சனி, 30 அக்டோபர், 2010

இலங்கை போர்க்குற்ற ஆதாரங்களை டிசம்பர் 15ஆம் தேதி வரை அய்.நா. சபைக்கு அனுப்பலாம்!

ஈழத் தமிழர்களுக்கு வல்லுநர் குழு கோரிக்கை!

நியூயார்க், அக்.28- இலங்கையில் நடந்த போர்க்குற்ற ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அய்.நா.சபைக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம் என்று அய்.நா. வல்லுநர் குழு கூறியுள்ளது.
இலங்கை அரசு படைகளுக்கும் , புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் பன்னாட்டு போர்விதிகள் மீறல்கள் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான்-கீ-மூன் நியமித்துள்ள அய்.நா.வல்லுநர் குழு அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கவென அய்க்கிய நாடுகள் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்துள்ள வல்லுநர்கள் குழு அறிவித்துள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் முறையீடுகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அய்.நா. சபை செயலாளர் பான்-கீ-மூன் ஆகியோருக்கிடையில் நியூயார்க் கில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஏற்பட்ட ஒப்பந்தத் தின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆரம்பிப்பதற்கு வல்லுநர் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் இது குறித்து ஆதாரங்களை தெரிந்து வைத்திருக்கும் யாரும் தமக்கு தெரிந்த உண்மைகளை முறையீடுகளா மின்னஞ்சல் மூலம் வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் ரகசியமாக பேணப்படும். அய்.நா.சபை வல்லுநர் குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் நீதிபதி மர்சூக்தருஸ்மான் தலைமை பொறுப்பை வகிப்பதுடன், அமெரிக்க சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரட்னர், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி விசாரிக்க கடந்த ஜூன் 22ஆம் தேதி அய்.நா. ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக்குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வல்லுநர் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், விவரங் களையும் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது.
தமிழர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். 10 பக்கங்களுக்கு மிகாமல் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வல்லுநர் குழுவிற்கு தமிழர்கள் அனுப்பி வைக்க தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விட வேண்டாம். எம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் நாம் செய்து கொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லாது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலோ அய்.நா. வல்லுநர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள்.
ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்ய வேண்டும் என்று அனைத்து தமிழர்களையும் அய்.நா. வல்லுநர் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் அய்.நா.வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் அய்.நா. வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் விரைந்து செயல்பட்டு சாட்சிகளை உடனே அய்.நா. வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

- http://viduthalai.in/news/index.php?option=com_content&view=article&id=246:2010-10-28-13-34-18&catid=38:2010-09-15-05-14-04&Itemid=55

பிச்சையல்ல சமூக நீதி!

திராவிடர் கழகத் தலைவரின் சட்ட ஆலோசனை காரணமாக தமிழ்-நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு நிலை பெற்றது. 1994ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்தை உடைத்துத் தூளாக்கிவிட வேண்டும் என்ற அதி தீவிர முயற்சியில் பார்ப்பனர்கள் பின்னணியில் இருக்க, உயர்ஜாதி தமிழர் ஒருவர் (விஜயன் என்ற வக்கீல்) வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் என்ற பெயரில் 1994ஆம் ஆண்டு முதலே உச்சநீதி மன்றத்திற்குப் போய் முட்டிக் கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசின் சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஒவ்வொரு ஆண்டும் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருந்தால் திறந்த போட்டிக்கு எத்தனை இடங்கள் உண்டோ, அத்தனை இடங்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்து வந்தது.

இந்த ஆண்டும் வழக்கம் போல அந்த வழக்குரைஞர் உச்சநீதிமன்றம் சென்று கதவைத் தட்டினார். ஆனால் உச்சநீதிமன்றமோ ஒவ்வொரு ஆண்டும் அளித்து வந்த ஆணையை மாற்றியது.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்-டோர் ஆணையத்தின் கருத்தினை ஏற்று அதன் அடிப்படையில் இட-ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்பது-தான் உச்சநீதிமன்ற ஆணை (13.7.2010).

அத்தோடாவது கடையை மூடிக் கொள்ள வேண்டாமா அந்த முற்-போக்கு ஜாதி முகாமினர்.

உச்சநீதிமன்றம் ஜூலையில் அளித்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி விண்ணப்பித்தனர்.

மறு ஆய்வுக்கு வேலையில்லை என்று கூறி ஏற்கெனவே ஜூலையில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புத் தொடரும் என்று கூறப்பட்டுவிட்டது. (26.10.2010)

இடஒதுக்கீடு என்று வந்துவிட்டால் தொடக்க முதலே முட்டுக்கட்டைதான்! 1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக் கீட்டைச் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் தூக்கி எறிந்தது. இந்திய அரசியல் சாசனம் வரைவுக் குழுவில் இருந்த அனந்தசயனம் அய்யங்கார், தான் வகித்த பொறுப்பின் மரியாதையைக் காற்றில் பறக்க விட்டு உயர் ஜாதி பார்ப்பனர்களுக்காக வாதாடி அவர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

சென்னை மாநில அரசுக்காக வாதாடிய அரசு வழக்கறிஞர் குட்டி கிருஷ்ணன் என்பவர் கூறினார்.

வகுப்புவாரி முறைப்படி மாண-வர்கள் அனுமதிக்கப்படவில்லையா-னால் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஒரு மாணவர்கூட கல்லூரியில் இடம் பெற மாட்டார். மூன்று முசுலிம் மாணவர்களுக்கு மட்டும் இடம் கிடைக்கும்.

ஆனால், சென்னை மாகாணத்தில் இருந்து வரும் வகுப்புவாரி உரிமைப்படி கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்-பட்டால் பொறியியல் கல்லூரிகளில் 77 பார்ப்பனர்களுக்குக் கிடைக்கும். பார்ப்பனர் அல்லாதார் 224 பேர்களாக,-வும் இந்தியக் கிறித்துவர், 31 பேர்களாக-வும், முசுலிம்கள் 26 பேர்களாகவும், தாழ்த்-தப்பட்டவர்கள் 26 பேர்களாகவும் இருப்பர்.

மக்கள் விகிதப்படி 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் இடம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களுக்கு வஞ்சனை செய்வதாக எப்படிப் பொருள்படும்? என்று அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணன் சட்டப்-படியும், நியாயப்படியும் வாதாடினார். நீதிபதி விஸ்வநாத சாஸ்திரி என்ற பார்ப்பனரோ பார்ப்பனர்களுக்காக மூன்றாவது வக்கீல் போல வாதாடினார். தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற அவர்களுக்கென்று தனிக் கல்லூரி-களைத் திறக்கலாமே என்று கிண்டல் செய்தார். சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம். அடிமை இந்தியாவில் இருந்து வந்த சமூகநீதியை அடித்தே கொன்று விட்டது.

தந்தை பெரியார் கிளர்ந்தெழுந்து போராட்டப் புரட்சிக் கொடியைத் தூக்கியதன் விளைவால்தான் முதன் முதலாக தமிழ்நாட்டின் இடஒதுக்கீடுக்-காக சட்டம் 1951-இல் திருத்தப்பட்டது.

ஆனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் அது செத்துப் பிழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்றால், அது 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்றனர். இந்திய அரசியல் சாசனத்தில் எந்த இடத்திலும் இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம்தான் என்று கூறப்படவில்லை. இருந்தாலும் நீதிமன்றங்களின் உயர் ஜாதித்தனம் சிவப்பு மையால் கோடு கிழிக்கிறதே இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்-டக் கூடாது என்று -_ இந்தப் பார்ப்-பனர் பண்ணையத்தைக் கேட்பார் யார்?

நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு ஆன நிலையிலும், திருத்தப்பட்ட அரசியல் சாசனப்ளீவீலீ பிற்படுத்தப் பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்-பட்டதே! மத்திய அரசு நியமித்த காகா
க-லேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் என்னாயிற்று? யாருக்குத் தெரியும்? அலமாரிக்குள்ளேயே மூச்சைப் போட்டு விட்டது. 1980இல் பி.பி. மண்டல் தலைமையிலான பிற்படுத்தப்-பட்-டோர் ஆணையத்தின் பரிந்துரை-களும் குழிதோண்டி மூடப்பட முழு மூச்சில் ஈடுபட்டது உயர்ஜாதிக் கூட்டம்.

52 மாநாடுகளையும், 16 போராட்-டங்களையும் திராவிடர் கழகம் நடத்-தியல்லவா அதற்கு உயிர்ப் பிச்சை கொடுத்-தது! இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதியாளர்களை ஒன்று திரட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்லவே!

மண்டல் காற்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சுழன்று சுழன்று வீசிட வகை செய்யப்பட்டதே! வாராது-வந்த மாமணியாய் ஒரு வி.பி. சிங் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்தார்.

மண்டல் குழுப் பரிந்துரையில் ஒரு பகுதியை வேலை வாய்ப்பில் பிற்படுத்-தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட-ஒதுக்கீடு என்று பிரகடனம் செய்தார். (7.8.1990) உயர்ஜாதி ஆணவக் கும்பல் அவர் ஆட்சியைக் கவிழ்த்தது.


அந்த ஆணையையாவது வாழ விட்டார்களா? 50 ஆண்டுகளுக்கு முன் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத் திருக்க வேண்டிய அந்த இடஒதுக்-கீட்டை 50 ஆண்டுகளுக்குப்பிறகும்கூட நடைமுறைப்படுத்த விடாமல் உச்சநீதிமன்றம் சென்றனரே! - இடைக் காலத் தடையையும் பெற்றனரே! அதற்குப்பின் இரண்டாண்டு காலம் கழித்துத்தானே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதிலும் ஒரு குறுக்குச் சால் ஓட்டினர். கிரீமிலேயர் என்ற ஒரு பொருளாதார அளவு-கோலைக் கொண்டு திணித்தது உச்சநீதிமன்றம். ஆண்டு வருவாய் ஒரு லட்சம் ரூபாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்-கான இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது. அதன் விளைவு என்ன தெரியுமா? குரூப் மி பதவிகளில் அதுவரை 5 விழுக்காடு இடங்களைப் பெற்றுவந்த பிற்படுத்தப்பட்டோர் 3.9 விழுக்காடாகக் குப்புறத் தள்ளப்பட்-டனர். போராடிப் போராடி இப்-பொழுது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில்தான் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்-காடுக்கு (9-_ஆவது சட்டத் திருத்தம் 15-இல் துணைப் பிரிவு 5 என்று சேர்ப்பு) வகை செய்யப்பட்டது.

அதையும் உடனே கொடுக்க மாட்டார்களாம். ஒன்பது ஒன்பது விழுக்காடாகப் பிரித்து 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவர்களாம். இப்பொழுது அடுத்த கட்டத்துக்குப் போய் விட்டனர். கபில்சிபல் _ அவர்தான் மனித வள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சர் _ நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல பார்ப்பனரைக் கல்வி அமைச்சராக ஆக்கினால் நாட்டின் கதி என்னாகும்? அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர், - பிற்படுத்தப்-பட்டோர் இருவருக்கும் பொதுவான வகையில் அவரவருக்குரிய விகிதப்படி கல்வியில் இடஒதுக்கீடு என்று பொது-வான சட்டம் கொண்டு வரப்பட்டது. வழக்கம்போல இதில் பிரித்தாளும் தந்திரம் கையாளப்பட்டது; தனித்தனி மசோதாக்களாகத் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு இருட்டில் ஒரு பெரிய சதிப் பின்னல்! நாடாளுமன்றத்துக்கே தெரியாது _ திடீரென மாநிலங்களவை-யில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்-பட்டது. ஒரு மசோதா தாக்கல் செய்யப்-படுவதற்குமுன் அதற்கென்று சில மரபுகள் உண்டு.

