வெள்ளி, 31 டிசம்பர், 2010

மனிதனை சிந்திக்க வைத்த சிந்தனைச் சிற்பி பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்றனர்!




தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு தந்தை பெரியாரின் பணிகளை தமிழர் தலைவர் தலைமையில் முடிப்போம் என்று உறுதி எடுத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத்தலைவர் அண்ணாமலை, சித்தரசூர் இராமநாதன், அனந்தபுரம் தண்டபாணி மற்றும் சிறப்பு அழைப் பாளராக அனந்த புரம் திமுக நகர செயலாளர் கல்யாண்குமார் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செய லாளர் கதிரவன் வரவேற்று பேசினார். காணை ஒன்றிய தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

வியாழன், 30 டிசம்பர், 2010

ஞானசூரியன்-26

இந்துமதமும், ஜீவகாருண்யமும்

இக்காலத்தில் இந்துக்களில் சிலர் அஹிம்ஸா பரமோ தர்ம கொல்லாமையே சிறந்த தருமம், இதுதான் வேதத் தின் கருத்து என்று கூறுகிறார்கள். இவர்களின் கூற்றை யும் சிறிது ஆராய்வோம்.
மனம் முதலிய முக்கரணங்களினாலும் உயிர்களுக்குத் துன்பத்தை விளைவிக்காமல் உயிர்வாழ வேண்டும் என்ற உபதேச மொழியானது புத்தபகவானது திருவாக்கினின்றும் முதன்முதலாக வெளிப்பட்டது. பிற்காலத்தில் இந்து மதத்தலைவர்கள் இந்த வாக்கியத்தைக் கற்றுக் கொண்டு, இதுவும் தங்களுக்கென்று வாய்ப்பேச்சில் மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஆனால், வங்காளிகள் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவர்களில் நான்கு வருணத்தினரும் மாமிசத்தையும் மச்சத்தையும் உணவாகக் கொள்ளு கிறார்கள். இந்து சமயப்பிரகாரம் சந்நியாசத்திற்கு உரிமை யில்லாதவரும் ஆனால், சந்நியாசி என்ற பெயரால் அறியப் படுபவருமான சுவாமி விவேகானந்தர் சொல்லியி ருப்பதைக் கேளுங்கள்.
என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டு வந்தார். ஒரு உயிரைக்கொல்வது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது. 1இக்கால நிலைமைக்கு மனிதனுக்கு மாமிச உணவு அவசியமானது. உதவியற்ற சில ஆடுகளைக் கொல்வதும், தனது மனைவி மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க முடியாமலிருப்பதுமாகிய இவ்விரண்டில் எது அதிக பாவம் என்பதை ஆராயவேண்டும். உடலுழைப் பில்லாமல் உயிர் வாழ்கிற சில உயர் குடிப்பிறந்தார். மாமிச உணவை விரும்பாவிடின் அவர்களுக்கு வேண்டாம். உடல் உழைப்பினால் உயிர் வாழும்படியான நிலைமையில் உள்ளவர்கள், இந்த அஹிம்சா விரதத்தைப் பின்பற்றுவதால் சமுதாயத்திற்குப் பெரிய 1. இக்கூற்று விவேகானந்தருடைய மதம் மட்டுமல்ல இந்துக்களுடைய எல்லா முக்கிய நூல்களும் மாமிசம் மரக்கறிப் பதார்த்தம் வேண்டுமளவு கிடைக்கும் நாட்டில் மாமிசம் புசிப்பது மிக்க கெடுதி. அதிலும் ஜீவகாருண்யமே உருவான சந்நியாசிகள் (துறவிகள்) செய்வது பெருங்குற்றம். அராபியா முதலிய நாட்டில் அவர்கள் கொலை புரிந்துண்டாலும், அது குற்றமாகச் சொல்வதற் கில்லை. அந்நாடு பொதுவான மற்ற உணவுகள் கிடைக்காத நாடு. பர்மா, இந்தியா சிலோன் முதலிய நாட்டு ஜனங்களும் இதற்கொத்த நாட்டு ஜனங்களும் ஜீவஹிம்சை செய்வது, உயிர்வாழ்வது பிசகென்றே கூறலாம்.
கேடுவிளையும். இந்துமதத்தை நன்றாக ஆராய்ந்ததனா லேயே சிலர் இவ்விதம் சொல்ல நேர்ந்தது. இந்துக்களும் அவர்களின் தெய்வங்களும் மாமிச உணவையே விரும்புவ தாகக் கீழ்க்காணும் மனுவின் வாக்கியங்களால் உணரக் கிடக்கிறது.
ப்ராணஸ்யான்னமிதம் ஸர்வம் ப்ரஜாபதிரகல் பயத்:
ஸ்தாவரம் ஜங்க மம் சைவ
ஸர்வம் ப்ரா ணஸ்ய போஜனம்.
சரணாம்ன்னமசரா
தம்ஸ்ட்ரிணாமப் யதம்ஷ்ட்ரிண:
அஹஸ்தாஸ்ச ஸ்ஹஸ்தா நாம்
சூரானாம் சைவபீரவ:
நாத்தா துஷ்யத்ய தன்னாத்யான்
ப்ராணினோஹன் யஹன்யபி:
தாத்ரைவ ஸ்ருஷ்டாஹ்யாத்யாஸ்ச
ப்ராணினோத்தாரஏவ்ச
பொருள்: சரம், அசரம் (அசையும் பொருள், அசையாப்பொருள்) ஆகிய இவ்வுலகு உயிர்களின் உணவின் பொருட்டுப் பிரம்ம தேவனால் படைக்கப் பட்டிருக்கிறது. அசையா உயிர்கள் சர உயிர்களுக்கு உணவாவது போலவே, கோரைப் பற்கள் இல்லாதவை அவைகளையுடைய உயிர்களுக்கும், ஏழைகள் வலிமையுடையவர்களுக்கும் உணவாகையால், இவ்விதம் உண்பதனால் பாவமுண்டாகமாட்டாது. ஏனெனின், உண்ணுகின்றனவும் உண்ணத் தக்கனவுமான உயிர்களை இதே கருத்துடன் பிரம்மா படைத்தார்.
இந்தப் பிரமாணப்படிக்கு ஏழைகளைப் பலசாலிகள் கொன்றார்களே ஒழிய, தின்னாமல் இருந்ததே அதிர்ஷ்டவசம். தின்றிருப்பார்களாயின், கொலையானது மிதமிஞ்சிப் பெருகியிருக்கும். புத்தபகவானுடைய புத்திமான் பலசாலியாவதன்றி பலசாலி புத்திமான வதல்ல. இதை நன்றாக மற்றுமுள்ளோர் அறியவேண்டும். புத்திமந்திரம் சித்த மந்திரம், என்கிற பஞ்சப்ர மேட்டி மந்திரத்தையும், அவ்வாறே ஜபம் பண்ணத்தகுந்தது. இதை விரிவாக மற்றோரிடத்தில் கூறுகிறோம்.
கொள்கைக்கு விரோதமாகவே மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனை யும் விதித்திருக்கிறார்.
நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாத்திமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதிம் (மனு)
பொருள்: சிரார்த்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உண்ணாவிடின், இருபத்தொருதடவை மிருகமாகப் பிறப்பான். இத்தகைய வாக்கியங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளுகிறவர்களே, அஹிம்சா தருமம் என்பதற்கு வேதக்கருத்துகள் பல என்றுகூறி, அறிவிலிகளை மயக்குகிறார்கள். யாகங்களில் தேவதை களுக்குச் கள்ளும் ஊனுமே படைக்க வேண்டும்.

- http://www.viduthalai.periyar.org.in/20101229/news09.html

செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஞானசூரியன்-25

ஞானசூரியன்
1நாள்தோறும் காயத்திரி மந்திரம் ஜபிக்கிறவன் எத்தகைய இழி தொழில்களைச் செய்தாலும், அப்பாவங்கள் அவனையணுகாது. முக்தியானது அவன் கைக்குள்ளிருக்கிறது. திருமால் கோயில் திருப்பணி செய்வோன் அளவிறந்த காலம் விண் நாட்டில் சுகமனுபவிப்பான்.
1. காயத்திரி செய்கிறவன் எத்தகைய கெடுதியும் செய்யமாட்டான் என்று பொருள்; செய்தால் அதன் பயனை அனுபவிப்பான். ஆனால், அந்த மந்திரம் சூத்திரன் ஜபம் பண்ணலாகாதாம்; காயத்திரியை உண்டு பண்ணினவன் அனாரியன். (சாமியவாதி விசுவாமித்திரன்) இது எல்லோருக்கும் ஜபம் பண்ண உரிமையுள்ளது. இது அனாரியனது சொந்தம்.
திருமால் திருவடிகளில் அர்ச்சிக்கிற ஒவ்வொரு பூவும் அர்ச்சிப்பவனைப் பத்தாயிரம் ஆண்டுகள் விண்ணாட்டில் இருக்கச் செய்யும். ஆனால், மக்களின் பெருக்கத்தால் அங்கு இடமில்லாமற் போகாதது ஒன்றே பெரும் வியப்பிற்கு இடந்தருகின்றது. எல்லாப் பாவங்களையும் நாசம் பண்ணுகிற இத்தகைய பிரமாணங்களை நம்புவோர்கள் வியபிசாரம் பண்ணலாகாதா? கள் குடிக்கலாகாதா? எல்லாம் செய்யலாம். ஆனால், இவைகளை நம்பாத அறிவாளிகள் முற்கூறியவர்களின் சுவர்க்க வாசத்தை நரகவாசமென்றே கருதுவார்கள்.

விவாகம் என்கிற முறையே இவர்கள் சமயத்தில் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. முற்காலங்களில் விலங்குகளைப் போலவே நடந்து வந்தார்கள் என்பது, வைனதேயன் ஆதிதேயா முதலிய பெயர்களினால் வெளிப்படை. பிற்காலங்களில் பிதாவின் பெயரும் சேர்த்துக் குலத்தின் பெயரைக் கூறிவந்தார்கள். இராவன் பார்க்கவன் முதலிய பெயர்கள் பிதாவின் வழியைக் குறிக்கும் சைனதேயன் ஆதிதேயன் முதலிய பெயர்கள் எதிர்மறையாக 2மாதாவின் பெயரைக் குறித்தலால், அக்காலம் பிதாவைக் குறித்து அறிவில்லாதிருந்த காலம் என்று ஊகிக்க இடமிருக் கிறது. முற்காலத்தில் வியபிசாரத்தைக் குற்றமாகக் கருதவில்லையென்பது கீழ்க்காணும் தந்தைகள் இருந்தால், அவ்விருவர்களுக்கும் பிண்டம் போடும்போது செய்யவேண்டிய விதி வருமாறு:
யதி த்விபிதாஸ்யா தேகைகஸ்மின்
பிண்டேத்வெனத் வாவுபல க்ஷயேத் (ஆப்ஸ்தம்பர்)
1. இப்படிப்பட்ட விஷயங்களைப் புத்தக ரூபமாக எழுதியதாலல்லவோ சிவன், விஷ்ணு முதலிய ஆலயங்கள் பஞ்சமாபாதகத்திற்கு மூலஸ்தானமானது. விபச்சாரங்களும் பொய்ப் புரட்டும் ஜயமடைவதற்குக் கோவிலல்லவோ முக்கியவிடம்- இவ்விடங்களை முஸல்மான் இடித்ததைப் பற்றித் துக்கிக்கலாமா? கோயிலையும் கோயிலிலுள்ள கடவுளையும் துலுக்கன் இடிப்பதற்குக் கோயிலும் கோயில் கடவுளும் என்ன கர்மம் செய்தன? கர்ம பலன்தானே அனுபவிக்கும் காரணம்? கோயில் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அன்பர்களுக்கும் அய்ந்து வகையான பெரும் பாதகங்கள் செய்யும் ஓர் ஸ்தலமாகும்.
2. இது பிரஹ தாரணியக உபநிஷத்தில் மாதுர்வர்க்கம், பிதுர்வர்க்கம் என இரண்டு பிரிவாகவே கூறியுள்ளது.
பொருள்: ஒருவனுக்கு இரண்டு தந்தைகளிருந் தால், ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண்டும். பிண்டம் போடும்போது சொல்லவேண்டிய யேசத்வாமனு என்கிற மந்திரத்தை எதத்வாம் - தாதெனயேசயுவாமனு என்றிவ்வாறு சொல்லவேண்டும். (சிரார்த்த காலத்திய உபஸ்தான மந்திரம்) எழுந்து நின்று கீழ்க் குறித்தபடி சொல்லவேண்டியது.
யன்மே மாதா பிப்ரமமாத, யச்சாரனனுவ்ரதம்;
தன்மே ரேத,
பிதாவ்ருங்க்த மாபூரன் யோபபதயதாம்;
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா.
பொருள்: என் தாய் ஒழுக்கந் தவறிவிட்டாள்; அவள் தீய வழியில் ஒழுகினாள்! அந்த ரேதஸை (வீரியத்தை) தந்தையே உமதாக நினைத்துக் கொள்ளவேண்டும். வியபிசாரத்தினால் பிறந்தவனாகிய நான் கொடுக்கிற இந்தப் பிண்டத்தைத் தன் மகனால் கொடுக்கப் படுகிறதென்று நினைத்துப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்பது பொருள். இந்தப் பிரமாணத்தைப் பின்பற்றி இப்போதும் சிரார்த்தம் நடத்திவருகிறார்கள்.
முதற்கூறியபடி நெய் தேய்த்துக்கொண்டு புணர்ச்சி செய்து புத்திரன் பிறந்தால், அவன் தாய்க்கே உரியவன் என்று யாக்ஞவல்கியர் கூறுகிறார். அனேனவிதினா ஜாத; க்ஷேத்ரிண: ஸபவேத்ஸுத்
இங்கு க்ஷேத்ரி என்றசொல்லிற்கு நிலத்தின் சொந்தக்காரன் என்று பொருள். மக்களைப் பெறுதல் பயிர்த் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வட நூலார்1
இம்முறையை முகம்மது நபியும் தம் குரானில் கூறியுள்ளார்.
இயற்கைக்கு முரணாகவே மனிதப் பெண்களையும் விலங்குகளோடு புணரச் செய்தல் முதலிய அருவருக்கத்தக்க காரியங்களும் கடவுள் வழிபாடாக அக்காலத்தில் நம்பி, அங்ஙனம் செய்து வந்திருந்தனரென்பது நான்காவது அத்தியாயத்தில் விளக்கமாக்கப்படும்.
1. அஸ்வமேதம் முதலிய யாகங்களென்க.

- http://www.viduthalai.periyar.org.in/20101228/news12.html

திங்கள், 27 டிசம்பர், 2010

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு
ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை - ஏன்? இராசா திராவிடர் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் சுற்றிச் சுற்றி வருவதா?
பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, டிச. 25- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெடிகுண்டு வழக்கு இவைகளில் சிக்கியவர்கள் யார்? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தினவா? இராசாவை மட்டும் குற்றம் சுமத்தி ஊடகங்கள் பெரிதுபடுத்தக் காரணம் இராசா திராவிடர் என்பதுதானே? என்று திராவி டர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பி னார்.
தந்தை பெரியார் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 24.12.2010 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:
தந்தை பெரியாருடைய நினைவு நாள் இன்று. இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பார்ப் பன ஊடகங்கள் ஆரியர் - திராவிடர் போராட் டத்தை எப்படி இன்றைக்கும் நடத்திக் கொண்டி ருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் என்று சொல்லுவதற்கு நான் சங்கடப் படுகின்றேன். ஏனென்றால், தமிழர்கள் என்ற பெய ரில் பார்ப்பனரும் சேர்ந்து நானும் தமிழன்தான் என்று வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.
திராவிட உணர்வு
எனவே, திராவிடர் என்ற உணர்வை தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். திரா விடர் கழகம் என்றே அதற்குப் பெயரிட்டார். தொலைந்து போன நம்முடைய அடையாளத்தை மீட்டெடுத்தார் தந்தை பெரியார்.
இந்த உணர்வை இன்னும் பல தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மகத்தான கடமை நமக் கெல்லாம் உண்டு. 1925 ஆம் ஆண்டுதான் சுயமரி யாதை இயக்கம் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தோன்றியது. சுய மரியாதை இயக்கத்திற்கு நேர் எதிரிடையான அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறித்தனம் இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கிறது.
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் அது தனக்கே என்று சொல்லக் கூடிய அளவில் வந்து, இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, மதவெறியை மூல தனமாக வைத்து பி.ஜே.பி. கட்சி மத்தியிலே ஆண்டது.
ஜெயலலிதாவுக்குப் பிரதமர் என்று நினைப்பா?
இனிமேல் நாம்தான். எல்லாம் நாம்தான். வரலாற்றைப் புரட்டிப் போடலாம். அரசியலை நாம் தான் நிர்ணயிப்போம் என்ற ஆணவத்தோடு இருந்த ஆரிய சக்திகளின் இயக்கமாகத்தான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இருந்தது. அந்த மதவெறி சக்தியை தோற் கடித்து மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. தமிழகத்திலே கலைஞர் தலைமையிலே ஆட்சி நடைபெறுகிறது.
இங்கே எதிர்கட்சித் தலைவியாக இருக்கின்ற ஜெயலலிதா இராசாவை விசாரித்தால் போதாது; கைது செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார். இவர் என்ன பிரதமர் ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? (கைதட்டல்) அல்லது அதி காரத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? இந்த அம்மையாருக்கு அறிவு நாணயம் உண்டா?
ஜெயலலிதா மீது சி.பி.அய். வழக்கு 10 ஆண்டு களாக நடந்துகொண்டு இருக்கிறது (கைதட்டல்).
இராசா மீது யூகத்தின் அடிப்படையிலே குற்றச் சாற்று சொல்லுகிறார்கள்.
இந்த அம்மையார் முதலமைச்சராக இருக்கும் பொழுது வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அப்படி பணம் வந்தால் ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? அரசாங்க கஜானாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணத்தை யார் அனுப்பினார்கள் என்று தீர விசாரிக்க வேண்டும்.
அதை விட்டு, விட்டு யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லி தன்னுடைய கணக்கிலே வெளிநாட்டுப் பணத்தை வரவு வைத் துக் கொண்டார்.
யோக்கியன் வருகிறான் சொம்பைத் தூக்கி உள்ளே வை!
பெரியார் ஒரு பழமொழி சொல்லுவார்: யோக் கியன் வருகிறான்; சொம்பைத் தூக்கி உள்ளே வை என்று சொல்வார் (சிரிப்பு - கைதட்டல்).
இராசாவை கைது செய்ய வேண்டும் என்று இந்த அம்மையார் சொல்லுகிறார். இராசாவை கைது செய்ய முகாந்திரம் வேண்டும் வழக்குபடி. வழக்கில் முகாந்திரம் இருந்தால்தானே கைது செய்ய முடியும்? இதோ இங்கே வழக்கறிஞர்கள் உட்கார்ந் திருக்கிறார்கள். நீதிபதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இது என்ன, இடிஅமீன் ஆட்சியா?
எதுவும் சட்டப்படிதான் செய்ய முடியும். உடனே கைது செய்ய வேண்டும் என்றால் இது என்ன இடி அமீன் ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
சரி, இந்த அம்மையார் வழிகாட்டியிருக்கின் றாரா? இந்த அம்மையாருக்கு சி.பி.அய்.சம்மன். அனுப்பியிருக்கிறதே, அதற்காக இந்த அம்மை யாரைக் கைது செய்திருக்கிறார்களா? 30 வாய்தா வுக்கு மேலே இவருக்கு வழங்கியிருப்பதாலே முத லிலே ஜெயலலிதாவை அல்லவா சி.பி.அய். கைது செய்திருக்க வேண்டும்? (கைதட்டல்). எந்த பத்திரி கைக்காரராவது இதை எழுதியிருக்கிறாரா?
காரணம் என்ன? முதுகில் பூணூல், அவ்வளவு தான். எனவேதான் சொல்லுகிறோம், இந்த நாட் டிலே மீண்டும் மனுதர்மத்தைத் துளிர்க்க விட மாட்டோம். குழி தோண்டிப் புதைப்போம். இந்த அம்மாவே சி.பி.அய். என்ன வானத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டவர்தானே!
ஒரே ஒரு காரணம் இராசா திராவிடர் இனத் தைச் சார்ந்தவர். அது மட்டுமல்ல; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தவர். எனவே, அவருக்காகக் கேட்க நாதியில்லை என்ற நினைப்பு!
சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்
இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்களுக்குச் சொல்லுகின்றேன். ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை, குடை என்று குடைந்திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு (கைதட்டல்). காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம். பெரியார், அண்ணா, கலைஞர் பள்ளியிலே பயின்றவர் (கைதட்டல்)..
ஆர்.எஸ்.எஸ். தலைவரை பல மணி நேரம் சி.பி.அய் குடைந்து கேள்வி எழுப்பியும், அவர் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்று சாதாரணமாக ஒரு செய்தியை வெளியிட்டி ருக்கின்றார்கள்.
இதுபற்றி பெரிதுபடுத்தி யாராவது செய்தி சொல்லியிருக்கின்றார்களா?
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணுப் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று, சதி எனக் கண்டோம் என்று பார்ப்பனப் பாரதி பாடியிருக்கின்றாரே. பார்ப்பன பாரதிக்கே பொறுக்க முடியாமல்தானே சொல்லயிருக்கின்றார்.
அய்தராபாத் மெக்கா மசூதியில் வெடிவிபத்து வழக்கில் இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவருக்குப் பங்கு இருக்கிறது என்று ஆதாரத்துடன் கேட்கிறார்கள். இது பயங்கரவாதத்தைச் சேர்ந்தது. இராசா வழக்கு பயங்கரவாதத்தைச் சேர்ந்ததா?
சி.பி.அய். வழக்கில் சொல்வதென்ன?
இவ்வளவு இழப்பு நடந்திருந்தால் என்று தானே ஸ்பெக்ட்ரம் வழக்கிலே சொல்லுகிறார்கள்.
மக்களிடம் இதைச் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அடுக்கி வைத்துக் காட்டினால் எப்படியிருக்கும் என்று சொன்னால் போதுமா? ஆனால், சி.பி.அய். வழக்கிலேயே வெறும் 22 ஆயிரம் கோடி என்றுதான் போட்டிருக்கின் றார்கள்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியில் 22 ஆயிரம் கோடியை கழித்து விட்டால், ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி புஸ் என்று போய்விட்டது. அனுமான இழப்பு - கற்பனையிலேயே இந்த நிலை.
எவ்வளவு நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? பார்ப்பன ஊடகங்கள் உங்கள் கைகளிலே இருக்கிறது.
இராசாவை நெருங்கி விட்டார்கள். கோபால புரம் திக் திக். என்ன திக் திக். திக் திக் என்று வேறு இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் இருக் கிறது (சிரிப்பு கைதட்டல்).
இன்றைய விடுதலையில் இதைப்பற்றி எழுதி யிருக்கின்றோம்.
நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்
நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம் தான் கோபாலபுரம். அதைச் சந்தித்த இடம்தான் பெரியார் திடல்.
மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திட லுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.
இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதி யின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.
கலைஞரின் பொற்கால ஆட்சி
நாங்கள் கேட்டோம். எங்ககிட்ட ஏதய்யா கருப்புப் பணம்? அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அதைத் தாண்டி கலைஞர் அவர்கள் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை நடத்துகிறாரா? இல்லையா?
ஆறாவது முறையாகவும் கலைஞர் வருவது உறுதி
மீண்டும் ஆறாவது முறையாக அவர்தான் முதலமைச்சராக வரப்போகின்றார். உறுதியாகத் தெரிந்து போய் விட்டது. மக்கள் தயாராகிவிட் டார்கள். பார்ப்பனர்களே நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சி தான். நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச் சாரத்தைச் செய்கிறீர்களோ அடிக்க அடிக்க எழும் பந்து போல மக்கள் மனுதர்மத்தை - ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.
மீண்டும் வரப்போவது கலைஞர் ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையைப் பெரியார் நினைவு நாளில் எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத் தின் மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள் என்று கூறி முடிக்கிறேன். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101225/news05.html

