வெள்ளி, 18 மார்ச், 2011

கழகத் தலைவர் கழகப் பொறுப்பேற்ற 33ஆம் ஆண்டு!

கழக உறவுகளின் ஒத்துழைப்போடு, அன்போடு
உயிரினும் மேலான என் லட்சியப் பயணம் தொடரும்!

கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை


அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப்பிறகு கழகப் பொறுப்பை ஏற்ற இந்த நாளில் (18.3.1978) தமது வெற்றிப் பயணத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், அவர்கள் உருவாக்கிய அரியதோர் புரட்சி இயக்கமாம் நம் திராவிடர் கழகத்தையும் பாதுகாத்து கடமையாற்றிய தியாகத்தின் புடம்போட்ட தங்கம் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் மறைந்த (16.3.1978) பிறகு, அய்யா, அம்மா ஆகியோரின் கட்டளைப்படியும், கழகப் பெருங் குடும்பமான பெரியார் தொண்டர்களாம் நம் இருபால் தோழர்களின் ஆணைப்படியும் நான் பொறுப்பேற்று, 32 ஆண்டுகள் முடிந்து, 33ஆம் ஆண்டுப் பணி தொடங்கும் நாள் இன்று (18.3.2011).

என்னைத் தூக்கிச் சுமந்த தோள்கள்

பெரியார் நூற்றாண்டு தொடங்கியது அப்போது; அது முதற்கொண்டு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும், வம்புகள், வசவுகள், வல்லடி வழக்குகள், இவை ஒருபுறம் நம்மை நோக்கி!

மற்றொருபுறம் நல்லெண்ணம் படைத்த சான்றோர்கள் பலரும் இந்த எளியவனுக்கு ஊக்கத்தையும், உற்சாகத் தையும் தந்து உயரத்தைக் காட்ட தத்தம் வாழ்த்துரை, பாராட்டுரை என்று அவர்தம் வலிமைமிக்க தோள்களில் என்னைத் தூக்கிக் காட்டி, பெரியார் இயக்கம் குன்றென உயர்ந்த இயக்கம், கோடிக்கணக்கான மக்களின் மான வாழ்வுக்கும், உரிமைப் போருக்கும் என உழைக்கும் ஒரே சமூக இயக்கம் என்பதால் இது தாழ்ந்துவிடவோ, வீழ்ந்து விடவோ கூடாது என்று, இனமானம் கருதி எமக்குப் பேராதரவு தரத் தவறவில்லை.

நம் கழகக் குடும்பங்களில் உள்ள நம்முடைய உறுப்பினர்கள், தாய் தந்தையர்களைப் போன்றும், உற்சாகம் குன்றா உடன்பிறவா சகோதரர்கள் போலவும் உள்ளனர். ரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசத்தைக் கொட்டிடும் குடும்பங்களாக ஆதரவு நல்கி, கொள்கைப் பாதையிலிருந்து துளியும் நழுவாமல், வழுவாமல் உறுதியுடன் நடைபோட்டு, பயணங்களில் சூறாவளிகளும் சுனாமிகளும் சுழன்றடித்தாலும் சோர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பெருந் துணையாக நிற்கின்றனர்!

கட்சி வேறுபாடுகளைக் கருதாமல், இன உணர்வோடு எமது பயணத்தை நடத்திட, என்றும் உரமூட்டும் நண்பர்கள் அனைத்துக் கட்சிகளிலும் ஏராளம் - உலகம் முழுவதும்!

எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி!

இவை எல்லாம் நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெருந்தொண்டினால் விளைந்த கதிர்மணி களைப் போன்றவை. எனவேதான் எத்தனை இடுக் கண்கள் வந்தாலும் எமது பயணம் எப்போதும் இலக்குத் தவறாத இனிய பயணமாகவே நடைபெற்றுக் கொண் டிருக்கிறது!

இளமைமுதல் இன்றுவரை யாமறிந்த கொள்கை, தலைமை, அது தந்த லட்சியப் பாதை - இவற்றைக் கட்டிக் காப்பதை கண்ணை இமை காக்கும் கடமைபோல் செய்து வரும் எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி; எவ்வளவு உற்சாகம்!

நாம் பதவிகளை, புகழை நாடாத மான வாழ்விற்கு சுயமரியாதை சுகவாழ்வினைப் பெரியாரால் பெற்றோம். துயர் வரினும் துணிவுடன் எப்போதும் பயணிக்கும் ஆற்றலை அதனால் பெற்றோம் என்று எண்ணி மகிழ்வதே - இப்பணிக்கு யாம் பெறும் ஊதியம் ஆகும்!
இடையில் உடல் நலம்கூட போதுமான ஒத்துழைப்பு தருவது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். மருத்துவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

கீர்த்தி பெறுவதற்கான கிரீடம் அல்ல எனக்கு அய்யா அம்மா தந்திட்ட பொறுப்பு. நேர்த்தியுடன், நேர்மையுடன் லட்சியங்களை செயல் களாக்கிக் காட்டிடும் செழுமிய பணியாற்றுவதற்கே என்று கருதி என்றும் உழைத்துக் கொண்டிருப்பவன் நான்.

எனது போனஸ் வாழ்வு!

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது, இப்பணிக்குக் கிடைத்த போனஸ் வாழ்வு - பொருளற்ற வாழ்வாகி விடக் கூடாது; பொறுப்புகளை சரிவர நடத்தும் பொன்னான வாய்ப்புள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற உறுதியும், ஒவ்வொரு கழகக் குடும்பத் தவரும் காட்டும் பரிவும், பாசமும் என்னை உழைத்துக் கொண்டே இரு; ஓய்வு என்பது ஒரு பணியிலிருந்து மறுபணிக்கு மாறுவதே என்ற உன்னதத் தத்துவத்தைப் போதிப்பதாக அமைந்துள்ளது.

நமது இலக்கு நோக்கிய இந்த இயக்கப் பணிகளில் - பயணத்தில் - அடைந்த வற்றைவிட, அடைய வேண்டியவை ஏராளம்!

எம் பணி தொடரும்!

தந்தை பெரியார் கொள்கை, மானுடத்தின் மகத்தான விடியலை ஏற் படுத்தும் புது நெறி; புரட்சி வழி என்பதால் அதனை உலகம் முழுவதும் பரவிடச் செய்ய, சோர்வறியாது உழைக்க, மேலும் உறுதி எடுத்துக்கொண்டு, இப் பணிக்கு எம்மை உற்சாகப் படுத்தும் கொள்கைக் குடும்ப உறவுகளுக்கும், சான்றோர்களுக்கும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். அடக்கத்தோடு அரும்பணி தொடர அனைவரது ஒத்துழைப்பையும் யாசிக்கிறோம்; உயிர் மூச்சுள்ள வரை, உயிரைவிட மேலான லட்சிய மான பெரியாரின் தத்துவங்கள், உலக மக்கள் நெஞ்சில் விதைக்க எம்பணி தொடரும் என்று உறுதி கூறுகிறோம்.

நாணயம் தவறாத நல்வாழ்வு என்ற கொள்கை வாழ்வாக அமையட்டும் நம் வாழ்வு!
உங்கள் தொண்டன், தோழன்,

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

- http://viduthalai.in/new/component/content/article/40-current-news/5645--33-.html?sms_ss=blogger&at_xt=4d836d8911ffcd66%2C0

செவ்வாய், 15 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-53

இவ்வாறு ராணியைச் செய்ய முடியாமல் போயிற்று. பல பாராக்கள் இருந்ததாலும், ராணியென்று நினைத்து வேறொருத்தி காலைப் பிடித்திழுத்ததாலும் அவர்கள் ஜீவித்துக் கரையேறினார்கள்.

இதை நன்குணர்ந்த தமிழ் மந்திரியானவர் ஒரு மாசம் காசி ராஜாவிடத்திலிருந்து தன் தொழிலை முறையாகப் பார்த்ததுடன், பார்ப்பனர்களுக்கும், காசி குண்டாக்க ளென்ற போக்கிரிக் கொலைகாரர்களுக்கும் பெரும் உதவிகள் செய்து, பெருந் தர்மாத்மா என்று பேர் வழங்கும்படிச் செய்தார்கள்.

இரண்டு மாதம் போக, ஒரு தந்திரமாகத் தஞ்சாவூர் ராஜனிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவும், அக்கடிதத்தில் வரைந்துள்ள விஷயங்கள் தஞ்சாவூர் ராஜாவினுடைய முத்து வியாபாரக் கப்பல் சமுத்திரத்தின்கண் அமிழ்ந்து போனதாகவும், அக்கப்பல் எவ்வளவோ கோடி ரூபாய்க்கு இரத்தினங்கள் நிறைந்த தென்றும், அவைகளை மூழ்கி எடுப்பவர்கட்குத் தினம் ஒன்றுக்கு ரூ.10-ம், பக்கா போஜனமும் அளிப்பதாகவும் பிறகு, எடுத்த பொருளிலிருந்து தகுந்த பங்கு கொடுப்பதாகவும், அதற்கு எவ்வளவு ஜனங்கள் கிடைத்த போதிலும் வேலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளுகின்றே னென்றும், ஆனால், குறைந்த அளவு ஒரு மணி நேரத்திற்கு மேல் எவ்வளவு நேரம் அதிகம் மூழ்கிப் பழக்கப்பட்டவர்களானாலும், அவர்களுக்கு அதிக சம்பளமும், பக்கா போஜனமும் கொடுக்கப்படவேண்டு மென்றும், இதற்கு ஜனங்களைச் சேர்ப்பதற்குத் தனிச் சம்பளங்கொடுப்பதென்றும் பிரசித்திப்படுத்தினார்கள்.