தாழ்த்தப்பட்டோர் பற்றிய மசோதா என்றால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறைக்குக்கூட அனுப்பப்படவில்லை. தேசிய தாழ்த்தப்-பட்டோர் ஆணையத்தின் கவனத்துக்-கும் கொண்டு செல்லப்படாமல் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் கடைசித் தொடரில் 2008 டிசம்பர் 23-இல் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டே இரண்டு நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவில் என்ன அடங்கி-யிருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் யாருக்குமே தெரியாது.

நாடாளுமன்ற நிலைக்குழு (தலைவர் சதர்சன நாச்சியப்பன்) தெரிவித்திருந்த பரிந்துரைகள் எல்லாம் இந்த மசோதாவில் காணாமற் போய் விட்டன.

இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மூன்றாண்டு சிறை; 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனையும் என்ற அவசியமான சரத்துகளையெல்லாம் தூக்கி எறிந்து-விட்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு இரண்டே நிமிடங்களில் நிறைவேற்றிக் கொண்டனர்.

பிறகுதான் அதில் புதைந்து கிடந்த சதிகளின் சர்ப்பங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்-டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் புதிதாகத் திணிக்கப்பட்ட சதிக் கிடங்காகும்.

இந்த அபாயத்தை முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான்.

சமூகநீதியின் போர் வாளாகிய விடுதலை மூலம் இதனை வெளிச்சத்-துக்குக் கொண்டு வந்ததோடு, அதனைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால்முன் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி-னார் (24.2.2009), அவரே அந்த ஆர்ப்-பாட்டத்திற்குத் தலைமையும் தாங்-கினார்.

சமூகநீதி என்பது சதிகாரப் பார்ப்பனீயத்தின் வட்டத்தைத் தாண்டி வருவது என்பது எளிதல்ல. போராடிப் பெற்றாலும், அதில் சந்து பொந்துகளை உண்டாக்கி உடைத்தெறிந்து விடுகின்-றனர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்-டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் இதில் ஒருங்கிணைந்து தங்களின் பெரும்பான்மைப் பலம் என்ற முஷ்டி-யைத் தூக்கிக் காட்டினால்தான் நாண-யமற்ற எதிரிகளான பார்ப்பனர்களை வென்று காட்ட முடியும்.

சமூகநீதி என்பது யாரும் போடும் பிச்சையல்ல; நமது உரிமைச் சாசனம் என்று நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராடித்-தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மானத்துக்கு உகந்ததல்ல!

50-க்கு 48

1950-க்கும் 1977-க்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் 50 பேர்களில் 48 நீதிபதிகள் பார்ப்பனர்கள் _ என்று கூறுகிறார். தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன். நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தால் நாடு என்ன ஆகும்?

- http://www.viduthalai.periyar.org.in/20101030/snews01.html



கேள்வி: டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறப்பு சாதனை நிகழ்த்தியவருக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை போப் கண்டித்துள்ளாரே? - பா.வளர்மதி, சிக்கல்

பதில்: பாவம், போப். பரிசுத்த ஆவி மூலம் திருமணமாகாமலேயே கன்னிமேரிக்கு குழந்தை பிறந்தது என்று நம்புபவர், சாட்சியத்துடன் பரிசோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தைக்காக கண்டனம் தெரிவிப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! எல்லாம் அவன் செயல் என்றாவது கூறி அவர் தப்பித்துக் கொண்டிருக்கலாமே!

கேள்வி : திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. இரண்டரை கோடி மதிப்பில் தங்கக் கிரீ டத்தைக் காஞ்சி சங்கர மடம் வழங்கி உள்ளதே? - த. சுரேஷ், நாச்சியார்கோவில்

பதில் : பிறழ் சாட்சிகள் மூலம் தன்னைக் காப்பாற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு லஞ்சம் போலும்!

கேள்வி: தேர்தலே இன்னும் அறிவிக்கப் படவில்லை. ஆனால், அரசியல் கட்சி அல்லாத நீங்கள் தி.மு.க.வுக்குப் பிரச்சாரத் திற்குக் கிளம்பிவிட்டீர்களே? - வ.கணேசன், சென்னை _ 6

பதில் : தி.மு.க. ஆட்சி _ திராவிடர்களின் மீட்சி _ இது தொடரவேண்டும் என்பது இலட்சியப் பயணம். நாங்கள் எப்போதும் அடுத்த தலைமுறையின் நல்வாழ்வு பற்றியே சிந்திப்பவர்கள்; எனவே, அடுத்த தேர்தல் பற்றி கவலைப்படாது, தி.மு.க. ஆட்சி மூலமே அடுத்த தலைமுறையின் மான வாழ்வு, உரிமை வாழ்வு தொடரும் என்று நம்புவதால்,போர்ப்படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டியதுதானே அதன் கடமை?

கேள்வி: உத்தரப் பிரதேசத்தில் இங்கிலீஷ் மொழிக்குக் கோயிலாமே! - நா.சென்னியப்பன், சித்தாமூர்

பதில்: தமிழ்த்தாய்க்கு கோயில் கட்டி யதையே தந்தை பெரியார் கண்டித்தார் _ இது ஒரு கோமாளிக்கூத்து. உ.பி.யில்., அதற்கு கல் லறை கட்டாமல் இருந்தால் அதுபோதுமே!

கேள்வி: இந்து மதத்தில் உள்ளது போல வேறு மதங்களில் கடவுள் அவதாரங்களை எடுத்ததுண்டா...? - மீசை பிலவேந்திரன்,சிவகாசி

பதில்: இல்லை; இல்லவே இல்லை. இந்து மதத்தில்கூட மும்மூர்த்திகளில் _ சிவனோ, பிரம்மனோ அவதாரம் (கீழேஇறங்கி வருதல் என்று பொருள்) எடுத்ததில்லையே!

கேள்வி: சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதைத்தான் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே, அது சரியா? - வரத. மணிமேகலை சென்னை _ 113

பதில்: தவறு; மாபெரும் தவறு. பிள்ளை கள்மீது திணித்தல் கூடாது. அவர்கள் எந்த வகையான படிப்பைத் தேர்வு செய்கிறார் களோ அதையே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.

கேள்வி: கோயில்களில் குழல் விளக்கு களில் உபயம் என்று கூறி கொட்டை எழுத்துகளில் தங்கள் பெயர்களை எழுதி வைக்கிறார்களே?

பதில் : விளம்பரம் விரும்பாத தர்மவான்கள்!

கேள்வி: பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக சிலர் பேசுவதாகத் தெரிகிறதே? - வி.சுந்தரன், ஈரோடு_1

பதில்: சிலர் என்ன, பலர் அன்றாடம் பேசி சவால் விட்டு தாங்கள் உயிருடன் இருப்பதை உலகுக்கு அறிவிக்க அது ஒரு வழி _ அவர்களுக்கு!

கேள்வி : பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் இதுவரை தண்டனை பெறாததற்குக் காரணம், அவர்கள் விளம்பரம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்பதாலா? - மு.முபாரக், இலந்தங்குடி

பதில்: இந்தக் கேள்விகளை பிரதமர், உள்துறை அமைச்சர் _ ஆகியவர்களை நோக்கிக் கேட்டால்தான் சரியான விடை கிடைக்கும்.

கேள்வி: திராவிட இயக்கத்தால் பெரிய பதவிகளுக்குச் சென்ற சிலர் சங்கர மடத்திற்குச் செல்கிறார்களே? - செங்கை பூபதி

பதில்: அடுத்து வைகுண்ட பதவி, கைலாச பதவிக்கு முன் ஏதாவது பதவி கிடைக்காதா என்ற நப்பாசைதான் _ மானங்கெட்ட ஜென்மங்கள்!

- http://www.viduthalai.periyar.org.in/20101030/snews11.html

வியாழன், 28 அக்டோபர், 2010

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விட இயலாதாம்!

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விட இயலாதாம்!
முதல்வர் எடியூரப்பா தலைமையில்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவாம்!

பெங்களூரு, அக்.28- தமிழகத்துக்கு காவிரி யில் தண்ணீர் திறந்து விட இயலாது என்று எடியூரப்பா தலைமை யில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி நீர் நிலவரம் குறித்து சட்டசபை அனைத்து கட்சி தலை வர்கள் கூட்டம் முதல மைச்சரின் அலுவலக இல்லமான ``கிருஷ்ணா'' வில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்துக்கு முதல மைச்சர் எடியூரப்பா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மாநில நீர்ப்பாசன அமைச் சர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சட்டசபை குழு தலை வர் ரேவண்ணா, கருநா டக மேல்-சபை எதிர்க் கட்சி தலைவர் மோட் டம்மா, அமைச்சர்கள் ஆச்சார்யா, சுரேஷ் குமார், அசோக் மற்றும் தலைமை செயலாளர் ரங்கநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கருநாடக அணைகளில் தற்போது உள்ள நீர் அளவு மற்றும் கருநாடகத்துக்கு விவ சாய பணிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன் படும் நீர் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு நீர்பாசன அமைச் சர் பசவராஜ்பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதா வது:-
முதலமைச்சர் எடி யூரப்பா தலைமையில் அனைத்துக் கட்சி தலை வர்கள் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத் தில் தமிழக முதலமைச் சர் கலைஞர் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விடுத்த கோரிக்கை குறித்து ஆலோசிக்கப் பட்டது.
மேலும் இந்த கூட் டத்தில் தற்போது கருநா டக அணைகளில் உள்ள நீர்மட்டம் மற்றும் மழை அளவு, தற்போது அணைகளுக்கு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்து போன்றவை குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தினோம். கரு நாடக விவசாயிகளுக்கு தேவைப்படும் நீரின் அளவு, பெங்களூரு, மைசூரு மற்றும் கிரா மப்புறங்களுக்கு தேவைப் படும் நீரின் தேவை குறித் தும் ஆலோசித்தோம்.
தற்போது கே.ஆர். எஸ். அணையில் 124.7 அடி தண்ணீர் உள்ளது. இந்த நீரின் அளவுக்கும், கருநாடக நீர் தேவைக் கும் சரியாக உள்ளது. கர்நாடக விவசாய பணி கள் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இந்த நீர் போதுமானதாக உள் ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு தண் ணீர் திறந்து விடுவது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101028/news28.html

பிரச்சாரம்

மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
- விடுதலை, 5.1.1972

இங்கிலீசுக்குக் கோயிலாம்!

கோயில்கள் ஏன் தோன்றின? எதற்குத் தோன்றின? அதன் பின்னணி என்ன? என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.
உத்தரப்பிரதேசத்திலே இங்கிலீசுக்குக் கோயில் தோன்றியுள்ளதே - திருச்சியில் நடிகை குஷ்புக்குக் கோயில் கட்டப்பட்டதே, ஈரோட்டில் காந்திக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளதே - இவற்றின்மூலம் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுவிடலாம்.
கடவுளுக்கும் சக்தி, ஒவ்வொரு கோயிலக்கும் எழுதி வைக்கப்பட்டுள்ள தல புராணங்கள் எல்லாம் நெய்யில் பொரித்த பச்சைப் பொய் - கலப்படமற்ற பொய் என்பது அறிவைப் பயன்படுத்தும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் கோயில்கள் ஏன் தோற்றுவிக் கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டு மானால் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திர நூலைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.
கோயில்கள் அரசன் வருவாய்க்காக ஏற் படுத்தப்படவேண்டும் என்பதுதான் சாணக்கியன் சொல்லிச் சென்ற தந்திரம்.
ஓர் இரவு ஒரு தெய்வத்தையோ, படத்தையோ ஏற்படுத்தவேண்டியது; அல்லது ஒரு கெட்ட சகுனத்தைப் போக்கிட (தீயவை நடக்காவண்ணம் தடுக்கும் பொருட்டு) திருவிழாக்களும், கூட்டங் களும் நடத்துவதாகப் பாசாங்கு செய்து பொது மக்களிடமிருந்து அரசனது செலவுக்குப் பணம் வசூலிக்கலாம்.
(சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் தோன்றியதாகப் புரளி செய்து, உண்டியல் வசூல் செய்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் கடுமையான எச்சரிக் கைக்குப் பிறகு - உண்டியலும், திடீர்ப் பிள்ளை யாரும் பறிமுதல் செய்யப்பட்டதே - அதனை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்க! - இந்தப் பித்தலாட்டங்களுக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆமாம் போட்டார் என்பதையும் கவனத்தில் கொள்க!).
சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் பலன் அளிக்கின்றன. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து, பணம் திரட்டும் வழி முன்காலத்தில் மற்ற நாட்டுப் புரோகிதர்களால் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்னும் அவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்ரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டுப் பரவசமடைகிறார்கள். ஆனால், கர்ப்பக் கிரகத்தின் உள்ளோ, பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகிறான் என்பதை இவர்கள் அறிவதில்லை என்கிறார் ஆபேடூபே.
இத்தகைய கோயில்களில் பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் தேடிக் கொண்டுவிட்டனர்.
கோயில் என்றால், அதற்குள் அடித்து வைக்கப் பட்ட விக்ரகங்கள் என்றால் பொது மக்களிடம் பக்தியும், பயமும், மரியாதையும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சூழ்நிலையில், யாரையாவது பெருமைப்படுத்தவேண்டுமானால், அவர்களுக்குக் கோயில் கட்டுவது என்பது ஒரு வழமையாகி விட்டது.
ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திட ஆங்கிலத் தேவி எனும் பெயரால், உத்தரப்பிரதேசம் கிரி மாவட்டத்தில் கோயில் எழுப்பப்பட்டு வருகிறதாம்.
மற்ற மற்ற கோயில்களில் எந்த முறையில் வழிபாடு நடத்தப்படுகிறதோ அந்த முறையில் இந்த ஆங்கிலத்தேவி கோயிலிலும் வழிபாடு நடத்தப் படுமாம்.
இன்னும் கொஞ்ச நாள்களில் இந்தத் தேவி பற்றி தல புராணங்கள் எழுதப்பட்டுவிடும். தேவி கனவில் வந்து சிலவற்றைக் கூறினாள் என்று அற்புதங்கள் அடங்கிய கதைகளைக் கட்டி விடுவார்கள்.
ஆண்டுதோறும் தேர்த்திருவிழா என்ற வைபவங்கள் வந்து சேரும்.
தொடர்ந்து இது கிறித்துவக் கோயிலா, இந்துக் கோயிலா என்ற ரகளையும் ஏற்படும்.
கோயில்கள் தோன்றியதற்குப் பின்னணியில் அற்புதமோ, அசைக்க முடியாத சக்தியோ எந்தப் புண்ணாக்கும் கிடையாது; எல்லாம் பொய்யும், புனை சுருட்டும், பிழைப்பதற்கு வழியும், பித்த லாட்டமும்தான் என்பதைக் கண்ணெதிரே நடை பெறும் இந்தப் புழுதிக் கூத்துக்களின் மூலமாக வாவது தெரிந்துகொள்வார்களாக!

- http://www.viduthalai.periyar.org.in/20101028/news04.html

ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்!

முதல்வரின் முக்கிய கவனத்துக்கு...
ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!!
தமிழர் தலைவர் சுட்டிக்காட்டும் ஆபத்து

யுனிகோட் (Unicode) எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங் கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.
தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு
கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை (File) வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.
ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணைய தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர். இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும்.
ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.
அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோட் சேர்த்தியம் (Unicode Consortium)அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.
பார்ப்பனர் சதி!
இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ஆம் நாள், சிறீரமண சர்மா என்ற பார்ப்பனர் யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கிரந்தம் என்பது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுத தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறையாகும். பல்லவர் காலத்திலும், பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்திலும் சமஸ்கிருதத்திற்கான தேவநாகரி தவிர்த்த மற்றொரு லிபியாக கிரந்தத்தைப் பயன்படுத்தி வந்தனர். தமிழின் தனித்தன்மையை ஒழிக்க ஆரியர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்தான் மணிப்பிரவாள நடையில் எழுதியதும் கிரந்த எழுத்துகளை பிரபலப்படுத்தியதும் ஆகும்!
தமிழும் - சமஸ்கிருதமும் ஒன்றல்ல!
இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.
இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீரமணசர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும்,g, gh, kh, chh, jh உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.

பச்சையான ஊடுருவல்!
சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!
யுனிகோட் குறியீட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துக்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டிருக் கிறது. அதில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே இந்த எழுத்துகளை! அல்லது கிரந்தத்திற்கென தனி ஒதுக்கீட்டைப் பெறவேண்டியது தானே! அது அவ்வளவு எளிதல்ல!
புதிதான ஒரு வரி வடிவத்தை சேர்க்க வேண்டுமா? என்று யுனிகோட் சேர்த்தியம் அமைப்பு கேட்கும் கேள் விக்கு, இல்லை, இது ஏற்கெனவே இருக்கும் தமிழ் வரி வடிவத்தை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார். இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ்
அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ஆம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ஸ்ரீசதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ் மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ஆம் ஆண்டு வெளியான டி.எஸ். நாராயண சாஸ்திரி என்பாரின் போஜ சரிதம் என்னும் நூலுமாகும்.
இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து விரிவாக்கப்பட்ட தமிழ் (Extented Tamil) என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது. படுகொலை செய்யப்பட்ட தமிழாகத் தான் (Assassinated Tamil) இருக்க முடியும்.
காஞ்சி சங்கரமடத்தின் சூழ்ச்சி!
இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் காஞ்சி காம கே()டிகளின் கரம்தான் இருக்கிறது என்பது அய்ய மில்லாமல் தெரியும் ஒன்றாகும். சிறீ ரமண சர்மா தந் திருக்கும் எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல. இது குறித்த அவர் விவாதித்ததாகக் கூறியிருக்கும் வல்லுநர்கள் மதராஸ் சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் வேணுகோபால் ஷர்மா போன்றவர்களாவர்.
தமிழில் மேம்படுத்த சமஸ்கிருதப் பேராசிரியர் களிடம் கேட்பானேன்? வேலிக்கு ஓணான் சாட்சியா?
இணையத்தில் தமிழ் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழ் கணினியில் பெரும் சாதனைகள் செய்கிறார்கள் என்ற பொறாமையில் நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்பே இது! இச்செய்தியறிந்ததும் உலகத் தமிழர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு - முதல்வரின் கவனத்திற்கு...
ஆயினும், இது குறித்த கடுமையான கண்டனமும், மறுப்பும் உடனடியாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு சென்றால்தான் இந்தக் கொடுமையைத் தடுக்க முடியும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இப்பிரச்சினை யில் உடனடி கவனம் எடுத்து செயல்பட வேண்டும். முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் காலத்திலேயே தமிழக அரசுக்குத் தெரியாமல் கொல்லைப்புற வழியாக தமிழுக்குக் கேடு பயக்க நினைக்கும் ஆரியத்தின் சதிச்செயல் வெற்றிபெற்று விடக் கூடாது. தமிழின் வளர்ச்சிக்கு ஆரிய சமஸ்கிருதத் திணிப்பு பெரும் தடையாக அமைவதோடு, தமிழைப் பின்னோக்கி படுகுழியில் தள்ளிவிடும். உடனடி நடவடிக்கை மட்டுமல்லாது, இத்தகைய திரிபு வேலைகளும், திணிப்புகளும், பண்பாட்டுப் படை யெடுப்புகளும் எவ்வகையிலும் நிகழ்ந்துவிடாமல் இருக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களும், கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகளும் இத்திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து, இது நடக்கக்கூடாது என்று யுனிகோட் அமைப்புக்கு முறையிட்டுள்ளன. கண்டனங்கள் வெடிக்கட்டும்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப் பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் தங்களின் வழக்கமான ஊடுருவல் சதியில் ஈடுபட்டுவிட்டனர், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் அவசர அவசரமாகத் தலையிடுவார்களாக!
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் (Tamil Virtual University Society) முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள், ஒருங்குறி (யுனிகோட்) சேர்த்தியத்தின் தலைவர் டாக்டர் லிசா மூர் (யு.எஸ்.ஏ.) அவர்களுக்கு தமிழில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்பற்றிய சதி குறித்து விரிவாக எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் இந்தப் பார்ப்பனச் சதியை முறியடிக்க அனல் கக்கும் குரலை எழுப்புவார்களாக!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
28.10.2010
- http://www.viduthalai.periyar.org.in/20101028/news01.html

புதன், 27 அக்டோபர், 2010

தீர்ப்பு தாமதம் ஆவதால்...