வெள்ளி, 24 டிசம்பர், 2010

அந்த அரிமா நோக்கில்...!

அந்த அரிமா நோக்கில்...!

நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.

அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!

ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.

அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.

அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,

சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!

மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!

சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.

ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?

ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!

பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!

மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!

பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!

பெரியார் மறைய மாட்டார்!

பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?

திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,

விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்

பாதையில் பயணிக்கிறோம் என்பதை

நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து

தந்தையின் தன்னிகரற்ற

தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.

நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,

இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!

அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!

எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

- http://www.viduthalai.periyar.org.in/20101224/news03.html

புதன், 22 டிசம்பர், 2010

ஞானசூரியன் தொடர்-14

இதற்கு முன் எல்லோருக்கும் முதல்வனான பிராம ணன் எல்லா உரிமைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு, சில உரிமைகளை க்ஷத்திரியர்களுக்கும், அதைவிடக் குறைவாக வைசியர்களுக்கும் 1. தென்னாட்டிலும் க்ஷத்திரியர், வைசியர் என்று சில வகுப்பார் இருந்தபோதிலும், சாஸ்திர திருஷ்டியிலும், பிரமாண திருஷ்டியிலும் இங்குப் பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு வருணத்தினர் மட்டும் இருக்கிறார்கள் என்பது மனு வசனம்.

உதவினான். சூத்திரர்களுக்கு ஒருவகையிலும் உதவி செய்யாமலும், ஏதேனும் ஒரு காலத்தில் அவர்கள் சொந்த நன்மைக்காக முயற்சித்தால், அக்கணமே கொலை முதலிய தண்டனைகளை விதித்து நசுக்கியும் வந்தார்கள். இவ்வுண்மை இதுவரை கூறிவந்த பிராமண வாக்கியங்க ளினால் நன்கு விளங்கும். அய்ரோப்பியர்களும் சுயநன் மையைப் பார்க்கிறவர்களே. எனினும், இந்தியர் என்று முற்கூறிய வகுப்பினர் முன்னேற்றடைய முயற்சிப்பதைத் தடுப்பதில்லை. ஆனால், சுயநலத்திற்குக் கேடுவிளையா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். இதை மறுப்பவர்கள், நேபாள தேசத்தின் ஆட்சி முறையை நேரில் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது அங்குச் சென்று பார்த்தவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டால் உண்மை புலப்படும். நேபாளம் சுதந்திர நாடு; பிரிட்டிஷ் அதிகாரத் திற்குக் கீழ்ப்படியவில்லை. இக்காலத்திலும் மனுஸ்மிருதி யின் கொடுங்கோலை அங்கேதான் காணலாம். அங்குச் சூத்திரர்கள் கல்வி கற்கவும், பொருளீட்டவும் உரிமை கிடையாது. நல்லுணவு, நல்லணி, நல்லாடை, நல்வீடு இவைகளும் இவர்களுக்கு ஆகா. அதுவோ பனி மிகுந்த நாடு. ஆயினும், குடிசையில்தான் வசிக்கவேண்டும். பால் குடித்த சூத்திரனை மனுதர்ம நூல் வழியாக இன்றைக்குத் தண்டிக்கிறார்கள். சூத்திர ஜாதியில் எங்காவது அழகிய பெண் ஒருத்தி தோன்றுவாளாயின், அவள் பிராமணனுக் கும், க்ஷத்திரியனுக்கும் சொந்தம். 1இத்தகைய பெண்ணை அவளது தாய் தந்தையர்கள் க்ஷத்தியனிடத்தில் ஒப்பித்து விட வேண்டும். இவ்விதமாகச் சூத்திரர்களைச் சார்ந்த வரையில் மிகவும் பயங்கரமானது. இடைக்காலத்தில் 2ஆரியர்கள் ஆதிக்கம் பெற்றிருந்த நம் நாட்டிலும் இவ் வகையாகக் கொடுங்கோலரசுதான் நடைபெற்றதோவென நினைத்து வருந்தவும் இடம் ஏற்படுகிறது. தேச சரித்திர மும், சிற்சில வகுப்பார்களின் ஒழுக்கங்களும் இதற்குச் சான்றாகும். இத்தகைய அரசாட்சியை வெறுக்க எந்த இந்துவுக்கும் உரிமையில்லை. திலகர், மாளவியா முதலிய இந்துமதத் தலைவர்களின் சுய ஆட்சித் திட்டமும் இத்தகையதே.

1. மலையாளம் இதற்குச் சார்ந்ததாக இருந்தது.

2. சங்க இலக்கியங்களும் நிகண்டும் புகலும் தென் நாட்டில் சூத்திரன் என்று சொல் பிராமண மதத்திற்குப் புறம்பானவர்களையென்க. தங்கள் மதத்திற்குப் புறம்பான வர்களைக் கிறிஸ்தவர் அஞ்ஞானியென்றும், முகம்மதியர் காபா (பாவி) என்பது போலுமென்க.

சூத்திரன் எலும்பு நொறுங்க வேலை செய்தால், அதனால் வரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் நன்றாய்த் தின்பார் களாம். சூத்திரன் வேலை செய்யாவிட்டால், உலகம் அழிந்து விடுமாம். என்னே மனுவின்நீதி! இத்தகைய மனுவுக்கும் குருக்களாயிருந்து விளங்கிய பிராமணர்களின் கருணைதான் என் னே! இராமாயண சம்பூ என்கிற நூலை இயற்றிய போஜ ராஜன் கூறுவதைக் கேளுங்கள்.

உச்சைர் கதிர் ஜகதி சித்யதி தாம தஸ்சேத்

தஸ்ய ப்ரமா சமரணை க்ருதகேத ரைஸ்சேத்;

தேஷாம் ப்ரகாசனதசாச மஹீசுவாஸ்சேத்

தானந்த ராக்வ நிபதேந்நனு மத ப்ராணாம்!

பொருள்: உலகத்தில் தருமத்தைப் பின்பற்றுவ தனாலேயே நற்கதியடைய முடியும். தரும நெறிகளை விளங்கவைப்பன வேதங்களாம். வெளிப்படுத்திய வர்கள் பிராமணர்கள். ஆகையால், பிராமணர்களைத் தவிர, வேறு யாரை வணங்குவேன்?

இந்தப் போஜராஜன் பெரிய வித்வான். அடுத்தோர்களை ஆதரிக்கும் பெருங்கொடையாளி. அத்தகைய பெரியாரைக் கூட இந்தப் பார்ப்பனர்கள் ஏமாற்றினார்களே! இதனால் அரசன் செய்யவேண்டிய நீதியாவன:- சூத்திரர்கள் முன்னேற்றமடையாமல் தடுத்தல், அவர்களை இரவும், பகலும் வேலை வாங்கி, அதனால் வரும் வருமானத்தில் அன்ன சத்திரங்களும், வேத பாடசாலைகளும், கோயில் களுங்கட்டிப் பிராமணர்களுக்கு எல்லாத் துறைகளிலும் உதவி புரிதல் என்று ஏற்படுகிறதன்றோ? இங்ஙனம் செய்தால் சொர்க்கமும், மீறினால் நரகமும் வருமாம். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்னும் பழமொழிக் கிணங்க, குழந்தைப் பருவ முதற்கொண்டே இங்ஙனம் உபதேசிக்கப்பெற்ற க்ஷத்திரியர்களின் ஆட்சியை வேறெவ்விதம்தான் மாற்றமுடியும்?

இராமாயணம்

இராமாயணம் என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்மவர்கள் பக்தியினால் மெய்மறந்து கூத்தாடுகிறார்கள். இதுவும் அறியாமையேயாகும். இராமன், பார்ப்பனர் சொன்னபடியே பார்ப்பனரல்லாதாரைத் துன்புறுத்தி வந்தவனாதலால், அவனை விஷ்ணுவின் அவதாரமென்று புகழ்ந்து, ஒவ்வொரு புராணத்திலும் பாடி வைத்ததோடு, அவனுக்கென்று தனியாக இராமாயணம் என்னும் ஒரு பெருங்காவியத்தையும் பாடி வைத்திருக்கிறார்கள். இந்த இராமன் இராட்சதர்களைக் கொன்றான் என்று சொல்லும் இடங்கள் எல்லாம் தமிழ் மக்களையே கொன்றதாகச் சரித்திர ஆராய்ச்சியால் ஏற்படும் உண்மையை, நம்மவர்கள் உணராமல் பொருள் நஷ்டமும், அவமானமும் அடைந்து வருகிறார்கள். அந்தோ! கொடுமை! கொடுமை! பார்ப்பனருடைய தீய ஒழுக்கங்களைக் கண்டு மனம் பொறாமல், அவர்களை வெறுத்தவர்களையும், சிவனை வழிபடுகின்றவர்களையும் இராட்சதர், அசுரர், நிசிசரர் இவை முதலிய பல இழிவுப் பெயர்களால் வேதத்திலும் ஸ்மிருதியிலும் எழுதிவைத்துக்கொண்டு ஏமாற்றி வருகிறார்கள்.

-(தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101211/news04.html

ஞானசூரியன்-தொடர்-24

என்பன முதலிய வேத வாக்கியங்களில் இதே கருத்து அடங்கியிருக்கிறது. இக்காலத்தில் பெண் மக்கள் இத்தகைய விதிகளை அறியாதவர்களாயிருப்பது ஸ்திரீ சூத்ரௌ நாதீயேதாம் என்ற விதியில் கல்வி பயிலப் பெண்களுக்கு அதிகாரமில்லை என்று சொல்லியிருப்பது, இந்து ஆண் மக்களின் அதிர்ஷ்டவசமென்றறிய வேண்டும். இக்காலத்தில் நடைபெற்று வருகிற விவாக கருமங்களையும் அவைகளுக்குரிய மந்திர - தந்திரங்களைக் குறித்தும் நன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும். விரிக்கிற் பெருகும்.

நான்கு வருணத்தினரின் பெண்களையும், பிராமணன் விரும்பியவாறு மணம் முடித்துக் கொள்ளலாம் என்று ஸ்மிருதிகளிலும், அங்ஙனமே நடந்து வந்திருப்பதைப் புராணங்களிலும் அப்படியே மலையாளத்தில் இப்போதும் நடந்து வருவதையும் பார்க்கலாம். மணப் பெண்களால் அனுஷ்டிக்கத் தகுந்த கருமங்களுள் ஒன்று 2ஸ்பத்நீ பாதனம் என்பதாகும். பதினாறாயிரத்தெட்டுப் பெண் களுக்குக் கணவனான கடவுளை 3அவனை வழிபடுகிற ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிற கன்னிகை ஆபிசாரத்தி(சூனியம் முதலிய மந்திர வித்தை)யினாலே யினும் தனது சக்களத்திகளை எதிர்த்து நிற்பதில் குற்றம் ஒன்றுமில்லை. 4ஆரோஹோரும் 1. இம்முறை உடற்கூறும், உடல் தொழிலும் நன் குணர்ந்தவர்களால் வகுத்தது. இதனால் உடல் வலிவு, புத்திக் கூர்மை உள்ள புதல்வரைப் பெறலாம். இல்லையேல் பலவகையிலும் கெடுதலே (பிஞ்சில் பழுத்தது)

2. இச்சொல்லிற்குச் சக்களத்தியைத் துன்புறுத்துதல் என்பது பொருளாகிறது.

3. கிருஷ்ணன்.

4. பிறப்பிலாவது இடையிலாவது ஆண் தன்மை இல்லாமை.

தொடைமீது ஏறு முதலிய வேதமந்திரங்களைக் கற்றுக் கொள்ளுகிற மாணக்கன் குருவினிடத்தில் பணிவுடன் நடந்து கொள்வானானால், அது இக்காலத்தில் அர்த்த ஞானமில்லாத (பொருளையுணராத) அத்தியயனத்தினால் உண்டான நன்மையேயாகும். இத்தகைய மந்திரங்களும் அவைகளின் பொருளும் பெற்றோரிடத்தில் தெளிவாகக் கூறப்படும்.

விவாஹேஷ் வன்ருதம் ப்ரூயாத்

விவாக காலங்களில் பொய் சொல்லலாம் என்றும் விதியுள்ளது. புத்திரப்பேறில்லாமல் கணவன் இறந்துபோன ஸ்திரீயானவள் புத்திரனை விரும்பியவளாய், திருதராட்டிர னுடையவும் பாண்டுவினுடையவும் தாய்களைப் போல நடந்து கொள்ளலாமென்றும் விதியிருக்கிறது.

அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம் புத்ரகாம்யயா:

ஸபிண்டம்வா ஸகோத்ரம் வாக்ருதாப்யக்தம் ருதரவிராத் (யாக்ஞவல்கியர்)

பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின்1 அனுமதியைப் பெற்று ருதுகாலத் தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோ தரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையே னும் புணர்ந்து கொள்ள லாம்.

இவ்விதம் அசர்ப்பஸம்ப வாத கருத்தரிக்கிற வரைக்கும் செய்து கொள்ளலாம். இத னால், கற்புக்கு அழி வில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது. நாகரிகத்தின் முன்னணியில் நிற்கிற வகுப்பார்களுள் முதன்மையானவர்கள் என்று தங்கள் மூதாதைகளைப் பேசுகிற பார்ப்பனரின் கூற்றையும், மேற்குறித்த பிரமாண வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்ஙனமிருக்க, வியபிசாரம் என்று இவர்கள் கூறுவது எத்தகைய தீய ஒழுக்கத்தையோ, நாமறியோம் வியபிசாரத்திற்கும் பிராயச்சித்தம் விதித்திருக்கிறார்கள்.

1. தமிழர்கள் இதனை முற்றும் அருவருப்பார்கள். - இதற்காகவே திண்டுக்கல்லையடுத்த சிறுமலையில் அவிசாரிக் கணவாயென்று ஒன்றுள்ளது. அதில், அவிசாரியாய்ப் போனவளை நிற்கவைத்துத் தள்ளி விடுவது வழக்கம். இன்னும் அப்பெயர் வழங்கி வருகிறது.

ஹ்ருதாதிகாரம் மலிணாம் பிண்டமாத்ரோப ஜிவினீம்;

ப்ரிபூதாமத: சய்யாம் வாஸயேத் வ்யபிசாரிணீம் (யாக்ஞவல்கியர்)

பொருள்: வியபிசாரம் பண்ணினவளின் ஹிமையை எடுத்துவிட்டு, ஓர் உருண்டைச் சோறு மட்டும் கொடுத்து வெறுந்தரையில் படுக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஓர் ஆண்டு வரையில் செய்தால் குற்றமற்றவளாவாள். (இத்தகைய பிராயச்சித்தத்தினால், வியபிசார தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கற்பைக் குறித்துக் கவலைப்படவும் வேண்டியதில்லை.)

அன்றியும், சுலபமான பிராயச்சித்தத்தினால் எத்தகைய குற்றமும் நீங்கிவிடுமென்று விதிக்கிற சமய நூற்கள் மனிதர்களுக்குத் தீமையையே பயப்பனவாம். இந்தப் பிரமாணங்களை நம்பி எண்ணிறந்த தீமைகளை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள் என்பது நிச்சயம். கீதை மஹாத்மியம், பிரதோஷ மஹாத்மியம், ஏகாதசி மஹாத்மியம், காயத்திரி மஹாத்மியம் முதலிய புண்ணிய கருமங்களை விரித்துரைக்கிற புராணங்களில் எதைப் பார்த்தாலும் அவைகளில் ஒவ்வொன்றிலும் பார்ப்பனக் கொலை, குரு மனைவியைப் புணர்தல் முதலிய கொடும்பாவங்களைக்கூட போக்கடிக்க வல்லமையுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில பண்டிதர்கள் இதை அர்த்தவாதம் என்று சொல்லு கிறார்கள். (பொய் என்பதற்கு அர்த்தவாதம் என்ற பரிபாஷைச் சொல்லை உபயோகிக்கிறார்கள் போலும்) -(தொடரும்).

