒற்றுமையுள்ள புறச் சமயத்தாரால் துன்புறுத்தப்பட்டுக் கஷ்டப்படுவீர்கள். ஆதலால், சிலகாலம் மட்டும் (நமக்குள் ஒற்றுமை வருமளவும்) பொருத்திருந்து, வேத சாஸ்திரங்களை வாசித்து, அவை களின் உட்கருத்துகளை ஆராயுங்கள். அங்ஙனம் ஆராயுங் கால், அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத: தமத்யா பதீதா. இவை முதலிய வாக்கியங்கள் உங்கள் கண்களுக்குப் புலனாகும். வேதத்தைப் படிக்கிற உங்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள், நாஸ்திகோவேத நிந்தக என்றும் மற்றும் பரிகாசம் பண்ணினாலும் எடுத்துக் கொண்ட முயற்சியி னின்றும் பின்வாங்காமல் சாதாரண சமஸ்கிருதத்தினின்றும் மாறுபட்ட இவ்வேத மொழியை மஹீதரன் முதலிய பழைய ஆச்சாரியார்களின் பாஷியத்தை வைத்துக்கொண்டு, நம்மவர்கள் எல்லோருக்கும் பயன்படும்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய நம் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளிப்படுத்தவும் உறுதி செய்துகொண்டு, அதற்கேற்ற முயற்சியை ஒவ்வொருவரும் விரைந்து செய்யுங்கள்.

ஆனால், இக்காரியமானது வடமொழி, தென்மொழிப் புலமை வாய்ந்த அறிவாளர்களும், பொருளாளர்களும் கலந்து உழைத்தாலன்றி இலகுவில் முடிவுறாது. பாஷை, வேஷம், 2விசாரம் தேசம் இவைகளால் மாறுபட்ட மேனாட்டார் இக்காரியத்தில் எடுத்துக் கொள்ளுகிற முயற்சியைக் கூர்ந்து

கவனிக்கிற எந்த மனிதனும் சந்தோஷிக்கத்தக்கது. நடையிலும் உடையிலும் அய்ரோப்பியர்களைப் பின்பற்றுகிற நம்மவர்களைப் பின்பற்றி உழைத்து வருவார்களானால், நாட்டிற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்.

நிற்க, நம்மவர்களால் பரிசுத்தமென்று கருதப்பட்டு வருகிற வேதத்தினுடைய ஒரு பாகமாகிய மந்திரங்களிற் சிலவற்றை ஈண்டுக் கூறுவேன். விதி, மந்திரம், அர்த்த வாதம், நாமதேயம் என வேத வாக்கியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மந்திர மென்கிற சொல்லிற்கு நினைப்பூட்டுவது என்று பொருள். யாகத்தில் நிறைவேற்றுகிற ஒவ்வொரு சடங் கின் முதலிலும் இவைகளைச் சொல்லிப் பொரு ளையும் சிந்தித்தல் வேண்டும். இதன் கீழ்க் கூறப்புகும் மந்திரங்கள், வாஜ ஸனேயீ (சுக்ல யஜுர் வேதம்) சம்ஹிதையில் உள்ளன. இவைகளுக்கு மஹீதராசாரியார் தெளிவாகப் பாஷியம் எழுதியிருக்கிறார். ஒரே குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து வாசித்து மகிழத்தக்க புராணங்களோ, ஸ்மிருதிகளோ, வேதங்களோ இவை முதலிய எந்த இலக்கிய நூலும் இந்துக்களுக்கு இல்லை.
புத்திர காமேஷ்டி யாகம்

முற்காலங்களில் யஜமானனுக்கும், யாகஞ் செய் வோனுக்குப் பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில்3 பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதும் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும். அதன் விபரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத்தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும்,

பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-

1. கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே (வஸோமம)

பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக இருக்கவேண்டும். (மனைவிகளுள் தலைவியை 4மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராணசோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/3501.html?sms_ss=blogger&at_xt=4d5a9b984cbab94d%2C0

திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-39

புத்த பகவானையும் அவர் கொள்கைகளையும் மனிதர்கள் வெறுக்கும்படி எழுதிவைத்ததும், புத்த சமயத்தினரைப்போல வெளி வேடம் போட்டுத் தீய நெறியில் ஒழுகியும், இத்தாந்திரீக ஜனங்கள் உலகத்தை நரகக் குழியில் அமிழ்த்தியதோடு, அறிவிலிகளாகிய பல ஜனங்கள் அரசர்களுக்குச் சிற்சில 1உபகாரங்கள் செய்து, அவர்களின் உதவியினால் புத்மதத் துறவிகளையும், சமண முனிவர் களையும் சித்திரவதை செய்தார்கள்; கழுவிலேற்றினார்கள். அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!! அவர்களின் கோயில்களையும் மடங்களையும்2 கொலைக்கள மாக்கினார்கள். விக்கிரகங்களை உடைத்தார்கள். ஆனால், இக்கொடுந் தொழிலாளர்களால் புண்ணிய பூமியென்ற ழைக்கப்படுகிற இந்த நரகக்குழியில் புத்த சமயமும், பிக்ஷுக்களும் இல்லாமற் போயினும், இன்னும் பூவுலகில் மக்கள் தொகுதியில் புத்த சமயத்தினரே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பகுதியாரும் முழு உரிமையும் உடையவர்கள். சிலோன், பர்மா முதலிய இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் அடங்கிருப்பவர்களும் இந்நரகக் குழியில் கிடந்துழலும் இந்துக்களைப் போல் எல்லா வகையிலும் யாவருக்கும் அடிமைகளாக இருப்பதில்லை.

புத்த பகவானுடைய கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகி வந்த அசோகன் முதலிய பேரரசர்களின் காலங்களில் கொலை, காமம் முதலிய பாகங்கள் தலைகாட்டாமல் எல்லா உயிர்களும் சுகமாய் வாழ இடமிருந்ததால், 3விண்ணாட்டிற் கொப்பாயிருந்த நாட்டில் முற்காலங்களில் பார்ப்பன நூலார்களின் மூதாதைகள் அனுஷ்டித்து வந்த களவுப் புணர்ச்சி, கொலை முதலிய பாவங்களை வளரவொட்டாமல் புத்த சமய, சமண சமயங்கள் ஒடுக்கி வருவதைக் கண்டு அப்புனித மதத்தை ஒழிக்கக் கண்டு பிடித்த பல தந்திரங்களுள் முதன்மையானது இத்தந்திர சாஸ்திரமே. இதன் பெயரும் வழக்க, ஒழுக்கங்களுமே இதற்குச் சான்று கூறும். எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிய கடவுள், இத்தகைய வஞ்சக எண்ணத்துடன் பல நூல்களும், ஒழுக்கங்களும் உண்டு பண்ணின இவர்களைத் தன்வினை தன்னைச் சுடும் என்ற முறையாகப் பிறருக்கு அடிமையாகி வருந்தும்படியாக விட்டுவிட்டார்.

பர்த்ருஹரி என்னும் பெரியார் கூறுகிறபடி தஸ்மை நம: கர்மணே அத்தகைய பெருமைபொருந்திய வினைச் செயலின் பொருட்டு நமஸ்காரம்.

நான்காவது அத்தியாயம்

ராஜன் வாழும் நகரத்திற்கு வெகு தூரத்திலுள்ள ஒரு சிற்றூரில் குடியிருந்து வந்தவளும், நகரங்களைப் பார்த்திராதவளுமான ஒரு கிழவி நெடுநாள்களாக அரசனைப் பார்க்க அவாவுற்றிருந்தனள். ஒருநாள் குடிகளின் நன்மை தீமைகளை விசா ரிக்க எண்ணி, அவ் வூருக்கு அரசன் வருகிறான் என்று கேள்வியுற்று இந் தக் கிழவியானவள் எல்லோருக்கும் முன்னதாகவே அரசன் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள்.

யானைகள், குதிரைகள் மேளவாத்தியங்கள் எல்லாம் பார்த்த இவள், அரசனது உருவம் எப்படியிருக்குமோ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அரசன் இவளது கண்முன்னின்றும் மறைந்து சில தூரம் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்ததும் கிழவி, தான் கோரிய ஆள் இன்னாரென்று தெரிந்துகொண்டு, இவனா அரசன்? இவன் மனிதனாக வன்றோ இருக்கின்றான்! நான் என்னமோ எண்ணிவிட்டேன்.

இவனைப் பார்க்கும் பொருட்டு வீணே பொழுதைப் போக்கினேனே! என்று வருத்தத் துடன் வீட்டிற்குச் சென்றாளாம். இந்தக் கிழவி அரசனைப் பார்க்குமளவும் அவன்பால் வைத்திருந்த அளவுகடந்த மரியாதைக்கு அறியாமையே காரணமென்பது வெளிப்படை.

இதைப்போலவே, வேதாகமத்தைக் கற்றுணராத நம்மவர்களும் அதனிடத்துப் பரிசுத்தத் தன்மையைக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தில் நம்மவர்களிலும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்த மேதாவிகள் கூட வேதத்தைப் புகழ்ந்து கூறுவது வழிவழியாகக் கேட்டு வந்த மூடநம்பிக்கையினாலேயாகும். இந்த வேதம் கேட்கிறவனுடைய காதில் ஈயம் காய்ச்சி விடுவதும்,வேதப் பொருளை மனத்தில் வைத்திருப்பவன் நெஞ்சைப் பிளப்பதும் புண்ணியச் செயலாக நடத்தி வந்தார்களெனினும், கல்வி அறிவில்லாத உண்மைக் கருத்து விளங்காமையாலும், இவ்வேதமானது பரம்பரை யாக வந்த ஓர் ஆசானிடம் பொருள் கேட்டுத் தெரிந்து கொண்டாலன்றி, ஏனையோருக்கு விளங்காத (உலக வழக்கிலில்லாத) ஒரு மொழியில் இருப்பதாலும், வேத மென்பது தெய்வவொளி திகழ்வது: சொல்லிற்கடங்காப் பெருமையுடையது என்று இவ்வாறு நம்பிவிட்டார்கள்.

இங்ஙனம் கண்மூடி நம்புவதில் என்ன பயன்? வேதப் புத்தங்கள் அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கின்றன. நாக்கை அரிந்துவிடுவார்களே, நெஞ்சைப் பிளந்து விடுவார்களே, ஈயத்தைக் காய்ச்சிக் காதுகளிலே விட்டுவிடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.

- http://viduthalai.in/new/page-3/3412.html?sms_ss=blogger&at_xt=4d5944087cf8e3f9%2C0

ஞானசூரியன் தொடர்-38

இவர்களின் சமயத்திலுள்ள சில பரிபாஷைச் சொற் களின் பொருள் வருமாறு:

தீர்த்தம் என்றால், சக்தி பூசைக்குரிய மாமிசம்; இதற்கே சக்தி என்றும், புஷ்பமென்றும் சொல்லுவார்கள். தருதீயைச் சதுர்த்தி மாம்ஸம், மீன் சரவணயோனி முத்திரை, பஞ்சமி மைதுனம், ஜலதும்பிகை இவைகள் மீனைக் குறிக்கும் சொற்கள். தங்களின் தீய ஒழுக்கங்களைப் பிறர் அறிந்து நகைப்பார்களே என்றுதான் இங்ஙனம் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்தச் சமயத்திற்குக் கவுலன், சாம்பவன், ஆர்த்திர வீரன், கணேசன் இவ்வகையான பரிபாஷைப் பெயர்களும் உண்டு. பிறருக்குக் 1கண்டகன், விமுகன், சுஷ்கபசு இவை முதலிய இழிவான சில பரிபாஷைப் பெயர்களும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். 2பைரவி சக்கிரபூஜை பண்ணும் தருணத்தில் கட்குடத்தை வைத்துப் பூசித்து, ஓ கள்ளே! நீ பிரம்மனது சாபத்தினின்னும் விடுபட்டிருக்கின்றனையெனப் பிரார்த்தித்துப் பிறகு அங்குக் கூடியிருக்கிற ஆண், பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுள் ஓர் ஆண் மகனையும் ஒரு பெண்மணியையும் நிர்வாணமாக உட்கார வைத்துப் பெண்களெல்லாம் ஆண்மகனுடைய மர்மஸ்தானத்தையும் இலக்காக்கிப் பூசை செய்கிறார்கள். பூசை முடித்தும் மிச்சமான சாராயத்தை இவர்களுக்குத் தலைவனான ஆசாரியன் கையிலெடுத்துப் பைரவோஹம் (நானே பைரவன்) என்று குடித்துவிடுகிறான். பிறகு அதே எச்சில் பாத்திரத்தில் சாராயத்தைப் பகிர்ந்து எல்லோரும் குடிக்கிறார்கள். பழையபடி இருவரையும் நிர்வாணமாக இருக்கச் செய்து யோனி பூசை நடத்து கிறார்கள். இத்தருணத்தில் பெண்ணின் கையில் ஒரு வாளும் புருஷன் கையில் ஒரு சூலமும் கொடுப்பார்கள். இவ்விருவர்களையும் கள்ளையும், இறைச்சியையும் தின்னச் செய்து, பிறகு எல்லோரும் கள்ளையும் இறைச்சியையும் உட்கொள்ளுகிறார்கள். பிறகு பெண்களின் சில ரவிக்கை அல்லது அடையாளத் துணிகளை அவிழ்த்தெடுத்து ஒன்றாகக் கலந்து ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எடுத்துக் கொள்ளுகிறார்கள். எந்தப் பெண்ணின் உடை எந்த ஆணின் கைக்கு வந்ததோ அன்று அந்தப் பெண் அவனுக்குச் சொந்தம். ஆயினும், தாய்க்கு மட்டும் விலக்கு ஏற்பட்டிருக்கிறது. சகோதரி முதலிய யாராயிருப்பினும் குற்றமில்லை. இச் செயலைப் பெரும் புண்ணியமாகவும் இவர்கள் நினைக்கி றார்கள்.

இந்தத் தந்திர(ஆகம) சாஸ்திரத்தின் உற்பத்தியைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியதன்றோ? புத்த சமயத்தை நாசம் பண்ணக் கங்கணங் கட்டிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. உயிர்கள் பொதுவாக அருந்தல், பொருந்தல் என்கிற இரு விஷயங்களில் பிரியமுள்ளவைகள். இவ்விரண்டும் இச் சமயத்தில் எல்லோருக்கும் எக்காலத்தும் எளிதாகக் கிடைக்கும். புத்த சமயத்தில் இவ்வகை விஷயங்களில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ள இடங் கொடுக்கவில்லை. மனத்தைத் தூயதாக்கும் பொருட்டு உணவில் பாகுபாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, இல்லறத்தார் பிறர் மனைவியை மனத்தில் கூட விரும்பலாகாதென்றும், அவளைப் பார்க்கும் போது, வயதில் மூத்தவளைத் தாய் போலவும், இளைய வளைத் தங்கை அல்லது மகளைப் போலவும் நினைக்க வேண்டுமென்றும், இதற்காகவே சதாபவித்ரோகம் (நான் எப்போதும் தூயவனாகவே இருப்பேன்) என்று எண்ணிக் கொண்டு அதன்படி ஒழுகி வரவேண்டும் எனறும் சொல்லப் பட்டிருக்கிறது. துறவிகள் எப்போதும் பெண் களைப் பார்த்தல் தொடுதல் இவைகளினின்றும் விலகி, ஆத்ம பாவனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. புத்த சமயத்தில் பிறப்பினால் ஜாதிவேற்றுமை இல்லாவிடினும், ஒவ்வொருவனுடைய மனோ நிலைமைக்கேற்றவாறு உயர்வு, தாழ்வு ஏற்பட்டிருக் கிறது. இத்தாந்திரீக மதத்தில் பணக்காரன் எந்த ஜாதி யானா யிருப்பினும், அவன் தீக்ஷை பெற்றுக்கொண்டு பூசைக் காலத்தில் ஒன்றாக இருக்கலாம். பூசைக்காலத்தில் எல்லோரும் துவிஜாதிகள்தான் (இரு பிறப்பாளர்). மற்ற காலங்களில் தத்தம் ஜாதி 3முறைப்படியே ஒழுக வேண்டும். இதற்குப் பிரமாணம்:-

ப்ரவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே
வர்ணா த்விஜாதய;
நிவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே
வர்ணா ப்ருதக்ப்ருதக்

பொருள்: பைரவீசக்கிர பூசையின் போது எல்லோரும் துவிஜாதி (பிராமணர்)களே பூசை முடிந்ததும் அந்தந்த வருணத்தான் தனித் தனியாகவே இருக்கவேண்டும்.