திருப்பத்தூர் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை என்பதாகும்.
தீர்மானம் வருமாறு:
450 ஆண்டுகளுக்குமுன்பு அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி - 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. - மற்றும் சங் பரிவார்க் கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.
18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீதான தண்டனை இதுவரை வழங்கப்படாத நிலையில்,
அயோத்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சி.யு. கான் ஆகிய மூவரும் சட்டத்தின் அடிப்படையில், ஆவ ணங்களின் அடிப்படையில் இல்லாமல் வெறும் நம்பிக்கை என்பதை முக்கியமாக மய்யப்படுத்தி வழங்கியுள்ள தீர்ப்பு (க்ஷநடநைக யனே கயவை) சட்டம், நீதி, மதச் சார்பின்மை, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தன்மைகளையும் அடித்து நொறுக்கக் கூடியதாகும்.
சட்டங்களையும், சாட்சியங்களையும் புறந்தள்ளி, சட்டப்படியான நீதிமன்றம் (ஊடிரசவ டிக டுயற) என்பதற்குப் பதிலாக நம்பிக்கை மன்றம் (ஊடிரசவ டிக கயவை) என்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
சிந்தனைக்கு இடம் கொடுக்காத நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் மலிவான ஒரு சொல்லாகும். அதனை ஒரு உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல!
யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கட்டப் பஞ்சாயத்து முறையில் பாகப் பிரிவினை வழக்காக இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மாற்றிவிட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில், அயோத்திப் பிரச்சினையில் இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்துக் கூறத் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அலகாபாத் தீர்ப்பினை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது விசித்திரமான நிலையாகும்.
1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த நிலை எதுவோ அதுவேதான் தொடரப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங் கள் பற்றிய சிறப்புச் சட்டம் கூறும் நிலையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வரலாற்றில் பின்னோக்கிப் பயணத்தைத் தொடங்கினால், அது வேண்டத் தகாத புதிய தலைவலிகளை ஏற்படுத்தும் என்பதையும், குறிப்பாக ஆயிரக்கணக்கான புத்த விகார்கள் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டுள்ள நிலையைப் பரிசீலித்து இந்துக் கோயில்களை பழையபடி புத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையும், போராட்டமும் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அத்தனைப் பேரும் விளம்பரம் பெற்ற அரசியல் பிரமுகர்கள் ஆதலால் அவர்கள்மீதான தண்டனை அளிப்பதில் சட்டம் - நீதிமன்றம் தயக்கம் காட்டுகிறது என்பது வெளிப்படை.
சட்டத்துக்குமுன் அனைவரும் சமம் என்று பெருமையாகக் கூறிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.
பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக மும்பையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்ட நிலையில், மூல வழக்கு மூலையில் குறட்டை விடுகிறதே - ஏன் என்ற கேள்வி எழாதா?
துணைப் பிரதமராக இருந்த அத்வானி போன்றவர்கள் நீதி மன்றத்தில் வழக்கை விரைவாக நடத்திட ஒத்துழைப்புக் கொடுக் காமல், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் தந்திரத் தில்தான் ஈடுபட்டனர் என்பது எத்தகைய வெட்கக்கேடு - பா.ஜ.க. வின் தார்மீகத்தின் சாயம் இதன்மூலம் வெளுத்துவிடவில்லையா?
லிபரான் ஆணையத்தின்முன் அத்வானி வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்வி கடுமையாக இருப்பதாகவும், அவரிடம் மென்மையான முறையில் கேள்வி கேட்கப்படவேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டாரே!
அத்வானி தலைமையில் சங் பரிவார் - காவிக் கும்பல் பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்ததற்குக் கனமான சாட்சிக்குவியல்கள் இருக்கின்றன. வீடியோ காட்சி உள்ளது. நேரில் பார்த்த செய்தியாளர்கள் இருக்கிறார்கள். அத்வானியின் பாதுகாப்புக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்ற பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா என்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியே, எல்.கே. அத்வானி, வினய் கட்டியார், உமாபாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோர் பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டவேண்டும் என்று கரசேவகர்களைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டார். அதைவிடக் கொடுமை நாடாளுமன்றத்தில்- மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) கொஞ்சம்கூட கூச்சப்படாமல், மிகமிக வெளிப்படையாக ஆமாம், பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்டனையை ஏற்கத் தயார் என்று பேசியிருக்கிறார் (8.12.2009). இதற்குப் பிறகும் தூங்கு மூஞ்சி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்கிறது என்றால், இதன் பின்னணி சாதாரணமானதா என்ன என்ற அய்யம் பொது மக்களுக்கு எழாதா? ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தாலும்கூட, அதற்குப்பின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சொல்லி காலத்தைக் கரியாக்கிவிடமாட்டார்களா?
இந்தியாவில் சட்டமும், நிருவாகமும், நீதித்துறையும் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒன்று போதுமானது.
எந்த வன்முறையை மேற்கொண்டாலும், அரசியல் செல்வாக்கு என்பது பின்னணியில் இருந்தால், பெருங்கூட்டமாக ஒன்றைச் செய்தால், அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் இன்றைய பிரத்தியட்ச நிலையாகும்.
இந்தத் துணிச்சலால்தான் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பல் நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியா முழுமையும் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்புகளுக்கு இந்தக் கும்பல்தான் காரணம் - திட்டமிட்ட சதி வலைப்பின்னல் இருந்திருக்கிறது என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பு என்ற ஒரு கயிற்றின் முனையைத் தொட்டுக்கொண்டே போனால், அது மும்பை குண்டு வெடிப்பு, அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஷெரீஃப், அகமதாபாத் குண்டுவெடிப்புகள் தென்காசி வரை இந்தக் கூட்டத்தின் கைவண்ணம் இருப்பது தெரிய வந்தது.
இந்த உண்மைகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த காவல்துறை உயர் அதிகாரி சுட்டுக் கொல்லப்படுகிறார் என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?
நாட்டில் என்ன நடக்கிறது? இவ்வளவுக்குப் பிறகும்கூட பாபர் மசூதி இடிப்புப் பேர்வழிகள் மீதான வழக்கு விசாரணையில் வேகம் காணப்படவில்லை.
இதனைத்தான் திருப்பத்தூர் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை இந்தியாவின் சட்ட- ஒழுங்கு என்பதெல்லாம் அசல் கேலிக்குரியதுதான்.
அரசியல் கட்சிகள் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்பதே நமது கருத்தாகும்.
- http://www.viduthalai.periyar.org.in/20101027/news07.html

வெள்ளி, 22 அக்டோபர், 2010

சீனா எங்கே செல்கிறது?

கம்யூனிஸ்ட் நாடு என்று முத்திரை குத்திக் கொள்ளும் சீனா திசை தடுமாறி எங்கேயோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. பொருளா தாரக் கண்ணோட்டத்தில் முதலாளித்துவத் திசையில் அது செயல்படுவது ஒருபுறம் இருக்கட்டும்.
அடிப்படைக் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களி லிருந்து சிதறிப் போய்விட்டது என்பதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
சீனாவில் மதத் தலைவர்களின் மாநாடு இத்திங்கள் 24, 25 ஆம் தேதிகளில் நடை பெறவுள்ளதாம்.
400 மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் இதில் பங்கேற்க உள்ளனராம். சீன அரசால் நடத்தப்படும் சீன அயல்நாட்டு நண்பர்கள் சங்கம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
இதில் கலந்துகொள்ள வாழும் கலை என்னும் அமைப்பை நடத்தி வரும் சிறீ ரவிசங்கருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்த நிகழ்ச்சி உதவப் போகிறதாம்.
ஒரு நாட்டின் உறவு ஆன்மிகத்தால்தான் ஏற்படும் என்பது 2010 ஆம் ஆண்டின் மார்க்சியத் தத்துவம் போலும்!
அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்று வந்த - பெங்களூரு வாழும் கலை ஆசிர மத்தின் யோகாசிரியர் அமோல்ஜி, சீனாவில் ஆன்மிக உணர்வு தலை எடுத்திருப்பது குறித்து கூறியுள்ளார்.
பொருள் முதல் வாதத்தை முன்னிறுத்தி சித்தாந்த உணர்வைத் தூண்டி மக்களைப் பக்குவப்படுத்த கடமைப்பட்டுள்ள சீன அரசு - அதற்கு நேர் எதிரான திசையில் ஓடுவது - ருசியாவுக்கு ஏற்பட்ட கதி சீனாவுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தன்னம்பிக்கையை முன்னிறுத்தி - முதலாளித்துவ முதலைகளை முகவரியில்லாமல் ஆக்கவேண்டிய கடப்பாடு உள்ள ஓர் அரசு, ஆன்மிக முதலைக்குத் தீனி போடும் ஒரு வேலையில் இறங்குவது இரங்கத்தக்கதாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் பாசிஸ்ட் ராஜபக்சேவுக்குக் கைலாகு கொடுத்ததன்மூலம் சீனாவின் நிறம் சிகப்பு அல்ல என்ற கருத்து ஏற்கெனவே உருவாகிவிட்டது.
மக்களின் மனப்பான்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் சீனா கோட்டை விட்டுவிடக் கூடாது என்று எச்சரிப்பது முற் போக்குச் சிந்தனையாளர்களின் கடமையாகும்.
சீனாவில் ஆன்மிக மாநாடு என்ற தகவல் வந்து அதன் ஈரம் காய்வதற்குள்ளாகவே அடுத்த ஒரு தகவல் - மூடநம்பிக்கையின் கைபிள்ளை யாக சீன அரசு தவழ ஆரம்பித்துள்ளது என்பதாகும்.
4 என்ற எண் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், சீன மொழியில் நாலு என்பது சாவு என்பதுபோல் ஒலிப்பதாகவும், இந்தக் காரணத்தால், வாகனங்களின் எண் பலகையில், அதிர்ஷ்டம் இல்லாத 4 என்ற எண் நீக்கப்படு வதாகவும் வெளிவந்துள்ள தகவல்தான் அது.
எந்த அளவுக்கு செஞ்சீன அரசு பிற்போக் குத்தனத்தின் கடைகோடிக்குச் சென்று இருக் கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இன்னும் சிலர் அங்கு 7 என்ற எண்ணையும் வெறுக்கிறார்களாம்.
உலகின் பல நாடுகளில் 13 என்ற எண்ணை வெறுப்பதுண்டு. அவை எல்லாம் முதலாளித்துவ சாயலை உடையவை.
அய்ரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் 13 என்ற எண்ணை விரும்புவதில்லை; 12 ஆவது மாடிக்கு அடுத்து 14 என்று போட்டுக் கொள் வார்களாம். சிலர் 12-க்குப் பிறகு 12-ஏ என்று குறிப்பிடுவதுண்டாம்.
இந்தக் கேடுகெட்ட நிலை சீனாவுக்கும் வரவேண்டுமா? ஏன் இந்த நிலை? வெறும் அரசோடு நின்றுவிட்டு, கட்சியின் சித்தாந்தங் களை, கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் கடமையைச் செய்யத் தவறிய எந்த ஆட்சிக்கும், எந்தக் கட்சிக்கும் இந்த நிலைதான் ஏற்படும் - எச்சரிக்கை!
http://www.viduthalai.periyar.org.in/20101022/news08.html

வியாழன், 21 அக்டோபர், 2010

ஸ்டெம் செல் மருந்து மூலம் மூட்டு மாற்று சிகிச்சை

ஸ்டெம் செல் மருந்து மூலம் மூட்டு மாற்று சிகிச்சை
இங்கிலாந்து அறிஞர்கள் கண்டுபிடிப்பு
லண்டன், அக். 21- உலகில் மூட்டு வலி யால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்காக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர். இதனால் ஏற்படும் கடுமையான வலியை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மூட்டு மாற்று சிகிச்சையை அறுவை சிகிச்சை இன்றி ஸ்டெம் செல் மருந்து மூலம் குணப்படுத்த முடியும். இந்த சாதனையை இங்கிலாந் தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த அறிஞர்கள் குழு படைத் துள்ளனர்.
ஸ்டெம் செல் மூலம் தயாரிக்கப் படும் மருந்தை பாதிக்கப்பட்ட மூட்டு களுக்கு இடையே ஊசி மூலம் செலுத்தினர். அந்த மருந்து பாதிக்கப் பட்ட செல்கள் போன்று மாறி உறுதி யான சவ்வுகளை உருவாக்கி நோயை குணப்படுத்தியது. இதன் மூலம் 10 வருடங்களாக மூட்டு இணைப்புகள் பாதிப்பு, இடுப்பு எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயன் பெறலாம்.
மேலும், எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இச்சிகிச்சையின் மூலம் குணமடையலாம். இம்முறை யில் மூட்டு மாற்று சிகிச்சை பெறுப வர்கள் 2 வாரத்திற்குள் குணமடைய முடியும் என முன்னணி அறிவியல் பேராசிரியர் சூ கிம்பர் தெரிவித்து உள்ளார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101021/news39.html

11 ஆண்டுக்கு ஒருமுறை சூரியனும் ரீசார்ஜ்

11 ஆண்டுக்கு ஒருமுறை சூரியனும் ரீசார்ஜ்

சேற்றில் புதைந்த யானையின் கதை!