- http://www.viduthalai.periyar.org.in/20101222/news21.html

செவ்வாய், 21 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-23

அவைகளைப் பிரமாணத்துடன் ஈண்டுக் கூறுவோம்.
1. பிராமண விவாகமும் அதன் இலக்கணமும்
ப்ராஹ்மே விவாஹ அஹூய தீயதே சக்த்யலங்க்ருதா;
தஜ்ஜ: புனாத்யுபதய; புருஷானேகவிம்ச திம்
பொருள்: தகுந்த வரனைத்தேடி அவனுக்குத் தன் பெண்ணைத் தன்னாலியன்றவாறு அணிகலனால் அலங்கரித்து விதிப்படி விவாகம் செய்துகொடுத்தல் பிராம்மண விவாகம். இந்தப் பெண் வயிற்றிற் பிறக்கிற புத்திரன் இருபத்தொன்று தலைமுறைகளைப் பரிசுத்தம் பண்ணுவான்.
2.தெய்வ விவாகம், 3. ஆர்ஷ விவாகம் இவை இரண்டின் இலக்கணங்கள்
யஜ்ஞஸ்த ரித்விஜே தைல
ஆதாயார்ஷஸ்து கோத்வயம்:
சதுர்க்த சப்ரதமஜ:
புனாத்யுத்தரஜஸ் சஷட் (யாக்ஞவல்கியர்)
பொருள்: யாகம் செய்விக்கிற ருத்விக்குகளுக்குள் (புரோகிதர்களுக்குள்) ஒருவனுக்குக் கன்னிகையைக் கொடுப்பது தெய்வ விவாகம். வரனிடத்தில் இரண்டு பசுக்களைப் பெற்றுக்கொண்டு கன்னிகையைக் கொடுப்பது ஆர்ஷ விவாகம். இந்த விவாகங்களிலிருந்து பிறக்கிற புத்திரர்கள முறையே பதினான்கு அல்லது ஆறு தலைமுறையைப் பரிசுத்தம் பண்ணுவார்கள்.
4. பிரஜாபத்திய விவாகமும், அதன் இலக்கணமும் ஸஹதர்மஸ்சர்ய தாமித் யுக்த்வா
யாதீய தேர்த்திஸே;
ஸ்காய: பாவயத்யாத்ய:
ஷட்ஷட்வம்ஸ்யான் ஸஹாத்மனா (யாக்ஞவல்கியர்)
பொருள்: பெண்ணை விரும்பிக் கேட்கிற வரனுக்குப் பெண்ணைக் கொடுப்பது பிரஜாபத்தியம். இதிலுண்டாகும் புதல்வன் ஏழு தலைமுறையைப் பரிசுத்தமாக்குவான்.
5. ஆசுர விவாகமும், அதன் இலக்கணமும்
ஜ்ஞாதிப் யோத்ரவிணம் தத்வா
கன்யாயாஸ்சைவ சக்தித;
கன்யாதானம் துஸ்வாச்சந்தி
யாதாஸுரோதர்ம உச்யதே (யாக்ஞவல்கியர்)
பொருள்: சுற்றத்தார்களுக்குப் பணம் கொடுத்து கன்னிகையைப் பெற்றுக்கொள்ளுதல் ஆசுரவிவாகம்.
6. காந்தர்வ விவாகமும், அதன் இலக்கணமும்
இச்சயான்யோன் யஸம்பந்த;
கன்யாயஸ்ச; வாஸ்யச;
காந்தர்வ: ஸ்விதிர் ஜ்ஞேயோ
மைதுன்ய காமஸம்பவ
பொருள்: ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பத்தினால் கலந்துகொள்ளு தலே காந்தர்வ விவாகம்.
7. இராக்ஷஸ விவாகமும், அதன் இலக்கணமும்
ஹத்வா, சித்வாச பித்வாச
க்ரோசந்தீம் ருததீம் க்ருஹாத்;
ப்ரஸஹ்ய கன்யாஹரணம்
ராக்ஷஸோ விதிருச்யதே (மனு)
பொருள்: வீட்டிற்குள் புகுந்து அங்குள்ளவர்களைச் கொன்றும் பயமுறுத்தியும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போவதே இராட்சச விவாகம்.
8. பைசாச விவாகமும், அதன் இலக்கணமும்
ஸுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா
ரஹோ யத் ரோபகச் சதி;
............................................. பைசாச:
ப்ரதிகோஷ்டம் (மனு)
பொருள்: தனிப்பட்ட இடத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போதோ, மூர்ச்சித்து விழுந்திருக்கும் போதோ, புணர்ச்சி செய்தல் பைசாச விவாகம்.
இத்தகைய எண் வகை 1மணங்களுள் விரும்பியவாறு ஏதேனும் ஒன்றின் முறையைப் பின்பற்றி நடந்து கொள்ளலாம். இதனால், அக்காலத்தில் நடந்துவந்த விவாக முறையை ஊகித்து உணருவதே நலம். இம்முறைகளைக் கண்டிக்க இந்துக்களுக்கு உரிமையில்லை. போதாயனனுடைய விதியையும் கேளுங்கள்.
த்ரீணி வர்ஷாண் யருதுமதீ
சாங்க்ஷேத பிதிர் சாசனம்
ததஸ் சதுர்த்தே மாஸேத்
விந்தேத ஸத்ருசம் பதிம்.
1. தமிழ் நூற்களில் களவியல் எனவும், கற்பியல் எனவும் இரண்டே
அல்ப்ய மானே ஸத்ருசே
குணஹீனம் ஸமாஸ்ரயேத் (போதாயனர்)
பொருள்: ருதுமதியான கன்னிகையானவள் 1மூன்று ஆண்டுகள் வரையிலும் பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பிறகு தானாகவே தக்க வரனைத் தேடி அடையலாம். தன் மனத்திற்கேற்றவாறு வரன் கிடைக்காதவிடத்து எத்தகைய புருஷனை யேனும் மணந்து கொள்ளலாம்.
உதவையாசன் தாதாரம் லபத ஏவ,
அதேச பார்த்தா பார்யாம்
-(தொடரும்).

- http://www.viduthalai.periyar.org.in/20101221/news18.html

திங்கள், 20 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-22

ஞானசூரியன்
2. ஈண்டுப் பிரேதங்களென்றது பிசாசுகளையென்க. விண்ணுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் இடையிலுள்ள உலகினை அந்தரீட்சமென்பர் - இவ்விடங்களில் வாசம் செய்வோர்.
பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. இங்கு ஜாதி வேற்றுமை கிடையாது. கண்டத்து இராமன் என்னும் பெயருடைய மந்திரவாதி ஒருவன் இருந்ததாகவும், அவன் பார்ப்பனருக்கு இயற்கைப் பகைவனாயிருந்த வஞ்சனையினால் பார்ப்பனர்கள் அந்த இராமனைக் கொன்றுவிட்டார்களென்றும் பரோபகாரியாக இருந்த இராமனிடத்தில் பொதுமக்களுக்கிருந்த அன்பினால் அவனுக்குக் கோயில் ஒன்றமைத்து, அதில் குடிவைத்துப் பூசித்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். எவ்வளவு கொடிய பிரம்மராட்சசு (பிராமணப் பிசாசு) ஆனாலும் இந்த இராமனுடைய சந்நிதியில் போய்ப் பிரார்த்தித்தால், அது அக்கணமே ஒழிந்துபோகும்.
ஆனால், இந்த இராமன் உயிரோடிருக்கும்போது ஒரு பிராமணக் குடும்பத்துக்கு அடிமையாயிருந்த மையால், இப்போதும் அக்குடும்பத்தாரில் யாரேனும் ஒரு சீட்டெழுதி அனுப்பினால், அந்தக் கட்டளையை மீறி இராமனுடைய சந்நிதியில் ஒன்றும் நடைபெறாது. இது எனது அனுபவம். இதனால் அடிமைத்தனமும் அதனிடத்திலுள்ள நம்பிக்கையும் எவ்வளவு வன்மையுடையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நான் வேண்டிக் கொள்வது யாதெனில், பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்ட நான்கு வருணங் களுக்கும் மனு முதலியோரின் சட்டத்திற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டிய தில்லை. பார்ப்பனருக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் இருக்கிற சம்பந்தம்கூட நமக்கும் பார்ப்பனர்களுக்கும் கிடையாது. 1இவ்விரு வகுப்பார்களின் மூதாதைகள் முற்காலத்தில் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களும் மத்திய ஆசியாவில் குடியிருந்தவர்களும் என்று சரித்திரம் கூறுவதால், இவ்விரு இனத்தாரும் இரத்த சம்பந்தம் உள்ளவர்களென்பது மறுக்கமுடியாது. ஆனால், வெள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் மத ஒற்றுமை உண்டு. கிறிஸ்து மதம், பண்டைக் காலத்துப் புத்தர் மதமாகும். புத்தர் பண்டைக் காலத்துத் தமிழர் களாகிய சாம்மியவாதிகளின் (தமிழ்த் தலைவருடைய) மதத்தைக் கையாண்டவர். இந்தச் சித்தமார்க்கம், ஞானமார்க்கம் என்ற இரு வகைப்படும். தலைவர்களும் விஸ்வாமித்திரன், புத்தர், அரஹந்த முனிவர்கள் முக்கிய மானவர்கள்.
ஆனால், இச்சம்பந்தம் இவர்களுடைய சினேகத்தால் குரங்குப் பட்டத்தையும், பகையால் ராட்சதப் பட்டத்தையும் அடைந்த நம்மவர்களுக்கில்லை. சில காலமாக நமது குரங்குப் பட்டத்தை எடுத்துவிட்டுச் சூத்திரப் பட் டத்தைத் தந்தார் கள். அதை ஏற்றுக் கொண்டதனால், இக்கதியை அடைந்தோம். ஆதலால், இந்தப் பார்ப்பனருடைய யாகம் உயிர்களைப் பதைக்கக் கொல்லுகிற ஒரு சடங்கு. கருணை, இரக்கம் முதலிய யாகங்களுக்குத் தடையாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் போதித்து வந்த நமது மூதா தையர்களின் கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகுவோம். இவர்களின் தீச்செயல்களுக்கு உடந்தையாயிராத நமது மூதாதைகளை இராட்சதர் என்றும், பச்சை மாமிசமும் இரத்தமும்தான் அன்னோர்களின் உணவு என்றும் இவர்களது ஆபாசச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பது நமக்கு நம் மூதாதையரிடத்தில் வெறுப்பு உண்டுபண்ணும் படியான தந்திரமென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது பகைவர்களாகிய பார்ப்பனர்களின் வேதத்தால் நமக்கு ஒரு பயனும் இல்லாவிடினும், இவர்கள் நம்மைத் தடைபண்ணின ஒரே குற்றத்திற்காகவும், இத்தகைய வேதத்தின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும். அதை நமது பிள்ளைகள் அவசியம் கற்கவேண்டும். எத்தகைய தடை நேரிடினும் அதை எதிர்த்து நாம் கொண்ட கருமத்தை நிறைவேற்றுவோம். பயனற்ற விஷயங்களில் கூட இந்தப் பார்ப்பனரை எதிர்த்தும் நமது மூதாதைகளின் பழைய நல் லொழுக்கங்களைப் கைப்பற்றியும் ஒழுகினாலன்றி நாம் ஈடேறப்போவதில்லை.
மூன்றாவது அத்தியாயம்
சுருதி ஸ்மிருதிகளில் தருமம் என்ற பெயரால் சொல்லப்பட்டவைகளுள் வருண தருமம் கூறி முடித்தோம். ஏனைய தருமங்களைப் பற்றியும் சில கூறுகிறோம். அவற்றுள் விவாஹமாவது:
லோகேவ்ய வாயாமிஷமத்ய ஸேவா
நித்யாஸ்து ஜந்தோர் நஹிதத்ரசோதனா (பாகவதம்)
பொருள்: மைதுனம் (பெண் போகம்) மாமிசப் பக்ஷணம், கள் குடித்தல் இவை மனிதர்களுக்கு இயற்கைக் குணங்களாகையால், இவைகளைக் குறித்து விதி அவசியமில்லை.
தினந்தோறும் உண்ண வேண்டும் என்று விதித்தாலும், விதிக்காவிடினும் இயற்கையாகவே புசிப்பார்களன்றோ? ஆயினும், சில ஒழுங்குகள் செய்து ஒரு வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்பதைக் கருதி, மணவினையானது எட்டுவிதமென்று ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101220/news04.html

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-21

ஆசீர்வாதத்திலும் வேற்றுமை பாராட்ட வேண்டுமென்று பிரத்திய பிவாதே சூத்ரே என்ற சூத்திரத்தினால் வடமொழி இலக்கண ஆசிரிய ராகிய பாணினி என்பவர் விதித்திருக்கிறார். பரவித்தையைப் போதிக்கிற பகவத்கீதையிலும் இவ்வேற்றுமை காணப்படுகிறது.
யேபிஸ்யு பாபயோனய (கீதை. அத். 9 சுலோ. 32) என்று தொடங்கிய வாக்கியங்களாலும் மற்றும் சூத்தி ரர்களைப் பாவிகள் என்று சொல்லுகிற இடங்களையும் பாருங்கள். வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷியம் செய்ய வந்த சங்கராச்சாரியார், சூத்திரன் சந்நியாசத்திற்கும், சிரவணத்
1. சூத்திரனிடத்தில் பிராமணன் க்ஷேமம் விசாரிப்பது, நீ நோயில்லாமல் இருக்கிறாயா? என்று மட்டுமே. வேறு, குசலம், அனாமயமா, க்ஷேமமா? என்று கேட்கக்கூடாது. நோயில்லாமல் இருந்தாலல்லவோ தின ராத்திரியும் பார்ப்பனர்கட்கு வேலை செய்யலாம். இதுவே கருத்து.
திற்கும், ஞானத்திற்கும் உரியவனன்று என்கிற தனது பொறாமைக் கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு அபசூத்ராதிக்ரணத்தில்,
பர்ஹமசூத்திர - ச்ரவணாத்ய யனார்த்த
ப்ரதிஷேதாத் ஸ்ம்ருதேஸ்ச
(அ. 1 பாகம் 3, சூத்திரம் 38)
இந்தச் சூத்திரங்களின் பாஷியத்தில் மேற்கோளாக எடுத்துக்காட்டிய ஸ்மிருதி வாக்கியங்கள் வருமாறு:-
1அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரௌத்ர
புஜதுப்யாம் பூரயேத பூரயேத (கோதமதர்ம சூத்திரம்)
பொருள்: வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கிவிட வேண்டும்.
பத்யுஹவா ஏதத் ஸ்மசானம் வைசூத்ரஸ்த
ஸ்மாத் சூத்ரஸ் மீபே நாத்யேதவ்யம்
பொருள்: சூத்திரன் நடமாடுகிற இடம் சுடுகாடானதால், அவன் பக்கத்தில் வேதமோதலாகாது2
உச்சாரணே ஜிஹ்வாச்சேதோ தாரணே சரீரபேத:
பொருள்: சூத்திரன் வேதத்தை வாயினால் சொன்னால், நாக்கை அறுக்கவேண்டும். உணர்ந்து வைத்திருந்தால், நெஞ்சைப் பிளக்க வேண்டும்.
1. சூத்திரத்தில் அதஹ என்றும் பூரயேத பூரயேத என்றும் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது கோதமனுக்குச் சூத்திரர்களிடத்திலிருக்கிற பகையை வெளிப்படுத்துகிறது. இவ்விதம் பார்ப்பனன் இங்கிலீஷாவது பைபிளையாவது வாசித்தால், இவ்விதத் தண்டனையுண்டு என்று சொல்லுவதுடன், இந்திய நாட்டிலுள்ள எந்தப் பாஷையும் வாசிக்க வசதியும், இந்தக் கிறிஸ்தவ கவர்ன்மெண்டு கொடாவிடில், இப்பார்ப்பனர்க்கு எவ்வளவு வருத்தம் உண்டாகுமோ, அவ்வளவு வருத்தம் பாக்கியுள்ள அப்பிராஹ்மண சமூகத்திற்கு உண்டென்று நினைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறேன்.
2. ஆதலால்தான், அய்யங்கார் வீட்டுக்கு அய்யர் போனாலும், அய்யர் வீட்டுக்கு அப்பிராமணன் போனாலும் இவர்கள் குடியிருக் கும் தெருவுக்கு நாடார்கள், பறை யர்கள் வந்தாலும், மயானத்துக் கொப் பிட்டுச் சாணித் தண் ணீர் கொட்டுகிறார் கள். இது ஒரு பரம் பரை வழக்கம்.
நசூத்ராய மதிம் தத்யாத்
பொருள்: சூத்திரனுக்குப் பகுத்தறிவு உண்டாகும்படி யாதுஞ் செய்யலாகாது (யாது ஞான நூலும் கற்பிக்க லாகாது) இவை முதலியன.
பிரமாண வசனங்கள் இப்படியிருக்க, இக்காலத்தில் பார்ப்பனரல்லாதாரில் 1சிலர் சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டவர்களும், ஏனையோரும் பகுத்தறிவில்லாது சங்கராச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லித் திரிகின்றார்களேயெனில், இது இவர்களின் அறியாமையையும், இதனால் இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வாழ்ந்து வருவது பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையும் விளக்குகிறது. தங்களின் கட்டளைப்படி நடக்காத பார்ப்பனரல்லாதாரைத் தண்டிக்க, மனுவின் சட்டப்படி பார்ப்பனருக்கு உரிமை இருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் பீரங்கி முனையிலும், கத்தி முனையிலும் அது செல்லாது.
பார்ப்பனன் ஒருவன் எதிர்ப்பட்டதும் பார்ப்பனரல்லா தவர் எழுந்து வணங்குவதை இப்போதும் பார்க்கிறோம். இது பார்ப்பனரிடத்தில் தங்களுக்கிருக்கிற பேரன்பைப் பொறுத்தல்லவென்றும், வெகு நாள்களாகப் பார்ப்பனரால் துன்புறுத்தப்பட்டு, வழி வழியாக வந்த பயமே இதற்குக் காரணம் என்றும் அறியவேண்டும். இதைப்போலவே பார்ப்பனரல்லாதாருக்குள்ளேயே உயர்ந்த ஜாதியா னொருவனைக் கண்ட தாழ்ந்த ஜாதியானும் எழுந்து வணங்குவது பயத்தினாலேயாகும். இறந்துபோய் 2பிரேதங்களான பிறகுங்கூட இவ்வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. சூத்திர பிரேதத்தால் உண்டான துன்பம் வைசியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும் வைசியப் பிரேதத்தின் உபத்திரவம், க்ஷத்திரியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. 1. தென்னாட்டில் காவி கட்டியிருந்தாலும், வெள்ளை கட்டியிருந்தாலும், சூத்திரனைப் பதேசி, பண்டாரம் என்பர். இல்லறத்திலுள்ள பார்ப்பானைச் சாமி சாமியென்று அழைப்பது சகஜமாகிவிட்டது. வேதத்தில் கருமம், பக்தி, ஞானம் என்னும் முக்காண்டங்கள் உள்ளன. கரும காண்டத்தில் ஒரு சிறிதும் அதிகாரமில்லாதவர்கள் ஞான காண்டத்தைப் படிக்கவோ, சந்நியாசம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாதென்பதை மறந்து கதறுகின்றார்கள். இவர்களுக்கு நல்லுணர்வை இறைவன் அருள் புரிவானாக. -(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101219/news25.html

ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா?

பெரிய பலூனில் காற்று இறங்குது?

சென்னையில் நேற்று (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) அவர்கள் பேசியுள்ளார்.
2001 முதலே சி.பி.அய். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்ட நிலையில், ஊழல் களின் உண்மை முக்கியத்துவம், என்ற தலைப்பில் மேற்படி கூட்டத்தில் உரையாற்றினார் அருண் ஷோரி. பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சுமத்திப் பேசியதோடு, ஆ.இராசா வையும் குற்றம் சுமத்திப் பேசினார்.
அதில் மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்!
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பலூனில் எவ்வளவு காற்று இறங்கி விட்டது பார்த்தீர்களா?

(ஆதாரம் 19.12.2010 இந்து நாளேடு)
பார்ப்பன ஏடுகளின் பொய்ப் பிரச்சாரத்திரையை அருண்ஷோரி அய்யர்களே கிழிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா?
இதன்படி, (அருண்ஷோரி கூற்றுப் படி) 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே!
இதுதான் CAG என்ற மத்திய கணக்குத் தணிக்கையாளரின் துல்லி யக் கணக்குக்கு நற்சான்றிதழா?
இது மட்டுமல்ல, ஏற்கனவே, சி.பி.அய் தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் 2009இல் குறிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
வெறும் 22,000 கோடிதான்!

