செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஞானசூரியன் -30

மீன், மான், ஆடு, குருவி, வெள்ளாடு, ப்ருஷத் (ஒருவகை மான்), கிருஷ்ண மிருகத்தி, வெள்ளை யாட்டின் கன்று, குரு (ஒரு வகை மான்), பன்றி, முயல் இவைகளின் மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்தியடைகின்றனர்.

பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருட்கள் வருமாறு:
கட்காமிஷம் மஹாசல்கம்

மது முன்யன்னமேவச:
லோஹாமிஷம் காலசாகம்
மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச
பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.
காலசாகம் மஹாசல்கா:
கட்கலோக மிஷன்மது;
ஆனந்த்யாயைவ கல்பந்தே
முன்யன்னானிச ஸர்வச

பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,
ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்

இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.

மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத

பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.

இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே நாள்தோறும் எண்ணிறந்த பலவகைப்பட்ட உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிற காலத்தில், அஹிம்சை, கொல்லாமை விரதத்தின்கருத்து எங்ஙனம் இவர்களின் மனதிற்பதியும்? இதனால் அஹிம்ஸா பரமோ தர்ம என்னும் வாக்கியமென்றும் இந்து சமயத்தைக் கொலைச் சமயமென்றம் நன்றாய் அறிந்து, அதனின்றும் விலகியவர்களே இவ்விரதத்தை அனுஷ்டிக்க அதிகாரிகள் என்பதும்தான் இத்திருமந்திரத்தை உபதேசித்த புத்தபகவானின் கருத்தென்பதை நன்றாக அறியவேண்டும்.1

ஆபிசார கருமத்தை (சூனியம் வைத்துப் பகைவனைக் கொல்லுதல்) கூடத் தருமமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ச்யேனேனாபிசான் யஜேத
பகைவனைக் கொல்ல விரும்பு வோன் சியேன யாகத்தால் ஆபி சாரம் செய்யக் கடவன்.
இப்பெயர் வந்த தன் காரணமும், இதன் பயனும்
யதாவை ச்யேனோ
நிபத்யாதத்தே ததாயம்
த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்
நிபத்யாதத்தே ததாயம்
த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்
நிபத்யாதத்தே

பொருள்: பருந்தானது கோழி முதலிய ஏழைப் பிராணிகளைத் தூக்கிச் செல்வது போல் இந்த யாகமும் பகைவனை ஒழித்துவிடும் (மரணத்திற்குத் தூக்கிக் கொண்டு போகும்)

1.இக்காலத்தில் பவுத்தர்கள் மாமிசம் சாப்பிடுவதேன் என்ற கேள்விக்கு இடமுண்டு. புத்தர்களை இந்திய நாட்டினின்று துரத்தியடித்த காலத்தில் முறையாகப் புத்த மதத்தைப் பரப்ப முடியாமல் வந்ததுடன், நல்லபழக்கம் சற்றேனும் அக்காலத்துச் சைனா, பார்மா, சிலோன் முதலிய நாட்டில் கிடையாது.

அவர்கள் கடைசியாகப் புத்தரை ஒத்துக்கொண்டு தங்களது முன் பழக்கங்களை நடத்தி வந்தார்கள். இனி இந்திய நாட்டார் முன்போலவே சென்று சாம்மியவாதம் உபதேசிக்கும்போது அத்தகைய தீய ஒழுக்கங்களை அவர்களிடத்திலிருந்து போக்கமுடியும்.

இதற்கு எதிர்மறையாகப் புத்த பகவான் திருவாய் மலர்ந்தருளிய தருமபதம் என்னும் நூலின்கண் ஒரு வாக்கியம் இருப்பது வருமாறு:-

நஹிவேரேன வேரானி
சம்மந்தீஹ குதாசன!
அவேரேனஹி ஸம்மந்தி
ஏஸதம்மோ ஸனந்தனோ (தருமபதம்)

பொருள்: பகையைப் பகையினால் வெல்ல முடியாது; 1நட்பினாலேயே வெல்ல முடியும். இதுதான் என்றும் நிலைத்திருக்கிற தருமம்.

