செவ்வாய், 15 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-53

இவ்வாறு ராணியைச் செய்ய முடியாமல் போயிற்று. பல பாராக்கள் இருந்ததாலும், ராணியென்று நினைத்து வேறொருத்தி காலைப் பிடித்திழுத்ததாலும் அவர்கள் ஜீவித்துக் கரையேறினார்கள்.

இதை நன்குணர்ந்த தமிழ் மந்திரியானவர் ஒரு மாசம் காசி ராஜாவிடத்திலிருந்து தன் தொழிலை முறையாகப் பார்த்ததுடன், பார்ப்பனர்களுக்கும், காசி குண்டாக்க ளென்ற போக்கிரிக் கொலைகாரர்களுக்கும் பெரும் உதவிகள் செய்து, பெருந் தர்மாத்மா என்று பேர் வழங்கும்படிச் செய்தார்கள்.

இரண்டு மாதம் போக, ஒரு தந்திரமாகத் தஞ்சாவூர் ராஜனிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவும், அக்கடிதத்தில் வரைந்துள்ள விஷயங்கள் தஞ்சாவூர் ராஜாவினுடைய முத்து வியாபாரக் கப்பல் சமுத்திரத்தின்கண் அமிழ்ந்து போனதாகவும், அக்கப்பல் எவ்வளவோ கோடி ரூபாய்க்கு இரத்தினங்கள் நிறைந்த தென்றும், அவைகளை மூழ்கி எடுப்பவர்கட்குத் தினம் ஒன்றுக்கு ரூ.10-ம், பக்கா போஜனமும் அளிப்பதாகவும் பிறகு, எடுத்த பொருளிலிருந்து தகுந்த பங்கு கொடுப்பதாகவும், அதற்கு எவ்வளவு ஜனங்கள் கிடைத்த போதிலும் வேலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளுகின்றே னென்றும், ஆனால், குறைந்த அளவு ஒரு மணி நேரத்திற்கு மேல் எவ்வளவு நேரம் அதிகம் மூழ்கிப் பழக்கப்பட்டவர்களானாலும், அவர்களுக்கு அதிக சம்பளமும், பக்கா போஜனமும் கொடுக்கப்படவேண்டு மென்றும், இதற்கு ஜனங்களைச் சேர்ப்பதற்குத் தனிச் சம்பளங்கொடுப்பதென்றும் பிரசித்திப்படுத்தினார்கள்.

இவ்வாறு விளம்பரம் பண்ணவே, ஒரு மாதத்துக்குள் 370 ஜனங்கள் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரையிலும் தண்ணீரில் மூழ்கிப்போக வல்லவர்களாய்ச் சேர்ந்தார்கள். பிற்பாடு மந்திரியானவர் இவர்களிடம் கேட்டுக் கொண்டதாவது:

குறைந்தது அய்ந்நூறு பேராவது சேர்க்க முடியுமா? அப்படிச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய வேலை கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு அவர்களில் தலைவனாகிய ஒருவன், இப்போது காசியிலுள்ள ஜனங்களில் நீரில் மூழ்கப் பழக்கமுள்ளவர் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்.

அதிகமாய் இன்னும் வேண்டுமாயினும் கான்பூரிலும் கிடைப்பார்கள் என்று பதில் கூறினான். கான்பூரிலிருந்து ஜனங்களை அழைத்துவர நாளாகும். வேண்டுமானால் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி, நாம் நாளைக்குப் புறப்பட வேண்டும். வீட்டில் இருக்கிற பெண் மக்களுக்கு மாதச் செலவுக்கு ராஜாங்கத்திலிருந்து மாதப் பணங்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டியதிருக்கிறது என்று சொல்லி, இந்த ஜனங்கள் அத்தனை பேர்களையும் வைக்கோலினால் செய்த ஒரு பெரிய கோட்டைக்குள் ராத்திரி படுக்கச் செய்து, நாளை காலையில் 3 மணிக்கு யாத்திரை செய்ய வேண்டுமென்று, அவர்களுக்குச் சொல்லிவிட்டு, நடுநிசியாக 12 மணி நேரத்திலே சிப்பாய்களை வரவழைத்து, நீரில் முழுகி, முழுகிப் பழக்கப்பெற்றோர் படுத்துக்கொண்டிருக்கும் கோட்டையை ஒரே சமயத்தில் பலவிடங்களிலும் நெருப்பு வைத்து எரியச் செய்தனர். உடனே ஜனங்கள் எழுந்திருந்து ஓடிப்போக முயன்றபோது, வழி கிடைக்காமல் நெருப்பில் வந்து விழுந்து வெந்து மாண்டார்கள்.

