புதன், 24 ஜூன், 2009

Thanthai Periyar

Periyar the Prophet of the new Age

The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners.

- Unesco

Thanthai Periyar E.V.Ramasamy
(17.9.1879-24.12.1973)

வியாழன், 18 ஜூன், 2009

அவர் சொன்னார், இவர் சொன்னார்...

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே என்று பகுத்தறிவு சுடரை ஏற்றியவர். எவரையும் தன்னுடைய அறிவுக்கு வேலை கொடுத்து சுயமாக சிந்திக்க சொன்னவர். தந்தை பெரியாரை ஆராய்வது என்பது கூட அவர் பணிக்கு கிடைத்த வெற்றி என்றாலும், தந்தை பெரியார் கூறியது போல் நன்றி என்பது செய்பவர் எதிர்பார்ப்பது இல்லை. பெறுபவர் செலுத்த வேண்டியது ஆகும். இன்றும் தந்தை பெரியாரின் தாக்கங்கள் என்பது பார்ப்பனர்களையும்,  பார்ப்பன அடிவருடிகளையும் தாக்குகிறது. எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பவருக்கு அய்யாவே சொல்கிறார், வேறு எவரும் இப்பணியை செய்ய முன்வராததால் என் மேல் நானே போட்டுக்கொண்டு செய்கிறேன் என்கிறார். பகுத்தறிவு என்பது இனம், மொழி என எல்லாவற்றையும் தாண்டியதே. மனிதநேயம் என்பதுதான் அடிப்படை என்பதால், மதம், ஜாதி, இதற்கெல்லாம் காரணம் கடவுள் என்பதால் அதையும் அழித்து ஒழிப்பேன் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவரைப்பற்றி அவதூறு பரப்புவது என்பது பிற்போக்குதனங்களை கட்டி காப்பவர்கள் என்று அடையாளம் காண்போம்.

வெள்ளி, 5 ஜூன், 2009

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!!
என்றோம்,
லெமுரியாவிலிருந்து,
சிந்துவெளி நாகரிகத்திலிருந்து,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
தமிழ்க்குடி என்றெல்லாம்
பழம்பெருமை பேசுகிறோம்.
மறு கன்னத்தை
காட்ட சொன்னவர்கள்தான்
சிலுவைப்போரை நடத்தினார்கள்.

உலகப்போருக்கான ஒத்திகையா?
என்று எண்ணும் வகையில்
நவீன தொழில்நுட்ப
ஆயுதங்களுடன்
சொந்த மண்ணில்
பீரங்கி தாக்குதல்,
செல் வீச்சு,
கொத்து குண்டுகள்,
வான்வெளி தாக்குதல்,
பாஸ்பரஸ் குண்டு வீச்சுக்கள்
என்றெல்லாம் தமிழ் இனத்தை
பூண்டோடு அழித்தொழிக்க
சிங்கள இன வெறிக்கூட்டம்
ஆட்டம் போட்டாலும்,
புவி சார்ந்த சர்வாதிக்க போட்டி என்று
உளுத்துப்போனவற்றை பிதற்றி
மனித நேயத்தை தொலைத்து விட்டது.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பொய்யானதா?

புத்தம் போதித்ததுதான் என்னவென்று
வரும் தலைமுறை கேட்டால்
செம்மணியை சொல்வதா,
செஞ்சோலையை சொல்வதா,
தமிழ் ஈழத்தின்
ஒவ்வொரு பகுதியும்
தாக்கப் படும்போதுதான்
உலகத் தமிழர்களுக்கு
தமிழ் ஈழத்தின் வரை படம்
மனக்கண்ணில் பதிந்தது.
தாக்கப்பட்டப் பகுதிகள்
அத்துணையும்
தமிழனுக்கு சொந்தமானது
என்று சிங்களவனே
உலகோருக்கு
சொல்லி விட்டான்.

போர் இன்னும் ஓயவில்லை.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஒடுக்கிவிட்டதாக எக்காளம் இடுகிறதா சிங்களம்?
அச்சத்தின் உச்சியில் நின்று
உண்மைகளை மறைக்க முயன்று தோற்கிறதா?
தமிழர் நாம் ஒன்றுபட்ட உணர்வுடன்
உரிமையை மீட்டிட
ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும் தருணம் இது.
எல்லா வகையிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும்
போராட்டம் தொடரவேண்டும்.

இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை.
இமைப்பொழுதும் மறக்க இயலாதவை.
விதைக்கப்பட்டவை வீர விதைகள்.
தமிழர் நம் நெஞ்சில் உரமானவை.