இவ்விரண்டு சமயங்களில் அறிவில்லா மாந்தர்களின் கருத்திற்கு இணங்கியது எது? புத்த சமயமா? நாகரிக சமயமா? உள்ளத்தையும், உடலையும் வாட்டியதன் பயனாக அடையும் முக்தியைக் காட்டிலும் ஒருவகை வருத்தமின்றி இம்மையிலும் சுகம், மறுமையிலும் கைலாசம் தங்களுக்கே சொந்தம்! ஆதலால், பகுத்தறிவில்லா மனிதர்களுக்குப் பார்ப்பனத் தந்திரமாகிய தந்திர சமயமே சிறந்தது. ஆனால், இதற்குப் பொருள் செலவழியும். இதை முன்னதாகவே தெரிந்துகொண்ட பார்ப்பனர்கள், பணக்காரன் தீக்ஷை பெற்றுக்கொள்ள அதிகாரியென்றும் பிரமாணம் எழுதி வைத்தார்கள். சக்கரவர்த்தியின் பிள்ளையாகப் பிறந்து, அரச போகத்தை அருவருத்துத் தள்ளி, முற்றுந் துறந்து முனிக்கோலம் பூண்ட பகவான் புத்தன், தனக்கொப்பான வர்கள் முக்தியடையத் தகுதி எனக் கூறினார். நிற்க. பார்ப்பனர்களில் புத்தமதத்தைக் கெடுக்க எண்ணி, அம்மதத்தைச் சார்ந்த துறவிகளைப் போல் வேடம் போட்டுக் கொண்டு சமயத்தைக் கெடுத்ததோடு, இத்தகைய கயவர்களை ஜீவகாருண்யத்தினால் தங்கள் குலத்துள் சேர்த்துக் கல்வி கற்பித்த புத்தமதக் குருமார்களையும் கழுவிலேற்றிக் கொன்றார்கள். இத்தோடு, தாங்கள் உணர்ந்துகொண்ட தத்துவக் கருத்துகளை அனாதியென் றும், உபநிஷத்தென்றும் எழுதி வைத்தார்கள். இதை வைத்துக்கொண்டுதான் பார்ப்பன மக்கள், தங்கள் மதத்திற்குச் சமமான மதம் வேறெதுவுமில்லையென்று சொல்லி, இக் காலத்தும் நம்மவர்களை ஏமாற்றுகின்றார்கள்.

- http://viduthalai.in/new/home/archive/3360.html?sms_ss=blogger&at_xt=4d5943727c6a65e0%2C0

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-37

இவர்கள் விஷ்ணுவின்பால் அன்பு வைத்து வைகுண் டத்தை அடைந்தவர்களாம். இப்பிரபந்தத்தை வைஷ்ணவப் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தவருக்கொழிய வேறு யாருக்கும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். பிரிட்டிஷ் அரசாட்சியின் உதவியால் யாரேனும் கற்றுக்கொண்ட போதிலும், கோயில்களில் பாடினால் இவர்கள் ஒருங்கு சேர்ந்து அவனது. உடலை அவனுக்கு உதவாமல் பண்ணி விடுவார்கள் என்பது திண்ணம். இந்த அய்யங்கார்களின் நித்தியத் தொழில்களில் மற்றொன்று திருநீறு அணிந்து சிவனை வழிபடுகிற சைவர்களையும், சிவாலயங்களையும் நிந்தித்தலே யாகும். சிவன் கோயில் சுடுகாடு என்றும், சிவனை வழிபடுகிறவர்கள் 1பறையர்கள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்2.

முதன் முதலில் வேதமும் அதைப்போலவே பிரபலமான தந்திர (ஆகம) சாஸ்திரமும் அவசியம் வாசிக்க வேண்டும். வாமமார்க்கம் என்ற ஒரு பகுதி தந்திர சாஸ்திரங்களிலுள் ளது. தசமஹா வித்தைகள் இதற்குள் அடங்கும்.

அவைகள் இங்கு விரித்துக்கூற வேண்டிய அவசியமில்லாமையால், சுருக்கமாகக் கூறி முடிக்கின்றோம். இம்முறை முதலில் இமய மலைச்சாரலில் இருந்த பார்ப்பனர்களால் அனுஷ்டிக்கப்பட்டு நமது நாட்டின் பற்பல பாகங்களிலும் பரவிற்று , தில்லை மூவாயிரம் என்ற சொல்லில் அடங்கியுள்ள மூவாயிரம் பார்ப்பனர்களில் ஒருவர் 3அகோர சந்நியாசியாகிய சிவனேயாம். திருச்செந்தூரிலும், பத்ரீநாராயணம் முதலியவிடங்களி லும் முறையே இரண்டாயிரம் பிராமணர்கள் வீதம் போய் இம்முறையைப் பரவச் செய்தனர். இவ்விதமாகப் பன்னி ரண்டு இடங்களைத் தங்களுக்கென அமைத்துப் பிரச்சாரம் செய்ததால், இந்நாட்டில் இம்மதத்தைத் தழுவுகிற மனிதர்கள் பெருகலானார்கள். பிறகு இம்முறையிலும் பல பிரிவுகள் தோன்றலாயின. 4இவைகளை விளக்குகின்ற பிரமாணங் களில் சில கூறுகின்றோம்.

மத்யம் மாம்ஸம் சமீனம்
சமுத்ரா மைதுனமேவச:
ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர்மோக்ஷதா
ஹியுகே யுகே (கானிகாதந்திரம்)
பொருள்: கள்ளு, இறைச்சி, மீன், முத்திரை, (பிரவிடை ஸ்திரீயின் யோனி) மைதுனம் இவ்வைந்திற்கும் பஞ்ச மகாரங்கள் என்று (பரிபாஷை) பெயர். இவைகள் ஒவ்வொன்றும் மோக்ஷத்திற்குச் சாதனங்களாம்.

பீத்வா பீத்வா புன: பீத்வா
யாவதபததி பூதலே
உத்தாயச புன; பீத்வா
புனர்ஜன்ம நவித் யதே (மஹா நிர்வாண தந்திரம்)
பொருள்: கள்ளைக் குடித்துக் குடித்து மெய்மறந்து தரையில் விழுமளவும் குடிக்க வேண்டும். தெளிந்தபின் எழுந்து குடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இவனுக்கு மறுபடி பிறவியில்லை.

மாத்ரு யோனிம் பரித்யஜ்ய
விஹரெத்ஸர்வ யோனிஷு
வேத சாஸ்த்ர புராணானி
ஸாமான்ய கனிகா இவ:
ஏகைவ சாம்பவீ முத்ரா
குப்தா குலவதூரிவ:

பொருள்: பெற்ற தாய் ஒருத்தியொழிய, மற்ற ஸ்திரீகளையெல்லாம் புணரலாம். வேதங்கள், சாஸ்திரங் கள், புராணங்கள் இவைகளை விலைமகளைப் போலவும் இந்தச் சாம்பவீ முத்திரை (இப்போது சொன்ன அனுஷ்டான முறை) யொன்று மாத்திரம் குலமகளைப் போலவும் கருதவேண்டும்.

ரஜஸ்வலா புஷ்கரம் தீர்த்தம்
சாண்டலீ துஸ்வயம் காசி
சர்மகாரீ ப்ரயாகாஸ்யாத்
ரஜதீ மதுராமதா
அயோத்யா புக்கஸீ
ப்ரோக்தா (ருத்ரயாமன தந்திரம்)

பொருள்: தீட்டுக்காரியைப் புணர்தல் (ருதுஸ்திரீ); புஷ்கர தீத்தம் ஸ்நானம்; சண்டாள (புலைச்சி) ஸ்தீரியின் சேர்க்கை காசி யாத்திரையும் கங்கா ஸ்நானமும்; சக்கிலிச்சி யின் சம்போகமே பிரயாகை ஸ்நானம்; வணணாத்தியின் சேர்க்கை, மதுரைக் குறத்தியைப் புணர்தல் அயோத்தியைத் தரிசித்த புண்ணியமாம்.