இவை முதலிய வாக்கியங்களால் புத்த பகவானது தருமோபதேசங் களுக்கும், பார்ப்பனரின் தரும நூலிற்கும், இரவிற்கும், பகலுக்கும் இருப்பதைப் போன்ற வேற்றுமை இருப்பதாகப் பெறப்பட்டது. இந்தச் சியேன யாகம் தருமமா? அதருமமா? என்று சந்தேகித்த நவீன மீமாம்ஸகனாகிய கண்டதேவன் வேத வாக்கியமானதால், தருமந்தான் என்று முடிவில் உறுதிப்படுத்துகிறார்.

- http://viduthalai.in/new/page-3/2022.html

வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஞானசூரியன் தொடர்-29

இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர்களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத்தில் வியாபிசாரத் திற்கு அனுமதிச்சீட்டுப் பெற்றுக்கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம். இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதல் முதலாகப் பார்த்த புத்தபகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட் கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.

குசா: சாகம் பயோ மத்ஸ்யா:
கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;
மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்
ப்ரத்யாக்யேயம் நவாரிச
பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராம ணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன். அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:

மஹோக்ஷம் லா மஹாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா, ஸேவனம்
ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்க வேண்டும்.

(மற்ற அவயவங்களைப் போலவே வயிறும் பெரிதாய் இருக்குமென்ற காரணத்தினால், மிருகத்தைக் குறிப்பிடு கிறார் போலும்) இத்தகைய சுரோத்திரியனைச் சக்கர வர்த்தியாயினும எழுந்து வணங்கவேண்டும்.

உணவின் பாகுபாடு கூறுமிடத்து க்ரல்யாத தாதயூ ஹாதி (ஊனைத்தின்று உயிர் வாழ்கின்ற பிராணிகள்) உண்ணத்தகாதன என்று கூறிவிட்டு உண்ணத்தக்கன வற்றைக் கூறுவதையும் கவனியுங்கள்.

பக்ஷயா பஞ்சநகா ஸேதா
கோதா கச்சபசல்யகா
கசஸ்ச மசஸ்யேஷ்வரிஹி
சிம்ஹதுண்டாக ரோஹிதா

பொருள்: உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முட்பன்றி , முயல் இவைகளும், சிங்கமத்சயம் முதலிய மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்திய டைகின்றனர்.

பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருள்கள் வருமாறு:

கட்காமிஷம் மஹாசல்கம்
மது முன்யன்ன மேவச:
லோஹாமிஷம் காலசாகம்
மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச
பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.

காலசாகம் மஹாசல்கா:
கட்கலோக மிஷன்மது;
ஆனந்த்யாயைவ கல்பந்தே
முன்யன்னானிச ஸர்வச
பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,

ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்
இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.
மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத

பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.

இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே மீன் வகைகளும் உண்ணத்தக்கனவாம். இந்த உணவு தேவர்களோடு நிற்கவில்லை. பிதிர்களுக்கும் மாமிசம் வேண்டுமாம். ஒருவன் செத்தபின் கூட அவனால் மிருகங்களுக்குத் துன்பம் ஒழிந்தபாடில்லை.

ஹவிஷ்யானேன வை மாஸம்
பாயசேனது வத்ஸாம்;
மாத்ஸ்யஹாரிண ஔரப்
சாகுனச் சாகபார்ஷதை
அய்ணரௌரவவாராஹசானர்
மாப்ஸர்யதாக்ரமம்:
மாம்ஸவ்ருத்யாஹி துஷ்யந்தி
தத்தைரிஹ பிதாமஹை
பொருள்: சாதாரண அவிசினால் ஒரு மாதமும், பாயசத்தினால் ஒரு வருடமும் பிதிர்கள் திருப்தியடை கிறார்கள்.

- http://viduthalai.in/new/page-3/1248.html

புதன், 12 ஜனவரி, 2011

ஞானசூரியன் தொடர்-28

வால் எஜமானின் பத்தினிகளைச் சார்ந்தது. இவர்கள் இதை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கக்கடவர். வலத் தோளிலுள்ள மாமிசமும், மணியைப் போலிருக்கிற மாமிசமும், விலாப்புறத்தில் மூன்று பிரிவுகளாயிருக்கிற கீஸமும்

*க்ராவஸ்துத்திற்கும், இடத் தோளிலுள்ள மாமிச மும், வைகர்த்தமென்கிற மாமிசத்தில் பாதியும்

* இந்தக் குறிகள் இடப்பட்டவர்கள் ஒவ்வொரு புரோகிதர்க ளென்று அறிந்துகொள்க. யாகத்தில் மேற்கூறிய பெயர்க ளாகும்.