அயோத்திப் பிரச்சினையில் அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு கட்டப் பஞ்சாயத்து முறையில், மூட நம்பிக்கைக்கு நம்பிக்கை என்னும் முகமூடி அணிந்து மகுடம் சூட்டிவிட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்று கூறி பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தும் வகையில் பேசித் திரிகின்றனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்ற வாளிகளின் பட்டியலில் உள்ளவர்கள் இப்பொழுதே விடுதலை அளிக்கப்பட்டதுபோல துள்ளிக் குதிக் கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணம் சொன்ன அடல் பிகாரி வாஜ்பேயி, அயோத்திப் பிரச் சினை தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு தாமதம் ஆனதால்தான் பாபர் மசூதி இடிக் கப்பட்டது என்று இடிப்புக்கு நியாயம் கற்பித்தார். இவர் எல்லாம் ஒரு பிரதமர் - அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்ற அவதரித்தவர் என்று நாட்டு மக்கள் நம்பித் தொலையவேண்டும்.
அலகாபாத் தீர்ப்பு - பாபர் மசூதி இடிப்புக் குற்ற வாளிகளைக் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல வில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னார் என்றவுடன் அவர்மீது பாய்ந்து பிராண்டு கிறார்கள்.
காவி பயங்கரவாதம் என்ற சொல்லாடலை எப்படி பயன்படுத்தலாம் என்று எகிறிக் குதிக்கின்றனர்.
முஸ்லிம் பயங்கரவாதம் என்று பார்ப்பன ஏடுகளும், சங் பரிவார்க் கும்பலும் பயன்படுத்தியபோது பாயாசம் சாப்பிட்டதுபோல இருந்தது - உள்துறை அமைச்சர் என்கிற முறையில் தகவல்களை அதிகாரப்பூர்வமாகக் கையில் வைத்துக்கொண்டுள்ளவர் காவிப் பயங்கர வாதம் என்று அடையாளம் காட்டும்போது ஆத்திரம் அலை புரள்கிறதே - ஏன்? உண்மையைச் சொன்னால் எரிச்சல்தானா?
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் ஆட்டம் போட்டபோது, குண்டுவெடித்தபோது - அவை எல்லாம் முசுலிம்கள் முதுகின்மீது ஏற்றி முஸ்லிம் தீவிரவாதம் என்ற முத்திரையும் குத்தப்பட்டது.
2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், மே மாதத்தில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத் 2008 செப்டம்பரில் மாலேகான் முதலிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தபோது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது, இந்த வன்முறைகளின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் குறிப்பாக சிமி என்ற முஸ்லிம் அமைப்புதான் இருக்கிறது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.
பார்ப்பன ஊடகங்கள் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிட்டன. உளவுத் துறையும் கூட இப்பிரச் சினையில் தடுமாறிவிட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மகா ராட்டிராவில் தீவிரவாத தடுப்புப் படை அதிகாரியாக (ATS) ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்ற நிலையில்தான், உண்மையில் இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணி யில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்கள் திட்ட மிட்ட வகையில் வட்டமாகச் சூழ்ந்துள்ளன என்பது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
பெண் சாமியார் பிரக்யாசிங் சாத்வி, சங்கராச் சாரியார் தயானந்த பாண்டே, இராணுவத் துறையைச் சேர்ந்த புரோகித் உள்ளிட்டவர்களின் சதி வலைப் பின்னல் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதே!
அகம்பாவம் பிடித்த ஆர்.எஸ்.எஸ். வட்டாரம் கலகலத்தது - வந்தது ஆபத்து என்று கவட்டிக்குள் தலை வைத்துக் கவிழ்ந்து படுத்தனர்.
இதற்கிடையே மும்பை தாஜ் ஓட்டல் பயங்கர வாதிகளால் தாக்கப்பட்டதைப் பயன்படுத்தி காவல் துறையில் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட வரும், இந்தியாவின் தொடர் வன்முறைகளுக்குக் காரணமாக இருந்த சங் பரிவார் வட்டாரத்தை வெளி உலகுக்குக் காட்டியவருமான கர்கரே சந்தேகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மகாராட்டிர மாநிலக் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம். முஷ்ரீப் வெளிப்படையாகவே நூல் ஒன்றை வெளியிட்டார். மத்திய அமைச்சரான அந்துலே அவர்களேகூட காவல்துறை அதிகாரி கர்கரே கொல் லப்பட்டதில் சதி இருக்கிறது என்று கூறவில்லையா?
உண்மைகள் எல்லாம் இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்கள் உத்தமபுத்திரர்கள் போல வன்முறை முத்திரையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பார்களேயானால் - அது, சேற்றில் புதைந்து கொண்டிருக்கும் யானை வெளியில் வர திமிரத் திமிர மேலும் மேலும் ஆழமாகப் புதைந்து போகும் நிலையைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றோம்!
- http://www.viduthalai.periyar.org.in/20101021/news09.html

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பிபிசி நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிபிசியின் உலகச் செய்திகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்கின்ற நேயர்களின் வாராந்திர எண்ணிக்கை முன்பில்லாத அளவுக்கு 24 கோடியாக அதிகரித்துள்ளது.
சிற்றலை வரிசை மூலம் பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் எண்ணிக்கையில் 2 கோடி குறைந்துள்ளது என்றாலும்கூட, மொத்த நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவிலும் வங்கதேசத்திலும் சிற்றலை நேயர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.

பிபிசி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும் இணையம் மூலமாகவும் பெறுகின்ற புதிய நேயர்கள் கோடிக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளது இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

பிபிசி செய்திகள் பல வெளிநாடுகளில் உள்ள நேயர்களைச் சென்றடைவதற்கான முக்கிய வழியாக ஒரு காலத்தில் விளங்கியது சிற்றலை வானொலி ஒலிபரப்புகள்தான். ஆனால் தற்போது மக்களிடையே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கின்ற வழக்கம் மிக வேகமாகக் குறைந்துவருகிறது.

பிபிசி தனது நிகழ்ச்சிகளை மென்மேலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பிலிருந்து பண்பலை வானொலி ஒலிபரப்புக்கும், தொலைக்காட்சிக்கும் இணையதளத்துக்கும் மாற்றி வருகிறது.

இந்த மூன்று வகையான சேவைகளிலும்தான் பிபிசி செய்திகளுக்கான நேயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்று பல வகைகளிலும் செய்திகளை வழங்குவது என்ற பிபிசியின் உத்தி வெற்றிபெற்றுள்ளது என்பதை இந்த நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதாக பிபிசியின் உலகளாவிய செய்திச் சேவைகள் பிரிவுகான இயக்குநர் பீட்டர் ஹாரக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக சேவையை நடத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதியை பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையிடம் இருந்து பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை பிபிசி நிறுவனத்தார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய அளவில் செலவுக் குறைப்புகளை அறிவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியுள்ள நிலையில், பிபிசி உலக சேவைக்கான நிதியைப் பெறுவதில் வெளியுறவுத் துறையுடன் பிபிசி நிறுவனத்தார் அதிகம் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- சர்வதேச வானொலி (http://sarvadesavaanoli.blogspot.com/search?updated-max=2010-06-07T14:18:00%2B05:30&max-results=7)

தீபாவளியும் - அவதாரங்களும்!

மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரி-வினரான சைவர் ஏற்றுக் கொள்-வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவ-தாரங்கள் எடுத்தது. - ஒன்பது முடிந்து-விட்-டது.- ஒன்று மீதி உள்ளது. - அது கல்கி அவதாரம் - என்றெல்லாம் புரா-ணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.
நாம்தான் வேதங்களைப் படிக்-கக்-கூடாது. நாம் படிப்பதற்காகத்-தான் புராணங்களே எழுதப்பட்-டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்-றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவ தாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான் எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவ-தாரம் _ தான் என்று கூறிப் பெண்-களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.
முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது.- இரண்-டாம் அவதாரம் ஆமை.- இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடி-யது. - மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. - நான்காம் அவதாரம் நரசிம்மம். -பாதி விலங்கு, பாதி மனி-தன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விக-டன், காமகோடி, ஆன்மீகம்_- அருள்சோதி என்றெல்-லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.
கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம்,- மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன் - இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை - 14 ஆம் அவ தாரம் நரசிம்மம் - 15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசு ராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.
பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்-தான் அதன் அவ-தாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்-டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றி-யின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!
பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே_- விஷ்ணுவே_- பூமாதேவிக்குச் சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்ய-பன்,- அதிதி தம்-பதிகளின் புத்திரன், விசு-வாஸ்-வனன். அவன்தான் சூரியன் என்-கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்-திலேயே சூரியனை அறி-முகப்படுத்திவிட்டு 15 ஆம் புரா-ணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?
இதே வராக (பன்றி) அவ-தாரத்-தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதி-யிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்ட-தாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமி-தேவியை எடுத்ததாம். அதன் வேண்டு-கோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளிய-தாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புரா-ணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).
யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்-பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்-களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை பெரிய திருமொழிப் பாசுரம்
ஏனாகி உலகிடந்து அன்று இரு-நிலனும்
பெருவிசும்பும் தாளாய பெரு-மான்
எனப் பாடுகிறது. பிறகு நர-காசுரன் எங்கே வருகிறான்?
கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கட-லுக்குள் நுழைந்தார். இரண்யாட்-சத-னுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.
பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.
ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்-போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவி-யும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்-யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?
ஒரு மாநிலத்தில் வாமன அவ-தாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.
ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.
ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதை-யுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.
ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.
இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதை-யளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...
புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும்-கூடப் புத்திசாலித்தனம் தேவைப்-படுமே! பலப்பல நபர்கள் பலப்-பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதை-கள்தான் புராணங்கள்! அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!
(விடுதலை, 19.10.2006)

http://www.viduthalai.periyar.org.in/20101019/news08.html

தடை செய்யப்படுமா?