இவைகளுக்கு வேறாக அயோத்தி, மதுரை, மாயை, காசி முதலிய புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதாகச் சொல்வது பகுத்தறிவில்லாத 5பசுக்களின் கூற்றாகையால், நம்பத்தக்க தன்று என்பது இவர்களின் கொள்கை.

1. அப்படியே சமணர் முன்னர் கூறியுள்ளார். ஆனால், அக்காலத்தில் அதற்குக்தக்க காரணம் உண்டு. அச்சமண மதத்திலிருந்து தோன்றியது வைஷ்ணவ மதம். இதில் சேர்ந்துள்ளவர் பல ஜாதியினர். நீ பறையன் என்று சொல்ல யோக்கியதை இல்லை. காரணம், உன் கடவுளாகிய விஷ்ணு தங்கையைப் பறையனுக்குக் கொடுத்தார் என்ற கெட்ட பேர் வந்து உன் கடவுளின் தலையிலேறிக் கூத்தாடுமல்லவா?

2. இத்தோடு நிற்காமல் விபூதி அணிந்த ஸ்மார்த்தன் வைணவன் வீட்டில் வந்த உடனே சாணித் தண்ணீரைத் தெளிப்பார்கள். காரணம், தன் வீட்டிற்குப் பறையன் வந்துவிட்ட அந்தத் தீட்டுப் போக.

3. அகோர சந்நியாசிகள் பிணம், மற்றுமுள்ள எல்லா மாமிசமும் புசிப்பர். தலையோட்டில்தான் போஜனம். மற்றெல்லாத் தொழில் முறையாகவே இருக்கும். தாந்திரீகப் புத்தகங்களைப் பார்வையிடுக. உண்மை விளங்கும்.

4. கோர்ணவதந்திரம் முதல் பாகம் பார்க்க - தாந்திரீக ஆசாரம் 7 பிரிவாக வகுக்கப்பட்டுள்ளது.

5. பசுக்கள்- தீக்ஷையில்லாத மனிதர்கள் (இவர்களுடைய சங்கத்தில் சேராதவர்கள்) இவ்விஷயம் தெரிந்தவர்கள் - தந்திர சாஸ்திரத்தை அனுஷ்டித்துவரும் குருக்கள், எத்தகைய தீய ஒழுக்கம் செய்தாலும் கெட்டதென்று சொல்வார்களா? அவர்களுடைய மதத்தில் இச்செயல்கள் நல்லதென்று சொல்லியிருக்கிறார்கள். பிறர்க்கு இச்செய்கை கெட்டதென்று தென்பட்டால், அம்மதத்தை விட்டு விலகுவதல்லாமல் இச்செய்கைகளைக் கெட்டதென்று சொல்லிக் கண்டிக்காதே. கண்டிக்கப்பட்டவன் மற்றொரு மதத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டும். அதில் ஆபாசக் குற்றங்கள் ஒன்றும் இல்லாததாயிருக்க வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/3231.html?sms_ss=blogger&at_xt=4d55464be2d5759c%2C0

புதன், 9 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-36

கைலாசத்தை அடைதலே மோட்சம். அதற்குச் சாதனம் சிவலிங்க பூஜை, சிவலிங்கமென்பது ஆண், பெண் குறிகள் பொருத்தியிருப்பது போலச் சிலையினால் செய்த விக்கிரகம். கோயில்களில் பிரதிஷ்டித்திருக்கிற இத்தகைய லிங்கத்தைத் தீண்டிப் பூசைபண்ண ஆதி சைவர்களுக்கே உரிமையுண்டு.

ஆயினும், ஏனையோர்கள் பூசைக்குரிய பண்டங்களைச் சேகரித்து ஆதிசைவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் சிபாரிசை யனுசரித்துப் பரமசிவன் மோட்சத்தையளிக்கச் சித்தமாயிருக்கிறார். ஆயினும், பணக்காரன்தான் சிவ தீட்சை பெற்றுக்கொள்ள உரிமையுள்ளவன். வடநாட்டில் கங்கைக்கரையில் பிறந்த பிராமணன்தான் ஆசாரிய ஸ்தானத்திற்கு உத்தமன். இவை முதலிய வசனங்கள் ஆகமங்களில் காணப்படுகின்றன.

தேவாரம் திருவாசகம் முதலியவைகளைக் கற்றுக் கொடுக்கிற பாடசாலைகளில் மாணாக்கர்களுக்குக் கல்வியும் உணவும் இனாமாக அளிக்கப்படுகின்றன. ஆனால், 1சைவர்கள் தங்கள் இனத்துப் பிள்ளைகளைத் தான் சேர்ப்பார்கள். இத்தகைய பாடசாலைகளில் பெரும் பகுதிகள் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் உதவியால்தான் நடைபெற்று வருகின்றன.

இச்சைவர்களுக்குச் சொந்தமெனச் சில மடங்களும் அவைகளுக்கு ஏராளமான பொருள் வருவாயுள்ள சொத்துக்களும் உள. இவர்கள் ஏழை மக்களைத் துன்பு றுத்தும் இயற்கையுடையவர்கள் என்று முன்னரே கூறியுள்ளோம். மடங்களின் நிலைமையோ பிறரைக் குறித்த மட்டில் பார்ப்பனத் துறவி மடங்களைவிடக் கஷ்டமாயிருக் கிறது. சிருங்ககிரி முதலிய பார்ப்பனச் சந்நியாசி மடங்களில் காவியுடையணிந்தோ மற்றோருவன் செல்வானானால், மனுஸ்மிருதிப்படி தண்டிக்க அவர்களுக்கு அதிகார மிருந்தும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்து அங்ஙனம் செய்வதும் இல்லை.

இக்காலத்தின் நிலைமையை நோக்கி ஒரு வேளையேனும் உணவளித்தோ அளியாமலோ, வந்த வனது உடலுக்குத் துன்பம் இல்லாத வண்ணம் விட்டுவிடுவார்கள். இவர்களோவென்றால், வந்தவன் தங்கள் குலத்தினன் என்று நன்றாய்த் தெரியாத மட்டும் ஒருவித உதவியும் செய்யமாட்டார்கள்.

எதிர் மறையாக, ஒவ்வொரு காலங்களில் பல நாள் பட்டினியால் வாடி பருக்கைக்குப் பஞ்சாய்ப் பறந்துவந்த பஞ்சையனிடத்தில் மடத்திலுள்ள மல்லர்கள் கைகலந்து சண்டை புரிவதுண்டு. வந்தவன் பார்ப்பனத் துறவி யாயினும், மடத்திலுள்ள இல் லறச் சீடர்களும்கூட, அய்யா! பரதேசி யாரே! என்றுதான் அழைப்பார்கள். இன்னும் சிலர், ஓய்! பரதேசி என்றுதான் அழைப்பார்கள்.

ஆனால், இவர்களின் மடத்தில் துறவு பெற்றுக்கொண்ட தங்கள் இனத்தவர் களுக்குத் தம்பிரான் என்ற பட்டம் மடாதிபதியைப் பண்டார சந்நிதி என்பார்கள். அவரை எல்லோரும் வணங்கவேண்டும். அவர்களுக்குக் கீழ், கையேட்டுத் தம்பிரான் என்ற அதிகாரி ஒருவர் உண்டு. துறவு பெற்றுக்கொள்ள விரும்புகிற சைவர்கள் முதன் முதலில் தம்பிரான் உத்தியோகத்தில் நியமிப்பர். லஞ்சம் பெற்றுக் கொண்டு உத்தியோகத்திற்குச் சிபாரிசு செய்யும் அசிஸ்டெண்ட் அதிகாரிக்கும் இத்தகை யோர்களுக்கும் சிறிதேனும் வேற்றுமை இல்லை.

