வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு


பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு தமிழர் தலைவர் வெளியிட, பொருளாளர் பெற்றுக்கொண்டார்



சென்னை, பிப்.16- பகுத்தறிவு ஆசிரியரணி முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் விழுப்புரம் மாவட்டத் தலைவருமாகிய பெரி யார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் மறைவையொட்டி நினைவு நூலாக பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீட்டு விழா பெரி யார் திடலில் இன்று (16.2.2011) காலை நடை பெற்றது. தமிழர் தலை வர் கி.வீரமணி நூலை வெளியிட, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக் கொண்டார். தலைமை நிலைய செய லாளர் வீ.அன்புராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசு பதி, ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர். நூல் வெளி யீட்டு விழாவையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் நூறு தமிழர் தலைவரிடம் வழங்கப் பட்டது.

http://www.viduthalai.in/new/home/archive/3566.html

-