(ஆதாரம் 16.12.2010 இந்து நாளேடு)
இதன்படி, அவாள் பிரச்சார 1,76,000 கோடி பலூனில் இறங்கிய தொகை 1 லட்சத்து 54,000 கோடி எப்படி திடீரென போயிற்று?
இதிலிருந்து தெரியும் உண்மை- இந்தப் பொய்ப் பிரச்சாரத் தொகை தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பதுதானே!
இதைத்தான் CAG என்ற பெரிய தணிக்கை அதிகாரி-இழப்புத் தொகை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் (Debatable) என்று முடித்தார் போலும்!
எங்காவது கணக்கில் கட்டப் பஞ்சாயத்து உண்டா? உண்மை களைப் பலியாக்குகிற ஒருவர், பழிபோட்டு மக்கள் விழியை மறைக்க முயலுகிறார். ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!!
(இதைத் துண்டறிக்கையாகவும் அடித்து மக்களுக்கு வழங்குங்கள்
-ஆசிரியர்)

- http://www.viduthalai.periyar.org.in/20101219/news07.html

சனி, 18 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-20

எப்படியென்றால், அடிப்பதற்குக் கையேனும், கோலேனும் ஓங்கினால் கையை வெட்டுதல்; காலால் உதைக்க முயன்றால் காலை வாங்குதல்; ஒரே ஆசனத்தில் இருக்க விரும்பினால், பிருஷ்ட பாகத்தை அரிந்துவிடவோ, சூடுபோட்டு நாட்டை விட்டுத் துரத்தி விடவோ செய்தல்; எச்சில் உமிழ்ந்தால், உதடுகளைத் துண்டித்துவிடுதல்; பிராமணன் அருகிலிருக்க மலத்தையோ, மூத்திரத்தையோ விட்டால் அந்த அங்கங்களைத் துண்டித்து விடுதல்; தலைமயிர், தாடி, கழுத்து விருஷணம் (விரைக்கொட்டை) இந்த அங்கங்களைப் பற்றி இழுத்தால், கையை வெட்டுதல் -இவ்வகையான தண்டனைகள் விதிப்பதோடு, சூத்தி ரனைப் பிராமணன் துன்புறுத்தினால், சூத்திரன் சரீரத்தில் தோலைப் பிளந்தால், நூறுபொன் அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் (ஒருவகை நாணயம்) அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் அபராதமும் விதித்தல், எலும்புக்குக் கேடுவரின் நாட்டை விட்டுத் துரத்தல் முதலியன செய்யத்தக்கன.
இந்தியாவின் பழைய நற்காலம் நமக்கு ஏற்பட வேண்டும். அதன் பொருட்டு ஹோம்ரூல் வேண்டும் என்கிற திலகர் முதலிய தலைவர்களை ஆதரிக்கிற நம்மவர்கள மேற்குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஹோம்ரூல்வாதிகளின் அரசாட்சி மனுவின் அரசாட்சியே. மனுவின் ஆட்சியில் சூத்திரனுடைய நிலையை இன்னும் கேளுங்கள்.
1. நீதியானதால் அதனையே தருமச் சட்டம் என்று கூறுகின்றனர். ஆ! கொடுமை! சூத்திரனை எவ்விதத் துன்பங்களும் செய்யலாம். அதைப் பார்த்தும், கேட்டும் பொறுக்க முடியாத சூத்திரர்கள் யாதாகிலும் சொல்லவோ, தடுக்கவோ செய்தால், அதற்குள்ள தண்டனைகள் ஜனங் களுக்குத் தெரியும் பொருட்டு இங்குக் கூறினேன். இவ்வாறே ரோம் அரசாட்சி நடந்தபோது, யெஹூதிகளும் ரோமன் ஜனங்களும் கலந்து, அந்நாட்டுக் குடிகளை வதைத்து வந்தனர். அத்தருணத்தில் யேசு என்பவர் இந்தியாவில் கல்வி கற்றுத் திரும்பிச் சென்று ஆங்குப் புத்தமதம் போதித்த காரணத்தால், அவரையும் இக்கொடுங் கோல் சட்டமும், இச்சட்டத்தாருடைய மதமும் வேரோடழிய வேண்டியது.
சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;
தாஸ்யாயைவ ஹிஸ்ருஷ்டோஸௌப்ராஹ்
மணஸ்ய ஸ்வயம்புவா (மனு)
பொருள்: கூலி கொடுத்தாகிலும், இல்லாவிடிலும் சூத்திரனை வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே இவன் ஸ்வயம்பூ (பிரம்மன்) வினால் சிருஷ்டிக்கப்பட்டான். பின்னும்,
நஸ்வாமினா நிஸ்ருஷ்டோபி சூத்ரோதாஸ்யாத் பிமுச்யதே;
நிஸர்க்கஜம் ஹிதத்தஸ்ய கஸ்மாத்தஸ்மாத போஹதி (மனு)
பொருள்: எஜமான் விட்டுவிட்டாலும் சூத்திரனின் அடிமைத்தனம் அவனை விட்டொழியாது. இது 1இயற்கையானதால் எங்ஙனம் ஒழியும்?*
சக்தேனாபிஹி சூத்ரேண
நகார்யோதன ஸஞ்சய
சூத்ரேண தனமா ஸாத்ய
பராஹ்மணானேவ பாததே (மனு)
பொருள்: பொருளீட்டத் திறமையிருந்தாலும், சூத்திரன் அங்ஙனம் செய்யலாகாது. சூத்திரனுக்குப் பொருள் சேர்த்தால், பிராமணன் துன்புறுவான்.
1.இயற்கையென்று நூல் கூறினும், அடையாள மொன்றும் காணாததனால், எல்லோரும் ஒரேவித உரிமையைப் பெறத்தக்க மனிதர்களேயன்றிச் சூத்திர னென்று தனிப்பட்ட ஒருவகையினர் இல்லையென்பது திண்ணம். சமஸ்காரம் செய்து கொண்டால் யாவரும் துவிஜரே. இது சூத்திரனுக்குக் கூடாதாம்.
*. ஹே, பார்ப்பனரே! இன்னும் சில காலம் போக ஆங்கில அரசாட்சியார், கிறிஸ்தவர்கள் ஆனால் மட்டும் உத்தியோகமும் இங்கிலீஷ் படிப்பும் கொடுக்கப்படும் என்று விதிவெளிப்படுத்தி 7 கோடி ஜனங்கள் அவ்விதிப்படி உத்தியோகத்திற்கும், படிப்புக்கும் ஆசைப்பட்டுக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தபின், கிறிஸ்துவ மதத்திற்கு இனிமேல் இந்துக்களைச் சேர்ப்பதில்லை யென்று மற்றொரு ஆக்டை பாஸ் பண்ணினால், இந்த மனு உன்னையும் அப்படியே செய்துவிடும். யூரோப்பியன் பிராமணனும், யூரோஷியன் க்ஷத்திரியனும், நேட்டிவ் கிறிஸ்தவன் வைசியனும், இந்தியன் சூத்திரனுமாய் விடுவர்.
உச்சிஷ்ட மன்னன் தாதவ்யம், ஜீர்ணானி வஸனானிச;
புலறகாஸ் சைவதான்யானாம் ஜீர்ணாஸ்சைவ பரிச்சதா
பொருள்: சூத்திரனுக்கு எச்சிலும், கிழிந்துபோன பழைய ஆடையும், நல்ல தானியங்களை எடுத்துக்கொண்டு பதரும் வைக்கோலும் கொடுக்க வேண்டும். இத்தோடு நில்லாமல்
சூத்ரஸ்யது ஜூகுப்ஸிதம் (மனு)
காதில் விழும்போதே அருவருப்பை உண்டு பண்ணத்தக்க பெயர்தான் சூத்திரனுக்கு இடவேண்டும். ஒருவருக்கொருவர் க்ஷேமம் விசாரிப்பதிலும் வேற்றுமை யுண்டு.
ப்ராஹ்மணம் குசலம்ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மனாமயம்;வைச்ய க்ஷேமம் ஸமாகம்ய
சூத்ரமா ரோக்யமேவச (மனு)
பொருள்: குசலமா? அனாமயமா? க்ஷேமமா? ஆரோக்கியமா? 1(நோயில்லாமல் இருக்கிறாயா?) என்று முறையே பிராமணன் முதலிய வருணத்தினரை விசாரிக்கவேண்டும். - (தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101218/news07.html

வெள்ளி, 17 டிசம்பர், 2010

பக் 'தீ' யால் பக்தன் கட்டிய அபராதம்

பக் 'தீ' யால் பக்தன் கட்டிய அபராதம்
சென்னை, டிச.17- சென்னை சென்டிரல் அருகே ரயிலில் கற்பூரம் காட்டிய அய்யப்ப பக் தருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏ.சி. பெட்டியில் புகை வந்த தைத் தொடர்ந்து, ரயிலை பயணிகள் நிறுத் தியதால் பரபரப்பு ஏற் பட்டது.
சென்னை சென்டி ரலில் இருந்து திருவனந் தபுரத்திற்கு நேற்று முன் தினம் இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரம் மெயில் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் கிளம் பிய சற்று நிமிடத்தில், பி-1 ஏ.சி. பெட்டிக்குள் திடீரென புகை பரவி யது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள்.
ரயில் நின்ற காரணம் புரியாமல், என்னவோ.. ஏதோ.. என்று பயந்து, ரயிலில் இருந்த காவலர் களும், பயணச் சீட்டுப் பரிசோதகரும் சம்பந் தப்பட்ட பெட்டிக்கு ஓடிவந்தனர். அங்கு ஒரே புகை மூட்டமாக இருந் தது. இதனால், பெட் டியில் பயணிகள் அமர்ந் திருந்த ஒவ்வொரு கம் பார்ட்மெண்டாக சென்று ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது, 63 ஆம் எண் இருக்கையில் இருந்த பயணி, பய பக்தியுடன் அய்யப்ப சாமி படத்திற்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட் டிக் கொண்டிருந்தார். அவர் அய்யப்பன் கோவி லுக்கு மாலையும் அணிந் திருந்தார். அவர் ஏற்றிய கற்பூரத்தில் இருந்து வந்த புகைதான் ஏ.சி. பெட்டியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்த நபரி டம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவ ரது பெயர் பி.டி. பிள்ளை என்றும், சொந்த ஊர் சென்னை என்றும் கூறினார். எதற் காகக் கற்பூரம் ஏற்றினீர் கள் என்று காவல்துறை யினர் கேட்டபோது, ``ரயில் பயணம் இனிதாக அமைய வேண்டும்'' என் பதற்காக கற்பூரம் ஏற்றி அய்யப்பனை வழிபட் டேன் என்று தெரிவித் தார்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை எச் சரிக்கை செய்துவிட்டு சென்றுவிட்டனர். ரயி லும் 10 நிமிடம் தாமத மாக புறப்பட்டு சென் றது. ஆனால், அந்த பெட்டியில் இருந்த பயணச்சீட்டு பரிசோத கர், அந்த அய்யப்ப பக் தரை விடவில்லை. ரயி லில் கற்பூரம் ஏற்றியது குற்றம் என்று கூறி, ரூ.1000 அபராதம் விதித் தார்.
அந்த அய்யப்பப் பக்த ரும் வேறு வழியில்லா மல், அபராதத் தொகை யைக் கட்டினார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101217/news07.html

வியாழன், 16 டிசம்பர், 2010

ஆருத்ரா!

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்பற்றிச் சிறப்பிதழ்கள்; ஆன்மிகத்தைப் பரப்பி மக்களை மொட்டை அடிப்பதற்கென்றே தான் பல ஏடுகள் இருக்கின் றனவே!
அது என்ன ஆருத்ரா? மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் சிதம்பரத்தில் நடை பெறும் விழாவாம் இது. ஆருத்ரா அல்லது திருவாதிரை நட்சத் திரம் சிவனுக்குரியதாம். இந் நாளில் இரவு ஆரம்பித்து மறு நாள் காலைவரை அபிஷேகம் நடக்குமாம். (மூச்சுத் திணறப் போகிறது - ஜாக்கிரதை!)
மக்கள் மத்தியிலிருந்து பக்தி ஒரு சிறு நொடியும் அக லாமல், உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தெருப் புழுதியையாவது செய்து கொண்டே இருக்கவேண்டுமே!
மனிதன் தனக்குக் கற் பித்துக் கொண்டதையெல்லாம் கடவுளுக்கும் கற்பித்துவிட் டான்; காரணம் அந்தக் கடவு ளைக் கற்பித்ததே மனிதன் தானே!
பஞ்சப் பூதங்களுடன் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) சேர்த்து லிங்க வடிவத்தில் சிவனை வழிபடு கிறார்களாம். அதில் சிதம்பரம் நடராஜன் என்பவர் ஆகாய வடிவத்தில் இருக்கும் கடவுளாம்.
108 வகை நடனங்களில் கரை கண்டவராம். காளிக்கும் இவருக்கும் நடனப் போட்டி ஏற்பட்டதாம். காளி சற்றும் சளைக்காமல் ஆடினாளாம்.
ஆண்களுக்கே உரிய குயுக்திப் புத்தியால் இடது காலை தலைக்குமேல் தூக்கி ஆடிக் காட்டினாராம் நடராஜன்.
பெண்ணாகிய காளி காலைத் தலைக்குமேல் தூக்கி ஆபாசமாக ஆடமாட்டாள் அல்லவா! இந்தக் கீழ்த்தரமான ஆபாச நடவடிக்கையால் நட ராசன் நடனத்தில் வெற்றி பெற்றுவிட்டாராம். இப்படி அவர் ஆடியதற்குப் பெயர் ஊர்த்துவ தாண்டவமாம்!
இதுபோன்ற கேவலங் களுக்குத் தத்துவார்த்தம் கற்பித்து விடுவார்கள். அப் பொழுதுதான் மக்கள் சிந்திக்க மாட்டார்கள். இதிலும் அப்படித் தான்; நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு அருள்பாலிப்பது போலவே, வானுலகத்தவர்க்கும், அருள் செய்வதற்கென்றே ஊர்த் துவத் தாண்டவம் ஏற்பட்டதாம்.
இந்த நடராஜன் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்த போது அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு-ஹல் முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப் படுத்தி பாணினி ரிஷி சமஸ் கிருதத்தை உண்டாக்கினான். (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி - கல்கி, 25.6.1972) தெய்வ மொழி என்பது இதுதானோ - என்னே சாமர்த்தியமான புளுகு!
மொழி எப்படி தோன்று கிறது என்ற அறிவியல் சிந் தனைக்கு இது எதிரானது அல்லவா!
எல்லாம் பார்ப்பனர்களின் கைசரக்கே - ஆருத்ரா தரி சனம் என்கிறபோது அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நினைவிற்கு வருகிறது - இதோ ஒரு காட்சி!
வெள்ளையன்: சாமி தானுங்க எசமான் இருக்கு.
மாயேந்திரன்: இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா, கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்கச் செய்கிறார்) நிற்கிறான் வெள்ளை. பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார் மாயேந் திரன் (வெள்ளை காலை ஊன் றுகிறான்). காலைத் தூக்கச் சொல்லுகிறார் மாயேந்திரன். (மறுபடியும் காலைத் தூக்கி சிறிது நேரம் நின்றுவிட்டு காலை ஊன்றுகிறான்) ஏய்! ஏண்டா ஊன்றுன? தூக்குடா காலை என்கிறார் மாயேந்திரன்!
வெள்ளை: கால் வலிக்கு துங்க எசமான்
மாயேந்திரன்: ஏண்டா, ரெண்டு நிமிஷம் நிக்கறதுக்கே கால் வலிக்குதுன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாமே இருக்குதடா?
வெள்ளை: எங்கே எசமான்?
மாயேந்திரன்: சிதம்பரத் திலே!
வெள்ளை: அது கல்லு எசமான்!
பக்தன் வாயாலேயே அண்ணா இப்படி சொல்ல வைத்தாரே - அதுதான் அண்ணா!
ஆருத்ரா தரிசனத்துக் காகக் காத்துக் கிடக்கும் பக்தர்கள் சிந்திப்பார்களாக!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101216/news16.html

சொர்க்கவாசலின் மூடத்தனத்தைப் பாரீர்!

சொர்க்கவாசலின் மூடத்தனத்தைப் பாரீர்!
மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!
சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

- http://www.viduthalai.periyar.org.in/20101216/news10.html

ஞானசூரியன - தொடர்-19

மகாராஷ்டிர தேசத்தைச் சிவாஜிக்கு முன் துலுக்கர்கள் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்து வேத சாஸ்திரங் களைக் கற்றறிந்த அவ்வூர்ப் பண்டிதர்களுள் நாற்பதுபேர் பிராமணரல்லாதவர்கள். துலுக்க ஆட்சி சிவாஜியின் ஆட்சியாக மாறினதும், பார்ப்பனர்கள் மனுவின் சட்டத்தைக் சிவாஜிக்கு எடுத்துக்காட்டி, மேற்சொன்ன நாற்பதின்மரையும்
1. குமாரிலப்பட்டரும், திருஞான சம்பந்தரும், மாணிக்க வாசகருமென்று ஏட்டில் காணப்படுகிறது. இவர்கள் சமண புத்தர்களைப்பற்றிச் சொல்லும் கெடுதிகளைக் கேட்டால், இக்கெடுதிக்காக அப்புத்தர்களையும் சமணர்களையும் கொலை புரிந்தது பெரும் பிசகென்று சொல்லத்தகும்.
கொல்வித்தனர். இந்தத் துன்பத்தைப் பொறுக்க முடியாத அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு பேர்கள் அரசனாகிய சிவாஜியிடம் போய் முறையிடவே, அந்த எழுநூறு பேர்களையும் இரக்கம் காட்டாமல் 1வெட்டியெறியச் செய்தனர்.
அன்றியும் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வருங்கால், ஸஹஸ்ர சீர்ஷா புருஷ என்ற வேத வாக்கியத்திற்குப் பொருள் தெரிவிக்கும் படி பார்ப் பனரல்லாதானொருவன் அரசனது குருவைக் கேட்கவும், இரக்க மென்பது சிறிதுமில்லாத பார்ப்பனராகிய குரு வானவர், அரசனிடம் சென்று ஒரு முகூர்த்த காலத்திற்குச் 2செங்கோலைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுப் பெற்றுக்கொண்டு தன்னிடம் வேதத்திற்குப் பொருள் கேட்டவனை வரவழைத்து, அவனது ஆசனத்துவார வழியாக ஒரு கழுவூசியை உச்சிக்குமேல் பத்து அங்குலம் எழும்பியிருக்கும்படி ஏற்றி, இந்தச் சூத்திரப்பயல் வேதத்திற்குப் பொருள் கேட்டான். சூத்திரர்களுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையேயாகும் என்று கூறியதையும், இதைப்போல் நிகழ்ந்த பற்பல கொடுமை களையும் பரம்பரையாகத் தெரிந்து வைத்திருக்கிற அந்தந்த நாட்டுக் குடிகள் இன்னும் நினைத்து வருந்துகின்றார்கள்.
இவ்விதமாகப் பார்ப்பனர்களின் கொடுஞ்செயல்களில் சிலவற்றையும் நாதர்ஷா, மகமது கஜனி, தைமூர் முதலிய துலுக்க அரசர்களின் கொடுஞ் செய்கைகளையும் ஒப் பிட்டுப் பார்த்தால், பார்ப்பனக் கொடுமையின் முன்னால், துலுக்கக் கொடுமைகள் சூரியனுக்குமுன் சிறு மின்மினி போல் தெரியுமென் பதில் சந்தேகமில்லை. சிறிது காலத்திற்குமுன் நம் நாட்டில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய ரவுலட் சட்டமும் இதற்கு முன் எம்மாத்திரம்? சூத்திரர் களை ஒடுக்கும் பொருட்டுப் பார்ப்பனர்கள் கையாண்டு வந்த ரவுலட் சட்டத்தை சனாதன தருமம் என்ற பெயரால் மறைத்து வைத்துத் தருணத்திற்கேற்றவாறு கையாண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாகிய இக்காலத்தில் உண்மை சிறிதாக வெளிப்பட்டு வரவே, தயானந்த சரஸ்வதி யென்ற பிராமணத் துறவி வெளியில் வந்து, அய்யர் முன்னோர் கள் வேதங்களினுடையவும் ஸ்மிருதி களினுடையவும் உண்மைக் கருத்துகளை 1. இத்தகைய உத்தம நீதி மனு அதருமச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பேராசையை மனத்தில வைத்துக்கொண்டல்லவா ஹோம்ரூல் வேண்டுமென்று கதறுகிறார்கள்? இச் சூதினை ஒரு சிறிதும் உணராத நம்மவர் களும் சேர்ந்து கொண்டு கூத்தாடுகி றார்களே!
2. அரசுரிமை, அதாவது அரசனது அதிகாரம்.
உணரத்தக்க ஆற்றல் படைத்தவர் களென்று. அவைகளை உணர்ந்தவன் நான் ஒருவனே என்று கூறி ஜனங்களை ஏமாற்றும்படியாகப் பொருள்களை வேதத் திற்குக் கற்பித்து ஆரிய சமாஜம் என்கிற பெயரால் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சகோதரர்களே! அன்னாரின் உபதேச மொழிகளைக் கேட்டு மோசம் போகவேண்டாம்.
பின்னும்,
யேனகேன சிதங்கேன
ஹிம்ஸ்யாச் சேச்ரேஷ்ட மந்த்யஜ;
சேத்தவ்யம் தத்த தேவாஸ்யதன்
மனோரனுசாஸனம்
பாணிமுத்தமய தண்டம்வா
பாணிச் சேதனமர்ஹதி;
பாதேன ப்ரஹரன் கோபத்
பாதஸ்யச் சேதமர் ஹதி.
ஸஹாஸன மபிப்ரேப்ஸு ருத்க்ரிஷ்ட்டஸ்யா
பக்ரிஷ்டஜ;
கட்யாம் க்ருதாங்கோ நிர்வாஸ்ய:
ஸ்பிசம்வாஸ்யா பகர்த்தயேத்.
அவநிஷ்டீபிதோ தர்ப்பாத்
த்வா வோஷ்டௌ கேதயேந்த்ருப;
அவமூத்ரயதோ மேட்ரமவமர்
சயதோ குதம்.
கேசேஷுக்ருஹ்ணதோ ஹஸ்தௌ
சேதயேதவிசாரயன்;
பாதயோர் தாடி காயாம்ச
க்ரீவாயாம் வ்ருஷணேஹுச
த்வக்பேதக: சதம் தண்ட்யோ
லோஹிதஸ்ய சதர்சக;
மாமஸபேத்தாது ஷண்ணிஷ்கான்
ப்ரவாஸ்யஸத் வஸதி பேதக (மனு)
பொருள்: சூத்திரன் உயர்குலத்தோனை எந்தெந்த அவயவங்களில்
துன்புறுத்துகிறானோ அவனது அந்தந்த அவயவங்களை வெட்டி எறிந்திட வேண்டும். இது மனுவின் 1கட்டளையாகும்.
- (தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101216/news08.html

செய்தியும் சிந்தனையும்!