ஃ கை பாஹு என்று தனித்தனி சொல்வதால், ஒன்று மேல்பாகமும் மற்றது அடிப்பாகமும் என்று சாயனாச்சாரியார் கூறுகிறார்.

*உன்னேதாவிற்கும், வைகர்த்தத்தின் மற்றொரு பாதியும், க்லோமா என்கிற மாமிசமும் *கமிதாவிற்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும்.

ஆனால், இந்தக்கமிதா பிராமண ரல்லாத ஒருவனால் யாருக்கேனும் ஒரு 1பிராமணனுக்கே கொடுத்துவிட வேண்டும். தலை, சுப்பிரமணியனைச் சார்ந் தது. தோலை 2சக்தியை உச்சரித்த பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். இடையை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ஹோதா தனியாகவே எடுத்துக் கொள்ளலாம்3. ஆண்டுதோறும் பசு யாகம் செய்யவேண்டும் என்ற விதியின் கருத்து இத்தன்மையதென்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மாம்ஸீயந்தி ஹ்வா அக்னயோஜுஹ்வதோ யஜமா னஸ்யதே யஜமான மேவத்யாயந்தி; யஜமானம் ஸங்கல்ப் யந்தி; பசந்திஹ்வா அன்யேஷ்வ க்னிஷுவ்ருதா மாம்ஸம்: அதை தேஷாம் நான்யாமாம் ஸாசாவித்யதே யஸ்ய சைதே பவந்தி தம்ததோ நானீ ஜானம் பசுனா ஸம்வத்ஸரோவ்ய தீயாத் ஆயுஷயோஹ்வா அஸ்யைஷ ஆத்ம நிஷ்க்ரயண

பொருள்: மாமிச யாகம் பண்ணாத எஜமானின் அக்னி எப்போதும் மாமிசத்தையே விரும்பிக்கொண்டிருக்கின்றன. இவனையே தின்று விடலாமா என்றும் நினைக்கின்றது. இவன் தினந்தோறும் மாமிசத்தைச் சமைத்து உண்கிறா னாதலால், இவனுக்கும் சமையல், அக்னிக்கும் மாமிசம் கிடைக்கிறது. யாகம் செய்கிற காலம் தவிர, எங்களுக்கு மாமிசம் கிடையாது. அதுவும் அவ்வக்காலங்களில் இப்பாவி தருகின்றானில்லை என்றும், இவ்விதமாக அக்கினிகள் நினைப்பதனால், தன் ஆயுள் விருத்திக்குக்

1. நோச்சிஸ்டம் நஹவிஷ்க்ருதம் (யாகசேஷமாகிய அவிசைக் சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது) என்கிற மனுவின் வாக்கு இக்கருத்திற்கு ஒத்திருக்கிறது.

2. பசுக்கொலை செய்வதாக துருக்கர்களிடம் சண்டை தொடுக்கும் ஆரியர்கள் இத்தகைய வேதவாக்கியங்களை உணர்ந்திருந்தால், கலகத்திற்கு இடமுண்டாக மாட்டாது.

3. ஆமாம் அய்யரே! யாகத்தில் கொலையுண்ட பசு, ஆடு, மனிதன், முதலிய பிராணிகள் உயிர்கொடுத்து அனுப்புவது வழக்கம். எங்களுடைய ரிஷிகள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறீர். இப்படிப் பங்கு கேட்டுச் சாப்பிட்டால், எதை எழுப்புவது தெரியவில்லையே.
காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ் தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன்.

இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என் னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற் குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டை களையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்விதம் கொலையே பிரமா ணமாகவுடைய யாகமே சுவர்க்கமென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும். இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர் களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத் தில் வியாபிசாரத்திற்கு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம்.

இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதன் முதலாகப் பார்த்த புத்த பகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட்கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.