அதிலும் தப்பி யோடிய சிலரைக் குண்டு போட்டுச் சுட்டுப் போட்டார்கள். அதற்குப் பிற்பாடு கங்காதேவி நகை போட்டவர்களை அழைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டாள். இப்பொழுதுங்கூட பூரணமாக நிற்கவில்லை. சில சமயங்களில் நகைகள் பெருக்க அணிந்துகொண்டு ஏமாந்து நீராடும் ஜனங்களைக் கங்காதேவி அழைப்பது வழக்கம்தான்.

இக்காலங்களில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், யாத்திரையாக வந்த ஜனங்கள் பார்ப்பனர்கள் சொல்லக்கூடிய கருமங்களையெல்லாம் செய்து, போகுந்தருணத்தில் அவர்களுடைய விலாசம் முதலியவற்றை எழுதின பின்பு விருந்திடுவதுண்டு.

இதில் இரண்டு பேர் மூன்று பேரானால் இராத்திரிக்கே கங்கையில் போய்விடுவார்கள். அவர்கள் கொடுக்கும் சில சாமான்களில் யாதோ கலந்து கொடுப்பதென்பது உலகப் பிரசித்தம்.

பிணங்களை எடுத்துக் கங்கையில் போடு வதற்கும் ஒருவனைக் கொலை பண்ணுவதற்குங்கூட மூன்று ரூபாயிலிருந்து அய்ந்து ரூபாய் வரைக்கும் போதுமாம். இதைக் காசி யாத்திரை போகிறவர்கள் நன்றாய் விசாரித்துத் தெரிந்து வரும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மேற்படி செய்கை செய்கிறவர்களில் கேதாரக் கட்டத்தில் கோவிந்தானந்தன் என்னும் பெயருள்ள ஒருவன் இன்னும் ஜீவித்திருக்கிறதாக ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.

இச்செய்திகளை நன்றாய் வாசித்துக் கவனத்தில் வைத்து விசாரித்து நம்பினால் போதும். தீர்த்த, ஸ்தலங்களும் நமது ஆலயங்களும், விபசாரம், பொய், திருட்டு, கொலைகள் என்கிற பஞ்சமா பாதகங்கள் செய்யும்படிக் கற்றுக்கொடுக்கும் ஒரு பஜார் அல்லது பள்ளிக்கூடமாக முடிந்ததைப் பற்றி யார்தான் வருந்தாமலிருக்க முடியும்?

வேதசாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள் ரிஷிபுங்கவர்களின் பிறப்புத் தன்மை
கலைக்கோட்டு ரிஷி மானுக்கும், கவுசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், வால்மீகி வேடனுக்கும், அகஸ்தியர் குடத்திலும், வியாசர் செம்படத் திக்கும், வசிஷ்டர் ஊர்வசிக்கும், நாரதர் வண்ணாத் திக்கும், காதனசல்லியர் விதவைக்கும், மதங்கர் சக்கிலிச்சிக்கும், மாண்டவியர் தவளைக்கும், சாங்கியர் பறைச்சிக்கும், காங்கேயர் கழுதைக்கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜம்புவந்தர் கரடிக்கும்,அஸ்வத்தாமன் குதிரைக்கும் பிறந்தனராம்.

(நிறைவு)

- http://viduthalai.in/new/page-3/5410---53.html?sms_ss=blogger&at_xt=4d7ef4666d2208af%2C0