வியாழன், 18 பிப்ரவரி, 2010

பெரியாரை மறப்போமா?

னிதராகப் பிறந்தோம்! ஆம் உண்மை!
ஆறறிவு உண்டென்று சொன்னார்கள்
ஆனால் பகுத்தறிவை இழந்தது தான் கொடுமை
ஜாதியென்றான் மதமென்றான் நம்பி
சாத்திரத்தில் அறிவிழந்தோம் உண்மை!
மூத்திரத்தைப் பசு மூத்திரத்தைப்
புனிதமென்றான் பார்ப்பான்!

TPO1224.jpg

தந்தை பெரியார் (செப் 17, 1879-டிசம்பர் 24, 1973)

ஆத்திரந்தான் கொள்ளாமல்
அறிவிழந்தோம் பகுத்தறிவிழந்தோம் கொடுமை!
படித்தவரும் பண்டிதரும் அறிவிழந்தார்
படிக்காத மேதையவர் வந்தார்
சுயமரியாதை வேண்டுமென்றார்
கல்லைத் தான் காட்டுகின்றார்
கடவுளெங்கே? கற்பனைதான்!
மனிதனாக வாழ்ந்துவிடு
சிந்தித்து செயல் படுவாய்
நரகமில்லை மோட்சமில்லை
நம்பாதே ஏமாற்று வேலைகளை
புரியாத வார்த்தையிலே
தெரியாத கடவுளுக்கு
பூசை என்ன காசெதற்கு?
புரிந்து கொண்டோம் தெளிவு பெற்றோம்
தன்மானச் சிங்கத்தின் கர்ச்சனையில்
நம் மானம் மீட்டெடுத்தோம்
மனிதராக வாழ்வு பெற்றோம்
மறப்போமா பெரியாரை?

DRIO1224.jpg

- சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன்