திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் - தொடர்-42

இதன் விடை:
ஊர்த்வ மேனமுச் ச்ரயதாத்
கிரௌபாரம் ஹரன்னிவ
அதாஸ்ய மத்ய மேஜது
கீதே வாதே புனன்னிவ

பொருள்: முன்போலவே, இவள் என்ற இடத்தில் இவன் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

ஹோதாவென்பவன் மற்றொருத்தியை நோக்கிக் கூறுவது:
யதஸ்யா அம்ஹுபேத்யா
சூது ஸ்தூல முபாதஸத்
முஷ்காவி தஸ்யா ஏஜதோ
கோசபே சகுலாவிவ

பொருள்: எப்போது லிங்கம் யோனிக்குள் நுழை கின்றதோ, அப்போது நீர் நிறைந்திருக்கும் மாட்டுக் குளம்பில் இரண்டும், மீன்களிலிருந்து அசைவது போல் விதைக் கொட்டைகள் இரண்டும் வெளியில் அசைந்து கொண்டிருக்கும்.

இதன் விடை:
யத் தேவாஸோ லலாமகும்
ப்ரவிஷ்டீ மின மாவிஷு;
ஸக்த்னா தேதிச்யதே நாரீ
சத்யஸ் யாக்ஷி புவோ யதா

பொருள்: எப்போது ருத்விக் முதலியோர் புணர்ச்சி செய்யவிரும்பி லிங்கத்தை யோனிக்குள் நுழைக் கின்றார்களோ, அப்போது பெண்ணின் அங்கங்கள் ஆணினால் மறைக்கப்பட்டிருக்கும். ஆயினும், தொடை யைப் பார்த்துப் பெண்ணை வேறு பிரித்து அறிந்து கொள்ளலாம்.

க்ஷத்தா என்பவன் வெறொருத்தியிடம் கூறுவது:
யத்தரிணம் யவமத்திநபூஷ்டம் பசுமன்யதே
சூத்ரா யதர்ய, ஜாரா நபோஷாய தனாயதி

பொருள்: பயிரை மேயும் மானைப் பார்த்து பயிர்ச் சொந்தக்காரன் மான் சுகத்தையடையுமே யென்று எண்ணாமல், இம்மான் பயிரைத் தின்றுவிட்டதே யென்று வருத்தப்படுவதைப் போல் ஆரியர்களால் புணர்ச்சி செய்யப்பட்ட தன் மனைவியைப் பார்த்து சூத்திரன் துன்புறுகிறான்.

இதன் விடை:
யத்ஹரிணோ யவமத்தி
நபுஷ்டம் பகுமன்யதே:
சூத்ரோ யதர்யாயை ஜாரோ
நபோஷ மனுமன்யதே

பொருள்: முற்கூறியவாறு ஆரிய ஸ்தீரியைப் புணர்ந்த சூத்திரனைப் பார்த்து, ஆரியர்களும் வெறுப்படைகிறார்கள்.

இத்தகைய வாக்கியங்களால் ஆரியர்கள் 1வியபி சாரத்தை விளையாட்டாகவே நினைத்து வந்தார்கள் என்பதும், இவர்களுக்குப் புறம்பானவர்கள் தீய ஒழுக்கமென்று வெறுத்து வந்தார்கள் என்பதும் அறியக் கிடக்கின்றது.

இவ்விதமாக ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா தவைகளும் ஆபாசங்களுமான வாக்கியங்கள் நிரம்பியிருக்கிற வேதங்களின் சொரூபத்தை நம்மவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு மேற்கூறிய உதா ரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டன. இவைகள்தாம் யாக மந்திரங்கள். இவைகளைச் சொல்லி யாகம் செய்தால், பிராமணன் சுவர்க்கத்தை அடைவான். இச்சொற்களைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயமும், மெழுகும் உருக்கிவிடுவது பார்ப்பனரின் வழக்கம். ஆனால், நல்லோர்களுக்கு இத்தகைய ஆபாச வார்த்தைகளைக் கேட்பதே ஈயம் உருக்கிவிடு வதைக் காட்டிலும் கஷ்டமாயிருக்குமென்பதில் அய்யமில்லை.

ஆரிய சமாஜத்திற்குத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி முற்கூறிய வாக்கியங்களுக்கு வேறு பொருள் கூறுகிறார். மஹீதராசாரியரைக் கண்டிக்கவும் செய்கிறார். அது, நம்மவர்களை ஏமாற்றி ஆரியமதத்தை நம்பச் செய்யவே ஆகும். ஆரிய சமாஜம் தோன்றி நாற்பது வருடங்களே ஆகின்றன. இக்காலத் தும் ஒரு சிலரே ஆரிய சமாஜத்தைத் தழுவுகின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்னிருந்த பிராமணரனை வரும், இக்காலத்தவரின் பெரும் பகுதியினரும் மஹீதர பாஷ்யத்தை ஒத்துக் கொள்ளுகின்றனர். ஆதலால், இதில் மேற்கோள்களாகக் கூறப்பட்டிருக்கும் வாக்கியங்களின் உரை மஹீதரரின் பாஷ்ய மொழி பெயர்ப்பேயாகும். தயானந்த மதப் பிரகாரம் 196 கோடி ஆண்டுகளாக இப்படி நடந்ததென்று சொல்ல வேண்டும். இந்த வேதத்திற்கு மாறிப் பொருளுரைக்க வந்தவர் 40 ஆண்டு காலம்தான் ஆகிறது. புத்த, சமணக்காலத்தில் மஹீதர பாஷ்யமே இருந்தது.

- http://viduthalai.in/new/page-3/3858.html?sms_ss=blogger&at_xt=4d6205b83e2ee8db%2C0