வெள்ளி, 10 ஏப்ரல், 2009

ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!

ஈழத்தில் போர் நிறுத்தம் 
ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!

தமிழர் தலைவர் உணர்ச்சி முழக்கம்

சென்னை, ஏப். 10- ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் - இதற்கான முயற்சியில் செயல்படு வோம் அல்லது செத்து மடிவோம் என்றார் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

இலங்கையில் போரை நிறுத்து என்று அறை கூவல் விட்டு நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பேரணியின் முடிவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி அவர்கள் உரை யாற்றுகையில் குறிப் பிட்டதாவது:

எமது தமிழர்கள் 30 கல் தொலைவில் சொல் லொணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். காக் கைக் குருவிகளைச் சுடு வதுபோல சிங்களப் படை சுட்டுத் தள்ளுகிறது. நச்சு வாயு குண்டுகளைப் போட் டுக் கொடூரமாகக் கொன்று குவிக்கின்றது.

24 மணிநேரத்தில்...

இதனைக் கண்டிக் கும் முறையில் வெறும் 24 மணிநேர இடைவெளி யில் ஒரு அறிக்கைமூலம் இலட்சக்கணக்கான மக்களை நமது முதல மைச்சர் கூட்டியுள்ளார். இன உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டியவர் கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வெறும் தேர்தல் பிரச் சினையல்ல இது - தேர் தலைவிட அடுத்த தலை முறையைப்பற்றி கவ லைப்படுபவர்கள் நாம்.

கலைஞர்
கட்டளையிடட்டும்!

இனி இத்தகைய பேர ணிகள் தேவையில்லை - என்ன செய்யவேண்டும்; எப்பொழுது செய்ய வேண் டும்; எப்படி செய்ய வேண்டும் என்று யூகம் வகுப்பதிலே நமது கலை ஞர் அவர்களுக்கு நிகர் கலைஞர்தான்.

கலைஞர் அவர்கள் கட்டளையிடும் இடத் தில்தான் இருக்கிறார். அதனை ஏற்றுச் செயல் படுத்த இலட்சோப இலட்ச மக்கள் இருக் கின்றனர். உலகில் உள்ள கோடானுகோடி மக்கள் - தமிழர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள். இலங்கை யில் போர் நிறுத்தம் வந்தே ஆகவேண்டும். இனிமேல் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது. இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைக்காக அத்தனை பேரும் கல்லறைக்குப் போகத் தயங்காதவர்கள் தான் இங்கே கூடியிருக் கின்றோம். ஈழத் தமிழர் களுக்காக ஒரு நாள் நாட கம் நடத்தக்கூடியவர்கள் அல்ல நாம்.

திருமாவளவன் போன் றவர்கள் தெளிவாக இருக் கிறார்கள். மக்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் - அது நடக்காது.

நமக்கு உள்ள உணர்வு இயற்கையானது, இயல் பானது! குழந்தை யாருக் குச் சொந்தம் என்ற ஒரு வழக்கில் குழந்தையை இரண்டாகப் பிளந்து ஆளுக்குப் பாதிப் பாதி அளித்துவிடலாம் என்று அரசன் சொன்னபோது, வேண்டாம், வேண்டாம், குழந்தையை இரண்டாக வெட்டவேண்டாம்; இந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடமே இருக் கட்டும் என்று ஒரு தாய் சொன்னபோது, உண்மையான தாய் அந்தப் பெண்தான் என்று அர சன் கண்டறிந்ததுபோல, உண்மையான தாயாக விருந்து இந்தப் பிரச்சினையிலே முதலமைச்சர் அக்கறை செலுத்தி வருகிறார்.

- "விடுதலை" 10-4-2009