மத விழாக்கள் என்ற பெயரில் பக்தர்களை கோயில் பூசாரிகள் கொடுமைப்படுத்தும் காரியங் கள் நடைபெற்று வருகின்றன. சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டும் விபரீதமான, உயிருக்கே அபாயகரமான பல காரியங்கள் அனுமதிக்கப் பட்டுக் கொண்டு இருப்பது வருந்தத்தக்கது.
திருச்சிராப்பள்ளியை அடுத்த தா.பேட்டை ஒன்றியம் வாளசிராமலை ஊராட்சி - வெள்ளா ளப்பட்டி - அச்சப்பன் கோயிலில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் பேய் விரட்டுவதாகக் கூறிக் கோயில் பூசாரி பெண் பக்தைகளையும் - ஆண் பக்தர்களையும் சாட்டையால் மிகக் குரூரமாக அடித்தார் என்ற செய்தி ஊடகங்களில் விரிவாக வெளிவந்துள்ளன. பக்தர்களின் தலைகளில் தேங்காய்களையும் பூசாரி உடைத்திருக்கிறார். பலர் தலைகளில் ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது.
இதுபோல திருமணம் ஆகிக் குழந்தைப் பேறு இல்லாத பெண்களைப் படுக்க வைத்து அவர்கள்மீது ஆணியுள்ள செருப்புக் காலால் கோயில் பூசாரி நடந்து செல்லும் கொடுமையும் நடப்பதுண்டு. எச்சில் இலைமீது உருண்டு புரளும் கேவலம் கரூருக்குப் பக்கத்தில்.
மதுரையையடுத்த பேரையூரில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் குழிமாற்றுத் திருவிழா அண்மைக்காலம்வரை நடந்ததுண்டு.
கழகத் தோழர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது அரசால் தடை செய்யப்பட்டது.
இப்படி சாட்டையால் அடிப்பது - பெண்களைப் படுக்க வைத்து ஆணி செருப்புக் காலால் மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, அலகு குத்தித் தொங்குவது போன்ற உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவற்றை அரசு தடுக்கவேண் டாமா? மத சம்பந்தப்பட்டது என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ள முன்வந்தால் அரசு அனுமதிக்குமா?
சாட்டையால் அடிப்பது, மண்டையில் தேங்காய் உடைப்பது என்பதெல்லாம் உயிருக்கு உலை வைக்கும் செயல் அல்லவா? நரம்பியல் மருத்து வர்கள் - மண்டையில் தேங்காய் உடைப்பதால் ஏற்படும் விபரீதங்களை அறிவியல் ரீதியில் கருத்துகளைக் கூறி எச்சரித்துள்ளனரே!
மாட்டுக்குத் தார்க்குச்சி போடுவது குற்றம் - மிருகவதை என்று கூறி தடுக்க சட்டம் இருக்கிறது. தார்க் குச்சியைப் பயன்படுத்தினால் அவர் களுக்குத் தண்டனை உண்டு.
ஆனால், இப்பொழுது பக்தியின் பேரால் மனிதவதை செய்கிறார்களே - இதனைத் தடுக்க சட்டம் இல்லையா? மாட்டைவிட மனிதன் தரத்தில் தாழ்ந்துவிட்டானா?
கோயில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்களால் உடனடியாக உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், நாளடைவில் பாதிக்கக் கூடிய நிலைப்பாடுகள் உண்டு.
மண்டையில் தேங்காய் உடைப்பதால் மூளை தொடர்பான பாதிப்புகள் - முதுகில் சாட்டையால் அடிப்பதால், முதுகெலும்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால், எந்தப் பூசாரி, எந்தக் கடவுள் குணப்படுத்த ஓடோடி வரப் போகிறார்?
பேய் என்று ஒன்று இருக்கிறதா? அறிவியலில் அதற்கு இடம் உண்டா? மனோ தத்துவ நிபுணர்கள் இதற்குக் கூறும் விளக்கம் என்ன?
இல்லாத பேயை விரட்டுவதாகக் கூறி சாட்டை கொண்டு சகட்டுமேனிக்கு அடிப்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் இதனை அனுமதிப்பது?
தமிழ்நாடு அரசு - முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நல்லெண்ணத்தால் - சமூக சீர்திருத்தத் துறை ஒன்றினை உருவாக்கி, இந்த வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றது.
அது முடங்கிக் கிடப்பது வேதனைக்குரியது. அரசமைப்புச் சட்டப்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வெளிப் படுத்த ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள் ளான்.
எந்தக் காலத்திலோ மூட நம்பிக்கை காரணமாக அறிமுகமான காட்டுவிலங்காண்டித்தனமான சடங்கு முறைகள் 2010 ஆம் ஆண்டிலும் அனுமதிக்கப்படுவது சரியல்ல.
அறநிலையத் துறை சரியான வழிகாட்டுதல் களை இதுபோன்ற பிரச்சினைகளில் காட்ட முன்வரலாம். கோயில் அறங்காவல் உறுப்பினர் களை, பூசாரிகளை அழைத்து தக்க வழி முறை களைக் கூறவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
பக்தியின் பெயரால் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது!
- http://www.viduthalai.periyar.org.in/20101019/news07.html

இந்து மதத்துக்கு முழுக்கு! புத்த மதத்தைத் தழுவினர் தாழ்த்தப்பட்டோர்!

நாகப்பட்டினம், அக். 18- நாகப்பட்டினம் மாவட் டத்தில், வேதாரண்யத் திற்கு அருகில் உள்ள செட்டிபுலம் கிராமத் தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்ட மக்கள், அண் ணல் அம்பேத்கர் மறைவு நாளான டிசம்பர் 6 இல் பவுத்த மதத்தைத் தழுவ முடிவு செய்துள்ளனர்.
அக் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலினுள் தாழ்த்தப் பட்டடவர்கள் அனு மதிக்கப் படுவதில்லை. 2009 ஆம் ஆண்டு, செப் டம்பர் 30 மற்றும் அக் டோபர் 14 இல் கோயில் நுழைவுப் போராட் டங்கள் இரண்டு நடந் தன. முதல் முறைப் போராட்டத்தின்போது, கோயில் மூடப்பட்டது. இரண்டாவது முறைப் போராட்டத்தின்போது காவலர்கள், மற்றும் வரு வாய்த் துறை அதிகாரி கள் பின் தொடர, தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலை நோக்கிச் சென்ற பொழுது ஒரு கூட்டம் அவர்களைத் தாக்கியது. வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகிய வற்றை காவல்துறை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 27 இல், மாவட்ட ஆட்சித் தலைவர் முனியநாதன், தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலினுள்ளே அழைத்துச் சென்றார்.
இப்பொழுது அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் பவுத்த நெறிக்கு மாறு வதற்கு முடிவு செய்துள்ளனர்.
- http://www.viduthalai.periyar.org.in/20101018/news01.html

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் விடுவிக்கப்பட்டாரா? இலங்கை-இந்தியாவின் பதிலென்ன?

புதுடில்லி, அக். 17- போர்க்களத்தில் கொல் லப்பட்டார் என இலங் கையும் இந்தியாவும் மாறி மாறி பிரபாகரன் மரணம் குறித்து கூறி வந்தபோதிலும், ராஜீவ் காந்தியின் கொலை வழக் கிலிருந்து பிரபாகரன் இன்னமும் விடுவிக்கப் படவில்லை.

தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய ஒருவ ருக்கு அளித்த பதில் மூலம் இதனை சிபிஅய் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணு வத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிர பாகரன் சுட்டுக்கொல் லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. இதனை இந்தியாவும் ஏற்றுக் கொண்டது.
அதே நேரம், இந்தி யாவின் முன்னாள் பிர தமர் ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக் கப்பட்டிருக்கும் நிலை யில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், முதன்மைக் குற்றவாளி களாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்கள் வழக்கிலிருந்து விடுவிக் கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜீவ் கொலை வழக் கில் இருந்து விடுவிக்கப் படவில்லை என்ற தக வல், சி.பி.அய்.யிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. திருப் பூர், குத்தூஸ்புரத்தை சேர்ந்த மணி என்பவர், சி.பி.அய்.,யிடம் தகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் கீழ் சில தகவல் களை கோரி இருந்தார். அதில்,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜீவ் கொலை வழக் கில் குற்றவாளியாக அறி விக்கப்பட்டுள்ளாரா?
இலங்கை அரசு, பிர பாகரன் சுட்டுக்கொல் லப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்துள் ளதா? இது தொடர்பாக அரசு ரீதியான தகவல் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள் ளதா?
பிரபாகரனின் இறப் புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து பெறப் பட்டுள்ளதா?
ராஜீவ் கொலை வழக் கில் பிரபாகரன் விடு விக்கப்பட்டுள்ளாரா?
என்ற கேள்விகளை எழுப்பி, தகவல் கோரி யிருந்தார்.
இந்நிலையில் இக் கேள்விகளுக்கு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சி.பி.அய்., பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், ராஜீவ் கொலை வழக்கில் விடு தலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குற்றவாளி தான் எனவும், பிரபாக ரன் இறந்து விட்டதாக, இலங்கை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்ப தாகவும், அரசு ரீதியான தகவல் பெறப்பட்டுள்ள தாகவும், பதில் அளிக் கப்பட்டுள்ளது.
அதே சமயம் இறப்புச் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு, அலுவலக ரீதியாக உறுதிப்படுத் தப்பட்டுள்ளது என்று மட்டும் பதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப் படவில்லை என்றும் சிபிஅய் தெரிவித்துள்ளது.

- http://www.viduthalai.periyar.org.in/20101018/news02.html

திங்கள், 18 அக்டோபர், 2010

எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது?

இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது?
தந்தை பெரியார்

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும் - இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும்.
மூன்றாவது, பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ, ஒரு சமுகத்தையோ அடியோடு கொன்று, ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமுக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும், ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும்.
கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.
அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மதவிஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச் சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக, அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை, உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள்.
அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில், அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களைபோல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் மகமதியர்களையும்- மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக, நடைஉடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும், இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும் பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேச குடிஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங்களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால், புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்.
இந்தியாவில் உள்ள மகமதிய சமுகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம் தங்கள் சமுக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும், அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால், கூடுமானவரை அந்த சமுக நன்மை சம்பந்தமான கவலையும், ஒற்றுமையுமேயாகும். ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமுக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால், இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும், ஜாதிப்பிரிவுகளும், அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும், அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும்.
இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன: முதலாவது, இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால், ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது.
மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100-க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ, நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரியான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திர மல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல், காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும் என்றும், அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து, ஆயிரக் கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவசியமாக்கி, அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப் பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமான தென்றும், நாஸ்திகமென்றும் அப்படிப்பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல், யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும், கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றையதினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புஸ்தகங்களே மத ஆதாரங்களாகவும், அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை, உடை, ஆச்சாரம், போக போக்கியம் முதலியவைகளில் பழைய கொள்கைகளையும், பழைய அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும், ஆணவமும், இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும், அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானித்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.
எனவே, இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும், இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனியம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும் என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனியமற்ற மதமே இல்லை என்றும், இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும், சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.
- குடிஅரசு துணைத் தலையங்கம் - 14.4.1929

- http://www.viduthalai.periyar.org.in/20101017/news05.html

வெள்ளி, 15 அக்டோபர், 2010

நவராத்திரி - தந்தை பெரியார்

நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.
முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?
முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.
இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.
கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!
மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.
மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.
கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!
நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?
ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?
சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

-http://www.viduthalai.periyar.org.in/20101010/news09.html

வியாழன், 14 அக்டோபர், 2010

இதே நாளில்தான் அன்று



1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணா சிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த் தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது
அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள்

1.பிரம்ம னையோ விஷ்ணுவையோ சிவ னையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
2.இராமனையோ, கிருஷ்ண னையோ நான் கடவுள் என்று கருதமாட் டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
3.இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவை களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
4.கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்த வொரு உருவத்தில் அவதாரம் செய்ததா கவோ நான் நம்பமாட்டேன்.
5.பகவான் புத்தர்; மகா விஷ்னுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப் பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
6.சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.
7.பவுத்தத்தின் கோட்பாடு களுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.
8.பார்ப்பனர்களால் நடத்தப் படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.
9.அனைவரும் சமம் என்ற கொள்கையே நான் நம்புகிறேன்.
10.சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.
11.பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.
12.தம்மதத்தின் 12 பரமிதங்களை யும் நான் பின்பற்றுவேன்.
13.எல்லா உயிர்ப் பிராணிகளிடத் தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.
14.நான் பொய் சொல்லமாட்டேன்.
15.நான் திருட மாட்டேன்.
16.காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட் டேன்.
17.போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.
18.ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இனங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.
19.பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர் களின் விடுதலைக்குக் கேடாக இருப்பது மான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்
. 20.புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்பு கிறேன்.
21.இன்று புதிய பிறவி எடுக் கிறேன் என்று நான் நம்புகிறேன்.
22.புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

- http://www.viduthalai.periyar.org.in/20101014/news15.html

யார் இந்த ஆர்க்காடு இரட்டையர்கள்?