இவ்வளவு, சிரமப்பட்டுத் தம்பிரான் ஆவதில் என்ன நன்மை என்றால், உணவு முதலியவைகள் உடல் உழைப்பின்றி இருந்தவிடத்தில் கிடைக்கும். எங்குச் சென்றாலும் மடத்துச் செலவில் சுகமாக வாழலாம். இந்த மடங்களில் நடக்கும் ஒழுங்கீனங்களைத் தமிழ் நாட்டினர் அனைவரும் அறிந்திருப்பார் களாகையால், விரித்துக்கூற வேண்டியதில்லை. இராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணா மலை முதலிய தலங்கள் சைவர்களின் 2புண்ணிய பூமிகளாம். வியாபிசாரம், களவு, கொலை முதலிய அக்கிரமங்களினால் இவ்விடங்கள் 3காசிக்ஷேத்திரத்தையும் தோற்கடிக்கின்றன.

இந்து சமயத்தினரில் சைவர்களைப் போலவே மற்றொரு சாராரும் உளர். இவர்களை, வைகுண்ட அய்யங்கார் என்று சொல்லுவார்கள். வைகுண்டத்திற்குப் பிரயாணிகளைச் சேர்ப்பதே இவர்களின் முதல் தொழில். இவர்களுக்கு வேதத்தைவிடத் திருவாய்மொழி என்ற தமிழ்ப் பிரபந்தமே பிரபல பிரமாணம். பறையர், செட்டியார், குறவர் முதலிய இவர்களால் இழிவாக நடத்தப்படுகிற இனத்தைச் சார்ந்த பன்னிருவரே இப்பிரபந்தத்தை இயற்றியவர்கள்.

1. இங்குச் சைவர்கள் என்றது அவாந்தரச் சைவர்களில் ஒரு சாரார், பரம்பரைச் சைவ குலத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில வகுப்பினரைக் குறிக்கிறது. இவர்கள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் முதலிய ஜில்லாக்களில் வசித்துவருகிற வேளாள வகுப்பைச் சேர்ந்த பிள்ளை, செட்டியார் முதலிய பட்டப் பெயர்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

கொண்டைக்கட்டி முதலியார்கள், தேசிகர்கள் முதலிய சிலரும் இத்தகையோர்களே. ஏனையோர் சமயம் முதலிய தீக்ஷைகளனைத்தும் பெற்றாலும், சைவனென்கிற பட்டப் பெயர் கிடையாது. ஜாதிக் சைவர்களில் தீக்ஷையில்லாத பலரும் உளர். ஆனாலும், சைவர்களே இக்கொடுமையை எவ்வாறு கூறுவது? கொடுமை! கொடுமை!!

2. புண்ணியத்தின் விளை நிலம்

3. காசி க்ஷேத்திரத்தின் வரலாறு இதன் முடிவில் உள்ளது.

- http://viduthalai.in/new/page-3/3089.html?sms_ss=blogger&at_xt=4d52bd1ff46800cd%2C0

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-35

அதற்குரிய உதாரணங்கள் பின்வருமாறு:
பசுஸ் சேந்நிஹத்; ஸ்வர்க்கம்
ஜ்யோதிஷ்டோ மேப்ரயாஸ்யதி;
ஸ்வபிதா யஜமானேன தத்ர
கஸ்மாந்ந ஹன்யதே?
யூபம் சதித்வா பசூன்
ஹகவாக்ருத்வா ருதிரகர்த்தமம்
யத்யேவம் கம்யதே ஸ்வர்க்கே
நாகே கேன கம்யதே?
அந்தே தமஸி மஜ்ஜந்தி
பசுபிர்யே யஜந்திதே;
ஹிம்ஸா நாமபவேத் தர்மோ
நபூதோ நபவிஷ்யதி

பொருள்: ஜோதிஸ்டோம யாகத்தில் கொல்லப்படுகிற பசு சுவர்க்கத்தை அடைவது உண்மையானால், யாகம் செய் கிறவன் தன் தந்தையைக் கொன்று சுவர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைக்கப்படுகிற பசுவைக் கட்டும் தூண்) உண்டு பண்ணிப் பசுக்களைக் கொன்று, இரத்தச் சேற்றை உண்டு பண்ணுவன சுவர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்? பசுவைக் கொன்று யாகத்தை நடத்துகிறவர்கள், இருள் சூழ்ந்த நரகத்தில் விழுவார்கள். கொலையானது எக்காலத்தும் தருமமாக மாட்டாது.

இவ்வித யுக்தி வாதங்களால் இவர்களின் யாகத்தை மறுத்து வந்தது ஒன்றே பவுத்தர்கள் செய்த பிழையாகும். இதனால், இந்நாட்டினின்றும் அவர்களை ஓட்டியும் கொலை செய்தும் நாசம் பண்ணியதுடன், நாஸ்திகோ வேத நிந்தக வேதத்தை நிந்திக்கிற பவுத்தன் (1நாஸ்திகனேயாம் என்று புராணங்களிலும் இகழ்ச்சியாக எழுதி வைத்தார்கள்.

இந்தச் சனாதன தருமத்தின் உட்பிரிவுகளில் முக்கியமான தந்திர (ஆகம) சாஸ்திரங்களைப் பின்பற்றி ஒழுகுவோரையும், அவர்கள் அடைய விரும்பும் முக்தியின் முறையையும் சுருக்கமாகக் கூறிவிட்டு இவ்வத் தியாயத்தை முடித்துவிடுகிறேன்.

சுடலைச் சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், எலும்புகளைக் கோத்து மாலையாக அணிதல், தலையோட்டில் உண்ணுதல் முதலிய சிவனுடைய ஒழுக்கங்களைப் பின்பற்றி வந்த சைவர்களை ஜைனர்கள் இழிவாகக் கருதினர். திருஞான சம்பந்தருக்கு முன்னிருந்த சைவர்கள் 2நரபலி முதலிய கொடுந்தொழில்களையும் இயற்றி வந்தனர். இதை அறிவதற்குத் தந்திர (ஆகம) சாஸ்திரங்களும், ஜைன பவுத்தர்களின் நூற்களும் உதாரணங் களாக இருக்கின்றன. (

இத்தகைய கொடிய ஒழுக்கங்கள் முக்தியைத் தருவன போலும்) இக்காலத்திலும் கூட சைவசமயத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுகிற சில சூத்திரரும், பூணூல் போட்டுக் கொண்டு குருக்கள் என்று சொல்லித் திரிகின்ற சிலரும் தங்களுடைய வயிற்றை நிரப்பும் பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவது வழக்கமாயிருக்கிறது. பார்ப்பனரல்லா தாரின் முன்னேற்றத்திற்குப் பார்ப்பனர் எப்படித் தடை யாயிருக்கிறார்களோ, அப்படியே இந்தச் சைவர்களும் இந்து சமயச் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருக்கிற ஏழை மக்களின் முன் னேற்றத்தைத் தடுத்து வருவதைத் தமிழ் நாட்டின்கண் அறி வாளிகளாயும், சுயநலமற்ற வர்களாயுமிருக்கிற வர்களுள் ஒவ் வொருவரும் அறிந்தே இருக்கி றார்கள். இவர்கள் அனாதிச் சைவர். ஆதி சைவர், அவாந் தரச் சைவர் என 3 மூன்று

பிரிவுகளையுடையவர்கள். இவர் களின் வரலாறு:- தாங்கள் தக்ஷிணாமூர்த்தியின் குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அதனால் அனாதிச் சைவர்களென்று சிலர் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆதியில் சூத்திரர்களா யிருந்து, பிறகு சிவ பூஜைக்காகவே பூணூல் போட்டுக் கொண்டு குருக்கள் என்று பட்டப்பெயரும் சூட்டிக் கொண்டவரே ஆதி சைவர்கள் என்றும், கைலாசத்தி லிருந்து பூவுலகில் சிவபூசை செய்யும் பொருட்டுச் சிவனால் அனுப்பப்பட்டவர்களே எங்களின் மூதாதைகள். அதனால், நாங்கள் ஆதி சைவர்கள் என்றும் தாங்களாகவே சொல்லிக் கொள்ளுகிறவக்ள் ஆதி சைவர்கள், கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளனானான் என்கிற பழமொழிக்கிணங்க, ஆதி சைவருவடையவும், அனாதிச் சைவருடையவும் பொய் வலைக்குள் சிக்கி, அவர்களுக்குப் பணம் கொடுத்துச் சிவ தீக்ஷையும் சைவப்பட்டமும் பெற்றுக்கொண்டு, தங்கள் குலத்தினரின் முகத்தில் கரியைத் தடவி அவர்களை வெறுத்துத் தள்ளுகிற மற்றொரு சாரார் அவாந்தரச் சைவர்கள்.