இவ்வாறு விளம்பரம் பண்ணவே, ஒரு மாதத்துக்குள் 370 ஜனங்கள் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரையிலும் தண்ணீரில் மூழ்கிப்போக வல்லவர்களாய்ச் சேர்ந்தார்கள். பிற்பாடு மந்திரியானவர் இவர்களிடம் கேட்டுக் கொண்டதாவது:

குறைந்தது அய்ந்நூறு பேராவது சேர்க்க முடியுமா? அப்படிச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய வேலை கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு அவர்களில் தலைவனாகிய ஒருவன், இப்போது காசியிலுள்ள ஜனங்களில் நீரில் மூழ்கப் பழக்கமுள்ளவர் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்.

அதிகமாய் இன்னும் வேண்டுமாயினும் கான்பூரிலும் கிடைப்பார்கள் என்று பதில் கூறினான். கான்பூரிலிருந்து ஜனங்களை அழைத்துவர நாளாகும். வேண்டுமானால் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி, நாம் நாளைக்குப் புறப்பட வேண்டும். வீட்டில் இருக்கிற பெண் மக்களுக்கு மாதச் செலவுக்கு ராஜாங்கத்திலிருந்து மாதப் பணங்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டியதிருக்கிறது என்று சொல்லி, இந்த ஜனங்கள் அத்தனை பேர்களையும் வைக்கோலினால் செய்த ஒரு பெரிய கோட்டைக்குள் ராத்திரி படுக்கச் செய்து, நாளை காலையில் 3 மணிக்கு யாத்திரை செய்ய வேண்டுமென்று, அவர்களுக்குச் சொல்லிவிட்டு, நடுநிசியாக 12 மணி நேரத்திலே சிப்பாய்களை வரவழைத்து, நீரில் முழுகி, முழுகிப் பழக்கப்பெற்றோர் படுத்துக்கொண்டிருக்கும் கோட்டையை ஒரே சமயத்தில் பலவிடங்களிலும் நெருப்பு வைத்து எரியச் செய்தனர். உடனே ஜனங்கள் எழுந்திருந்து ஓடிப்போக முயன்றபோது, வழி கிடைக்காமல் நெருப்பில் வந்து விழுந்து வெந்து மாண்டார்கள்.

அதிலும் தப்பி யோடிய சிலரைக் குண்டு போட்டுச் சுட்டுப் போட்டார்கள். அதற்குப் பிற்பாடு கங்காதேவி நகை போட்டவர்களை அழைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டாள். இப்பொழுதுங்கூட பூரணமாக நிற்கவில்லை. சில சமயங்களில் நகைகள் பெருக்க அணிந்துகொண்டு ஏமாந்து நீராடும் ஜனங்களைக் கங்காதேவி அழைப்பது வழக்கம்தான்.

இக்காலங்களில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், யாத்திரையாக வந்த ஜனங்கள் பார்ப்பனர்கள் சொல்லக்கூடிய கருமங்களையெல்லாம் செய்து, போகுந்தருணத்தில் அவர்களுடைய விலாசம் முதலியவற்றை எழுதின பின்பு விருந்திடுவதுண்டு.

இதில் இரண்டு பேர் மூன்று பேரானால் இராத்திரிக்கே கங்கையில் போய்விடுவார்கள். அவர்கள் கொடுக்கும் சில சாமான்களில் யாதோ கலந்து கொடுப்பதென்பது உலகப் பிரசித்தம்.

பிணங்களை எடுத்துக் கங்கையில் போடு வதற்கும் ஒருவனைக் கொலை பண்ணுவதற்குங்கூட மூன்று ரூபாயிலிருந்து அய்ந்து ரூபாய் வரைக்கும் போதுமாம். இதைக் காசி யாத்திரை போகிறவர்கள் நன்றாய் விசாரித்துத் தெரிந்து வரும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மேற்படி செய்கை செய்கிறவர்களில் கேதாரக் கட்டத்தில் கோவிந்தானந்தன் என்னும் பெயருள்ள ஒருவன் இன்னும் ஜீவித்திருக்கிறதாக ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.

இச்செய்திகளை நன்றாய் வாசித்துக் கவனத்தில் வைத்து விசாரித்து நம்பினால் போதும். தீர்த்த, ஸ்தலங்களும் நமது ஆலயங்களும், விபசாரம், பொய், திருட்டு, கொலைகள் என்கிற பஞ்சமா பாதகங்கள் செய்யும்படிக் கற்றுக்கொடுக்கும் ஒரு பஜார் அல்லது பள்ளிக்கூடமாக முடிந்ததைப் பற்றி யார்தான் வருந்தாமலிருக்க முடியும்?

வேதசாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள் ரிஷிபுங்கவர்களின் பிறப்புத் தன்மை
கலைக்கோட்டு ரிஷி மானுக்கும், கவுசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், வால்மீகி வேடனுக்கும், அகஸ்தியர் குடத்திலும், வியாசர் செம்படத் திக்கும், வசிஷ்டர் ஊர்வசிக்கும், நாரதர் வண்ணாத் திக்கும், காதனசல்லியர் விதவைக்கும், மதங்கர் சக்கிலிச்சிக்கும், மாண்டவியர் தவளைக்கும், சாங்கியர் பறைச்சிக்கும், காங்கேயர் கழுதைக்கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜம்புவந்தர் கரடிக்கும்,அஸ்வத்தாமன் குதிரைக்கும் பிறந்தனராம்.

(நிறைவு)

- http://viduthalai.in/new/page-3/5410---53.html?sms_ss=blogger&at_xt=4d7ef4666d2208af%2C0

ஞானசூரியன் தொடர்-52

வயது முதிர்ந்த ராணியோ, இருக்கப்பட்ட விலையுயர்ந்த எல்லா நகைகளையும் அணிந்து பல தாதிகளுடனும், ராஜஸ்திரீகளோடும் தனது புத்திரனாகிய ராஜனோடும், நான் இன்றைக்குக் கங்கையோடு சமமாகக்கலந்து வாழப் போகிறேனென்று யாத்திரை சொல்லிக் கங்கை வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அக் கிழராணியைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லோரும் ஒவ்வொருவருடன் ஒவ்வொருவரும் பலமாகக் கோத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். கிழ ராணியின் முப்பக்கங் களிலுமிருக்கிற பெண்கள் அடிக்கடி மாற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

இப்படியிருக்கப் பார்ப்பனப் புரோகிதர்கள் அங்குமிங்குந்திரிந்து ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டும் மார்பைத் தடவி நெடு மூச்சுவிட்டுத் துக்கித்துக் கொண்டும் இருந்தார்கள். அத்தருணத்தில் வரிசையாய் நின்று கொண்டிருந்த தாதிகளில் ஒருத்தியைக் கங்காதேவி நீரிலிழுத்துவிட்டாள். அவர்களோ, முன்னமே ஒருவருக்கொருவர் சேலையை முடிபோட்டுக் கொண்டிருந்ததாலும், கைகளை ஒருவருக் கொருவர் பலமாகக் கோத்து உறுதியாகப் பிடித்துக் கொண்டதனாலும், நாலு, அய்ந்து தாதிகள் உடனே கங்கையில் விழுந்துவிட்டார்கள். எல்லோரும் ஒன்றுபோல ஒருவருக்கொருவர் பலமாய்க் கைகோத்து இழுபட்டு விழுந்தவர்களையும் கூட விழுந்தவர்களையும் வலித்து இழுத்து யாவரும் கரையேறினார்கள்.

இவ்விதம் கங்கையில் இழுபட்டு விழுந்த தாதியும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டாள். பிறகு, ராணியிடத்தில் மந்திரியும், ராஜாவும் கலந்துபேசி, இனிக் கங்கைதேவி தங்களை இன்றைக்கு அழைத்துப் போகமாட்டாள்; நாளைக்கு எவ்விதமான பூசை போட்டாவது கங்கையை வரவழைப்போம். பிராமணர் களிடத்தில் வேண்டிய விசாரணை செய்து நன்றாகத் தெரிந்துகொண்டு கங்கையோடு தங்களை அழைத்துப் போகாததனால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித் தாயாராகிய ராணியை ஸ்நானம் பண்ண வைத்துத் தங்கள் வசிக்கும் விடுதிக்குச் சென்றுவிட்டார்கள். பிற்பாடு, மந்திரியும் ராஜாவும் கலந்து புரோகிதரையும் மற்றும் பல பார்ப்பனரையும் விசாரித்ததில், அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வருமாறு: கங்காதேவி பாவிகள்நிறைந்த இடத்திற்கு வரமாட்டாள். ஆதலால், ராணி தனியாகவே நீரில் இருக்கவேண்டும். கங்கையில் ஸ்நானத்திற்கு வரும் ஜனங்கள் சிப்பாய்களால் தடை செய்யப்படாமலிருக்க வேண்டும். பாக்கியுள்ள தாதிகளும், ராணியினுடைய சரீரத்தைத் தொடாமலிருக்க வேண்டும். மறைப்புக்குள் ராணி இருக்கக்கூடாது. சில பிராமணர்கள் அங்கிருந்து பூசை செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கங்கை வருவாள். இன்றைக்கு அங்கு வந்தவர்களில் யாரோ பாபிகளிருந்திருக்கலாம். ஆதலால், ராணியைக் கங்கா தேவி தொடாமற்போனதென்றாலும் மற்றொரு தாதியை இழுத்ததற்குக் காரணம், அவள் ஜென்மாந்திரத்தில் பெரிய புண்ணியம் செய்தவளாயிருப்பாள்.

பாவங்களில் யாதோ சிறிது சம்பந்தமிருக்கும். அதனால்தான் இவளை இச்சமயத்தில் அழைக்காமல் இருந்தது. இவ்வாறு விஷயங்களைச் சொல்லி முடித்த பின், அவர்கள் எல் லோரும் போய் விட்டார்கள்.

பிற்பாடு, மந்திரி யும், ராஜாவும் விலை யுயர்ந்த சாமான் களைச் சன்மானமாக எடுத்துக்கொண்டு போய்க் காசி ராஜாவைத் தரிசித்தபின், இந்தக் கங்காதேவி அழைப்பு விஷயத்தைப் பற்றிச் சிறிது சம்பாஷணை நடந்தது. அப்போது பல பிராமணர்கள் இருந்த காரணத்தால், காசி ராஜாவானவர், ராஜா கேட்ட விஷயத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து, இவ்விருவரையும் அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, காசி ராஜாவானவர் துக்கத்தோடு உள்ள விஷயத்தை உண்மையாய்ச் சொன்னார். அப்போதே இவர்களைத் தாக்கீது செய்து, நான் சொன்ன விஷயம் பிராமணர் களுக்குத் தெரிந்துவிட்டால், எவ்வாறாயினும் சூழ்ச்சி செய்து என்னைக் கொலை செய்துவிட எத்தனிப்பார்கள். அதனால் யான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. தாங்களும் இவ்வூரைவிட்டு ராணியை அழைத்துக் கொண்டு தங்கள் சுயராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுப் போங்கள் என்று சொன்னார். அதற்கு இந்த ராஜாவினுடைய மந்திரியார், நான் இதற்குத் தகுதியான ஏற்பாடு செய்து, தாங்கள் சொன்ன விஷயத்தைச் சரியாகத் தடுத்துவிடுகிறேன். எனக்கு மூன்று மாத காலம் மந்திரி வேலை கொடுங்கள் என்று சொன்னார். அதற்குக் காசிராஜா இசைந்து, அந்த மந்திரியாருக்குக் காசிராஜாவின் மந்திரியின் உத்தியோகத்தை ஆறு மாத காலத்துக்குப் பார்க்கும்படியாகக் கொடுத்துவிட்டார். கங்கையோடு சேரப்போன ராணியும், மகாராஜாவும், ராஜாங்கமும், திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிறகு இந்தத் தமிழ் மந்திரி, காசிக் கங்கையில் எவ்வாறு ஜனங்கள் இழுக்கப்பட்டுப் போகிறார்கள் என்பதை விசாரணையில் விளங்கிக் கொண்டார். அது விபரமாவது: காசி நகரத்தில் கருவெட்டல் நிறுத்தப்பட்ட பிற்பாடு, அந்நாட்டிலிருக்கும் பார்ப்பனர்களும் புரோகிதர் களும் அந்நாட்டில் பிரசித்திபெற்றுள்ள தோணியோட்டி களும் வஸ்தாதுகளாகிய ஒருவிதக் கொலைகாரச் சோம்பேறி மடையர்களும் ஒற்றுமையுடன் கலந்து செய்யும் நிகழ்ச்சியாம். தோணியோட்டிகளும், சோம்பேறிகளும் தண்ணீரில் 3 அல்லது 4 மணிநேரம் மூழ்கிக் கிடக்கப் பழகி, ஜனங்கள் ஸ்நானம் பண்ண இறங்கும்பொழுது கூடவே அவர்களும் இறங்கிக் காலைப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குக் கீழாகவே ஒரு மைல் தூரங்கொண்டு போய்க் கொலை செய்து, நகைகளைக் கொள்ளை கொள்ளுவதும் வழக்கமாம். இந்த நகையில் கொலை பண்ணுகிறவனுக்கும், புரோகிதனாகிய கங்கா புத்திரனுக்கும் சமமான பங்குள்ளதாம். -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5342---52.html?sms_ss=blogger&at_xt=4d7ef406fd124525%2C0

வெள்ளி, 11 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-51

தற்காலம் மாட்சிமை தங்கிய கனம் ஆங்கிலேய அரசாட்சியால் இக்கொடுஞ் செய்கைகள் தடுக்கப்பட்டிருக் கின்றன. இதுபோன்ற பல இந்துமதாச்சாரக் கொடுமை களும், காருண்ய கவர்ன்மெண்டாரால் தற்காலம் தடுக்கப் பட்டிருக்கின்றன. அதாவது சககமனம் (உடன் கட்டை யேறுதல்), காளிகோயில் நரபலி முதலியனவாம்.

காசியின் இரண்டாவது மோசம் அதாவது, அரசாங்கத்தாரால் அக்கருவெட்டல் தடுக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு சூழ்ச்சியால், அவ்வன்கணாளர்களாகிய பார்ப்பனர்களோவென்றால், யாத்திரைவாசிகளைக் கொலை செய்து ஜீவனோபாயம் சிறிது காலம் செய்து ஜீவித்து வந்தார்கள். அந்தச் சூழ்ச்சி எவ்வாறெனின், சில காலத்திற்கு முன் படிப்பும், நாகரிகமும் முறையாக இக்காலத்திலுள்ளது போலில்லை என்று எவர்களும் அறிவார்களல்லவா! அக்காலங்களில் தனவான்கள் ஆடைகளையும், ஆபரணங்களையும் மிகுதியாயணிந்த தமது தனப்பெருக்கத்தைப் பிறருக்கு அளிப்பது வழக்கம். இப்போதும் அது முற்றும் குறைந்தபாடில்லை. சில அறிவீனர்கள் தங்கள் தங்களுடைய குழந்தை களுக்கு அதிகமாக ஆபரணங்கள் அணியச் செய்து அழகு பார்க்குங்காரணத்தால் குழந்தைகள், திருடர்கள் கையினால் கொலையுண்டு போவதை அடிக்கடி கேள்விப் படுகிறோமல்லவா? அவ்வாறே அக்காலத்தில் காசி யாத்திரை செய்பவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் மிகுதியான நகைகளணிந்து காசிக்கு வருவார்கள். இங்ஙனம் யாத்திரைவாசிகளுக்கு உடனிருந்து கருமஞ் செய்விக்கும் குருக்கள் அல்லது பார்ப்பனப் புரோகிதர் களிடஞ் செல்லுவர். அப்புரோகிதர் நிலை யாதெனில், கொலை செய்யும் இரண்டு குண்டர்களையும் (தடிச் சோம்பேறிகள்) பல போக்கிரிகளையும் உடன் வைத்திருப்பார்கள்.

அக்குண்டர்களோ 3,4,5 மணிநேரம் ஜலத்தினுள் மூழ்கியிருக்குந் தன்மையில் பயிற்சி பெற்றவர்கள். இப்புரோகிதன் தன்னையடைந்த யாத்திரைக்காரர் களைஅழைத்துக் கங்கையில் சங்கற்ப ஸ்நானம் செய்யப்போகும் தருணத்தில் குண்டர்களிலொருவனை உடன் அழைத்துச் செல்வான். கங்கையை அடைந்து மூழ்குந் தருணத்தில் இக் குண்டனானவன் இவர்களுடன் தானுமொருவனாய், மூழ்கியவர்களில் மிகுதியாக நகை அணிந்திருக்கும் ஆணையாவது, பெண்ணையாவது ஜலத்திற்குள் ஒன்று அல்லது இரண்டு மைல்களுக்கப்பால் இழுத்துக் கொண்டு போய்விடுவான்.