செய்தியும் சிந்தனையும்!
கடவுளுக்குக் குளிர் எடுக்கிறதா?
மனிதன்தான் கடவுளைப் படைத்தான். மனிதன் தன் வாழ்வில் நடக்கும் அத்தனையையும் தன்னால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்மீதும் திணித்தான்.
கல்யாணம் கட்டிக் கொள்வது, பிள்ளை பெற்றுக் கொள்வது என்பது போன்றவையல்லாமல் தம்மிடம் உள்ள எல்லாப் பழக்கவழக்கங்களையும் கூட தனது படைப்பான கடவுளிடத்திலும் குடியமர்த்தி விட்டான்.
ராபர்ட் ஜி இங்கர்சால் கடவுள்பற்றிக் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

மனிதன் கடவுளை தன்னைச் சுற்றியுள்ள சாதனங்களைக் கொண்டு படைத்திருக்கிறான். அனேகமாக அவற்றைத் தன்னைப் போலவே படைத்து, அவைகளுக்குக் கால், கைகளையும், கண், வாய், மூக்கு, செவிகளையும் தந்திருக்கிறான். ஒவ்வொரு தேசத்தினரும் தங்கள் தெய்வங்களையும், பிசாசுகளையும், தங்கள் மொழியைப் பேசும் படியாகவும், இன்னும் வரலாறு, பூகோளம், வானியல் இன்னோரன்ன காரணா காரியங்கள் சம்பந்தமான விஷயங்களில் தங்களுடைய தவறுதலான எண்ணங்களையே அவைகள் வாயிலிருந்து வரும்படியாகவும் செய்திருக்கின்றனர். எந்தக் கடவுளேனும் தன்னைப் படைத்த மக்களைவிட ஒருபடி அதிபுத்திசாலித்தனமாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. ஆப்பிரிக்கத் தேசத்து நீக்ரோவர் தங்கள் தெய்வங்களை இருண்டு கருத்த தேகமும், வளைந்து சுருண்டமயிரும் உடையனவாகச் செய்திருக்கின்றனர்.
மங்கோலியர் அவைகளுக்கு மஞ்சள் நிறத்தையும், கருத்ததும் - பாதாம் பருப்புப் போன்றதுமான கண்களையும் கொடுத்திருக்கின்றனர் - சீதளமிகுந்த வட தேசத் தெய்வங்களோ தங்கள் முகங்களைக் கம்பளியால் போர்த்திக் கொண்டுள்ளன. உஷ்ணப் பிரதேசங்களிலோ தெய்வங்கள் அம்மணமாகக் காட்சியளிக்கின்றன. இவைகளையே சாதாரண மக்கள் உண்மையெனத் தெய்வங்களாக நம்பி, இப்பொம்மைகளுக்கும், சிலைகளுக்கும் - தங்கள் பலிகளையும், ஆராதனைகளையும், வணக்கத்தையும் செலுத்துகின்றனர் என்கிறார் இங்கர்சால்.
இந்தப் பீடிகை எதற்கு? காரணம் இல்லாமலா கருப்புச் சட்டைகள் தன் பேனாவைத் திறக்கும்?
கடவுள் சிலைகளுக்குக் கம்பளி ஆடை எனும் தலைப்பில் ஒரு செய்தி:
ஒரிசா மாநிலம் பூரி நகரில் தற்போது கடுமையான குளிர் வாட்டுகிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள ஜெகநாதர், பாலபத்ரா, தேவி சுபத்ரா ஆகிய சாமி சிலைகளுக்கு மாலை நேரத்தில் கம்பளி ஆடைகளை கோவில் நிருவாகத்தினர் அணிவிக்கிறார்கள்.
அதைத் தவிர, ஒவ்வொரு நாளும் சுவாமி சிலைகளுக்கு ஒவ்வொரு நிறத்தில் ஆடைகள் அணிவிக்கிறார்கள். அந்தந்த நாளுக்கு உரிய நட்சத்திரப் பலனுக்கு ஏற்ப வண்ண ஆடைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
புதன் கிழமை நீல நிறத்திலும், வியாழக்கிழமை மஞ்சள் நிறத்திலும், வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்திலும், சனிக்கிழமை கறுப்பு நிறத்திலும் கம்பளிகள் அணிவிக்கப்படுகின்றன.
கடவுள் சிலைகளுக்கு வண்ணக் கம்பளி ஆடைகளை அணிவிப்பதால், பக்தர்களும் அதே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கோயிலுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.
(தினத்தந்தி, 15.12.2010, பக்கம் 8)
பக்தர்களே, பக்தர்களே! இப்பொழுது கர்னல் ஜி இங்கர்சால் கூறிய கருத்தோடு இணைத்துப் பாருங்கள் - உங்களுக்குக்கூட ஒரு உண்மை விளங்கிவிடும்.
மனிதன் - அவன் சுற்றியுள்ளவைகள், இவைதான் கடவுள் உருவங்களிடத்திலும் காணப்படுவதால், இந்தக் கடவுள்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை சமாச்சாரம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதா - இல்லையா?
கடவுள் மனிதனைக் கற்பிக்கவில்லை; மனிதன்தான் தன்னைப் போலவே கடவுளைக் கற்பித்து இருக்கிறான் என்பதை இன்னும் கூடவா விளங்கிக் கொள்ள முடியவில்லை?
இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது.
கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுள் குளிரைத் தாங்கமாட்டார் என்று கருதி கடவுளுக்குக் கம்பளி ஆடையைப் போர்த்தி உள்ளார்களே - இதன் பொருள் என்ன?
ஒரு குளிரைக்கூடத் தாங்கமாட்டாதவன்தான் கடவுளா? இவன்தான் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும் பலவானா - பகவானா?
கடவுளைக் கற்பித்தவன் மனிதன்தான். அவன் முட்டாளாக இருந்த காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சமாச்சாரம் என்று தந்தை பெரியார் கூறியதை ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள் - உங்களின் மூடத்தன முகமூடி கழன்று விழுந்துவிடும்!
- கருஞ்சட்டை -

- http://www.viduthalai.periyar.org.in/20101216/news22.html

புதன், 15 டிசம்பர், 2010

ஞானசூரியன் - தொடர்-18

ஞானசூரியன் - தொடர்-18
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைய விரும்புவார் களாயின், முதன் முதல் பார்ப்பனர்கள் நம்மைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தையும், அவர்களின் சமயத்தையும் உதறித்தள்ள வேண்டும். தங்களது முன்னேற்ற வழியை மறித்து வைத்திருக்கிற இப்பெருங் கற்பாறைகளைப் பார்ப்பனரல்லாதார் ஒன்று சேர்ந்து உடைத்துப் பொடி பண்ணிவிட வேண்டும் (இதற்காகவே சாம்மியவாதம் தோன்றியது)
முற்காலத்தில் பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர் செய்யும் கொடுமைக்கு ஏதேனும் திருப்பிச் செய்தால், தண்டனை விதித்து வந்த வேடிக்கையையுங் கேளுங்கள்.
சதம் ப்ராஹ்மணமாக்ருச்ய,
க்ஷத்ரியோ தண்டமர்ஹதி:
வைச்ய: ஸார்த்தசதம் சைவ
சூத்ரஸ்து வதமர்ஹதி (மனு)
இதன் பொருள்: பிராமணனது மனம் நோகும்படி க்ஷத்திரியன் ஏதேனும் மொழிந்தால் அவனுக்கு நூறு பொன்னும், வைசியன் அங்ஙனம் செய்தால், அவனுக்கு நூற்றைம்பது பொன்னும் அபராதம் விதிக்க வேண்டும். பிராமணர்களைத் திட்டுகிற சூத்திரனைக் கொன்றுவிட வேண்டும்.
மற்றும்,
ஆர்யஸ்த்ர்ய பிகமனே லிங்கோத்தார:
ஸ்வஹ ரணஞ்ச (கோதமதர்மசூத்திரம்)
பொருள்: மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால், அவனது பொருளைக் கொள்ளையிடுவதோடு, ஆண் குறியையும் அறுத்துவிட வேண்டும். எதிர்மறையாக,
ஸ்த்ரீ ரத்தம் துஷ்குலாதபி
சூத்திரனது அழகிய பெண்ணை த்விஜர்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் பிரமாணமுண்டு. மற்றும், ஏகஜாதிர் த்விஜாதீம்ஸ்து
வாசா தாருணயாக்ஷிபன்
ஜிஹ்வாயா: ப்ராப் நுயாச்தேசம்
ஜகன் யப்ரபவோ ஹிஸ: (மனு)
பொருள்: மூன்று வருணத்தினரில் யாரையேனும் சூத்திரன் திட்டினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். ஏனெனில், அவன் தாழ்ந்த அங்கத்தினின்றும் பிறந்தவனன்றோ?
முற்காலங்களில் இந்தச் சட்டத்தின்படி பலரைக் கொன்றும், நாக்கறுத்தும் பயமுறுத்தியதன் வாயிலாகவே இன்றும் இவர்களைப் பார்த்தவுடன் பயந்து எழுந்து நின்று, சுவாமி என வணங்குவது 1ப்ராஹ்மணா யமகாதக என்ற பழமொழியும் இதற்குச் சான்றாம். பார்ப்பனர்கள் மலையாளத்தில் செய்த தீச்செயல்கள் அளவிறந்தன. மனுஸ்மிருதியின் படிக்குள்ள உரிமை போதாதென்று பேராசையினால், சங்கரஸ்மிருதி எனத் தங்களுக்கு மட்டும் ஒரு ஸ்மிருதி எழுதி வைத்துக் கொண்டு, அங்குள்ள நாயர் பிரபுக்களை மயக்கி, அவர் களைத் தங்களின் துணைக்கருவியாக வைத்துக்கொண்டு ஏழைகளைத் துன் புறுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த நாயர் பிரபுக்களையா வது ஒழுங்காக வாழச் செய்தார் களா? 2ஊராண்மை முதலிய அய்ந்து ஆண்மைகளும், கோன்மையும் எங்களுக்குச் சொந்தம். இந்த நாட்டிற்கே நாங்கள்தான் தலைவர்கள் என்று வீரம் பேசுகிற இப்பிரபுக்களின் குடும்ப ஒழுக்கங்களைப் பற்றிக் கேட்கிற மறுநாட்டார் யார்தான் அருவருப்படைய மாட்டார்கள்?
இக்காலத்தில் நம்மவர்கள் அடைந்து வருகிற கஷ்டங்களுக் கெல்லாம் முதற்காரணம், புத்த பகவானுடைய கொள்கைகளைக் கைநழுவ விட்டதோடு, கருணையே உருவாய் விளங்கிய அம்மதத் துறவிகளையும் இரக்க மின்றிக் கொலை புரிந்ததுவேயாகும். புத்தமதக் கொள்கை களையும் துறவிகளையும் நாசம் பண்ணிய பல பார்ப்பனர் களுள், சங்கராச்சாரியார் 1. எமனைப் போல் உயிர்களை வதைக்கிறவர்கள்.
2. ஊராண்மை, நகராண்மை, வேளாண்மை, ஆசாண்மை, நாட்டாண்மை என்பதுடன் கோன்மை என்பது அரசுரிமையாம்.
1முதன்மையானவராவார். இவர்களின் சூழ்ச்சியாகிய வஞ்சகச் செய்கையினால் வருந்தும் இக்காலமே நமது நற்காலமென்றறிய வேண்டும்.
கும்பகோணக் கிருதம் பாபம்
கும்பகோணே வினஸ்யதி
கும்பகோணத்தில் செய்த பாபம் கும்பகோணத்திலேயே ஒழியும் என்றவாறு நமதுநாட்டில் நடந்த இந்தச் செயலுக்கு நமது நாட்டிலேயே பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். (பார்ப்பனச் சமயத்தையும் அறவே ஒழித்து, விடுதலை யடைவதே தக்க பிராயச்சித்தமாம்)
சூத்திரனும், தண்டனையும்
நாம ஜாதிக்ரஹம் த்வேஷாமபித்ரோ
ஹேணகுர்வத:
நிக்ஷேப்யோ யோமய: சங்கு
ஜ்வலன்னாஸ்யே தசாங்குலம்:
தர்மோபதேசம் தர்ப்பேண
விப்ராணா மஸ்யகுர்வத:
தப்தமாஸே சயேத்தைலம்
வக்த்ரே ஸ்ரோத்ரே சபார்த்திவ: (மனு)
பொருள்: பிராமணனுடைய பெயரோ, அவனது குலப்பெயரோ கேட்கிற சூத்திரனுடைய வாயில் பத்து அங்குல அளவுள்ள இரும்பாணியைப் பழுக்கக் காய்ச்சிச் செலுத்த வேண்டும். பிராமணனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கிற சூத்திரனுடைய காதுகளில் எண்ணெயைக் காய்ச்சிவிட வேண்டும்.
இத்தகைய தண்டனைகள் முற்காலத்தில் ஆங்காங்கு நடந்திருக்கின்றன. (தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101215/news29.html

செவ்வாய், 14 டிசம்பர், 2010

எச்சரிக்கை!

எச்சரிக்கை!
கல்கி போன்ற பார்ப் பன இதழ்கள் - நம் மக்கள் கல்வியில் வளர்ந்து வருவ தைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில் சில கீழறுப்பு வேலைகளைச் செய்வதாகத் தெரிகிறது.
பொதுவாகப் பக்தியைப் பரப்புவதேகூட தன்னம்பிக் கையைப் பறிமுதல் செய் வதற்குத்தான். நம்மால் முடியும் என்ற உறுதியைத் தகர்ப்பதுதான் அதன் உள் நோக்கமாகும். கடவுளை நம்பினால் போதும் - உழைக்க வேண்டாம் - கேட்டது கிடைக்கும் என்பது உருப்படுவதற்குச் சொல்லப்படும் வழியா?
சென்டிமென்ட் என்ற தலைப்பில் மக்கள் மத்தி யில் மூட நம்பிக்கைக் களை களைத் திணிப்பதில் அது இறங்கி இருப்பதன் நோக் கம் மிகவும் ஆபத்தானது.
பள்ளியிறுதித் தேர் வுக்கு முதல் நாள்வரை சுமார் 15 நாள்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக் கப்பட்டு படுத்த படுக்கை யில் இருந்தேன். படித்த பாடங்கள் எல்லாம் ஞாபக மில்லை. பள்ளியிறுதித் தேர்வு எழுத நான் புறப் பட்டபோது, காஞ்சிபுரத்தில் குடியிருக்கும் சித்தி விநாய கரைத் தரிசித்துவிட்டு பரீட்சை எழுதப் போகச் சொன்னார் என் அப்பா. நானும் அவ்வாறே சென் றேன். தேர்வு முடிவு வெளி வந்த அன்று முதலில் அவரை தரிசித்த பின்னர் தான் நாளிதழையும் பார்த் தேன். தேர்வில் வெற்றி பெற்றிருந்தேன் - என்று பொள்ளாச்சியிலிருந்து ஒரு மாணவர் எழுதியதாகக் கடிதம் ஒன்றை கல்கியில் வெளியிடப்பட்டது.
இப்படி வெளியிடப்படும் ஒவ்வொரு கடிதத்திற்கும் 50 ரூபாய் பரிசாம்.
கடுகளவு புத்தி உள்ள எவருக்கும் தெரியும்- படிக் காமல், முயற்சிகளை மேற் கொள்ளாமல் தேர்வில் வெற்றி பெற்று விடமுடி யாது.
அதுவும் இந்தப் பைய னுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து படித்ததெல் லாம் மறந்து போய்விட்ட தாம். சித்தி விநாயகரைக் கும்பிட்டவுடன் மறந்ததெல் லாம் நினைவுக்கு வந்து விட்டதா?
கேழ்வரகில் நெய் வடி கிறதாம் கையில் கிடைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கள், நிரப்பிக் கொண்டு போக லாம் என்று சொல்லும் ஏமாற்றுக்காரனுக்கும், அதை நம்பிக்கொண்டு பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் கேனையனுக்கும் - இந்தப் பக்திப் பிரச்சார ஆசாமி களுக்கும் என்ன வித்தி யாசம்?
எந்தப் பார்ப்பான் வீட் டுப் பிள்ளையும் இதனைச் செய்யப் போவதில்லை. அவங்கெல்லாம் சமத்தா படிச்சுண்டு வருவா.
இதை நம்பி நம் இனத் துப் பிள்ளைகள் படிப்பைக் கோட்டை விட்டு விடக் கூடாது. நம் மக்கள் படிக் காமல் பிள்ளையாரைக் கும்பிட்டு உருப்படாமல் போகவேண்டும் என்ற சூழ்ச்சிகூட இதில் இருக்க லாம் - எச்சரிக்கை!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101214/news01.html