இவர்களுக்கு இக்காலத்திய சமய நூற்கள் தேவாரம், திருவாசகம் முதலிய சில நூற்களேயாம். இவைகளுக்கு வைதிக சைவசித்தாந்தம் சாஸ்திரங்களென்றும், சுத் தாத்வித சைவ சித்தாந்தம், வைதிக சைவசித்தாந்தம், வேதாகமோத்தம சைவ சித்தாந்தமென்றும் மற்றும் பெயர் இவைகளின் உற்பத்திக் காலம் புத்த சமயம் இந்த நாட்டை விட்டொழிந்த காலமும் ஏறக்குறைய ஒன்றேயாம். சில தாந்திரீக பக்தர்கள் பவுத்த, ஜைனர்களைக் கொலை செய்ய உதவி செய்யும்படிக்குச் சிவனைக் குறித்துக் கூறும் பிரார்த்தனைப் பதிகங்களும் மற்றும் இவற்றுள் அடங்கி யிருக்கின்றன. இவைகளின் பழக்கம் ஆயிரத்தொரு நூற்றாண்டு இருக்கலாமென்று சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள்.

சில காலம் சென்றதும் இவைகளை ஒன்று சோத்து, பன்னிரண்டு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் எனப் பெயர் கொடுத் திருக்கிறார்கள். ஜைன புராணங்கள் கூறுகிறபடியே பெரியபுராணம் என்ற இவர்களுடைய நூலும் அறுபத்து மூன்று பக்தர்களின் அவதாரச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. இவ்வறுபத்து மூவர்களும் அடைந்தது மோட்ச மானால், சிவ தீட்சை முதலிய கருமங்கள் மற்றும் பரமசிவனிடத்தில், வைத்த அன்பு ஒன்றே இவர்களுக்கு மோக்ஷ சாதனமாக நின்றது எனத் தெரிகிறது.

1. வேதத்தை நம்பாதவன் நாஸ்திகன்
2. சிறுத்தொண்டன் மகனைக் கொன்று அருந்திய கதை உலகமறியும்.
3. சைவர்களின் பல பிரிவினைகள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் இம்மூன்று பிரிவிற்குள் அடங்கும்.

- http://viduthalai.in/new/page-3/3021.html?sms_ss=blogger&at_xt=4d513c76a09f9509%2C0

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-34

ஞானசூரியன் தொடர்-34
ஒருவேளை தான் மற்றொருவனைத் துன்புறுத்து வானாகில், தன்னை மற்றொருவன் துன்புறுத்துங்காலையில் துக்கியாதிருக்க வேண்டும். சாம்மியவாதம் சாந்தமாகவரும் துன்பங்களை அனுபவித்துச் சும்மாயிருப்பதுதான் இனிமேல் சுகம். இக்காலம் வரைக்கும் சமணபுத்த சந்நியாசிகள் தங்கள் கையில் ஏதாகிலும் ஓர் ஆயுதத்தை எடுத்துச் சத்துருவை வெற்றிபெறப் போனதாகச் சரித்திரம் கிடைப்பது மிகத்துர்லபம்.



அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளை யிட்டிருந்ததாகச் சங்கவிஜயம் என்னும் நூலில் கூறப் பட்டுள்ளது. புத்தபிக்ஷுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று பிருஹந் நாரதீய புராணம் கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய சூலபாணி என்னும் பார்ப்பனன் புத்த சமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப் போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித்திருக் கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவ ராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணுபகவான் கல்கியென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப்போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது.

இக்காலத்தில் இந்து சமயக்கோயில்களில் பெரும் பகுதியும் புத்தாலயங்களே. இந்தக் கோயில்களில் இருந்து புத்த விக்கிரங்களை நாசம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையினாலும், மற்றும் வேற்றுமைப்படுத்தியதனாலும் இன்னும் ஸ்தூபிகளில் பிறவிடங்களிலும் புத்த விக் கிரகங்களுள் சில அழியாமலிருப்பதே இதற்குச் சான்று விசிஷ்டாத்வைத வைஷ்ணவ குருவான இராமாநுஜர் மைசூர் சமஸ்தானத்தில் சிரவணபௌகுளா என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகில் இருந்த எழுநூற்றிற்குமேற்பட்ட ஜைனக்கோயில்களை அழித்து, அந்தக் கோயில்களின் கற்களால் ஆற்றில் பாலம் கட்டுவித்த கதையும் சரித் திரத்தினால் விளங்கும், இராமாநுஜரும் அவரின் சீடர்களும் இத்தோடு நில்லாமல் ஜைனர்களின் சமய நூற்களில் பலவற்றைத் தங்களது சமய நூற்களாகத் திருத்திச் சுவாதீனம் பண்ணியும் இருக்கின்றனர்.

கொலை செய்யவேண்டாம் என்று வருந்திக்கேட்கும் தருணத்தில், கொடியவர்களாகிய இந்துக்களால் அடிபட்டும் கொலையுண்டும் துன்புற்றிருந்தாலும் ஒரு காலத்தும் கொல்லாமை விரதத்தினின்றும் தவறாத புத்த பிக்ஷுக்களை இவர்கள் கொன்றிருப்பதோடு நில்லாமல், இந்தக் கொலைக்கு உதவி செய்யத் தங்கள் தெய்வத்தினிடத்தும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பலருள் ஒருவரான திருஞானசம் பந்தர் தமிழில் பாடியிருக்கிற பாடல்களில் சில கீழே எடுத்துக் காட்டு கின்றோம்.. இவை, மூவர் அடங்கன் முறை என்னும் நூலின்கண் இருப்பவை களாம். அடங்கன் முறையோ நம்மவர்களால் நித்திய பாராயணம் பண்ணப்படுவதுமாம்.

வேத வேள் வியை நிந்தனை செய்துழலாத
மில்லி யமனொடு தேரரை
வாதில் வென் றழிக் கருத்திரு வுள் ளமே
ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென்
னால வாயிலு றையுமெம் மாதியே
வைதிகத்தின் வழியொழுகாதவக்
கைதவம் முடைக்கார மண்டேரரை
யெய்திவாது செயத்திருவுள்ளமே
மைதிகழ்தரு மாமணி கண்டனே
ஞாலநின்புகழே மிகவேண்டுந் தென்
ஆலவாயிலுறையு மெம்மாதியே
அந்தணாளர் புரிய மருமறை
சிந்தை செய்யா வருகர் திறங்களைச்
சிந்த வாது செயத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலநின்புகழே மிகவேண்டுந் தென்
ஆலவாயிலுறையு மெம்மாதியே
வேட்டு வேள்வி செயும் பொருளைவிளி
மூட்டுச் சிந்தை முருட்டமண் குண்டரை
யோட்டி வாது செயத்திரு வுள்ளமே
காட்டிலானை யுரித்தவெங்கள்வனே
ஞாலநின் புகழே மிக வேண்டுந்தென்
ஆலவாயிலுறையு மெம்மாதியே

இவை போன்ற செய்யுட்கள் பலவுள. இவையனைத்தும் சுடலைப் பொடி பூசுகிற தங்கள் தெய்வத்தினிடம் புத்த சமயிகளைக் கொலை செய்யப் போதிய வன்மையைத் தங்களுக்குத் தந்தருளும்படி பிரார்த்திப்பனவேயாம்.