எஞ்சி நின்றோர் ஸ்நானம் முடிந்த பின்னர் உடனிருந்து காணாமற்போன தமது அருமை மகனெங்கே? மகளெங்கே? என்று தேடித் திகைக்குங்கால், அந்தக் கங்கைக்கரையிலுள்ள பார்ப்பனர்கள் இக்குருக்களுடன் கூடிக் கொண்டு, மணியடித்து அர்ச்சித்துக் கற்பூரமேந்தி பற்பல வடமொழிப் பாட்டுகளைப் பிதற்றிக் கங்கைக்குப் பூஜை செய்வார்கள். அத்தருணம் கங்கைக்கரையில் பெருங்கூச்சலாகவே இருக்கும். காணாமற் போனவர் களுடைய பெயரைக் கேட்டு, அவர்களைக் கங்கா தேவியே வந்து அழைத்துச் சென்றாளென்றும், அவர்கள் மிகுந்த பாக்கியவான்களென்றும், அப்புண்ணியவான்களின் பொருட்டல்லவா எங்களுக்கும், உங்க ளுக்கும் அக்கங்கா தேவியின் தெரிச னங்கிடைக்கப்பட்ட தென்றும், இதனால் உங்களுடைய குடும் பம் இனிமேல் மிக க்ஷேமமடையுமென் றும் சொல்லிக் கங்கையின் பேரிலும் விஸ்வநாதர் பேரிலும் பாக்கள் பாடி, அவர்களுடைய துக்கத்தை மாற்றுவார்கள். பறிகொடுத்த யாத்திரைவாசிகள் மனங்கொதித்துக் கண்ணீர் வடிய, மெய்சோர்ந்து, கன்றிழந்த பசுவைப் போலும் கதறிக் காசி யாத்திரை போதுமென்றும், சொல்லித் தம் நாட்டிற்குத் திரும்புவார்கள். அந்தோ! இவ்வாறு சிறிது காலம் நடந்தேறிய பின்னர், கங்காதேவி புனிதர்களை அழைத்து அழியாப்பதவியாகிய சுக வாழ்க்கையை நல்குகிறாளென்ற வசனம் எங்கும் பிரசித்தமாய்விட்டது. அவ்வாறிருக்க, நமது தென்னாட்டு அரசர்களில் ஓர் அரசனுடைய தாயாரிடத்தில் பார்ப்பனர்கள் சென்று காசி மகிமைகளைப் பற்றிப் பலவிதமாகச் சொல்லி, அதற்குச் செல்ல வேண்டுமென்னும் ஆசையை எழுப்பவே, அந்த வயது முதிர்ந்த இராணி கங்கா தேவியிடம் போய், அழியாப் பதவிகளாக வேண்டுமென்று எண்ணங் கொண்டாள். என்னையும், கங்காதேவியார் கருணை புரிந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளுவாளா? என்று கேட்டதற்கு, அந்தப் பிராமணர்களுடைய விடை யாதெனில், ஓ மகாராணியே! பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்கிறவர்களையும், ஏராளமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கக் கூடிய புண்ணிய சீலர்களையும், மட்டுமேதான் அப்பதவிக்கு அழைப்பது வழக்கம என்று கூறினர். இவற்றைக் கேட்ட நாள் தொடங்கி அந்த இராணியானவள், அரண்மனை யிலுள்ள பொருள்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தும், நகைகளைப் புதிது புதிதாகச் செய்து அணிந்து கொண்டும் வந்தாள்! பிறகு தனது புத்திரனாகிய ராஜனோடும், ராஜ அங்கங்களோடும் புறப்பட்டுப் போய்க் காசியைச் சேர்ந்தாள்.

அப்பொழுது பார்ப்பனர்களும், ராஜபுரோகிதர்களும் கலந்து அநேக லக்ஷம் பெறுமான நகைகளை அணிந்து கொண்டிருக்கிற இராணியைக் கங்கையில் இழுத்துச் செல்வது எவ்விதமென்று யோசனை செய்து தீர் மானித்தனர். ஆனால், கங்கையோ ஸ்நானஞ் செய்யுமிடம் மிக ஆழமாயும், பல ராஜ ஸ்திரீகளும் அவரவர்களுடைய தாதிமார்களுஞ் சேர்ந்து ஸ்நானக் கட்டத்தில் நமது மகாராணியை இன்றைக்குக் கங்காதேவி அழைத்துக் கொண்டு போவாளென்று எதிர்பார்க்கிறதாயிருந்தாலும், ஸ்நானம் செய்யுமிடம் பெரிய கூடார, மறைவினால் முப்பக்கமும் மதில்போல் மறைக்கப்பட்டிருந்தது. அந்த மறைப்பைச் சுற்றிலும் பல சிப்பாய்களும், துப்பாக்கியுடன் பாராக் கொடுத்திருந்தனர். ஆதலால், இவர்களுடன் மற்ற ஜனங்களுமிறங்கி ஸ்நானஞ் செய்ய முடியாமற் போயிற்று. -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5184.html?sms_ss=blogger&at_xt=4d7a13e77e9ac6c6%2C0

வியாழன், 10 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-50

இவ்வாறு பவுராணிக மதத்திலுள்ள முக்தி முறைகளை ஜனங்களுக்குப் போதித்துப் பலவிடங்களிலும் பலவிதமாகப் பார்ப்பனர்கள் மனிதர்களைக் கொலைபுரிந்து ஜீவித்து வந்தார்கள். இப்படிச் செய்து வந்ததில், உதாரணமாக ஒன்றை மட்டும் எடுத்து விவரிக்கிறேன்.

காசி க்ஷேத்திரமென்கிற நகரத்தில் இறக்க முக்தி யென்று ஜனங்களுக்கு ஓதியுணர்த்தினர். அக்காரணத்தால் காசிக்கருவெட்ட லென்றவோர் படுகொலை நிகழுமிடமும் ஏற்பட்டு ஆங்குப்படு கொலைகளும் நடந்துள்ளன. எவ்வா றெனின், பார்ப்பனர்கள் இப்போது நடப்பதுபோலவே அங்குமிங்குஞ் சென்று, காசியிலிறக்க, தரிசிக்க, நினைக்கப் புண்ணியமுண்டென்றும், மோட்சம் உண் டென்றும் ஜனங்களுக்குப் போதித்து வந்தார்கள். ஆதலால், மனிதர்கள் இக்காலத்தில் போகிறது போலவே, காசிக்கு யாத்திரை போய் வந்தார்கள்.

அப் பொழுது காசி நகரத்திலுள்ள பார்ப்பனர்கள் கோடீஸ்வரர் களாக இருந்ததாகவும், சொல்லுகிறார்கள். தெய்வ பக்தியும், குரு விசுவாசமும் முற்காலத்தில் அதிகமாக மக்களுக்கு மூடத்தன்மையாக இருந்ததென்று தெரியவருகிறது.

அப்படியே தனப்பெருக்கும், ஞானமின்மையும் நிரம்பியி ருந்த காலம் அல்லவா? காசி யாத்திரையை எண்ணி யெண்ணி வயது முதிர்ந்தவர்களும், சிறுவயது உடைய வர்களும் குடும்பசகிதமாகக் காசி யாத்திரை செய்து புண்ணியம் சம்பாதித்து வருவோமென்றும், எண்ணிப் பணத்தை ஏராளமாய் எடுத்துக்கொண்டு குடும்ப சகித மாய்ப் போகும்பொழுது, வழியில் அக்காலத்திலுள்ள திருடர், வழிபறிப்போர் முதலாகிய பல ஈடையூறுகளையுங் கடந்து, காசி நகரத்தை அடைவார்கள்.

இக்காலத்தில் நிகழ்வதுபோலவே அக்காலத்தில் யாத்திரைக்காரர்களுக்கு உபகரிப்போராகிய பார்ப்பனர்களும், அவர்களுக்கு உடனிற்போரும் இவர்களை அழைத்து இனிமை கூறி, இட வசதி முதலானவைகளைச் செய்துவருவதும் வழக்கம்.

அவர்கள் பிறகு காசியிற் செய்யும் சடங்குகளாகிய ஸ்நானம், தரிசனம், சிரார்த்தம், யாத்திரை, சந்தர்ப்பணை, கோதானம், பூதானம் முதலிய கிரியைகளின் வழியாக இவர்களிடத்திலிருக்கிற தனத்தை, எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோலத் தந்திரமாய்க் கசக்கி எடுப்பது இவர்கள் நீண்டகால உத்தியோகமாம்.

இவற்றைச் செய்து முடித்த பின்னர், அவர்களிடம் பணங்களும் அழகுள்ள பெண்களும் இருக்கக் கண்டால், கீழ்வருமாறு உபதேசிக்க ஆரம்பிப்பார்கள். அஃதாவது பார்வதி சமேதாகப் பரமசிவனும் மற்றுமுள்ள தேவகணங் களும் ஒன்று சேர்ந்து வந்து மரணத் தருவாயில் காட்சி கொடுத்து முக்தி கொடுக்குமிடம் இவ்விடத்தில் ஒன்றி ருக்கிறது. அஃது பல இருடிகளும், இராஜாக்களும், பிராமணர்களும், தபசிகளும் தங்கள் சரீரத்தை இழந்து முக்தி பெற்ற இடமாகும்.