ஞானசூரியன் - தொடர்-17

ஞானசூரியன் - தொடர்-17
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
அரசும், அமைச்சும்
அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அருவருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம்தான் நமக்குத் தேவை என்று கூறு கிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!
இது முறையன்று. நமது நிலைமை 1சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ் யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.
அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:
ஜாதிமாத்ரோபஜீவீவா காமம்ஸ்யாத் ப்ராஹ் மணப்ருவ;
1. கல்வியிலும், மக்கள் சமூகத்திலும், சமயத்திலும் (கொள்கையிலும்) கோவில்களிலும் சமத்துவமாகிய சீர்திருத்தம் ஏற்படாத வரையிலும் ராஜாங்கச் சீர்திருத்தம் மெல்ல மெல்லப் பெறுவதற்காக வேண்டிய வேலை செய்வதே ஜஸ்டிஸ் கட்சியாகும். தமிழர் கட்சி (சாம்மியவாத கட்சி) அதையே கேட்கிறது.
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன (மனு)
பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான். இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயிருந்தால், அந்நாடு சீர்கெடு மென்பதற்கு மனு கூறியதாவது:-
யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம் நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்
பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாகயிருக்கி றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருகுக்கம் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து 1வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்தநாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும். கல்வியை விரும்புகிற சூத்திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத்தக்க வனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லிலேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமை யில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கி யிருக்கின்றன.
ந சூத்திர ராஜயே நிவஸேந் நதார்மிக ஜனாவ்ருதே;
1. பார்பனர்களாகிய ஆரியர்களை என்க.
ந பாஷண்டி ஜனாக்ராந்தே
நாபஸ்ருஷடேந்த்ய ஜேந்ருபே (மனு)
பொருள்: சூத்திரன் ஆட்சிபுரிகிற நாட்டிலும் குடியிருக்கலாகாது.
இக்கருத்தின்படி பார்ப்பனரல்லாதார் ஆட்சிபுரியும் நாட்டில் பார்ப்பனர்கள் குடியிருக்கலாகாதே? இக்குறை தீர்க்கும் பொருட்டு அரசர்களை 2ஹிரண்ய கருப்பம் என்ற விதியினால் க்ஷத்திரியர்களாகச் செய்துகொள்ள வேண்டியது என்கிற தந்திரத்தையும் செய்தார்கள்; செய்து கொண்டு வருகிறார்கள். இது திருவாங்கூர் சமஸ் தானத்தில் இப்போதும் நடைபெற்று வருகிறது. இவ்விதம் க்ஷத்திரியத் தன்மையை அடைந்த அரசனைத் தங்கள் சுயநலத்தைச் சாதிக்க ஒரு கருவியாகவும் வைத்துக் கொள்ளுகிறார்கள். ஓணான் பெருத்தது உடும்பு, உடும்பு பெருத்தது முதலை என்று மலையாளத் தில் ஒரு பழமொழியுண்டு. அதைப்போலச் செய்கை. க்ஷத்திரியர் களும் தங்களை உயர்ந்தோர்களென்றும், சூத்திரர்கள் இயற்கையாகவே தாழ்ந்தவர்களாகையால், மனுஸ்மிருதிப் படி அவர்களை முன்னுக்கு வரவொட்டாமல் ஒடுக்குவதே தங்கள் கடமை என்றும் நினைக்கிறார்கள். இத்தகைய செயற்கைச் சனியன்கள் இல்லாவிடில், நம்மினத்தவர் என்கிற அபிமானத்திலேனும் சற்று இரக்கங் காட்டுவார் களல்லவா? இவ்வாறு க்ஷத்திரியர்கள் என்று சொல்லி, அவர்களையும் ஏமாற்றிப் பணத்தையும் பறித்து வருகிறார்கள். இச்சூதினை இன்னம் உணராமலிருப்பதே பெரும் வியப்பு!
ஆனால், இங்கு ஒரு அய்யம் நிகழுகின்றது. இவர்களின் நீதி அனுபவத்திற்குப் பொருந்தவில்லை. அய்ரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சைனா முதலிய பிற நாடுகளில் பிராமணர்களும் அவர்களின் சமயமும் கிடையாது. அங்ஙனமிருந்தும், அந்நாடுகள் முன்னேற்ற மடைந்தும், பிராமணர்கள் இருக்கிற இந்நாட்டின் குடிகளும் செல்வமும், அறிவும் வரவரத் தாழ்வடைந்து வருவது என்ன காரணம் பற்றியோ? இதைப் பற்றிப் 2. தங்கத்தால் பசுவின் உருவைச் செய்து, அதன் வயிற்றுள் புகுந்து வெளிப்படுதல் இரணிய கருப்பம். இத்தங்கப் பசுவைப் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டுமாம். (திருவனந்தபுரம் முதலிய) சில ராஜாக்களைப் பட்டத்திற்கு வருமளவும் சூத்திர ஜாதியாகவேயிருந்து பட்டத்திற்கு வந்தவுடன், ஷத்திரிய ஜன்மமெடுக்கச் செய்கிறது என்பது பொருள்.
பிராமணக் கடவுளையோ,மனுவையோ நேரில் கண்டுதான் கேட்க வேண்டும்!
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101214/news13.html

திங்கள், 13 டிசம்பர், 2010

ஞானசூரியன் - தொடர்-16

ஞானசூரியன் - தொடர்-16
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010
1. திருநாவுக்கரசரால் புகழ்ந்தோதப் பெற்ற சிவபக்தன் இவன். இராவணன் மனைவி மண்டோதரியை மணி வாசகர் புகழ்ந்துள்ளார். இவர் தாய் சிவநேசமுடைய மாது. இவன் தங்கை தாடகை அன்பினால் அணியும் பூமாலைக் காகத் திருப்பனந்தாளில் எழுந்தருளிய சிவக்கொழுந்து தலை சாய்ந்ததும், இதனை நிமிரச் செய்வதற்குக் குங்கிலியக்கலய நாயனார் வந்து, தலைசிறந்து விளங்கிய பத்திமையால் நிமிரச் செய்தவருமாவார். விபீஷணன் விஷ்ணு பக்தன். இத்தகைய குடும்பத்தைக் கொடியரென்பது சூதே.
இந்த ஸ்ரீராமன் ஏனைய அரசர்களைப்போல ஒருவனா கவே இருந் திருப்பான். ஆயினும், பார்ப்பனர்களின் சொற் களைக் கொஞ்சமேனும் அலட்சியம் செய்யாமல் இவன் நடந்துகொண்டு வந்திருப்பவன். 1புத்தருடைய கொள்கை களைப்பற்றி உலகத்துக்கு நன்மையே செய்து வந்த அசோகச் சக்கரவர்த்தியை உலகமெல்லாம் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு மனம் பொறாத பார்ப்பனர்கள், எங்களுக்கும் ஓர் அரசனிருந்தான்; அவன் பெயர் இராமன்; அவனும் உலக உபகாரி என்று பலவித கற்பனாலங்காரங் களுடன் புகழ்ந்து இராமாயணக் கதையைப் பாடி, இப்போது சக்தி வாய்ந்த நவீன நாவல்களில் கற்பித்துக் கூறுவது போல இராமாயணத்தை அரங்கேற்றி, இந்தியா முழுவதும் நம்மவர்களை ஏமாற்றிவிட்டார்கள். புத்த பகவானிடத்தும், அவரைப் பின்பற்றி ஒழுகிவந்த நம் ஆன்றோர்களிடத்தும், இவர்களுக்கு இருந்த பொறாமையை இராமாயணத்தி னின்று அறியலாம்.
யாதாஹி சௌர: ஸ்யததாஹி புத்த:
ததாகதம் நாஸ்திகமத்ரவித்தி(வால்மீகி இராமாயணம்)
பொருள்: திருடனும், புத்தனும் ஒப்பாவார். இங்குத் ததாகதனே (புத்தனை) நாஸ்திகன் என்று அறியற்பாலது என்ற வசனங்களால் கண்டு கொள்க.
கேளுங்கள்! மன, மொழி, மெய்களால் எவ்வுயிருக்கும் தீங்கு நேரா முறையைக் கற்பித்து, அதன்படி ஒழுகிக் காட்டிய பெரியாரும், தனூவித்ய சூத்திரத்தில் மோட்சத்தைப் பற்றிக் கூறுமிடத்துப் பரஹ்ம ஸஹவ்யத்தய (பிரமத்தில் இரண்டறக் கலத்தல்) என்று கூறியவருமான பகவான் புத்தரைத் திருடனுக் கொப்பாகவும், அவரது கொள்கை களை நாஸ்திகக் கொள்கை யாகவும் கூறும் பார்ப்பனர்கள் வேறு என்னதான் கூறவும், செய்யவும் துணிய மாட்டார்கள்? அவரை அப்படிச்சொன்னதனால் அல்லவோ இன்றைக்கு இந்நாவலந் தீவிலிருக்கும் ஜனங்கள் சேற்றில் புகுந்த பசுவைப் போலுள்ள தன்மையை அடைந்தது?
சூத்திரனும், அவன் பொருளும்
பிராமணன் சூத்திரன் பொருளைக் கொள்ளை அடிக்குமாறு அரசனுக்குக் கட்டளையிடுவதோடு, கொள்ளையிடத் தங்களுக்கு உரிமை
1. எப்பவோ, நிரூபிக்க இயலாத ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லும் இராமாயணத்தில், சாத்திர வரலாற்றின்படி கணக்கிடப்பட்ட கொஞ்ச காலத்திற்கு முன்னே யிருந்த புத்தருடைய பெயர் வருவதால், புத்தருடைய காலத்திற்குப் பிறகு கற்பிக்கப்பட்ட நூலே அது என்றறியவும். அப்படியே யோக வாசிஷ்டமும் (ஞான வசிஷ்டம்).
யுண்டு என்று பர்த்ரு ஹார்யதனோஹிஸ (சூத்திரன் அடிமையானதால் அவனது பொருளைத் தலைவனாகிய பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்) என்ற வாக்கியத் தினால் உறுதிப் படுத்தினார்கள். இதுதான் சனாதன தர்மம் (மனுமுறை யாட்சி). இத்தகைய வசனங்களால் பார்ப்பனர்களே அரசர்களாகவும், க்ஷத்திரியர்கள் அவர்களின் ஏவலாட் களாகவும் இருந்து வந்தார்கள் என்பது வெளிப்படை. இவர் களின் கருத்துக்கு இசையாதவர் களை எவ்வகையிலும் அரசு இழக்கும்படியே செய்வது 1வழக்கம்.
இன்னும் இச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிற 19 கோடி மக்களும் உருவத்தில் மனிதர்களாகயிருந்தாலும், சமய விஷயத்தில் ஒருவகையான உரிமையும் இல்லாதவர் களாய் விலங்கினங்கள் போல வருந்தி வாட்ட முறுகிறார்கள்.
கடவுள் இங்ஙனம் ஓரவஞ்சனையாக நடத்துவாரா? சூத்திரனுக்கு ஓர் அதிகாரமும் இல்லையே; இது நியாயமா? என்று கேட்டால், இதற்குச சில பார்ப்பனர்கள், ஈசுவரன் கருணாமூர்த்தி; அவருக்குச் சூத்திரர் களிடத்திலும் கருணை அதிகம். ஏனெனில், பிராமணனுக்குப் பணிவிடை செய்வது ஒன்றினாலேயே சூத்திரர்கள முன்னேற்றம் அடைவார்கள் என்று தரும நூல் கூறுகிறதே; என்ன சுகம்? பிராமணனுக்குச் சம்ஸ்காரம், கல்வி, ஞானம், பொருளீட்டல், ஜபம், தவம், ஈசுவர சை, கவர்ன்மெண்டு உத்தியோகம் முதலிய எவ்வளவு தொல்லைகள் இருக் கின்றன. எனவே, பிராமணக் கடவுளின் அருள் திறம்! மனுவின் வாக்கியமும் இதே கருத்தில இருக்கிறது.
ஏகமேவது சூத்திரஸ்ய
ப்ரபு: கர்மஸமாதிசத்!
எதேஷாமேவ வர்ணானாம்
சுஸ்ரூஷா மனஸூயயா
பொருள்: பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பின்னும் விஸ்ரப்தம் ப்ராஹ்மண: சூத்ராத்
த்ரவ்யோ பாதானமாசரேத்;
1.மைசூரில் நவாப்புக்கு மந்திரியாக இருந்த பூரணையன் சரித்திரம் சான்று பகரும், தமிழ் நாடும் இத் தொல்லைக் குட்பட்டதே!
நஹிதஸ்யாஸ்தி கிஞ்சித்
ஸ்வம் பர்த்ளுஹார்யதனோஹிச
பொருள்: சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் சிறி தேனுமில்லை.
இத்தகைய வாக்கியங்களை ஒரு சிறிதுகூட மீறாமல் நேபாளத்தில் இப்போது அரசியல் நடைபெற்று வருகிற தென்று முன்னரே கூறியுள்ளோம். இதற்கு முன் அரசு புரிந்துவந்த க்ஷத்திரியர் ஆளுகையும் இத்தன்மையதே யாகும் என்று அறியத்தக்கது. -(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101213/news32.html

World Atheist Conference (WAC) is convened by Dravidar Kazhagam, Atheist Centre and The Rationalists’ Forum on 7,8 & 9 January 2011 at Trichy, Tamil Nadu, India. The theme of the conference is ‘Atheism – An Alternative Culture’

World Atheist Conference (WAC) is convened by Dravidar Kazhagam, Atheist Centre and The Rationalists’ Forum on 7,8 & 9 January 2011 at Trichy, Tamil Nadu, India. The theme of the conference is ‘Atheism – An Alternative Culture’

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஞானசூரியன்தொடர்-15

ஞானசூரியன - தொடர -15
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010

ஆனால், உதவி புரிந்தோர்களையாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டார்களா? இல்லை. அவர்களையும் 1குரங்குகள் ஆயினும், பக்தியுள்ளவைகள் என்றும் இழிவாகவே பேசினார்கள். இராமனால் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் மனிதர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆயினும் இத்தருணத்திற்கேற்ற ஒரு கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இது இராமாயணம், உத்தரகாண்டத்தில் சீதையைக் காட்டில் கொண்டுபோய் விட்ட பிறகு, அஸ்வமேத யாகஞ் செய்யப்போகும் தருணத்தில் நடந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளையினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங் கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழி களைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்போது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணுகிறான். அவனைக் கொல்லாமலிருந்த குற்றத்தால், இக்குழந்தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில் அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று,
1. குரங்குகள் இப்போது பேசுவதாகத் தெரிந்தால், அப்போது பேசி இருந்திருக்கும். ஆனதால், தென்னாட்டிலுள்ளாரை இழிவு படுத்தவே இப்படிக் கூறியதென்க. அனுமான் 9 வியாகரணம் வாசித்த குரங்காம். அவர் தோளில் இராமனும், இலட்சுமணனும் சவாரி செய்ய இடம் கண்டனர். அந்தத் துறவியைப் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்? என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை, உண்மை நிலை ஒன்றினையே விரும்புகிறேன் என்று விடைபகர, இந்த ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லும், பாவமாகாது. எதிர் மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்து போன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால் பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-
ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய
ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:
ராமஸ்ய காத்ரமஸி ............................................
பொருள்: ஓ! வலக் கையே, இறந்துபோன 1பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ?
இவ்வாறு அந்தத் 2துறவியைக் கொன்றவுடனேயே சிறுவன் உயிர்த்தெழுந்து விட்டதாயும், இராமாயணத்தில் எழுதியிருப்பதை யாவரும் வெளிப்படையாயறிந்ததே. என்னே இராமனின் கருணையிருந்தவாறு! இவ்வரும் பெரும் காரியஞ் செய்த அந்த ராமன், சாட்சாத் விஷ்ணு வின் அவதாரமாம். இக்காலத்திலும் இராமனைப் போன்ற அரசன் இருந்தால், சூத்திரர்கள் கதி என்ன?
இராமாயணம் கதை எழுதியதன் முக்கியக் கருத்து இக்கதைக்குள் அடங்கியிருக்கிறது. தேவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி விஷ்ணு 1. பிராமணரல்லாதாருடைய நாசம் பார்ப்பனரின் முன்னேற்றம் என்று பொருள்.
2. அழகுடைய மகளிரையும், ரத்தினத்தையும், ஞானத்தையும் சண்டாளனிடத்திலிருந்து பெறலாமென்ற ஸ்மிருதி வசனத்துக்கு முற்றிலும் மாறுபட்டதோடு, வேதத்தில் ரைக்வர் என்ற இருடி தோல் பதனிடுஞ் ஜாதியன்றோ? சஙகராச்சாரியரை எதிரே நின்று கேட்டவன் புலையனன்றோ? இவைகளைக் கவனித்தால், இராமா யணம் முழுப் பொய் என்பது விளங்கும்.
இராமனாக அவதரித்து 1இராவணன் முதலிய இராட்சதர்களை ஒடுக்கி உலகத்திற்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்தாரென்றும், குடிகளை மகிழ்விக்கும் பொருட்டுப் பதிவிரதையான தம் மனைவியையும் காட்டிற்கு ஓட்டிவிட்டார் என்றும் மற்றும் பலவிதமாகப் புகழ்ந்து கூறி, நம்மவர்களுக்கு அவரிடம் ஒரு விதமான அன்பை உண்டு பண்ணிய பிறகு மேற்சொன்னவாறு சூத்திரத் துறவியைக் கொன்ற கதையும் சொல்லிவிடுகிறார்கள். இதைப்பற்றி யாதேனும் கேள்விகள் கேட்டால், அது திரேதாயுகம்; அக்காலத்தில சூத்திரன் தவம் பண்ணக்கூடாது. இது கலியுகம் பிராமணர்கள் கெட்டுப்போனார்கள். சூத்திரர்கள் தவம் பண்ணுகிறார்கள். இது யுகதருமம் என்று சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள். உண்மையாகச் சொல்லுமிடத்து இவ்வஞ்சகர்கள் சொல்லும் கலியுகமாவது, கிருதயுக மாவது கிடையாது. இந்த உண்மையை. ஸதாம் ஸத்யுக; ஸாக்ஷாத் ஸர்வதை வாஸதாம் கலி
பொருள்: நல்லோர்களுக்கு எக்காலத்துங் கிருதயுகமும், தீயவர்களுக்கு எப்போதும் கலியுகமுமாம் என்கிற வாக்கியத்தினால் அறியக் கிடக்கின்றது.
இந்த இராமாயணக் கதையானது, சூத்திரர்கள் ஒரு குற்றமில்லாமல், மறுமையிலேனும் நற்கதியடையலா மென்று காட்டில் சென்று தவம் பண்ணிக் கொண்டிருந் தாலும், அத்தவத்திற்கு ஆதாரமாகிய உடலை ஒழித்துவிட வேண்டும் என்று ஏனைய அரசர்களுக்கும் போதிப்பதா யிருக்கின்றதன்றோ? இதனால் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்படுகிற மற்ற சுயமான ஜாதியார் களை, என்றென்றைக்கும் எவ்வழியிலும் முன்னேற வொட்டாமல் தடுக்கவேண்டுமென்ற தீய எண்ணம் பார்ப்பன ஜனங்களுக்கு இருந்து வருகிறதை வெள்ளிடை மலைபோலக் காணக் கிடக்கிறதன்றோ? உண்ட வீட்டுக்கே இரண்டகம் புரியும் வஞ்சக ஜனங்களின் சுயநலத்தை மட்டுங்கோரி, அவர்கள் சொல்லுகிற வழியே ஒத்துக் கொண்டு நடக்கிற அரசனே க்ஷத்திரியன் என்று சொல் லியிருக்கிறார்கள்.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101212/news02.html

வியாழன், 9 டிசம்பர், 2010

உலக மயமாகிறார் பெரியார்! - தமிழர் தலைவருக்கு பால் கர்ட்ஸ் வாழ்த்து

உலக மயமாகிறார் பெரியார்!
ஜாதியற்ற ஒரு நிலையை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே உருவாக்க
பெரியார் கொள்கைகளைப் பரப்பிட முடிவு
தமிழர் தலைவருக்கு பால் கர்ட்ஸ் வாழ்த்து