குசா: சாகம் பயோ மத்ஸ்யா:
கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;
மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்
ப்ரத்யாக்யேயம் நவாரிச

பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராமணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன் அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:

மஹோக்ஷம் லா மஹாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா, ஸேவனம்
ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ்தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன். இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என்னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற்குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டைகளையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதம் கொலையே பிரமாணமாகவுடைய யாகமே சுவர்க்க மென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும்.

- http://viduthalai.in/new/page-3/1191.html

புதன், 5 ஜனவரி, 2011

ஞானசூரியன்-27

அதற்கு உதாரணம்:
ஜாமிவா ஏதத் யஞ்ஸ்ய க்ரியதே
யகன்வஞ் செளபுரோடாசெள
புரோடாசம் மாத்திரம் உட்கொள்ளுவதால், யஜ்ஞ, புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக் கும் பொருட்டு மத்தியில் 1வபா ஹோமம் செய்யவேண்டும்.
யஜ்ஞார்த்தம் பசவ; ஸ்ருஷ்டா:
ஸ்வயமேவ ஸ்வயம்புவா;
யஜ் ஞஸ்ய பூத்யை ஸர்வஸ்ய
தஸ்மாத் யஜ்ஞே வதோவத:
பொருள்: உயிர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிய யாகத்தின் பொருட்டுப் பிரம்மன் மிருகங்களைச் சிருஷ்டித் தான். (மனிதர்கள் மிருங்களைக் கொன்று தேவர்களுக்குக் கொடுப்பதுதான்மிருகங்களைச் சிருஷ்டித்தன் கருத்துப் போலும்). அதனால், யாகத்தில் செய்யும் கொலை பாவமாகமாட்டாது.
கொலைத் தொழில் பாவத்தை உண்டாக்குமாயினும், யாகத்தின் பொருட்டுச் செய்யும் அத்தொழில் புண்ணி யத்தையே பயக்கும் என்பது
1. வபா என்பது மனிதன் முதலிய எல்லா ஜீவன்களுடைய சரீரத்திலும் இடப்பக்கத்தின் புறத்திலுள்ள ஒரு விதமான கொழுப்பு
வைதிக மதம். கொல்லப்பட்ட பசுவின் அவயவங்களைத் தேவர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய முறை கூறப் பட்டிருப்பதையும் கவனியுங்கள்.
ஹ்ருதயம் ஜிஹ்வா வக்ஷோ
யக்ரித் வ்ருக்வயள ஸ்வயம்
தோருபே பார்சுவே ஸ்ரோணிர்
குதத்ரிதீயமிதி தைவதானி:
தக்ஷிணம் தோஸ்ஸவ்யா ஸ்ரோணிர்
குதத்ரிதீயமிதி ஸௌவிஷ்ட
க்ருதானி; க்லோமானம் ப்லீஹாததம்
தனீஷ்டு மத்யூத்னீம் புரீனம்
மேதோ ஜாகனீ மித்யுத்தரதி (ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்)
பொருள்: ஈரல், நாக்கு, மார்பு 1யக்ருத் இரண்டு பக்கங்களிலும் உருண்ட வடிவாயிருக்கிற தசை, இடக்கை, இட விலாப்பக்கம், வலத் தொடையின் மேற்பக்கம், புட்டத் தின் மூன்றிலொரு பங்கு இவ்வளவும் தேவர்களுக்காகவும், வலக் கை, இடத்தொடையின் மேற்புறம், புட்டத்தின் மூன்றிலொரு பங்கு இவைகள் ஸ்விஷ்டக் ருத்ஹோமத்தின் பொருட்டும், யக்ருத்தைப் போன்றதும், திலகமென்ற பெயருள்ளதுமான மாமிசம், நுரையீரல், சிறுகுடல், மடி கொழுப்பு, வால் இவைகளும் எடுக்கவேண்டும்.