பொதுவாக இந்த நாட்டில் ஜாதி முறை புகுத்தப்பட்டதால், பார்ப்பனரல்லாத மக்களிடையே சிறந்து விளங்கிய பெரிய பெரிய அறிவாளிகளைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது. பல சமுதாயத் தடைகளை உடைத்து எறிந்து, முன்னணிக்கு வந்த தங்கள் தலைவர்களையும் பார்ப்பனரல்லாத மக்கள் பாராட்டத் தவறிவிட்டார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறந்து விளங்கிய ஆர்க் காடு இரட்டையர்களான சர் ஏ.இராமசாமி (முதலியார்) டாக்டர் ஏ. லட்சுமணசாமி (முதலியார்) இவர்களைப்பற்றிப் பார்ப் பனரல்லாத பொது மக்கள் ஓரளவுதான் அறிந்துகொண்டார்கள். அவர்களுடைய நூற்றாண்டிலாவது அவர்களைப்பற்றி மேலும் சிறப்பாக அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
கல்வித் துறையில் அரசுப் பதவிகளில் சமுதாயத் துறையில், பார்ப்பனரல்லாத மக்கள் தற்போது ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காண்கிறோம். இந்த முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெரிய வர்கள் பலர். அவர்கள் வரிசையில் வைத்து எண்ணக் கூடியவர்கள் இவ் விரட்டையர்கள் ஆவார்கள்.
அடித்தளம் போன்றவர்கள்
பார்ப்பனரல்லாதார் ஒன்று கூடித் தங்களுடைய உரிமைகளைத் தட்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்ந்த பார்ப்பனர்கள் தங்களுடைய பலமான பலதிறப்பட்ட எதிர்ப்புகளை ஆரம்பத்தில் அதிக அளவில் தெரிவித் தார்கள். பார்ப்பனரல்லாத தலைவர் களுக்குப் பல தொல்லைகளைத் தந் தார்கள், அவர்களைத் தனிப்பட்ட முறை யிலும், தரங்கெட்ட நிலையிலும் தாக்கி னார்கள். பார்ப்பனரல்லாத பொதுமக்களே தங்கள் தலைவர்களை வெறுக்கும்படியும் தூற்றும்படியும் ஆன சூழ்நிலைகளைப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக உருவாக் கினார்கள்.
‘‘Any one who identified himself with the movement had to be prepared for any amount of misunderstanding, abuse and obloquy - justice year-book-1929.’’
பார்ப்பனர்களின் இவ்வித சூழ்ச்சி களை முறியடித்து முகிலைக் கிழித் தெறிந்து வெளிவந்த நிலவுபோல் இவ்விரட்டையர்கள் பார்ப்பனரல்லாத மக்களிடையே தோன்றியது மிக மிக வியப்பளிப்பதொன்றாகும். பார்ப்பனரல் லாத மக்கள் இக்காலை பெற்று அனு பவித்து வரும் பல சமுதாய நலன் களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவ்விரட்டையர்கள் தங்கள் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார்கள்.
தாலியறுத்த ராமசாமியாம்!
பார்ப்பனர்கள் எவ்வளவு தொல்லை களை சர் ஏ.ராமசாமி (முதலியார்)க்கு அளித்தார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு சர் ஏ.இராமசாமி தேர்தலில் நின்றபோது, தாலி அறுத்த ராமசாமி முதலியாருக்கா ஓட்டு என்ற உண் மைக்கு மாறான குற்றச்சாற்றை அவர் மீது சுமத்தி புழுதிவாரி இறைத்தார்கள் அப்போது.
தமிழ்நாட்டில் தென்னிந்திய ரயில்வே நிருவாகத்தினர் பல புகைவண்டி நிலையங்களிலேயே பல சிற்றுண்டி - உணவு சாலைகளை நடத்தினார்கள். அங்கு பார்ப்பனர்களுக்கு மட்டும், பார்ப்பனரல்லாதார்க்கு மட்டும் என்ற பெயர்ப் பலகைகளைத் தொங்கவிட்டு பழம் பெரும் புகழும், பெயரும் பெற்று விளங்கிய இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களாகிய பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தினார்கள். இச்சமுதாய இழிவை - அவமானத்தைத் துடைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். தென் ஆப்பிரிக்காவில் கையாளப்பட்டு வரும் இன ஒதுக்கல் (Apartheid) கொள்கையிலும் மிகவும் மோசமானது இவ்வின ஒதுக்கல் ஏற்பாடு. தந்தை பெரியாரின் போராட்டத்தின் வலிமை யையும், நியாயத்தையும் ஆதரித்து அன்றுள்ள வெள்ளையர் ஆட்சி ரயில்வே சிற்றுண்டி உணவுச் சாலை களில் தொங்கவிடப்பட்ட பெயர்ப் பலகை களை எடுக்கும்படி 20.3.1941 இல் உத்தரவு இட்டார்கள். இந்த முயற்சிக்கு பெரும் உதவியாக இருந்தவர் சர் ஏ. இராமசாமி ஆவார். அப்பொழுது அவர் டில்லி மத்திய அரசில் வர்த்தக மந்திரியாக இருந்தார்.
தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டினால்தான் பார்ப்பனரல் லாத தலைவர்கள் பெரிதும் மதிக்கப் பட்டார்கள், பாராட்டப் பெற்றார்கள் என்ற உண்மையை யாரும் உணர்வர். வாய்ப்பும், வசதியும் அளித்தால் பார்ப் பனரல்லாதவர்களும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர்கள் இவ்விரட்டையர்கள் அந்தக் காலத்தில்.
பார்ப்பனரல்லாத மக்களிடையே பார்ப்பனர்களுக்குமேல் பொதுவாழ்வில் சிறந்து விளங்கிய ஆங்கிலப் பேச்சாளர் சர் ஏ. இராமசாமி ஆவார். அவர் சான்பிரான்சிஸ்கோ (Sanfrancisco) மாநாட்டில் பேசிய பேச்சு நயாகரா நீர்வீழ்ச்சிபோல இருந்தது என்று உலகத் தலைவர்கள் எழுந்து நின்று அவருக்கு அன்று புகழாரம் சூட்டினார் கள். மருத்துவத் துறையில் பெண்கள் மகப்பேற்றுத் துறையில், சிறப்பாக விளங்கியவர் டாக்டர் ஏ. லட்சுமணசாமி ஆவார். அவர் தொடர்ந்தாற்போல் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவராக இருபத்தைந்து ஆண்டு கள் சிறந்து விளங்கினார்.
இவர்களுடைய தனிச்சிறப்பிற்கு அடித்தளமாக அமைந்தது அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்காக தங் களால் இயன்றளவு செய்த தொண்டுதான் என்பதை இன்றுள்ள இளைஞர்கள் உணரவேண்டும். அதைவிட சிறப்பானது இவ்விரட்டையர்கள் தந்தை பெரியாரின் பாராட்டுதல்களைப் பெற்றவர்கள். சிறந்த கல்வியாளர்களாக, அரசியல்வாதிகளாக, நிருவாகத் திறனுடையவர்களாக, அறி வாளிகளாகத் திகழ்ந்த இவ்விரட்டையர் களை நினைவு கொள்ள வேண்டியது பார்ப்பனரல்லாத மக்களின் நீங்காக் கடமையாகும்.
ஒரு சமயம் எனது நண்பர் ஒரு வருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவேண்டியதாயிற்று. நான் தந்தை பெரியார் அவர்களை அணுகி டாக்டர் லட்சுமணசாமி (முதலியார்) அவர்களுக்கு ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். தந்தை பெரியார் அவர்கள் உடனே டாக்டர் அவர்களுக்கு ஒரு சிபாரிசு கடிதத்தை என்னிடம் அளித் தார்கள். தன் கைப்பட அந்த சிபாரிசுக் கடிதத்தை எழுதியவர் நமது பெருமதிப் பிற்குரிய ஆசிரியர் கி. வீரமணியே ஆகும். டாக்டர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய கடிதத்திற்குப் பெருமதிப் பளித்து, அந்த அறுவை சிகிச்சையை அவரது மகன் டாக்டர் வேணுகோபால் செய்யும்போது, தானும் உடனிருந்து கண்காணித்து வந்தார். இது, அவர் தந்தை பெரியார் அவர்களிடம் கொண் டிருந்த அன்பையும், மதிப்பையும் காண் பிக்கிறது.
வாழ்க இரட்டையர்களின் புகழ்! வாழ்க அவர்களின் பொதுத்தொண்டு!
- திருச்சி சி. ஆளவந்தார்
நன்றி: ஆர்க்காடு இரட்டையர்கள் நூற்றாண்டு விழா மலர் (1887-1987)

-http://www.viduthalai.periyar.org.in/20101014/news10.html

புதன், 13 அக்டோபர், 2010

அக். 15: குவைத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில்

அக். 15: குவைத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில்

பாட்னாவில் பெரியார் பிறந்தநாள் விழா

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புரட்சியாளர் பெரியார்
பாட்னா - பெரியார் பிறந்தநாள் விழாவில் அறிஞர்கள் புகழாரம்

