வியாழன், 11 ஆகஸ்ட், 2011

உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...?

ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் ஆதாயம் அடைந்தவர்கள் யார்? உள்நாட்டு, வெளி நாட்டு சதிகளின் முழுமையான தகவல்கள்தான் என்ன? திருச்சி வேலுச்சாமியின் சு.சாமி பங்களிப்பு குறித்து விசாரணைகள் இல்லையா? லிபியாவுக்கு ஓடிய நேட்டோ இலங்கைப்பக்கம் செல்லாததற்கு தனித்த காரணம் என்று ஒன்று உண்டா? இலங்கை அதிபரைப்பார்த்து அமெரிக்க அச்சப்படுவதற்கு தனித்த காரணம் உண்டா? அதேபோல் இந்தியா குறித்தும் ஏராளமான கேள்விக்கணைகள் உள்ளனவே? பதில் உண்டா? இந்தியாவுக்கு அதிக பயன் விளைவிக்காத உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறும் துணிவு உண்டா? குற்றம் சுமத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்கு கொடுத்த நீதிதானே இப்போது மீதம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்? சரியோ, தவறோ யாருக்காவது எப்படியாவது தூக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும் என்று சடங்கு ஆக்குவதா? (சடங்கு என்றால் காரண காரியம் கேட்கப்படாது)
சிங்களவனால் தமிழக மீனவர் (இந்தியா மீனவர்?) பாதிப்புக்குள்ளாவதை தடுக்க வேகமான முடிவுகள் எடுக்காத மத்திய அரசை ஏன் என்றாவது இதுநாள்வரை குறைந்தபட்சம் எழுத்து மூலமாகவாவது கண்டித்து, கேட்டிருப்பாரா இந்திய குடியரசுத்தலைவர்? அவர்தான் முப்படைகளுக்கும் தலைவர்?
உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...? குற்றவாளி தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறப்படுவது எல்லாம் என்னவாயிற்று?