செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம்


செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்




விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் 17.2.2011 மாலை செஞ்சி பேருந்து நிலை யம் அருகில் கெடார் சு.நடராசன் மூன்றாம் ஆண்டு நினைவு பகுத் தறிவுப் பிரச்சாரக்கூட் டம் எழுச்சியுடன் நடை பெற்றது.

விழுப்புரம் மாவட் ட தலைவர் ப.சுப்பராயன் தலைமையில் செஞ்சி நகர தலைவர் சு. அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பி னர்கள் நல்லாசிரியர் த.தண்டபாணி, புலவர் அ.எத்திராசன், சவுந்தரி நடராசன் முன்னிலை யில் கடலூர் மண்டல தலைவர் வ.சு. சம்பந்தம், கழக பேச்சாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ் சாக்ரடீஸ் சிறப்புரை யாற்றினார்.

விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசுபதி வரவேற்றார். செக்கடிக்குப்பம் பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன் பகுத் தறிவுப் பாடல்களைப் பாடினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், சென்னை சண்முகப்பிரியன், காணை ஒன்றிய செய லாளர் ரமேசு, கலையர சன், மலையரசன் குப்பம் சுப்பிரமணி, ஆறுமுகம், செஞ்சி நகர துணைச் செயலாளர் இரகுநாதன், மேல்மலையனூர் ஒன்றியத் தலைவர் மதியழகன், சிட்டிபாபு, மகளிரணி கலைச் செல்வி பசுபதி, பெரியார் பிஞ்சு கள் மதிவதனி, ஆற்ற லரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வழக்கு ரைஞர் அணி செயலா ளர் ந.விவேகானந்தன் நன்றி கூறினார்.

செஞ்சி யில் பகுத்தறிவுப்பிரச் சாரக்கூட்டம் நடைபெற்ற போது பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு கேட்டதோடு, சிறப்பு ரையாற்றிய தமிழ் சாக்ரடீசுக்கு மாலை அணிவித்துப் பாராட் டினர்.

- http://viduthalai.in/new/page-4/4005.html?sms_ss=blogger&at_xt=4d63be075829a2e0%2C0