அவ்விடத்தை அடைந்து தரிசனஞ் செய்வது ஜென்மாந்திரங்களில் செய்த புண்ணியமில்லாமற் கிட்டுவது அருமை. பெரிய தபசிகளும், ஞானிகளும் பிராமண விசுவாசிகளும் ஆகிய புண்ணிய புருடர்களுக் காகவே அவ்விடம் சிவபெருமானால் அமைக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் கூட்டங்கூட்ட மாகப் பல வட மொழிப் பாட்டுகளை பிரமாணமாகப் பிதற்றி, யாத்திரைக் காரர்களுக்குப் போதிப்பார்கள்.

இதைக் கேட்ட யாத் திரைக்காரர்கள் விருப்புற்று, சுவாமிகளே! எங்களை அப்புண்ணிய இடத்தைத் தரிசிக்கச் செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்களாம். உங்கள் விருப்பின் படியே செய்து வைப்போம்; அதற்கு வேண்டிய பூஜோபகாரங்களைச் சேகரித்து, அங்குள்ளோர் உத்தரவு பெற்ற பின்னர் அழைத்துச் செல்லுவோம் என்பார்களாம். இது நிற்க.

அந்தக் கருவெட்டலென்ற இடமானது சிறியதாயும், மதிலாற் சூழப்பட்டது மாயிருக்க அதனுள், ஒரு பக்கத்தில் ஆழமுள்ள கிணறுக் கொத்த ஒரு பள்ளமும், அதன் மத்தியில் சிவலிங்கமொன்றும் அமைந்துள்ளது.

கிணற் றுக்கு மேல் சங்கிலியினால் உருட்டப்பட்ட ஒரு சக்கர முள்ளது. கிணறோவெனில், பாதி மூடியிருக்கும். அக் கிணற்றுக்குள் பல தீபங்களையும் ஏற்றி வைத்திருப் பார்கள். அக்கிணற்றைச் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து மந்திரோச்சாடனம் பண்ணிக் கொண்டு, வரும் யாத்திரைக்காரர்களுக்குத் தவசியைப் போல நடத்திக் காட்டுவார்கள்.

பிறகு குருக்களைக் கெஞ்சிக்கேட்டுக் கொண்டே யாத்திரைக்காரர்கள், கொலைக்களமென்ற றியாத, அந்த மோச இடத்துக்கு அழைத்துச் செல்லப்படு கிறார்கள். சென்ற பின்னர் இளம்பெண்களையும், சொத்துகளையும் தலைவாசலில் நிறுத்தி, மற்றுமுள்ள வயது சென்ற புருடர்களையும், பெண்களையும் (முக்கதி கொடுக்கும் கருவெட்டலென்ற மோச இடத்துக்குள்) தரிசிக்க வாருங்களென்று அழைத்துப் போவார்கள்.

அங்குச் சென்ற பின்னர் பள்ளத்திலுள்ள சிவ லிங்கத்தைக் காட்டி, பார்வதி சமேத பரமேசுவரரும், மற்றுமுள்ள தேவகணங்களும், சப்த ரிஷிகளும் இப்போது வருவார்கள்;

ஊன்றி நோக்குங்கள் என்று சொல்ல, ஒன்றுமறியாத இவ்வேழை யாத்திரைவாசிகள் அன்போடு அந்தப்பாவிப் பார்ப்பனனுடைய மோச உரையைக் கேட்டுக் கீழே தலைகுனிந்து பார்க்குந் தருணத்தே, மேல் தொங்கவிட்டிருக்கும் இரும்புச் சக்கரத்தை உருட்டி விடுவார்கள். அது கழுத்தைத் துண்டிக்க கிணற்றில் வீழ்ந்து இறந்துவிடுவார்கள்.

அந்தோ! அவ்வேழை மக்கள் இறந்த பின்னர், தலைவாசலில் நிறுத்திவைக்கப்பட்ட அவ்வாலிபப் பெண்களையும், சொத்துகளையும் அப் பார்ப்பன மக்கள் உரிமையாக அடைந்துவருவதும் வழக்கம். இப்பார்ப்பன மாக்கள் காசியில் இறக்க முக்தி என்று சொல்லுகின்ற வாக்கியத்தை அடியாகக் கொண்டு உபதேசித்து, இத்தகைய கொடுஞ்செயல்களைக் காசி நகரத்தில் அநேக காலமாக நடத்திக் கொண்டு வந்தார்கள்.

- http://viduthalai.in/new/page-3/5116.html?sms_ss=blogger&at_xt=4d78e2a249dc3e90%2C0

ஞாயிறு, 6 மார்ச், 2011

ஞானசூரியன் - தொடர்-49

என் சொல்லம்புதான் அவர்களை அடக்கின. ஆதலால், தாங்கள் பார்ப்பனராகிய எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யலாகாது. மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகத் தங்கள் தாளிணையில் சமர்ப்பிக்கிறேன். என்று சொன்னான்.

ஆடம்பரமான கோயில், அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி, அழகிய சிம்ஹாசனம், கையிலகப்பட்டதைக் கவர்ந்து கொண்டு கம்பி நீட்டியவர்கள் போக எஞ்சியிருப்பவர்களும், ஆபிசார(சூனியன்) மந்திரம் ஜபித்துக் கொண்டிப்பவர் களுமான பார்ப்பனர்கள, எரிந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான அக்கினிக்குழிகள், அவைகளிற் சொரியும்படிக் கொட்டி வைக்கப்பட்ட விலையுயர்ந்த பண்டங்கள், அக்கிரமமே உருவெடுத்து வந்த அர்ச்சகக் குருவின் அலங்கார வேஷம் இவைகளில் கவனம் செலுத்தி யிருந்த கஜினி, காணிக்கையைப் பெற்றுக்கொண்டு, எங்களைவிட்டுவிட வேண்டு மென்ற சொல்லைக் கேட்டவுடன், சிங்கத்தைப் போற் சீறி எழுந்து, அட காபிர் பன்றியே! என்னைப் பிச்சைக்காரனென்றா நினைத்தாய்? கல்லைக் கடவுளாக வணங்கும் கயவரைக் கருவறுக் கவன்றோ இங்குப் போந்துள்ளேன் என்று கர்ஜிக்க, கல்நெஞ்சக் குருவானவன் கண்களும், கருத்தும் கலங்கக் கஜினியின் காலில் விழுந்து, அய்யனே! இதெல்லாம் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்குள்ள ஏற்பாடுகள்; எங்களைக் காக்க வந்த கடவுளே, உயிர்ப்பிச்சை தந்தருள்க என்று பலதரம் அழுது வேண்டிக் கொண்டான். உடனே கஜினி, இல்லை, இல்லை; உங்களுக்கு நான் இரக்கங்காட்டேன். பகுத்தறிவில்லாப் பாமரர்களை ஏய்த்துப் பணத்தையும், மானத்தையும் பறித்த, மக்களின் பசிப்பிணியைப் போக்கத்தக்க பற்பல அரிய பண்டங்களை, அநியாயமாக அக்கினியிலிட்டு அவைகளைச் சாம்பலாக்கு கிற-அத்தீயையும், கல்லையும் கடவுளாக வணங்கும் நீங்கள், கடவுளுக்குத் துரோகிகளாதலால், உங்களுக்கு இரங்குவது தருமமன்று என்று கூறி, அப்பொக்கிஷத்தைக் காட் டெனச் சொல்லச் சிலவற்றைக் காட்டி, இவ்வளவுதான் உள்ளது எனப் பகர்ந்தனன்.

கஜினி இக்கோயிலைக் குறித்த விபரமனைத்தும் ஒற்றர்களின் எழுத்து மூலமாக முன்னரே தெரிந்திருந்தவ னாகையால், அவ்வெழுத்தைக் காண்பித்துக் குருவின் கைவிரலில் எண்ணெய்த் துணியைச் சுற்றித்தீ வைக்கச் சொல்ல, அவ்வாறே செய்யவே, அனைத்தையும் காட்டி விட்டான். கஜினியானவன், பொருள் எல்லாம் வாரி யெடுத்தவுடன், தன் படைகளை ஏவிக் கோயிலையும் இடிக்கச் செய்தான். ஆலயமானது அவனியோட வனியாய் அமர, அதுவரை அந்தரத்தில் நின்றிருந்த அற்புத லிங்க மூர்த்தியும் காந்தக்கல்லின் கவர்ச்சியினின்றும் விடுபட்டுத் தரையில் விழுந்து புரண்டது. இதைப் பார்த்த, அக்கொடிய துலுக்கனுக்குப் பின்னும் கோபம் அதிகரித்துத் தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் அவ்விக் கிரகத்தை ஓங்கி அடிக்க, அது சின்னபின்னமாகச் சிதறி உடைந்து, இரத்தம் பீறிட்டு ஓடுவதையொப்ப முத்து முதலிய ரத்தினங்களையும் கொட்டிற்று. பார்த்தான் கஜினிமுகம்மது; அழைத்தான் பார்ப்பனக்குருவை; அறைந்தான் அடியிற்கண்ட வண்ணம். அட பதரே! கல்லை வணங்குவது கடவுளுக்குச் சம்மதம் இல்லையென்று சொன்னேன். அவ்வுண்மையைக் கண் கூடாகப்பார்; கல்லை உடைத்தெறிந்த எனக்குக் களிப்பைத்தரும் நவ மணிகளையும், கல்லை வணங்கும் உங்களுக்குக் கடுந்துயரத்தையும் அளித்துவிட்டார்....

இன்னோரன்ன இழி மொழிகள் பேசிய பின், எல்லாப் பொருளையும் ஒட்டைமீது ஏற்றச் செய்து, அத்தோடு ஆறாயிரம் பெண்களையும், அய்யாயிரம் ஆண்களையும் பிடித்துக் கொண்டு தன் நாடு திரும்பினான். இப்பதினோராயிரம் கைதிகளில் எண்ணூறு (800) பேர் மட்டுமே பார்ப்பனர்கள்; ஏனையோர் நம்மவர்கள். ஏன் அவர்களுக்கு இந்தக் கதி வந்தது? பார்ப்பனனைக் குருவாக நம்பினதால்! இவர்களில் ஆண்களுக்குக் குதிரைக்குப் புல் வெட்டுதல் முதலிய வேலையையும், பெண்களுக்குத் துலுக்கச் சிப்பாய்களின் வைப்பாட்டியா யிருத்தலையும் செய்யக் கட்டளையிட்டான். உணவும் முறையே குதிரை தின்று மிகுந்த கடலை, கொள்ளு முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்குத் துலுக்கர் களின் எச்சிலுமாம். இவ்விதமாகப் பாரதநாட்டின் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் சென்றவுடன், அங்குள்ள பெரிய மவுல்வி பார்த்து, அய்யோ அரசரே! இக்காபிர்களுக்கு ஏன் தீனி போட்டு வைத்திருக்கிறீர்கள்? இது நமது நபிநாயகத்தின் திருவாணைக்கு ஏற்ற தல்லவே. ஆதலால், கொன்று விடும் என்று சொல்லச் சூத்திரத்திற்கு அடிமையான அக்கொடிய துலுக்கத் தலைவன், ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டுப் பெண்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான்.

இச்சரித்திரம் விரிவான புத்தக ரூபமாக உருதுமொழியிலும், குஜராத்தி மொழியிலும் எழுதி அச்சிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர், பாரத நாடு என்னும் நம் தாய் நாட்டிற்குச் செய்த தீங்குகள் பலவற்றுள் நம் தமிழ்ச் சகோதரர்களின் உணர்ச்சிக்காக ஒன்றை மட்டும் சுருக்கமாக உதா ஹரித்தேன். மற்றவையும், ஸ்தாலீபுலாக நியாயத்தால் (பதக்கு அரிசிக் சோற்றின் பதம் ஒரு சாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வது போல) தெரிந்துகொள்ளுங்கள்.

இதன் குறிப்பைத் தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்தியார்த்தப் பிரகாரத்தில் பதினோராவது அத்தியாயத்தில் பார்க்க.

காசிக் கருவெட்டல்

தில்லையைக் காண, காசியிலிறக்க, ஆரூர்ப் பிறக்க, எல்லையிற் பெரிதாம் அருணையை நினைக்கவெய்தலால் முக்தி என்றுரைக்க,

காஸீயாம்து மரணன் முக்திர்

ஜனனாத் கமலாலயே

தர்சனா தர்ப்ரஸரஸி

ஷ்மரணா தருணாசலே

என்பதை அருணாச்சல புராணத்திற் பார்க்க.

- http://viduthalai.in/new/page-3/4797.html?sms_ss=blogger&at_xt=4d7325da39c185d3%2C0

வெள்ளி, 4 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-48

பொன்னும், மணிகளும் மலை மலையாகக் குவிந்தன. இவ்விதமாக அறுநூறு ஆண்டுகளுக்கு அநியாயப் பார்ப்பனர்களின் அக்கிரமச் செலவுகள் அனைத்தும் போகப் பதினெட்டுக் கோடி ரூபாய்கள் பெரும்படியாக இரத்தினங் களும், இருபது கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள நகைகள், மற்ற பட்டாடைகள் முதலியனவும் மீதியாயின.

பதினோ ராயிரம் பார்ப்பன மக்கள் அங்கேயே குடியிருந்து, விலாப் புடைக்கத் தின்று, பார்ப்பனரல்லா தார் என்றென்றும் தங்களுக்கு அடிமைகளாகவே இருக்கும்படியான சூழ்ச்சி களைச் செய்து, கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் நமது நாட்டில் இருந்த அரசர்கள் பலரும் இக்கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் தலைவனுக்குச் சிஷ்யர்களாக இருந்தார்க ளெனத் தெரிகிறது. கூர்ஜர அரசர்கள் அறுவரும் சிஷ்யர்கள் என்பதைக் கூறவேண்டியதில்லை.

துலுக்கரின் வருகையும், ஆலயத்தின் அழிவும்

இத்தருணத்தில் இந்து மதத்தை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட துலுக்க அரசர்களின் முதல்வனான முகம்மது கஜினி என்பான், சோமநாத க்ஷேத்திரத்தைக் குறித்துக் கேள்விப்பட்டுக் கொள்ளையடிக்க எண்ணி, 25,000 (இருபத்து அய்ந்தாயிரம்) சைன்னியங்களோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

வழியிலே குஜராத் அரசர்களின் ஒற்றர்கள் உண்மையை உணர்ந்து, தங்கள் அரசர்களுக்கு அறிவிக்கவும், அவர் களும் ஆசானாகிய அர்ச்சகப் பார்ப்பானை அணுகித் துலுக்கனின் வருகையைச் சொல்லி, எங்களிடம் நாலரை லக்ஷம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை நாட்டில் வரவிடாமல் வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.

அக்குருவோ, கோழைப் பயல்களா! நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என்முன் தோன்றி, மிலேச்சன் வருகிறான்; அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாவண்ணம் காப்பாற்றுவோம். ஆனால், விசேஷமாக ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்ன தானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் முதலியனவும் நடைபெற வேண்டும் என்றும் சொல்லி மறைந்தார்கள்.

ஆதலால், யுத்தத்திற்குப் போகவேண்டாம். புராணங் களிலும், பிரமாண வாக்கிலும் உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படு கின்றன. இன்று தொட்டாவது நம்பிக்கையோடு ஒழுகுங்கள்; யுத்தத்திற்குச் செலவழியும் பொருளைப் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னான்.

அரசர்களும் தாம் கொண்ட கருத்தைக் கைநழுவவிட்டு, அர்ச்சகர்கள் ஆணைப்படி 1,008 யாகசாலைகள் உண்டு பண்ணி, அநேகப் பார்ப்பனர்களை வைத்து ஹோமங்களும், வருண ஜபமும் நடத்திக் கொண்டு வந்தான். அன்றியும் ஜோதிடம் தெரிந்தவர்களென்று பல பார்ப்பனர்களைக் கொண்டு சுபாசுப பலன்களை அவ்வக்காலங்களில் அரசர்களுக்குத் தெரிவித்தும் வந்தான். முகம்மது கஜினியும், சைன்னியங்களும் எட்டு மைல்க ளுக்கப்பால் வந்துவிட்டார்கள்.

கஜினி முதலில் பயந்தானெனினும், தன்னை எதிர்க்க யாரும் வராததைக் கண்டு உண்மையை உணர்ந்துவர ஓர் ஒற்றனை அனுப்பி னான். துலுக்கர் களின் வருகையை உணர்ந்த பார்ப்ப னர்கள் ஏற்கெனவே இருக்கும் 11,000 (பதினோராயிரம்) பேர்வழிகளும் தற்போது வந்திருப்பவர்களும் கலந்து யோசித்து 800 (எண்ணூறு) பேர் தவிர, மற்றவர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

கஜினியின் வேவுக்காரன் துலுக்கனாகையால், அவன் நெருப்பெரிந்து கொண்டிருக்கும் தீக்குழிகளையும், நெய், கோதுமை முதலிய தின்பண்டங்களை அக்குழிகளில் பலர் சொரிந்து கொண்டிருப்பதையும், பலர் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு ஜபம் செய்வதையும் பார்த்து வியப்படந்தவனாய்த் தன் தலைவனை அணுகி, அரசே, பெரிய தீக்குழிகளில் பலர் கோதுமை முதலிய தானியங் களையும், நெய்யையும் சந்தனக் கட்டை முதலிய மற்றும் பல விலையுயர்ந்த பொருள்களையும் போட்டு எரிக்கிறார்கள். அன்றியும் மனிதர்களின் தலைகள் பல தண்ணீரில் அசையாமல் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஊரெல்லாம் புகையால் மூடிக் கொண்டிருக்கின்றன. வேறொன்றுங் காணேன் எனத் தெரிவித்தான். 1கஜினியும் அறிவிலிகளாகிய அவர்களை அடக்குவதில் அச்சமொழிந்த வனாய்ச் சைன்னியங்களோடு நேராகப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, குருவானவன் ஏனைய அரசர்களைப் போலத் துலுக்க அரசனையும் வசப்படுத்த எண்ணியவனாய்த் தான் ஊர்ந்து வருகிற முத்துப் பல்லக்கைச் சிங்காரித்துச் சீடர்களும், கோயில் தாசிகளும் புடைசூழ எதிர் கொண்டழைத்து வரும்படி அனுப்ப, கஜினியும் அப்பல்லக்கைத் தன் ஒட்டைமீது போடச் செய்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தான். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமிக்கு எதிரிலேயே கஜினிக்காகப் பெரிய சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அவ்வாசனம் அய்ம்பது லக்ஷ ரூபாய்கள் மதிப்புள்ளதும், வியாசபீடம் எனப் பெயர் வாய்ந்ததுமாம்.