வாஷிங்டன், டிச. 8- தந்தை பெரியார் கொள்கைகளை அமெரிக்காவில் பரப்பிடவும், அமெரிக்காவாழ் இந்தியர் களிடையே ஜாதிகள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும் அமெரிக்காவில் கூடிய அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். பெரியார் இயக்கத்தின் கொள்கைகளை எடுத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் பிரச்சாரம் செய்யவும், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ஜாதிகள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும், அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் டி.சி.நகரில் கடந்த 2010 டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற உலக அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்தின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டாக்டர் சோம. இளங்கோவன்
இக்கூட்டத்தில் சிகாகோ பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், திரு. அரசு செல்லையா, மற்றும் பேராசிரியர் என். இன்னையா ஆகியோர் சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளாக இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், திருமதி சோம இளங்கோவன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட திருக்குறள் செய்தியைப் பரப்பவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி அறிவியலாளர் டாக்டர் ஸ்டூவர்ட் ஜோர்டான் தலைமை தாங்கி நடத் தினார்.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டங்கள்பற்றி முழுமையாக இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. குழந்தைகளுக்கு ஒழுக்கநெறிக் கல்வியை எவ்வாறு போதிப்பது என்ற பொருளை ஃப்ளோரிடா மாகாணத்தின் தம்பாவில் நடைபெற உள்ள முதல் மாநாட்டில் எடுத்துக் கொண்டு விவாதித்து முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இந்த மாநாட்டிற்கு இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து நாடு களில் இருந்தும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் அழைக்கப்படு வார்கள். இந்த புதிய நிறுவனத் தின் புதிய இணையதளம் பற்றியும், நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் எதிர் காலத் திட்டங்களுக்கான நிதிஅம்சங்கள் பற்றியும், ஜேக்பெல்ட், ஜெஸ்ஸி, டோனி பெல்ட் ஆகியோர் சோதனைகள் மூலம் எடுத்துக் கூறி விளக்கினார்கள்.
பேராசிரியர் பால் கர்ட்ஸ்

இந்த இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிதியினைத் திரட்டுவதற்கான பல்வேறு வழிகளை பேராசிரியர் பால் கர்ட்ஸ் அவர்கள் கண்டுபிடித்துக் கூறினார்.
இக்கூட்டத்தின் பல்வேறுபட்ட நிலைகளில் மேற் கொள்ளப்பட்ட விவாதங்களில் டாக்டர் சோம. இளங் கோவன், திரு. அரசு செல்லையா மற்றும் பேராசிரியர் என். இன்னையா ஆகியோர் தீவிரமாகப் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
மதச்சார்பற்ற மனிதநேயக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊடக, அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தலைவர்கள் ஆகி யோருடன் தொடர்பு கொள்வது பற்றி இந்த நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்புக்குப் பொறுப்பாக உள்ள நாதன் புப் என்பவர் விரிவாக விளக்கிக் கூறினார்.
இந்த புதிய அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்திய மறுமலர்ச்சி நிறுவனத்தின் பி.டி.சர்மா மற்றும் ஆசாம் பாஞ்சோலி ஆகி யோரின் வாழ்த்துச் செய்தி களை இக்கூட்டத்தில் டாக்டர் என். இன்னையா தெரிவித்தார்.
தீவிர மனிதநேய சங் கத்தின் சார்பில் இந்தப் புதிய நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப் பம் தெரிவித்து வினோத் ஜெயின் அனுப்பிய செய்தி யும் இக்கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.
இவ்வாறு இந்தப் புதிய நிறுவனத்துடன் பல்வேறு அமைப்புகள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளதைக் குறித்து பேராசிரியர் பால்கர்ட்ஸ், டாக்டர் ஸ்டூவர்ட் ஜோர்டான், திருமதி டோனி பெட்ட் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர்.
தமிழர் தலைவருக்கு வாழ்த்து
அனைத்துலக பகுத்தறிவாளர் கழகம், அனைத்துலக பகுத்தறிவு மற்றும் மனிதநேயக் கழகம் ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை இப்புதிய அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்தின் இணைய தளத்துடன் இணைக்க ஜேக் பெல்ட் உறுதியளித்தார்.
பெரியார் அமைப்பு இந்தப் புதிய நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டது பற்றி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்ட பேராசிரியர் பால் கர்ட்ஸ் அவர்கள் இக்கூட்டத்தின்மூலம் தனது வாழ்த்து களை டாக்டர் கி.வீரமணி அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101208/news02.html

புதன், 8 டிசம்பர், 2010

ஞானசூரியன் - தொடர்ச்சி - 13

ஞானசூரியன்

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010

1. மலையாளத்தில் இடைக்காலத்தில் அந்நாட்டிலுள்ள சிற்றரசர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தத னாலும், அக்காலத்தில் அரசர்கள் பிராமணன் பொருள் நீங்கலாக ஏனையோர் பொருள்களைக் கொள்ளையிட்டு வந்ததனாலும், கொள்ளைக்காரர்களுக்குப் பயந்து நாயர்கள் பிராமணர்களிடம் ஒப்படைக்க இடமாயிற்றென்றும், அதன் காரணமாகவே நம்பூதிரிகள் பிரபுக்களானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
2. இந்த முறையினைக் கையாண்ட ஆரியர்களுடைய சூழ்ச்சியினாலேயே தமிழ்நாடு முடியுடைய மூவேந்தர் களையும் இழந்ததென்று அறிய வேண்டும்.
விஷமேகாகினம் ஹந்தி
ப்ரஹ்மஸ்வம் புத்ர பௌத்ரகம்
பொருள்: விஷமானது அதையுட்கொண்ட ஒருவனை மட்டும் கொல்லுவதால், அது விஷமன்று. பிராமணனுடைய பொருளே விஷம். ஏனென்றால், (பிரஹ்மஸ்வம்) பிராமண னுடைய பொருள்களைக் கைப்பற்றியவனுடைய கால் வழிகளையும் (சந்ததிகள்) வேரோடு நாசம் பண்ணிவிடு கிறது.
பிராமணனும், கொலைக்குற்றமும்
கொலைபுரிந்த பார்ப்பனன் அடையத்தக்க தண்டனையைப் பற்றி மனு இங்ஙனம் கூறுகின்றார்.
1மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்டா
ப்ராஹ்மணானாம் விதீயதே
இதரேஷாம்து, வர்ணானாமதண்ட:
ப்ராணாந்தி கோபவேத
பொருள்: கொலைத் தொழில் புரிந்த மற்ற வருணத் தார்களைத் தூக்கிலிட வேண்டும். பிராமணன் இத்தகைய குற்றம் புரிவானாயின், அவனது தலைமயிரை மொட்டை யடித்தலே தண்டனையாகும். என்னே! மனுவின் நீதி. இதை உணர்ந்தவர்களுக்குச் சூத்திரன் செத்தால் மயிர் போச்சு என்ற பார்ப்பனக் கூற்று வியப்பைத் தரமாட்டாது. இத்தகைய வாக்கியங்கள் பலவுள; விரிக்கிற் பெருகும்.
க்ஷத்திரியன் முதலிய மூன்று வருணத்தினரின் தர்மம்
பசூனாம் ரக்ஷணம்
தானமிஜ்யாத்யயன மேவச
வ்ணிக்பதம் குஸீதஞ்ச வைஸ்ய
ஸ்ய க்ருஷீமேவச! (மனு)
பொருள்: யாகம் செய்தல், கற்றல், தானம் கொடுத்தல், பசுக்களைக் காத்தல், பயிரிடுதல், வியாபாரம் செய்தல் இவைகளும் வைசியனது தருமமாம். இந்தக் கருத்தையே இரண்டு சுலோகங்களால் யாக்ஞவல்கியர் கூறுகிறார்.
இஜ்யாத்யயன தானானி
வைஸ்யஸ்ய க்ஷத்திரியஸ்யச;
ப்ரதிக்ர ஹோதிகோ விப்ரேயா
ஜனாத்யாபனேததா,
ப்ரதானம் க்ஷத்திரியே கர்ம
ப்ரஜானாம் பரிபாலனம்;
குஸுதக் குருஷி வாணிஜ்யம்
பசுபால்யம் விச; ஸ்ம்ருதம்
இந்தச் சுலோகங்களால் மக்கள் முன்னேற்ற வழியில் க்ஷத்திரிய, வைசியர்களுக்கும் சிற்சில உதவிகளைச் செய்திருக்கிறதாக ஏற்படுகிறது. இக்காலத்து இந்நாட்டில் வசிப்பவர்களை அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நாட்டுக் கிறிஸ்தவர், இந்தியர் என நான்கு வகையாகப் பிரிக்க லாம். இவர்களுள் அய்ரோப்பியன் முதன்மையானவன் ஆவன். இரண்டா வது படியிலிருக்கிற ஆங்கிலோ இந்தி யன் அய்ரோப்பி யனைவிடத் தாழ்ந்தவன். ஆயினும், தந்தைக்கும், மகனுக்கும் இருக்கிற சம்பந்தம் இவ்விருவர்களுக் குள்ளிருப்பதால், அடுத்த படியில் எண்ணப்படுகிறான். நாட்டுக் கிறிஸ்தவனுக்கும், அய்ரோப்பியனுக்கும் இத் தகைய சம்பந்தம் இல்லாதிருந்தாலும் ஒரே சமயத்தைத் தழுவி நடப்பவர்களாதலால், சகோதரத் தன்மை ஏற்பட்டு மூன்றாவதாக நடத்தப்படுகிறான். நான்காவதாகச் சொன்ன இந்தியனுக்கும் இம்மூவர்களுக்கும் ஒரு வகையிலும் சம்பந்தமில்லை. ஆனதால், இந்துக்களின் பிரமாண நூற்படி பூமிதேவ குலத்திலுதித்த வேதிய னையுங்கூடக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்றும், பாவியென்றுங்கூறி நாயினுந் தாழ்ந்த நிலையில் பண்ணு கிறார்கள். இந்துக்களின் ஜாதிப் பிரிவினையும் இவ்வாறே யாகும். மூன்று வருணத்தார்க்குள்ளும் சிற்சில வேற்றுமை கள் காணப்படினும் ஒரே சமயத்தினரால் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்களேயாவர். இதனாலேயே இமமூன்று வருணத் தினக்கும் பொதுவாகவும் பிராமணனுக்கு மட்டும் பொதுவிலும், சிறப்பிலும் (துவிஜாதி) இருபிறப்பாளர் என்கிற பட்டப்பெயர் உண்டாயிற்று. நான்காவது வருணத் தினர் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தினருக்கும், இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாததனால் அவர்களைத் தாழ்வாக நடத்தி வந்தார்கள்; நடத்தியும் வருகிறார்கள். ஆனால், ஆங்கிலேயனால் தாழ்ந்தவனாகக் கருதப்படும் ஒரு பார்ப்பனன் தன்னைப் பற்றி எங்ஙனம் நான் உயர்குலத்தோன்; பெருந்தன்மை வாய்ந்தவன் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதைப் போல, வஞ்சகம் பார்ப்பனர்களால் நான்காவது வருணத் தினர் என்று இழிவாகக் கருதப்படும் நம்மவர்களும், உயர்ந்த எண்ணத்துடன், தங்களை எண்ணிக்கொள்ளவும், தன் மதிப்பைக் காத்துக் கொள்ளவும் உரிமையுள்ள வர்களேயாவர். இத்தகைய நான்காவது வருணத்தினரின் தொகை பத்தொன்பது கோடி என்று முன்னரே கூறியுள்ளோம். இவர்களில் தமிழ் நாட்டினர் தவிர, ஏனைய நாட்டினர் இன்னும் அடிமைகளாகவே காலங்கழிக் கிறார்கள். அந்தோ!
தமிழ் நாடென்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இன்னும் சில மொழிகள் வழங்குகின்ற தென்னாடு என்று அறியவேண்டும். இந் நாடுகளை ஆரியர், திராவிட நாடு என்று சொல்லுகிறார்கள்.
இங்கு பிராமணர்களைத் தவிர்த்து 1துவிஜாதிகள் இல்லாதிருப்பதே இந்த நன்மைக்குக் காரணம். வடநாட்டில் மூன்று வருணத்தாரும் சேர்ந்து, சூத்திரர் என்கின்ற நான்காவது வருணத்தினரை எக்காலத்தும் துன்புறுத்தி வருவதால், அவர்கள் இதுகாறும் எத்துறையிலும் முன் னேற்றம் அடைய முடியாது வருந்துகின்றனர். நான்காவது வருணத்தினர்க்கு இக்காலத்தில் ஏதேனும் நன்மை ஏற்பட்டிருக்குமானால், அது ஆங்கில அரசரின் கருணை யால் என்றறியவேண்டும். தென்னாட்டில் சூத்திரர்களுக் குண்டான அபிவிருத்தி போல், வடநாட்டுச் சூத்திரர் களுக்கு நூற்றிலொரு பங்காவது உண்டாக வில்லை. இந்த ஆங்கில அரசாட்சியிலும் கூட இதற்குக் காரணம் அங்கு நான்கு ஜாதி முறையாக உள்ளதனாலேயே.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101208/news10.html

செவ்வாய், 7 டிசம்பர், 2010

10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

யாதொரு பலனும்...
நமது நாட்டில் ஏதாவது ஒரு துறையில் மூட நம்பிக்கைக்கு அனுமதியும், அதைக் காப்பாற்ற நிர்ப்பந்தமும் இருக்கும்வரை குழப்ப நிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டுதான் வரும். அதற்காக விசனப் படுவதில் யாதொரு பலனும் உண்டாகப் போவதில்லை.
குடிஅரசு 4.5.1930
10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
மதுரையில் கடந்த ஞாயிறன்று (5.12.2010) நடைபெற்ற தென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு முக்கிய தீர்மானம் வருமாறு:
தொலைத்தொடர்புத் துறையில் ஊழல் என்று கூறி, இதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தி இரு வாரங் களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை நடக்க விடாமல், வாக்களித்த மக்களுக்காக நாடாளுமன்றங்களில் கருத்து களையும், கோரிக்கைகளையும், விவாதங்களையும் நடத்து வதற்கு மாறாக, நாடாளுமன்றங்களையே நடத்தவிடாமல் சண்டித்தனம் செய்து மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது, மக்கள் நாயக அமைப்பு முறைக்குப் பெரும் கேடும், இழுக்கும் என்று இம்மாநாடு திடமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
இப்படி நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் தடுக்கும் நிலையில், உறுப்பினர்களுக்கான படிகளோடு, சம்பளத்தை யும் நிறுத்தவேண்டும் என்று, குடிமக்கள் என்ற முறையில் மத்திய அரசையும், நாடாளுமன்ற இரு அவைத் தலைவர் களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினைபற்றிய விவாதத்தை எழுப்பும் வகையிலும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை 10.12.2010 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானம் என்பது ஏதோ திராவிடர் கழகம் ஒரு கட்சிக் கண்ணோட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானமாகக் கருத முடியாது.
பொதுமக்களின் பரவலான கருத்தினை உள்ளடக்கித்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால், பொதுநலனில் கொண்ட அக்கறையின் காரணமாக திராவிடர் கழகம் கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது என்று கருதலாம்.
நாடாளுமன்றம் நடைபெறவேண்டுமானால், நிமிடம் ஒன்றுக்கு ரூ.23,083 செலவாகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.1.23 கோடி செலவாகிறது என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து குளிர்காலக் கூட்டத் தொடர் 18 ஆவது நாளாக நேற்றுவரை முடக்கப்பட்டுவிட்டது. இதனால் குடிமக்களின் வரிப் பணம் எந்த அளவுக்கு கரியாக்கப்படுகிறது என்பது முக்கியமானதாகும்.
மக்களின் பிரதிநிதிகள் அவர்களுக்கான அவைகளில் தங்கள் கருத்துகளை எடுத்து வைக்கலாம்; குற்றச்சாற்றுகளை முன்வைக்கலாம் - விரிவான விவாதங்களை நடத்தலாம். அதனை விட்டுவிட்டு அவைகளையே நடத்த விடக்கூடாது என்ற மூர்க்கத்தனத்தில் ஈடுபடுகிறார்கள்; அவைத் தலைவர் களை முற்றுகையிடுகிறார்கள் என்றால் இது என்ன மக்கள் நாயகம்?
இன்னும் சொல்லப்போனால், தாங்கள் விரும்புவது நடக்கவில்லை என்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் ஒருவகையான வன்முறை வெறியாட்டம் அல்லாமல் வேறு என்னவாம்?
2010 ஜூலையில் விலைவாசிகள் உயர்வு குறித்துப் பிரச் சினைகளை எழுப்பி நாடாளுமன்ற அவையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று அப்பொழுது கூறப்பட்டது. தொடர்ந்து அவைகள் முடக்கப் பட்டதால் - அதுதான் சந்தர்ப்பம் என்று அந்தச் சட்டம் மீண்டும் ஊறுகாய் ஜாடிக்குள் சென்றுவிட்டது.
இப்பொழுதும் பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிறுத்தப்படும் மோசமான ஒரு நிலையை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. வாக்காளர்கள் அவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தார்மீகமான சினம் நாளும் கூர்மை பெற்றுதான் வருகிறது என்பதை எதிர்க்கட்சியினர் உணர்ந்து கொள்ளா விட்டால், அதன் பலனை எதிர்காலத்தில் வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.
விவாதத்துக்குத் தயார் என்று ஆளும் கட்சித் தரப்பில் வெளிப்படையாகச் சொல்லும்போது, அதனை ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வராததன் மூலம் தெரிவது என்ன?
அவர்கள் பக்கம் வலுவான காரணங்கள், நியாயங்கள் இல்லை - எனவே விவாதம் நடத்த அஞ்சுகின்றனர் என்று தானே பொருள்படும்?
இன்றைக்கு ஊழலோ ஊழல் என்று ஊது சங்கெடுத்து முழங்குபவர்கள் ஆட்சியில் - குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் எத்தனை எத்தனை ஊழல்கள்? அப்பொழுதெல்லாம் இப் பொழுது இவர்கள் முன்வைக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமனம் செய்திருந்தால் இவர்கள் உத்தமர்கள்தான்; அக்மார்க் ஜனநாயகவாதிகள்தான் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பார்வை, எதிர்க்கட்சி யாகி விட்டால் இன்னொரு பார்வை என்றால், இதுபற்றி வாக்காளப் பெருமக்கள் சிந்திக்கமாட்டார்களா?
இடதுசாரிகளை நினைத்தால் நகைச்சுவையாகவும் இருக்கிறது; இன்னொரு பக்கத்தில் வேதனையாகவும் இருக்கிறது.
டிசம்பர் 6 - என்பது அயோத்தியில் பா.ஜ.க. சங் பரிவார்க் கூட்டம் பாபர் மசூதியை இடித்த நாள் (1992). அந்த நாளில் காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்றத்தில் அப்பிரச்சினை குறித்துக் குரல் கொடுத்த நேரத்தில் இடதுசாரிகள் பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி குரல் கொடுக்கிறார்கள். இடதுசாரிகளின் நிழலில் பா.ஜ.க.வினர் பதுங்குவதை என்னவென்று சொல்லுவது?
எல்லாவற்றையும் அம்பலப்படுத்த வரும் 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட கழகத் தோழர்களே ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