அவிசு பங்கிடும் முறை

அதாத; பசோர் விபக்திஸ்தஸ்ய விபாபகம் வக்ஷயாம்: ஹனூஸ ஜிஹ்வே ப்ரஸ்தோது: ஸ்யேனம் வக்ஷஉத்காது: கண்ட: காகுதர: ப்ரதிஹர்த்து: தக்ஷிணாஸ் ரோணிர் ஹோது: ஸவ்யா ப்ராஹ்மண: தக்ஷிணம் ஸக்தி: மைத்ரா வருணஸ்ய ஸவ்யம் ப்ராஹ்ம ணாச் சம்ஸின: தக்ஷிணம் பார்ஸ்வம் மாம்ஸ மத்வர்யோ: ஸவ்யமுப காத் ரூணாம் ஸவ் யாம்ஸ: ப்ரதிப்ரஸ் தாது: தக்ஷிணம் தோர்நேஷ்ட: ஸ்வயம் போது: தக்ஷிண ஊருரச்சாவாகஸ்ய ஸவ்ய ஆக்நீத்ரஸ்ய தக்ஷிணோ பாகுராத் ரேயஸ்ய ஸவ்யஸ் ஸதஸ்யஸ்ய ஸதம் சானூகஞ்ச க்ருஹபதே: தக்ஷிணௌ பாதென 1. இந்தச் சூத்திரத்திற்குப் பொருள் தயானந்த சரஸ்வதியை (ஆர்ய சாம்ராஜ்யத்தை)க் கேட்டால், என்ன உத்தரவு சொல்லுமோ அறியேன். ஆனால், இன்றுநாள் வரைக்கும் ஜனங்கள் அனுஷ்டித்து வந்த முறையை இங்கு வரைந்துள்ளேன்.
க்ருஹபதே வ்ரதப் ரதஸ்ய ஓஷ்ட ஏதயோ ஸாதாரணோபவதி தம் க்ருஹபதி ரேவ ப்ரசிம்ஷயாத் ஜாகனீம் பத்னீப்யோ ஹரந்தி தாம் பாஹ்மணாயதத்யு: ஸ்கந்தாஸ் சமணி காஸ்திரஸ்ச கீகஸா க்ராவஸ்துத: திஸ்ரஸ்சைவ கீகஸா அர்த்தஞ்ச வைகர்த்தஸ் யோன்னேது: அர்த்தஞ் சவைகர்த்தஸ்ய க்லோமாசகமிது தத்ப்ராஹ்மணாய தத்யாத் யத்யப்ராஹ்மனஸ் ஸ்யாத்: சாரஸுப்ரஹ்மண்யாயைய்யஸ் வஸ்ஸய்த்யாம் ப்ராஹ தஸ்யா ஜினமினி ஷர்வேஷாம் ஹோதுர்வா

(அய்தரேய ப்ராஹ்மணம்)

பொருள்: கொல்லப்பட்ட பசுவைப் பங்கிடும் வகை சொல்லப்படுகின்றது. நாக்கு **ப்ரஸ்தோதாவிற்கும், பருந்தின் வடிவத்தையுடைய மார்பு *உத்காதாவிற்கும், கழுத்தும் முதுகிலிருக்கிற கொண்டையும் *ப்ரதிஹர்த்தா விற்கும், வலத் தொடை *ஹோதாவிற்கும் இடத் தொடை *பிரம்மாவிற்கும், வலத் தொடையின் அடிப்பக்கம் மைத்திரா வருணனுக்கும், இடப்பக்கம் *ப்ராம்மணாச் சம்சிக்கும், வல விலாப்புறமும், வலது தோளும் அத்வர்யு வுக்கும், இடது விலாப்புறம் *உபாகாதாக்களுக்கும், இடத்தோள் ங*ப்ரதிப்ரஸ்தாவிற்கும், வலக்கை *நேஷ்டா விற்கும், இடக்கை *போதா விற்கும், வலத் தொடை *அச்சாவாகனுக்கும், இடத்தொடை ஆக்னீத் ரனுக்கும், ஃவலக்கை *ஆத்ரேயனுக்கும், இடக்கை *ஸதஸ்யனுக்கும், வல விலாவெலும்பும் அலைதாடியும் *க்ருஹபதிக்கும், வலக் கால் போஜன தாதாவாகிய *க்ருஹபதிக்கும், இடக் கால்*க்ருஹபதி மனைவிக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். உதடு கணவனுக்கும் மனைவிக்கும் உரித் தானது. அதை க்ருஹபதி கையாலெடுத்து இது உன்னு டையது என்று சொல்லி மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/728