கோயில் மூர்த்தியானது விலையுயர்ந்த ஆடையாபரண அலங் காரங்களால் மிக அழகு செய்யப்பட்டிருந்தது.

கஜினிக்கும், குருவுக்கும் சம்பாஷணை

கஜினி ஆசனத்தில் உட்கார்ந்தபின், பேதை அரசர்களை ஏமாற்றும் பேய்ப் பார்ப்பனர்களின் முதல்வனான குருவானவன் கஜினியைப் பார்த்து, ஓ இராஜாதிராஜனே!

தங்களின் நேர்மையான ஆட்சியன்றோ பிராமணர்களாகிய எங்களைக் காப்பாற்றுவது? நாவிஷ்ணு; ப்ருதிபீதி (விஷ்ணுவல்லாதவன் அரசனன்று) விஷ்ணுவின் அவதாரமாகிய தங்களைக் குறித்து இங்குள்ள போலி ராஜாக்கள் என்னென்னவோ உளறினார்கள்.

1. அப்பொழுது அங்கிருந்த முகம்மது கஜினியினுடைய குருவாகிய மவுல்லி ஒருவர் இது காபரினுடைய ஜின்னு(பிசாசு)களின் வேலையாகும்.

குரான் வாசித்துப் போனால், பிசாசுகளெல்லாம் ஓடிவிடும். நாம் ஜெயமடையலாம் எனத் தைரிய வார்த்தைகள் கூறியனுப்பினார்.

- http://viduthalai.in/new/page-3/4705.html?sms_ss=blogger&at_xt=4d70d839d5dc6674%2C0

புதன், 2 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-47

அன்பர்களே! இக்காரணங்களால் ஆகமங்கள் பிற் காலங்களில் எழுதப்பட்டனவென்று தெரிகிறது. அப்படி யிருந்தும் மாமிசத்தை விட்டுவிட அவைகளுக்குச் சம்மதமில்லை. ஆனால், யாவனொருவன் ஆகமம், வேதம், ஸ்மிருதி முதலிய நூற்களொடு நமது மற்ற நூற்களிலும் பல கெடுதிகள் உண்டென்று தெரிந்து, அவை யாவும் உள்ளதுதான், முறையே வேண்டியதுதானென்று நம்பி, மறுபடியும் அதுவே நமது நூல் என்று ஒத்துக்கொண்டு, தீரனாயிருப்பவன்தான் இந்து மதத்தை முறையாக நம்பினவன். ஆனால், அந்த நம்பிக்கைபோல் நடக்கவும், (பஞ்சமாபாதகங்கள் சரியென்று ஒப்புக்கொள்வதோடு, ஒரு பிராஹ்மணனையும், அய்யர், அய்யங்கார்களையும்) நிந்தனை செய்யாமல், தனது முன்னேற்றத்தையும் விரும்பாமல் இருக்கவேண்டும்; அவன் தீரன்.
பார்ப்பன வழிபாட்டால் வந்த கேடு,

சோமநாதபுரம் கோயில்
ஸௌராகாவனே
வாராணஸ்யாம் துவிஸ்வேசம்
த்ரியம்பகம் ஷ்ட்ரே ஸோமநாத்ம்ச
ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்;
உஜ்ஜயின்யாம் மஹாகாளம்
ஓங்காரமம லேஸ்வரே
பரல்யாம் வைஜநாதம்ச
டாகின்யாம் பீமசங்கரம்;
ஸேதுபந்தேது ராமேசம்
நாகேசம் தாருகௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம்
குஸ்ருணேசம் சிவாலயே
சவுராஷ்ட்ர தேசத்தில்(குஜராத்தின் ஒரு பகுதி)

சோமநாதமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனமும், உஜ்ஜயினி யில் மஹாகாளமும் அமலேசுவரத்தில் ஓங்காரமும், பரலியில் வைஜநாதமும், டாகினியில் பீமசங்காரமும், சேதுபந்தத்தில் (இராமேச்சுரம்) ராமேசமும், தாருகா வனத்தில் நாகேசமும், காசியில் விஸ்வேசமும், கோதாவரிக் கரையில் திரியம்பகமும், ஹிமாலயத்தில் கேதாரமும், சிவாலயத்தில் குஸ்ருணேசமும் ஆகப் பன்னிரண்டு.

இவை முதலிய புராண வசனங்களால் இத்தலம் ஜோதிர்லிங் காலயங்கள் பன்னிரண்டினுள் முதன்மையான தாகக் கருதப்படுகின்றது. கல்வியறிவற்றவர்களும், கபடு சூதின்றியவர்களுமான பார்ப்பனரல்லாத மக்கள், பார்ப்பனர்களின் பொய்க்கூற்றை நம்பி, இத்தலத்தில் அநேக சித்திகள் நடக்கின்றனவென்று இங்குப் போந்து, இங்குள்ள பார்ப்பனர்களுக்கு விசேஷமான தட்சணைகளைக் கொடுத்து வந்தார்கள்.
இத்தலத்தின் உற்பத்தி

பார்ப்பனர்கள் பிறரைக் கெடுத்துச் சுயநலத்தைப் பாதுகாக்க எழுதி வைத்துக் கொண்ட ஆபாசச் சுவடிக ளான வேதங் களும், ஸ்மிருதிகளும் முறையே கடவுளா லும், கடவுளின் அருள்பெற்ற பெரி யோர்களாலும், திருவாய் மலர்ந்தருளப்பட்டன என்ற பார்ப்பனப் பொய்க்கூற்றை நம்பி, அதன்படி பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய்த் தனமும், மானமுமிழந்து வந்த பார்ப்பன ரல்லாதாரை மீட்க அவதரித்த ஸ்ரீபுத்தபகவான், மகாவீர சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸத் தர்மமானது (உண்மை நெறி) மக்களை நல்வழியிற் செலுத்தி வந்ததைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் அந்நன்னெறியை ஒழிக்கச் செய்த சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. இது சத்தர்ம (புத்த சமயம்) சந்திரனுக்கு இராகுவாகிய சங்கராச்சாரியார் பிற குடிமக்களைக் கெடுக்க ஊரூராய்த் திரியும் (திக் விஜயம்) காலத்துக் குஜராத்திலுள்ள பார்ப்பனர்களும் தாமும், கலந்து பேசியதன் பயனாக ஓரிடத்தில் சிவலிங்கமொன்றைப் புதைத்துவைத்துக் கைலாச நாதராகிய பரமசிவன் புத்த, ஜைனர்களை ஒடுக்கவும், பார்ப்பனத் தொண்டர்களைப் பாதுகாக்கவும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி, கூர்ச்சர (குஜராத்) தேசத்தில் சிவலிங்க ரூபமாகப் பூமிக்குள் இருக்கிறார். அவரைப் பிரதிஷ்டித்துப் பூஜை பண்ணுங்கள்; பவுத்தர்கள் நாசமாவார்கள்; உலகம் க்ஷேமத்தை அடையும் என்று கணேசன், விஷ்ணு, துர்க்கை, பைரவன் முதலிய தேவதைகள் சொப்பனத்தில் வந்து தங்கள் தங்களிடம் சொல்லிச் சென்றதாகக் கதைகட்டி, அந்நாட்டு (குஜராத்தி) அரசர்களுக்கு ஒவ்வொருவனும் தனித்தனியாகச் சென்று அறிவிக்க, அரசர்களும் ஒரே விஷயத்தைப் பல தேவதைகள் வெவ்வேறு கிராமத்தவர்களான பார்ப்பனர்கள் வாயிலாக நமக்கு அறிவித்தார்கள்.