-http://viduthalai.periyar.org.in/20101207/news16.html

ஞானசூரியன்-12

ஞானசூரியன்
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010
இதன் பொருள்: தேவர்களையும், பிதிர்களையும் மகிழ் விக்கவும், தருமத்தைக் காக்கவும் எண்ணிய பிரம்மதேவன் கடுந்தவமியற்றிப் பிராமணர்களைச் சிருஷ்டித்தான். பிராமணர்கள் வேதம் படித்தலே ஒழுக்கமாகவுடைய வர்களும் (அசையும் பொருள், அசையாப் பொருள் என இருவகைப்படும்) இவ்வுலகிற்கெல்லாம் தலைவர்களுமா வார்கள்.
பிரம்ஹஸ்ருஷ்டி என்பது பிராமண சிருஷ்டி. பிராமண மதம் சிரவுத ஸ்மார்த்த தருமம், வைஷம் மியவாதம் என்ற பல பெயர்களுடைய ஒரே சொல்லையே உணர்த்தும். ப்ரஹ்மம் வைப்ராஹ்மண (பிரம்மனே பிராமணன்) என்கிற சதபத ப்ராம்மண (வேதம்) வாக்கியமும், ஸ்மானார்த்தாவேதென ப்ரஹ்ம சப்தோ ப்ராஹ்மண சப்தஸ்ச பிரமன், பிராமணன் இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தும் என்கிற வியாகரண மஹாபாஷிய வசனமும், இவை போன்ற வேறு பல வசனங்களும் இதற்கு உதாரணங்களாம். இவ்விதம் இருக்க இவர்களுக்கு அடிமைகளாயிருக்கும் 19 கோடி மனிதர்கள் எங்ஙனம் முன்னேற முடியும்? இந்தப் பிரம்ம சிருஷ்டி வலையினின்றும் தப்பித்துக்கொண்டு பலரும் முன்னேற்றத்தை அடைந்து சுகமாக வாழ்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ஆகையால், பார்ப்பன சமய வலையை அறுத்தெறிந்து சுகமாக வாழ்ந்து வர விரும்புவீர்களானால், ஓ, சகோதரர்களே! இக்கண முதலே சம உரிமை பெற்று வாழக்கூடிய நமது சாமியவாதத்தில் வாழ முயற்சி செய்யுங்கள்.
பிராமணனுடைய உயிர் வாழ்க்கைக்குச் சிறந்த வழி தானம் வாங்குவதே என்று முன்னரே கூறியுள்ளோம். இதற்கொப்பாக வேறு நல்வழி இருக்கிறதா? ஏனையோர் இவர்களை வலிய அழைத்துக் கொடுக்க வேண்டும். அங்ஙனம் கொடுக்காதவர்களும் பாவிகளுமாவார்கள்.
தாதவ்யம் ப்ரத்யஷம் பாத்ரே
நிமித்தேஷு விசேஷத:
யாசிதேனா பிராதவ்யம், ஸ்ரத்தா
பூதத்து சக்தித்; (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: பிராமணனுக்கு நித்தியமும் தானம் கொடுக்க வேண்டும். (கிரகணம், சிரார்த்தம் முதலிய) புண்ணிய காலங்களில் விசேஷ பசு முதலியவைகளைத் தானங்களாகக் கொடுக்கவேண்டும். கையில் ஒன்றுமில்லா விடில் பிச்சையேற்றோ, மற்றெவ்விதமாகவோ கொடுத்தே தீர வேண்டும். இதே கருத்தை அஹாஹர்தம் யாதுத பாத்ராதி என்ற வாக்கியத்தினால் வேதத்திலும் பார்க்கலாம். பிராமணனுக்குப் பசுத்தானம் வழங்கியவன், அப்பசுவிற்கு எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு காலம் சுகத்தை அனுபவிப்பான். அதாநரூணாமதனம வரருத்வாயோ
ததாதித தர்த்தினே;
ஸவைமோஷண ஜாத்பாபாத்
முகதோ பவதி தத்ஷணம்
இதன் பொருள்: ஈயாத லோபியின் பொருளைக் கொள்ளையிட்டுப் பிராமணனுக்குக் கொடுக்கிறவன், அக்கணமே திருட்டினாலுண்டான பாபத்தினின்றும் விடுபடுகின்றான். பின்னும்,
ச்ராந்தஸம்வாஹனம் ரோகி
பரிசர்யா சுரார்ச் சனம்
பாதசௌசம்த் விஜோச்சி ஷ்டமார் ஜனம் கோப்ரதானவத் (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: களைப்புற்ற பிராமண னது உடலைத் தடவு தல், நோய்வாய்ப்பட்ட பிராமணனுக்குத் தொண்டு செய்தல், பிராமணன் வந்தவுடன் அவனது கால்களை அலம்பிவிடுதல், பிராமணன் உண்ட இடத்தைச் சுத்தம் பண்ணுதல் இவைகளுக்கும் பசுவைக்கொடுத்த பலன் உண்டு.
என்னே! மனிதனை மயக்க உண்டு பண்ணின தர்ம சாஸ்திரங்களின் நேர்மை. அன்றியும், கோதம ஸ்மிருதியில்,
தேன சோத்தரஸ்ததர்த்தோஹ்ஸ்ய நிசய
இதன்பொருள்: சூத்திரன் ஏதேனும் ஒருவகையில் பொருளீட்டினால், அது பிராமணனுக்கே உரியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும், அரசனது தர்மத்தை யாக்ஞவல்கியர் கூறுமிடத்து,
தர்மேணலப் துமீஹேத,
லப்தம்யத்நேன பாலயேத்;
பாலிதம் வர்த்தயேந் நித்யம்
வ்ருத்தம் பாத்ரேஷு நிக்ஷிபேத் (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: தருமமுறைப்படி (தன் குலத்திற்குரிய நெறிப்படியே) பொருளை ஈட்டுக. ஈட்டியதைக் காத்து மேன்மேலும் பெருக்குக. அங்ஙனம் பெருக்கிய பொருளைப் பிராமணனுக்குக் கொடுத்துவிடுக. மேலும்,
நாத: பரதரம் தர்மோ
ந்ருபாணாம் யத் ரணார்ஜிதம்,
விப்ரேப்யோதீயதே
த்ரவ்யம் (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: சண்டையில் பகைவர்களைக் கொன்று, பொருட்களைக் கைப்பற்றி அவைகளை அரசன் பிராமணர்களுக்குக் கொடுக்கவேண்டும். இதற்கொப்பான தருமம் வேறில்லை.
குடிகளின் சரீர உழைப்பினால் உண்டான வியர்வைத் துளிகளின் பெருக்கன்றோ, அரசனது பொருட்குவியல். உழைக்கிறவன் சூத்திரனும் இந்தப் பொக்கிஷத்தை அடைவதனால் மட்டும் திருப்தியடையாத பார்ப்பனர்கள், லோகம் நைவபரிதயஜேத் (பணம் சேர்க்கவேண்டும் என்ற ஆசையை விட்டு விடாதே) என்கிற வெட்கக்கேடான வாக்கியத்தை அனுசரித்துத் 1தமது நாட்டு அரசனுக்கும், அயல்நாட்டு அரசனுக்கும் 2பகையை உண்டுபண்ணி இருக்கிறார்கள். தன்நாட்டு அரசன் வெற்றி பெற்றால், அயல்நாட்டுப் பொருள்கள் தங்களுக்கு வந்து சேரும். அயல்நாட்டான் வெற்றிபெற்றால், இவ்வூர்ப்பொருள் அங்குள்ள தம்மினத்தவரையே அடையும். தங்களுக்கு இதனால் உடலுக்கோ, பொருளுக்கோ ஒரு குறைவும் ஏற்படமாட்டாது. வேதத்திலும் இங்ஙனமே கூறப்பட்டி ருக்கிறது.
பிராம்மணோ நஹிம் ஸிதவ்ய
(பிராமணன் எத்தகைய குற்றம் புரிந்தாலும், அவனது உடலை வருத்தலாகாது) மற்றும்,
நவிஷம் விஷமித்யாஹுர்
ப்ரஹ்மஸ்வம் விஷமுச்யதே;-
(தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101207/news20.html

புதன், 1 டிசம்பர், 2010

சமூகச் சீர்திருத்தச் செம்மல் வீரமணியார் வாழ்க! வாழ்க!!

சமூகச் சீர்திருத்தச் செம்மல் வீரமணியார் வாழ்க! வாழ்க!!

உலகின் நெடிய வரலாற்றில் பல புரட்சிகளைப் பற்றிய பதிவுகள் மானுட சமுதாயத்திற்கு என்றும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. அய்ரோப்பாவில் 14ஆம் நூற்றாண்டில் தொடங்கி 17ஆம் நூற்றாண்டு வரை தாக்கத்தை ஏற்படுத்திய மறுமலர்ச்சி இயக்கம் உலகில் மாபெரும் மாற்றங் களுக்கு வழிவகுத்தது. வாழ்வியல், கல்வி, கலை, அறிவியல், சமுதாய இயல் போன்ற அனைத்துத் துறைகளிலும் புதிய புதிய சிந்தனைகளுக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தூண்டுகோலாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சியும், தொழில் புரட்சியும் வெடித்தன. மென்மையாகத் தோன்றி மெதுவாகத் தொடர்வது புரட்சியல்ல.
தாக்குப்பிடிக்கும் பார்ப்பனியம்

ஒவ்வொரு சிறு பொறியும் பெரும் தீயாகலாம் என்று சீனத்து விடிவெள்ளி மாசேதுங் அவர்கள் புரட்சிக்கான இலக்கணத்தை விளக்கினார். புரட்சி கள் சமுதாய மாற்றத்திற்கு அடிகோலுகின்றன. சமுதாயத் தளத்தில்தான் பொருளாதாரம் வளர் கிறது. சமத்துவம் ஒளிர்கிறது. ஆனால், இந்திய மண்ணில் மட்டும்தான் புரட்சிக்கூறுகளை மங்க வைக்கும் மதமும், சனாதனமும் அதைத் தூக்கிப் பிடிக்கின்ற பார்ப்பனியமும் இவ்வளவு புரட்சி களுக்குப் பிறகும் தொடர்கின்றன. இன்னும் ஆயுத பூஜை
இன்றும் சனாதனத்தைத் தூக்கி நிறுத்த முயலும் பார்ப்பனர்களும், அவர்களுக்குத் துணை போகும் வீடணர்களும் உள்ளனர். தகவல் தொழில்நுட்பப் புரட்சி, ஒவ்வொரு தனி மனிதன் கையிலும் செல்பேசியைக் கொடுத்து விட்டது. செல்பேசி வழியாகவே செய்தி முதல் பாடல் வரை கேட்கிற அறிவியல் புரட்சியைப் புறந்தள்ளி படித்தவர்கள் கூட அக்கருவிக்குப் பொட்டு வைத்து ஆயுத பூஜை செய்ய இன்றும் தவறுவதில்லை. எனவேதான் அறிஞர் அம்பேத்கர், ஓர் அரசு, தனிமனிதனுக்குச் செய்கின்ற கொடுமையைவிட, சமூக அமைப்பு மிகப்பெருமளவில் இழைக்கின்ற கொடுங்கோன்மையையும், ஒடுக்குமுறையையும் பெரும் பாலானவர்கள் உணர மறுக்கிறார்கள் (ஆடிளவ யீநடியீடந னடி டிவ சநயடணைந வாயவ ளடிஉநைவல உய யீசயஉவஉந வலசயலே யனே டியீயீசநளளடி யபயளேவ ய னேஎனைரயட ய கயச பசநயவநச னநபசநந வாய ய படிஎநசஅநவே உயயீ) என்று 1943ஆம் ஆண்டு ரானடே-காந்தி-ஜின்னா ஆகிய மூவரையும் ஒப் பிட்டு ஆற்றிய உரையில் குறிப்பிடுகிறார். மேலும், சீர்திருத்தச் சிற்பிகள்தான் அரசியல் தலைவர்களை விட மாவீரர்களாகப் போற்றப்படுகிறார்கள். அரசியல் களத்தைவிட சமூகக் களத்திற்குத்தான் நெஞ்சுரம் அதிகம் தேவைப்படுகிறது. அந்த நெஞ் சுரத்தை, வீரத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் பெற்ற ஆற்றல்
வேதன் விதி என்றும், நாதன் கட்டளை என்றும் இந்த சமூக அவலங்களைச் சரியென்று ஏற்றுக் கொண்ட பெரும்பான்மையான மக்களுக்கிடையில் சீர்திருத்த இயக்கத்தை நடத்துவது என்பது மிகமிக அரிய செயலாகும். தந்தை பெரியார் ஒருவர்தான் தமிழ் மண்ணில் அந்த மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்தி வெற்றி கண்டவர். வரலாற்றில் ஆரிய நரித்தனத்தின் விளைவால் சரிவுற்ற பல மன்னர்கள், பல சிந்தனையாளர்கள் பற்றி நன்கு உணர்ந்து, அவ்வித சதிகளையும் முறியடிக்கிற பேராற்றலைப் பெரியார் பெற்றிருந்தார். சமூக சீர்திருத்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தியதால்தான் சதிகாரர்கள் அஞ்சினர். ஆரியர்களின் சதி எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து, பெரும்பான்மையான மக்களை தனது சலியாத உழைப்பால் ஒன்றிணைத்து, சமூக சீர்திருத்தச் செம்மல்களிலேயே திராவிட இயக் கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார் ஒருவர்தான். பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் எழுதிய தலை யங்கமே இதற்குச் சான்று பகர்கின்றது.
1928 குடிஅரசு தலையங்கங்கள்
குடிஅரசு தலையங்கத்தில் பெரியார் 1928ஆம் ஆண்டு, கபிலரை ஏமாற்றிவிட்டோம்; புத்தரை ஏமாற்றிவிட்டோம்; கூன்பாண்டியனை ஏமாற்றி விட்டோம்; மூவேந்தர்களை அழித்துவிட்டோம்; முகமதிய அரசாங்கத்தை ஒழித்துவிட்டோம்; நாயக் கர் அரசாங்கத்தைப் பாழ்படுத்திவிட்டோம்; கம் பனைக் கொண்டே எங்களைக் கடவுளாகவும், தேவர்களாகவும் செய்து கொண்டோம்; இப்படிப் பட்ட எங்களுக்குச் சில பார்ப்பனரல்லாத கூலி களைப் பிடித்தே இப்புதிய சீர்த்திருத்த இயக்கத்தை ஒழித்து எங்கள் ஆதிக்கத்தைப் பழையபடி நிறுத்திக் கொள்ளச் செய்வதுதானா பிரமாதமான காரியம் என்ற வினாவை எழுப்பினார். அத்தலையங்கத்திலேயே இப்போதைய இயக் கம் அடிக்க அடிக்க எழும்பும் பந்து போலவும், வெட்ட வெட்டத் துளிரும் செடிகள் போலவும் பரவிவிட்டது..இனி என்றைக்கும் இந்த இயக்கமும், இந்த உணர்ச்சியும் மறையாது என்பதையும், யாரா லும் அழிக்க முடியாது என்பதையும் வெள்ளிடை மலை போல் விளக்கிவிட்டது. திராவிட இயக்கம் அமைத்த களத்தில் தலைமை யேற்றுப் போராடிய தந்தை பெரியாருக்கு உறு துணையாக பேரறிஞர் அண்ணா, தலைவர் கலை ஞர், ஆசிரியர் வீரமணியார் ஆகியோர் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றைய தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு வழிவகுத்துள்ளன. ஆசிரியர் வீரமணியார், தந்தை பெரியார் வழியி லேயே பதவி, பட்டம், விருதுகளைப் புறந்தள்ளி தனது தனித்த ஆளுமையால், உழைப்பால் அவ்வப்போது ஆரிய ஆதிக்க சக்திகள் செய்துவரும் சதிவலைகளை வெட்டி வீழ்த்தி தந்தை பெரியார் ஊட்டிய உணர்வைத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி வருகிறார்.
இவ்வகையான அரும்பெரும் சமூகச் சீர்திருத்தப் பணிகளை உணர்ந்துதான் அறிஞர் அண்ணா அவர்கள் 1968இல் நியூயார்க் மருத்துவமனையில் இருந்து தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு மடல் வழியாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும்போது ஓர் அரிய உண்மையைக் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நானறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி எந்த சமூகச் சீர்திருத்த வாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட் டில். ஆகவே, சலிப்போ, கவலையோ தாங்கள் துளி யும் கொள்ளத் தேவையில்லை. வரலாற்றில் அண்ணா பதித்த மேற்கூறிய வைர வரிகள் சமூக சீர்திருத்தப் பணியை ஆற்றிய பெரியாருக்கும், இப் பணியைத் தொடர்கின்ற பெரியாரின் தளபதிகளுக் கும், தொண்டர்களுக்கும் அளித்த நற்சான்றிதழா கும். திராவிட இயக்கத் தொடரோட்டத்தில் ஆசிரியர் வீரமணியார் பதித்த சிறப்புகள் பலப்பல. 10 வயதிலேயே தந்தை பெரியாரின் கைப்பற்றியவர். கலைஞருடன் 60 ஆண்டுகால நட்பு!
தலைவர் கலைஞருடன் கடந்த 60 ஆண்டுகளாக நட்புப் பூண்டு, கலைஞர் ஆட்சி அமைக்கும் போதெல்லாம், தோன்றாத் துணையாக, தோள் கொடுக்கும் சுயமரியாதைக் கதிரொளியாக வலம் வந்து கொண்டிருப்பவர். வீரமணியார் கண்ட களங்கள் பலப்பல. நிகழ்த் திய பேருரைகள் பல ஆயிரங்களைக் கடந்து நிற்கும். அவர் பதித்த எழுத்துகள் எண்ணிலடங்கா. சென்ற திங்களில் துபாய் நாட்டில், கடந்த வாரத்தில் மலே சியா நாட்டில், இந்த திங்களில் சென்னையில், தஞ்சையில், திருச்சியில், மதுரையில், நெல்லையில் என தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம், கொள்கை முழக்கம் செய்கிறார். உடல் நலம் பாதிக்காதா? ஓய்வு தேவையில்லையா? என்று என் போன்று அன்பு செலுத்தும் பலர் அவரைக் கேட் பதுண்டு. மருத்துவர் இருக்கிறார், மருந்தும் இருக் கிறது, கவலை இல்லை, தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். பெரியாரின் பணியினைத் தோளில் சுமந்து சுற்றி வருவேன் என்று தனது 67 ஆண்டு கால பணியைத் தொய்வில்லாமல் தொடர் கிறார். வீரமணியாரின் வெற்றிக்குப் பின்னால் அவரது இணையரின் அளவற்ற அன்பும், தோன் றாத் துணையும் துணை நிற்கின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொரு ளாதாரத்தில் முதுகலைப்பட்டத்தைப் பெற்று முதன்மை மாணாக்கராகத் திகழ்ந்து, சட்ட இயல் பயின்று, சில காலம் வளம் கொழிக்கும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு, தந்தை பெரியார் அழைத்தவுடன் விடுதலை ஆசிரியராக முழு நேரப் பொறுப்பேற்றார். அன்று தொடங்கிய அயராத பணி இன்றும் தொடர்கிறது. இந்திய சமூக அரசியல் வாழ்வில், காந்தியைவிட, ஜின்னாவைவிட ரானடே ஏன் உயர்ந்து நிற்கிறார் என்று அறிஞர் அம்பேத்கர் ஓர் ஆய்வுரை நிகழ்த்தினார்.
அம்பேத்கர் கருத்துப் பார்வையில் வீரமணி
அவ்வுரையில், ரானடே சட்டம் பயின்றவர், நீதிபதி பொறுப்பு வகித்தவர், பொருளியல் மேதை, அரசியல் தலைவர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர் போன்ற பல ஆளுமைகள் இருந் தாலும், வரலாற்றில் சமூக சீர்திருத்தவாதியாகத்தான் எல்லா தலைவர்களையும்விட உயர்ந்து நிற்கிறார் என்று சமூக சீர்திருத்தத்தின் சான்றாண்மையை, பெருமையை அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டார். அறிஞர் அம்பேத்கரின் கருத்திற்கு நமது வீரமணி யார் அடையாளமாகவே உள்ளார். நமது ஆசிரி யரும் பொருளாதார முதுகலைப் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர், சட்டம் பயின்றவர், பொருளாதார, வரலாற்று இயல்களை நன்கு படித் தவர், பன்முக ஆற்றல்களோடு தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்கிறவர். திராவிடர் கழகத்திற்குத் தலைமை தாங்குவது என்பது எளிய செயலன்று. செயற்கரிய இப்பணி யினைச் செம்மையுடன் ஆற்றிவருகிறவர் நமது ஆசிரியர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர். வரலாற்றில் ஆதிக்க சக்திகள், அச்சக்திகளின் முக வர்கள், எதிர்ப்பவர்களை எப்படி வீழ்த்துவதற்கு சதி செய்வார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர். நெறி யான பணியாலும். நேர்மைத் திறனாலும், நெஞ்சுரத்துடன் இவ்வகை எதிரிகளை முறியடித்து வருபவர் நமது ஆசிரியர் அவர்கள். வெற்றி வீரர் வீரமணி வாழ்க!
திராவிடர் இயக்கத்தின் தளபதியாக, தமிழர் தலைவராக, நெடுங்கடலில் நெடும் பயணத்தில் திறனுடன் கப்பலைச் செலுத்தும் மாலுமி போல, கொள்கை இலக்கை அடைவதற்கு வழிகாட்டும் தமிழர் தலைவர். 2010 டிசம்பர் 2ஆம் நாள் 78 அகவையை எட்டிப் பிடிக்கிறார். ஆசிரியர் வீரமணியாருடைய அறிவும், மானமும், மாண்பும், தொண்டும், தோழமையும் குற்றால அருவி போல பாய்ந்து திராவிட இயக்கத்திற்கு வலிமையையும், வனப்பையும் இணைக்கின்றன. களங்கள் பல கண்டு தொண்டால் சிறந்து நிற்கும் வெற்றி வீரர் வீரமணியார் வாழ்க! வாழ்க!!
பேராசிரியர் மு.நாகநாதன், எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட்.
(துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு திட்டக்குழு)

- http://www.viduthalai.periyar.org.in/20101201/news44.html