முற்கூறிய அரசர்களையும், சமயத் தலைவர்களான பார்ப்பனர்களையும்போல, இதே ஞானசம்பந்தரும், கன்னட நாட்டினனாகிய ரிஷபதேவன் முதலிய பலரும் பவுத்தர் களையும், ஜைனர்களையும், கழுவேற்றியும் உலக்கையால் அடித்தும் மற்றும் பல சித்திரவதைகளாலும் கொன்றிருக் கின்றனர். இத்தகைய கொலைகாரப் பாவிகளாகிய இவர்களைத் துலுக்கர் கொன்றதிலும், இவர்களின் பெண்களைச் சிறையெடுத்ததிலும் என்ன அதிசய மிருக்கிறது? இன்னும் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்த பிறகுதான் அந்தப் பாவம் இவர்களை விட்டொழியுமோ? ஆனால், கொல்லா விரதத்தைக் கடைபிடித்தொழுகிய பவுத்தர்கள் இவர்களுக்குச் செய்த தீமைகளைக் குறித்தும் சிறிது ஆராய்வோம்.

- http://viduthalai.in/new/page-3/2870.html?sms_ss=blogger&at_xt=4d4edc06706610bc%2C0

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-33

பொருள்: தண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மையைப் பயக்குவனவாகும். எங்களால் வெறுக்கப்படுகிற (பவுத்தர் முதலிய) மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆக வேண்டும். (தனது வார்த்தையாகிய) வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காதவர்களுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும்.

யஜுர் வேதத்தில் பவுத்தர்களைக் கொல்லுவதற்குரிய மந்திரங்களும், சடங்குகளும் பல காணப்படுகின்றன. உதாரணமாக ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டர் அராதய இவை முதலிய மந்திரங்களைக் கவனியுங்கள். தாங்கள் கோயிலில் மணியடிப்பதுங்கூட இராட்சதர்களைப் பயமுறுத்தும் பொருட்டாம். பல யாகச் சடங்குகளை நிறைவேற்றும்போது, சொல்லப்படுகின்ற மந்திரங்களின் பொருள், யாகத்திற்கு இடையூறு செய்கிற 1இராட்சதர்கள் நாசமடையட்டும் என்பதே.

கொல்லாமை என்னும் மகாவிரதத்தைக் கடைபிடித் தொழுகுகின்ற பவுத்தர்கள் தாம் முற்காலத்தில் யாகங்களுக்கு இடையூறு செய்திருந்தனர். அது யாகம் செய்கிற இடத்திற்குச் சென்று கொலையின் கொடுமையையும், அதனால் நேரும் பாதகங்களையும் விளங்கக்கூறி உபதேசித்ததே ஒழிய, ஒருபோதும் இவர்களை எதிர்த்துப் போர் புரிந்ததாகவே தெரியவில்லை.

புளுகுக்களஞ்சியமாகிய இராமாயணத்தில், யாகத்துக் கிடையூறு செய்த இராட்சதனாகிய மாரீசன், இரத்தத்தைச் சிந்தி யாக பூமியைக் கெடுத்தானென்றும், இரத்தத்தையே குடிப்பதும், பச்சை இறைச்சியைத் தின்பதும் இராட்சதர்களின் இயற்கையென்றும் சொல்லியிருப்பதிலுள்ள உண்மையை நீங்களே ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.

ஆனால், இப்போது இக்கதைகளால் புத்தரைச் சாடுகிறார்கள் சிலர். இவைகள் நடந்தது எவ்வாறெனின், வேதத்தில் சைவ மதத்தை ராட்சதா மதம் என்று கூறியுள்ளார். அதற்குத் தலைவன் சிவன், சிவன் யாகத்தை மறுத்ததுண்டு. இந்த இராமாயணக்கதை பண்டையகாலத்தில் சைவரைக் கட்டாயமாகச்
சாரும் என்பர். ஆராய்ச்சி முறையால் இதன் உண்மையை அறிந்து கொள்ளுக.

ரிக் சம்ஹிதையில் 2வதீர்ஹி தஸ்யும் தனினம் கனேன் இந்திர, தாங்கள் ஒருவராகவே வச்சிராயுதத்தினால் தஸ்யுக் கூட்டத்தை (பார்ப்பனரல்லாதாரை)க் கொன்று எங்கள் துன்பத்தை யொழித்தீரே என்று இவை முதலிய வாக்கியங்களால் இந்திரனைப் புகழ்ந்து கூறியிருப்ப திலிருந்தே. அக்காலத்திய கொலைகார ஆரியர்கள நம்மவர்களுக்குச் செய்த கொடுந்தீங்குகள் நன்கு புலனாகின்றன.

இவர்கள் பல தடவைகளிலும் அளவிறந்த புத்தமதத் துறவிகளை வெட்டிக் கொன்றிருப்பது கீழ்க்காணும் குறிப்புகளால் வெளிப்படையாகும். புரோஃபசர் லக்ஷ்மிநரசு வெகு நாள்களாக உழைத்து எழுதிய மதச்சரித்திரத்தில் இந்துக்களால் புத்த பிக்ஷுக்கள் கொல்லப்பட்ட விவரத்தை இங்ஙனம் கூறியிருக்கிறார்.

அநேக யாகங்களைச் செய்தவனும் தேவபக்தனுமான புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான 3ஆராமங்களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

பின் ஒரு நூற் றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசா னான விக்கிரமாதித் தன் என்பானும், மற் றொரு அரசனான கனிஷ்கன் என்பா னும் மேற்கூறியவாறே பிக்ஷுக்களைச் கொல் வது, அவர்களின் பர் ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்கா ளத்திற்குஅரசனாயிருந்த சசாங்கன் கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த 4விக்கிரங்களையும் துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் 5பரிநிர்வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் 6ஸ்ரீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷுக்களையும், அவர்களின் கோவில்களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான 7குமாரிலபட்டன் என்னும் பார்ப்பனனொரு வனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிட்க்ஷுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. சுதன்வாவென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், தன்னை ஒருவன் துன்புறுத்தக்கூடாதென்ற எண்ணம் கொண்டவன், அவன் மற்றொருவனைத் துன்புறுத்தலாகாது.

1. புத்தர்கள் என்க.

2. (தனிமை) பணக்காரன் எனப் பொருள். இதனால் அக்காலத்தில் நம்மவர்களுக்குள் செல்வம் படைத்திருந்த பலரையும், அரசர்களையும் இந்தப் பார்ப்பனர்கள் வஞ்சித்துக் கொன்றிருப்பது வெளிப்படுகிறது. இதைப்போன்ற கதைகளும் வேதத்திற் காணலாம்.

3. புத்தபிக்ஷுக்களின் மடம். இது அழகிய வனங்களின் நடுவில் இருப்பதால், ஆராமம் என்ற பெயருடன் விளங்கியது.

4. புத்த விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணிய திருக்கோயில்.

5. முக்தி

6. ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயர் புத்தமத அரசனொருவன் இருந்தான். இரத்தினாவளி, நாகானந்தம், பிரியதர்சிகா முதலான பல நாடக நூற்களையும், சுப்ரபாத ஸ்தோத்திரம், அஷ்டமஹா ஸ்ரீசைதய சமஸ்க்ரி, தஸதோத்திரம், ஜாதகமாலா முதலிய புத்தசமய நூற்களையும் இவன் இயற்றியிருக்கிறான். என்றாலும், ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயருள்ள பலர் இருந்ததாகத் தெரிகிறது.

7. இவன் புத்த சமயத்தில் பிக்ஷுவாய்ப் பலகாலம் இருந்து, பிறகு திரும்பிப் பார்ப்பனனாய் மாறி அவர்களைக் கொன்றவன். இவன் கதை சரித்திரப்பிரசித்தம். ஆதலால்தான், அந்தக்கடவுள், துலுக்கனை உண்டு பண்ணி இந்துக் கோயில்களையும், இந்து மதத்தவரையும் வேட்டையாடுவதே தொழிலாக வேண்டிய மதத்தையும் உண்டுபண்ணி இந்நாட்டுக்கு விட்டது. இனி என்ன செய்வோம்.?