ஆதலால் இது முற்றிலும் உண்மையென்று நம்பி, அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆலயங்கட்ட ஆணைதர, அங்ஙனமே ஆலயங்கட்டுங்கால் பார்ப்பனர்களும் சம்பக பாஷாணமென்னும் காந்தக் கல்லினாற் கர்ப்பக்கிரகத்தின் உட்புறத்தில் வேலை செய்து முடித்துச் சிவலிங்கமானது ஒரு புறத்திலும் சாராமல் அந்தரத்திலேயே நின்று கொண்டிருக்கும்படிச் செய்தார்கள். அக்காலத்தில் அந்நாடு ஆறு பேரரசர்களால் ஆளப்பட்டு வந்தது. உண்மையறிய ஆற்றலற்ற அவ்வரசர்கள், ஈதென்ன விந்தை! மூர்த்தி நிலம் தொட வில்லையே எனக்கேட்க, பார்ப்பனர்கள் சாதாரண மனிதர்களால் பிரதிஷ்டிக்கப்பட்ட லிங்கமானலன்றோ தரையில்படும்? கைலாசநாதர் தானாகவே லிங்க ரூபமாக எழுந்தருளிய தால், தரையில் படவில்லை என்று சொல்ல, அக்கூற்றை அங்ஙனமே நம்பி ஏமாந்து விட்டார்கள். அதிக விமரிசையாக ஆலயத்திற்கருகிலேயே அன்ன சத்திரங்கள், வேத பாட சாலைகள் முதலிய பார்ப்பனர்களுக்காகக் கட்டப்பட்டன.

- http://viduthalai.in/new/page-3/4550.html?sms_ss=blogger&at_xt=4d6e3987100b2ba9%2C0

செவ்வாய், 1 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-46

பசு, பூமி, தானியம், அடிமைகள் முதலியவற்றை இல்லத் திற்கு வேண்டுமளவாக அவருக்களித்திடுக வென்றும், பாலஸ்தாபன விதிப்படலத்தில் முன்னர் மொழிந்தவாறு வஸ்திரம் முதலியவற்றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து, அவ்வுத்தமம் முதலிய மூவகைத் தட்சணைகளையும், அவருக்குதவுகவென்றும்,

வாஸ்து சாந்தி விதிப் படலத்தில் அவ்வாசிரிய தட்சணை அம்மூவகையுமென்றுங் கூறினமை யாலும்; இன்னும்; பலவேதுக்களாலும் கல்வி, அறிவு ஒழுக்கங் களோடு கூடினவரும் அவை கூடாதாருமாகிய பலரும் வைகியுள்ள இப்பூமியின்கண் ஒரு கூட்டத்தாரையே, ஒரு சிலரையே பெரிதும் உயர்த்தலும்,அவரைப்போல ஏனையோர் இனிது தாழ்ந்தவரென்றாலும், அதருமங்கொண்டு படலம் படலமாக அவ்வொரு சிலர் சீவனோபாயத்தோடு பல கருமங்களையும் விதிக்க வந்த புத்தகமே அவ்வாகம புராண பாகமெனவும்;

ஸ்மார்த்தர் பெரிதும் சுயநலங்கருதி எழுதியுள்ள ஸ்மிருதிகளை யொத்த இப்பாகப் படலம் யாவும் சிவபெருமான் கூறியருளினவென்பது, அருளவாம் எல்லோ ரும் இனிதுய்தி பெற வேண்டுமென்னுந் திருவுளப் பெருங் கருணைத் தடங்களாய்த் தரும தேவதை மீதெழுதரு தலைமைப் பொருளாய் வழங்கும். அவனது கடவுட்டிறத்தை யிழுக்கத்துட்படுத்துவதாமாகலின், அது சால்பிற்றன்றென வும் நடுவு நிலைமை யொம்புநர் பலரும் நவில்கின்றனர்.

நடுவு நிலையோம்பல் எமக்குங் கடமையே போந்த நியதிகளை யெவரெவ்வாறு கொள்ளினும் கொள்ளட்டும். இவை ஈசன் கட்டளையென்று கூறற்கே எமது நெஞ்சம் பெரிதுமஞ்சுகிறது. போந்த தந்த்ராவதார படலத்தில், இல்லறத்து ஆதிசைவரே எல்லாக் காரியங்களிலும் அதிகார முடையவர் என்றதும் பேராசைக்கு இடனா யிருத்தல் உய்த்துணரத் தக்கதாம்.

இவ்விரு பக்கங்களில் கூறிய வசனம் முருகக் கடவுளரது இரும்பெரும் பக்தராகிய பாம்பன் சுவாமிகள் கூறியுள்ள தாகும். இப்பெரியார் பார்த்தளவும், ஆகம நூலைப்பற்றி அதிஹிப்ருயம் சொல்லிவிட்டது. ஆனால், கர்மகாண்டம் பூர்வபாகம் என்றார். சித்தாந்த பாகம ஞானகாண்டமும் சூத்திரர்கள் அதன்கிட்டே போகலாகாது. இஃதிவ்வாறிருக்க, முன் நான்காவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிற விஷயங்கள் சுருக்கமாக அய்ந்தாவதத்தியாயத்தில் சொல்லி முடிக்கிறேன்; கவனியுங்கள்! காமிகாகமம் அத்தியாயம் 19, வாஸ்து தேவ பலிபடலம்.

பக்கம் 454, சுலோகம் 4.

1. கருத்து: எமன் பொருட்டுப் பாயசத்தைக் கொடுக்க வேண்டும். கந்தர்வரிடத்தில் கந்தம் கூறப்படுகிறது. ப்ருங்க ராஜருக்கு சமுத்திரத்தில் உற்பத்தியான மத்ஸ்யத்தையும் மிருகரிடத்தில் மத்ஸ்யத்தோடு கூடின அன்னத்தையும் நிருதியின் பொருட்டு பிண்ணாக்கு அன்னத்தையும், எண் ணெயையும் புத்திமானானவன் கொடுக்க வேண்டும். (இதைக் கொடுக்காதவன் புத்திகட்டை) இது சைவர் களுக்குச் சொந்தம்.

2. பலி விஷயத் தில் அசுரர்க்குப் பன்றி மாமிசம் கொடுக்க வேண்டு மென்பது.

3. சேஷருக்கு எள்ளரிசியும், ரோக ருக்கு உயர்ந்த மத்ஸ் யமும், வாயுவிற்கு மஞ்சள் நிற த்வஜமும் சமர்ப் பிக்க வென்பது.

4. ருத்திர மூர்த்தியின் பொருட்டு மாமிசான்னமும் ஆகும். ருத்திர புத்திரர் பொருட்டு நுரையும், ஆபருக்கு மத்ஸ்யத்தையும், ஆபவத்ஸரென்பவருக்கு மாமிசத்தையும் கொடுப்பிக்கவேண்டும்.

5. சிவபக்தர்கள் சூலத்திலிருக்கிற சாகியின் பொருட்டு நெய்யையும், மாமிசத்தையும் கொடுக்கவேண்டும். புத்திமானால், விதாரிகையின் பொருட்டு மிகவும் லவணத்தையும் கொடுக்கவேண்டும்.

6. பூதனையின் பொருட்டு விசேஷமாக எள்ளன் னத்தைக் கொடுக்கவேண்டும். பாராக்ஷஸியின் பொருட்டுக் காரமணியன்னத்தைக் கொடுக்கவேண்டும். வீடுகளில் மாமிசன்னமும் ஆகும்.

7. பாஹய தேவதைகளான எண்மருக்கும் மாமிசங் களின் அன்னம் பலியாகக் கூறப்படுகிறது.

8. தேவக்கிருஹத்தில் அவிசும், ராஜக்ருஹத்தில் மாமி சான்னமும் கொடுக்கத்தக்கது. சூத்திரக்கிருஹத் தில் கள் கூறப்பட்டது. மற்றவிடத்தில் தேன் சேர்க்க வேண்டும். (மச்சத்திற்குப் பதிலாக மாவு சேர்க்கவென்பது.)

9. பூஜை அந்த விஷயத்தில் சிவத்விஜர்கள் கிடைக் காவிடில், அனுசைவர்களாவது ப்ராஹ்மணர்களாவது ஆகும். தேவாலயத்திலும், கிராம முதலான விடங்களிலும் சிவத்விஜர் விசேஷப்பட்டவராகவிருக்கிறார். தன் வீட்டில் அனுசைவர் அல்லது மஹாசைவர் அல்லது அவாந்தரச் சைவர்களாவது ஆசாரியர்களாக இருந்து வாஸ்துஹோமம் செய்யலாம்.

10.வாஸ்து பூஜை குறைவுபடின் ஒவ்வோரிடமும் கெடுதியடை கின்றது. ஆகையால், ஆசாரியார், கிராமம், வீடு, சாலை, தேவாலயாதிகளில் வருடாவருடம் வாஸ்து ஹோமம் செய்தல் வேண்டுமென்பது.

11. காமிகம், தந்த்வதார படலம் பக்கம் 32, யாமனத்திலும், மாத்ரு தந்திரத்திலும், பாஞ்சராத்திரத்திலும், பவுத்தத்திலும் அருஹத் மதத்திலும் லாகுளத்திலும் வைதிக மதத்திலும் மற்றும் வேறாய வழிகளில் அந்தந்த சாஸ்திரங்களால் தங்க ளுக்குச் சொந்தமாகிய ஆகம சாஸ்திரப்படி ஆதிசைவர்கள் தீக்ஷை முதலிய அந்த லிங்க ஸ்தாபனம் முதலானவற்றைச் செய்யலாம்.

- http://viduthalai.in/new/page-3/4511.html?sms_ss=blogger&at_xt=4d6cf8a8590deab6%2C0