வியாழன், 20 மே, 2010

தினமலரின் நிர்வாணக் குதியாட்டம்!

(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.)

"மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்."
"மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு"
கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே!

அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி!

சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்ச்சியும், பயிற்சியும் நடைபெற்றுள்ளது.

ஒரு நாள் அவர் எடுத்த வகுப்பிலேயே, பகுத்தறிவை - கேள்வி கேட்கும் ஆர்வத்தை குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தியதுமே அவர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றம் தென்படுகிறது. தான் கொண்ட மூடக் கருத்துகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் வயதானவர்களை விட, புதிதாக எதையும் கற்கும் குழந்தைகளிடம் பகுத்தறியும் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தினாலே போதும் எது சரியென்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதற்கு சரியான உதாரணமாகத் தான் இந்நிகழ்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இப்படியெல்ல்லாம் அறிவு வந்துவிட்டால் ஆகுமோ பார்ப்பனக் கூட்டத்துக்கு... ? பாருங்கள்.. சிண்டைப் பிடித்துக் கொண்டு தினமலர் நிர்வாணக் குதியாட்டம் போடுவதை!
'பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கிறார்களாம்',
'பிஞ்சுகள் பேசிய விதம் சர்ச்சையைக் கிளப்பிய'தாம்,
'இந்து மதத்தையே விமர்சிக்கும் அளவிற்கு' பிஞ்சுகள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்..
பொறுக்க முடியவில்லை பூணூல் கூட்டத்துக்கு!

அந்தக் குழந்தைகள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி! தினமலர்க் கூட்டத்துக்கோ அது அதிர்ச்சி! அடிப்பீடத்துக்கே ஆப்பு என்றால் அலறித்தானே துடிக்கும் ஆரியக் கூட்டம். பெற்றோர்கள் எதிர்ப்பென்று பசப்புகிறது. பாவம் ஒரு குழந்தையின் பெற்றோரிடம் கூட எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியவில்லை போலும்! தினமலரின் குரல் மட்டுமே அவலமாய் ஒலிக்கிறது! நமக்கு சிரிப்புத் தான் வருகிறது.

நீங்களும் கேளுங்கள் அந்தப் புலம்பலை! இனியாவது தினமலருக்கு சப்பைக்கட்டு கட்டும் கூட்டத்தார் புரிந்துகொள்வார்களா? இந்தக் கூட்டம் தான் குழந்தைகளுக்கென "சிறுவர் மலர்" போடுகிறதாம். இவர்கள் வளர்க்கும் சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவொன்றே எடுத்துக்காட்டு அல்லவா? தினமலரின் வயிற்றெரிச்சல் காட்சியைப் பார்த்துச் சிரியுங்கள்!

*குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் கீழ் சென்னை கோட்டுர்புரத்தில் இயங்கும் நிறுவனத்தின் பெயர் "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்பதாகும். (திருச்சியில் அண்ணா பெயரில் இதே போன்ற மையம் உள்ளது.) அதில் உள்ள ஒரு பகுதியே பிர்லா கோளரங்கம் எனப்படும் வான்காட்சியகம். தினமலர் காட்டும் காணொளியில் கூட "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்ற பெயர்ப்பலகைதான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பெரியார் பெயரைச் சொல்லத்தான் ஆரிய நாக்குக் கூசுமே! ஈ.வெ.ரா என்றுதான் அந்து போன மணிக் கூட்டம் எழுதும். அதனால் தான் இந்த இருட்டடிப்பு! பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமாம்!
இது தினமலர் தான் என்றில்லை தோழர்களே! சன் டிவி கும்பலும் இப்படித் தான் சொல்லி வந்தது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பெயரை போடும் போதும் பிர்லா கோளரங்கம் என்றுதான் போட்டு வந்தது; திரு. அய்யம் பெருமாள்- பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரே அன்றி பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் அல்ல. நமது எதிர்ப்பைப் பதிவு செய்ததும் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. ஆனால் தினமலர் திருந்துமோ?
நன்றி: தினமலரில் வந்த இச்செய்தியை எமக்கு அறியத்தந்த தம்பி சிறீதருக்கு! அதன் பின்னர் தான் இதுபற்றி பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களுக்கும், பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் தகவல் அளித்தோம்.
ஆனால் அதன் முன்னரே தகவல் அறிந்திருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி அதற்கான பணிகளை முடுக்கியிருந்தார். இது தொடர்பான தமிழர் தலைவரின் அறிக்கை இன்றைய விடுதலையில்!


nandri:
http://princenrsama.blogspot.com/2010/05/blog-post_2863.html