-http://viduthalai.in/new/page-3/2744.html?sms_ss=blogger&at_xt=4d4c28649871fc1a%2C0

ஞானசூரியன் - தொடர்-32

1மஹோததி என்ற பெயரையுடைய இச்சுவடி முழுவதும் இத்தகைய ஆபாச வாக்கியங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அமாவாசையன்று நடுநிசியில் வடயக்ஷிணி மந்திரம் செபிக்கிறவனால் அடையப்படுகிற சித்திகள் பின்வருமாறு:
ஸ்ருணோதி நூபுராராவம்
வந்த்ரீ கீவத்வலிம் தத்;
ஸ்ருத்வைவ ப்ரஜமேன் மந்த்ரம்
வீதத்ராஸ ஸ்சதாம் ஸ்மரேத்
தத: ப்ரத்யக்ஷதோ
தேவீ மீக்ஷதேஸுரசார்த்தினீம்;
தத: காமபூரணாத்ஸா
ததாதீஷ்டானி மந்த்ரிணே,

பொருள்: மந்திரம் செபிக்கிறவனது காதில் முதலில் சிலம்பொலியும், பிறகு சங்கீதமும் கேட்கும் இவைகளைக் கேட்டுக் கொண்டே பயமில்லாமல் மந்திரத்தைச் செபிக்க வேண்டும். உடனே தேவியானவள் இவனைப் புணர்ச்சி செய்ய விருப்பமுள்ளவளாய் நெருங்கி வருவாள். அவளது கோரிக்கை நிறைவேறினதும் இவனுடைய விருப்பங்களையும் நிறைவேறச் செய்வாள்.

உலக போகத்தையும், சத்துரு சம்ஹாரத்தையும் விரும்பிச் செய்கின்ற இத்தகைய மந்திரங்கள் பலவுள. மிக இரகசிய மென்று சொல்லியிருக்கிற மற்றொரு பூஜா விதியையும் கவனியுங்கள்.
கோபனீய; ப்ரயோகோத
ப்ரோச்யதே ஸர்வஸித்தித
1 மஹோததி என்பது: தந்திர நூற்களில் ஒன்று. இதற்கு மந்திர மஹோததி என்று பெயர். முன்காலத்திய சைவம், இவைகளை உலகியோர் பொறுக்க முடியாததனால் இரண்டு பெரு மதங்கள் வேலை செய்ததனால் சிறிது குறைந்தது. (அவை சமணமும், புத்தமும்)
பூதாஹே க்ருஷ்ணபக்ஷஸ்ய
மத்யராத்ரே தமோகனே
ஸ்நாத்வா ரக்தாம்பரதரோ
ரக்தமால்யானுலேபன:
ஆனீய பூஜயேந்நாரீம்
சுன்னமஸ்தாஸ்வ ரூபிணீம்;
ஸுந்தரீம் யௌவனாக்ராந்தம்
நரபஞ்சக காமினீம்:
ஸ்மிதாம் முக்தகபரீம்
பூஷாதானப்ர தோஷிணீம்,
விவஸ்த்ராம் பூஜியித்வைனாயுதம்
ப்ரஜபேன்மலும்: கச்சேத்தாம் ப்ரஜபேன்மலும்
அனேனவிதினா லக்ஷ்மீம் புத்ரான்
பௌத்ரானயச: ஸீகம்:
நாரீமாயுஸ்சிரம் தர்மமிஷ்டமன்யதவாப்னுயாத்
கிம்பஹுக்தேன வித்யாயா
அஸயாவிஜ்ஞான மாத்ரத:
சாஸ்த்ரஜ்ஞானம் பாபநாச:
ஸர்வஸௌக்கியம் பலேத்ருவம்
உஷஸ்யுத்தாய சய்யாய
முபவிஷ்டோ ஜபேச்சதம்:
ஷண்மாஸாப்யந்தரே மந்த்ரீ
கவித்வேன ஜயேத் கவிம்

பொருள்: மிகப் பிரயத்தனத்துடன் மறைத்து வைக்கத் தக்கதும், எல்லாச் சித்திகளையும் தரவல்லதுமான பிரயோகத்தைக் கேளுங்கள். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியன்று நடு இரவில் ஆகாயம் மேகத்தினால் மறைந்து மிக இருட்டா யிருக்கும்போது நீராடி, சிவப்புச் சந்தனம், சிவந்த மாலை, சிவந்த உடை இவைகளை அணிந்து, ஒரு தனி இடத்தில் இருந்துகொண்டு, இளமையும் அழகும் நிறைந்தவளும், அய்ந்து மனிதர்களைப் புணர்ச்சி செய்யத்தக்க ஆற்றலைப் படைத்தவளும், அவிழ்த்துவிட்ட கூந்தலையும் புன்சிரிப்போடு கூடிய முகத்தையுமுடைய அவளுக்கு ஆடைகளும் அணிகளும் கொடுத்து மகிழ்ச்சியுண்டாக்கிப் பிறகு, அவளுடைய உடைகளைக் களைந்து நிர்வாணமாகப் பூசிக்க வேண்டும். பிறகு அவளைப் புணர்ந்துகொண்டே பத்தாயிரம் உரு மந்திரம் செபிக்கவேண்டும். இவ்விதம் செய்து வருகிற மஹானுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்மனைவி முதலிய விரும்பிய பொருள் அனைத்தும் கைகூடும். சாஸ்திரங்களை உணரும் ஆற்றலும் உண்டாகும். பாவம் இவனை அணுகாது. நாள்தோறும் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால், ஆறு மாதங்களுக்குள் சுக்கிராச்சாரியாரை விடச் சிறந்த கவியாவான்.

வாயினாற் சொல்லவும், காதினால் கேட்கவும் தகாத அத்தகைய சொற்குவியல்களே இந்துக்களின் 1சமயநூற்கள். நிற்க கவுடில்யனுடைய அர்த்த சாஸ்திரங்களைப் பார்த்தால், முற்காலத்திய ஒழுக்கங்கள் நன்கு புலப்படும். அக்காலத்தில் பகைவரை வெல்லுவதற்கு ஆயுதங்களைவிட 2அபிசார முறையையே அதிகமாகக் கையாண்டு வந்தார்கள். இந்துக்களின் ஆட்சி முறைகளை முன்னமே கூறியுள்ளோம். இவர்களின் ஆட்சியில் நம்மவர்களின் நிலையை ஆராய்ந்து பார்க்கிற யார்தான் பிரிட்டிஷ் ஆட்சியை நிந்திப்பார்கள்? மேற்கூறிய இழிவான மந்திரங்களையும் பூஜைகளையும் அனுஷ்டிக்கிற இந்துக்களின் காதில் பவுத்தன் என்ற சொல் விழுந்ததும் நிலவேம்புக் கஷாயம் குடித்தவன் முகத்தைச் சுளிப்பது போல் சுளிக்கிறார் களே இது ஏன்? காமம், வெகுளி, மயக்கம் இவைகளை ஒழித்தலும், கொல்லாமை என்கிற விரதமும் மோட்சத்திற்கு உரிய சாதனங்கள் என்று உபதேசித்த புத்தபகவானுடைய உபதேச அமுதமும், பஞ்சமா பாதகங் களையே விரதமாகக் கொண்டு ஒழுகுகிற இந்தக் கயவர்களுக்குக் கைப்பாகத் தோன்றுவது இயற்கையே.

பார்ப்பனர்கள் நாள்தோறும் செபித்து வருகிற மந்திரங்களில் ஒன்று கீழ்க் கூறப்படுகின்றது.

3ஸுமித்ரிய ந ஆப ஒஷதய: ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை ஸந்து யோஸ்மான் த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம (யஜுர் வேதம்)

1. சமயங்களுக்கு முதனூலாகிய ஆகமம், தந்திர நூற்களாம். இவைகளையே மந்திர சாஸ்திரமென்பர்.

2. அபிசாரமென்பது மாரணப் பிரயோகமென்க.

3. இந்த மந்திரத்திற்குத் தயானந்தர் அர்த்தம் புரிந்ததைக் கவனியுங்கள். ஆரியாபி வினயம் என்ற நூலைக் கவனியுங்கள். இதில் 100 வேதப்பாட்டுகள் உள்ளதில அநேகப் பாட்டுகள் எங்களுக்கு விரோதமானவர்கள் நாசமடையட்டும் என்ற அர்த்தத்துக்கொப்பாக இருக்கும்.

- http://viduthalai.in/new/archive/2614.html?sms_ss=blogger&at_xt=4d4c2811b6522d22%2C0