பாட்னா, அக். 12- 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புரட்சியாளர் தந்தை பெரியார் என்று அசோக் யாதவ் கூறி உரையாற் றினார். கடந்த செப்டம் பர் மாதம் 17 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர் களை நினைவு கூர்ந்திடும் அவரது பிறந்த நாள் விழா பிகார் மாநிலம் பாட்னாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு பாட்னா மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியரும், மருத்து வரும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரும், பி.ஏ.எம்.சி.ஈ.எஃப் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரு மான ராஜிவ் குமார் ரஜாக் தலைமை வகித் தார். இந்த விழாவில் மூன்று பேச்சாளர்கள் உரையாற்றினர்.
பாட்னாவில் உள்ள அரசு மேற்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வரு மான சாம்பு சுமன் பேசு கையில், தமிழ் மக்கள் தந்தை பெரியார் அவர் களுக்கு, உயர்ந்த தந்தை என்பதைக் குறிக்க தந்தை என்றும் பெரியார் என்றும் இரண்டு பெரு மைகளைத் தந்துள்ள தாகக் குறிப்பிட்டார்.
கடமை உணர்வு மிக்க உண்மையான ஒரு மாபெரும் தந்தையைப் போன்று, மனத்தளவில் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மத மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற வேண் டும் என்ற உணர்வை நம்மிடையே பெரியார் ஏற்படுத்தினார். பார்ப்ப னர்களின் வர்ணாஸ்ரம தர்மம் எனும் சமூக அமைப்பு முறையைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று அதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட பிரிவுமக்களை அவர் போராடச் செய்துள் ளார்.
பெரியார் அவர் களின் இளமைக் கால வாழ்க்கை , அவர் இந் துக்களின் புண்ணியத் தலமான வாரணாசியில் தங்கியிருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள், அவரது சொந்த ஊரான ஈரோட்டில் அவர் ஆற் றிய பொது சேவைகள் , காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்து அரசிய லில் ஈடுபட்டது, காங்கி ரஸ் கட்சி யினருடன் கொண்ட கருத்து வேறு பாடு காரணமாக நீதிக் கட்சியில் சேர்ந்தது, சோவியத் யூனியன் நாட் டுக்குப் பயணம் சென் றது, அதனால் மார்க்சீய, லெனினின் கோட்பாடு களால் அவர் கவரப் பட்டது, அவர் மேற் கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம், புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க அவரது கடவுள் சிலை உடைப் புப் போராட்டம், தனி திராவிட நாடு பிரிவி னையை அவர் கோரி யது. தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப் பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேற் கொண்ட போராட்டம், அதன்விளைவாக இந்திய அரசியலமைப் புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரப் பட்டது, அதன் விளை வாக முதல் பிற்படுத்தப் பட்டோர் ஆணைய மும், அதன் பின்னர் மண்டல் ஆணையம் என்று நன்கு அறியப் பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் உரு வாக்கப்பட்டது ஆகி யவை பற்றி அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பைச் சேர்ந்தவரும், திரிவேணி சங்கம் என்ற அமைப்பின் செயல் திட்டக் குழுவின் உறுப் பினருமான அசோக் யாதவ் விரிவாகப் பேசி னார்.
பெண்களின் விடுத லைக்கும், பெண் உரி மைகளுக்கும் பெரியார் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி அவர் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார். பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற் றும் அவரது பணிகள், படைப்புகள் பற்றி வட இந்திய மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்று அசோக் யாதவ் கூறினார். உத்திரப் பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த லலாய் சிங் யாதவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுக ளையும் அவர் எடுத்துக் கூறினார். சச்சி சாமா லயண் கி சாபி என்ற புகழ் பெற்ற நூலினை லலாய் சிங் யாதவ் எழுதி னார். ராமாயணத்தைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற் கான திறவு கோல் என்ற தந்தை பெரியார் அவர் கள் எழுதிய நூலின் அடிப்படையில் எழுதப் பட்ட நூல் இது. இந்த நூல் முதன் முதலாக வெளியிடப்பட்டபோது, உத்தரப் பிரதேச அர சால் தடை செய்யப் பட்டது. இத்தடையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லலாய் வழக்கு தொடர்ந்து, அந்நூலின் மேல் விதிக்கப்பட்ட தடையை நீக்கச் செய் தார். உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உத்த ரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போதும், இந்நூலின் மீது விதிக்கப்பட்ட தடை சட்ட விரோத மானது என்று தீர்ப்பு அளித்தது. தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து லலாய்சிங் சென்னையில் ஒரு கூட் டத்தில் பேசியபோது, உத்தர பாரதத்தின் பெரியார் லலாய் சிங் யாதவ் வாழ்க என்று பாராட்டப்பட்டார். மாயாவதி தொடர் பான நிகழ்வுகளையும் அவர் நினைவு கூர்ந்தார். கடந்த முறை அம் மாநி லத்தின் முதல் அமைச் சராக இருந்த போது, லக்னோவில் பெரியார் விழா நடத்துவோம் என்று மாயாவதி அறி வித்ததையும், அதனால் அவரது அரசுக்கு பா.ஜ.க. அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், பதவி இழந்தையும் பற்றி அசோக் யாதவ் நினைவு கூர்ந்தார்.
தந்தை பெரியார், பாபாசாகிப் பிமராவ் அம்பேத்கர் மற்றும் சர்தார் பகத் சிங் ஆகிய மூவரும்தான் இந்தியா வில் இருபதாம் நூற் றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய புரட்சியாளர்கள் என்று அசோக் யாதவ் குறிப்பிட்டார். அவர் களின் வாழ்க்கை வர லாறும், அவர்கள் ஆற் றிய பணிகளும், படைத்த நூல்களும் இந் நாட்டின் தாழ்த்தப்பட்ட, பழங் குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கின் ஒளி போன்று விளங்குகின்றன என்று கூறினார். மூன்றாவதாக, பி.ஏ. எம்.சி.ஈ.எஃப் அமைப் பின் மாநிலப் பிரசார கரும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவ ருமான பொறியாளர் உமேஷ் ரஜாக் பேசினார். தந்தை பெரியார் அவர் களுக்கு யுனிசிஃப் நிறு வனம் தெற்கு ஆசியா வின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது பற்றியும் அவர் குறிப் பிட்டார். பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அவ ரது சேவைகள், அவர் இயற்றிய படைப்புகள் ஆகியவை தாழ்த்தப் பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே பரப்ப வேண்டியதன் தேவையை வலியுறுத்தி அவர் கூறினார்.
தந்தை பெரியார் போன்ற ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளரின் பிறந்த நாள் விழாவினை நமது சமூகத்தின் சூத்தி ரர்களும், ஆதி சூத்தி ரர்களும் கொண்டாடு வதில்லை என்பது பரி தாபத்திற்குரிய ஒன்றா கும். பெரியார் அவர் களது பெருமைகளை நம் நாட்டின் கற்றறிந் தவர்கள் கூட நன்று அறிந்திருக்க வில்லை என்ற நிலையில் படிக்கத் தெரியாத கோடிக் கணக்கான நமது மக்கள் அறிந்திருக்க முடியாது. எனவே பெரியாரின் பெரு மைகளைப் பற்றி மக் களை அறிந்து கொள்ளச் செய்ய, சமூக நீதிக்காக வும், சமூக மாற் றத்திற்கா கவும் பாடுபடும் தனிப் பட்டவர்களும், அமைப்பு களும் பாடுபடவேண் டும். இல்லாவிட்டால் நமது எதிர்காலமே இருண்டதாக ஆகி விடும்.
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பத்தி ரிகையாளரான சஷிகாந் தும் இந்த விழாவில் பேசினார். இதனைப் போன்ற ஒரு விழா, தந்தை பெரியார் ராம சாமி அவர்களின் பெரு மைகளை நினைவு கூற வும், பரப்பவும், பலப் படுத்தவும் பெரும் உதவி யாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த விழா திரி வேணி சங்கத்தின் அமைப்பா ளர் ராமேஷ்வர் சவுத்ரி அவர்களால் ஏற்பாடு செய்து, படேல் சேவா சங்க கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய அவர் பெரியாருக்கு பெரும் அளவில் புகழாரம் சூட் டினார். இந்த விழாவில் படேல் சேவா சங்கத் தலை வர் சிறீ ஜானகி சிங்கும் கலந்து கொண்டார். படேல் சேவா சங்கத்தின் நிருவாகக் குழு உறுப் பினர் அசோக்குமார் நன்றியுரை ஆற்றினார். முதன் முதலாக 1933 மே மாதம் 30ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பிற் படுத்தப்பட்டோர் அமைப்பு இந்த திரிவேணி சங் என்பது குறிப்பிடத் தக்கது.

- http://www.viduthalai.periyar.org.in/20101012/news28.html

செவ்வாய், 12 அக்டோபர், 2010

தந்தை பெரியார்

உடையை விற்று புத்தகம் வாங்கியவர்


குழந்தைகளாக இருக்கும்போது என்னென்ன பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறோமோ, அவையே வாழ்க்கையின் இறுதிவரை நம்மைப் பின்தொடர்பவையாக அமைந்துவிடுகின்றன.

அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி செய்தல், படித்தல், நேரத்திற்குப் பள்ளி செல்தல், ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை ஆர்வத்துடன் கேட்டல், ஒழுக்கத்துடன் நடத்தல்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றுடன் நூல்களைப் படிக்கும் பழக்கத்தையும் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களாகும்போது, பல்துறை அறிவு பல வழிகளில் கை கொடுத்து உதவும். நாம் படிப்பதற்கு எல்லை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

படித்தால் மட்டும் போதுமா? படித்ததை நினைவில் நிறுத்தி, தக்க நேரத்தில் அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டும். படிப்பறிவோடு பகுத்தறிவும் வேண்டும். அப்படி, சிறு வயதிலிருந்தே நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவராக இருந்தவரே அறிஞர் ரூசோ.

ரூசோவின் முழுப்பெயர் ஜீன் ஜாக்ஸ் ரூசோ. குழந்தையாக இருந்த போதே தாயை இழந்தார். சந்தர்ப்ப சூழ்நிலை, தந்தையையும் இவரிடமிருந்து பிரித்துவிடுகிறது. சிற்றன்னையிடம் வளர்கிறார். 14 வயதில் மாஸாரான் என்ற வழக்குரைஞரிடம் வேலைக்குச் சேர்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை நகல் எடுக்கும் வேலையினைச் செய்கிறார். அடிமைபோல் நடத்தப்பட்டதால் அங்கிருந்து வெளியேறுகிறார்.

பின்பு,டூகோமான் என்ற சிற்பியிடம் வேலைக்குச் சேர்கிறார். அங்கும் அடிமைபோல நடத்தப்பட்டதால் வெறுப்பு ஏற்பட, படிப்பின் மீது கவனம் செலுத்துகிறார். எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு நூலினைப் படித்துக் கொண்டே இருக்கிறார். ரூசோ மனிதர்களோடு பேசியதைவிட நூல்களுடன் பேசியதே அதிகம். நூல்களே அவரது ஆசான்.

புதுமையாகப் படிக்க வேண்டும் _ புதுமைகளைப் படைக்க வேண்டும் _ புதுமையாகச் சிந்திக்க வேண்டும் _ புதுமைக் கருத்துகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணங்களே அவரது மூளையை _ மனதை ஆக்கிரமித்திருந்தன.

வழக்கம்போல் ஒரு நாள் புத்தகக் கடைக்குச் செல்கிறார். ஒரு புத்தகம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. வாங்குவதற்குக் காசு இல்லை. ஆனால், வாங்கிவிட்டார். எப்படி வாங்கினார்? தனது உடைகளை விற்று வாங்குகிறார். சாப்பிடாமல் புத்தகத்தைப் படிக்கிறார். வறுமையோ அவரை வாட்டியது. எத்தனை நாள்கள் பட்டினியாக இருக்க முடியும்? நாட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இத்தாலி சென்றால் வறுமை நீங்கிவிடும் என நினைத்துச் செல்கிறார். அங்கு, டிபான்ட்லென் என்ற பாதிரியாரைச் சந்திக்கிறார். ரூசோவின் திறமையையும் அறிவாற்றலையும் பார்த்து வியக்கிறார் பாதிரியார். டி.லாரன்ஸ் என்ற பெண்ணிடம் ரூசோவை அறிமுகப்படுத்துகிறார். ரூசோவின் அறிவாற்றலைக் கண்டு வியந்த அப்பெண்மணி, கல்வி கற்க ஏற்பாடு செய்து அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

ரூசோவின் அறிவாற்றல் பிரகாசிக்க பாரிசே சரியான இடம் என நினைத்து பாரிஸ் அனுப்புகிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பாள் என்பது ரூசோவின் வாழ்வில் லாரன்ஸ் மூலம் நிரூபணமாகிறது.

பாரிசில் இசையின் புதிய பரிமாணங்களை ஆராய்கிறார். பாரிஸ் இசைக் கழகம் சான்றிதழ் கொடுத்துப் பாராட்டுகிறது. அங்கு கலை, இலக்கியம், தத்துவத்தில் மேதையான டிடேரோவின் நட்பைப் பெறுகிறார். பல சாதனைகள் படைக்கிறார்.

கலைகளும் விஞ்ஞானமும் வளர்ந்ததால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா? அல்லது தாழ்ந்துள்ளதா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியினை டிஜோன் கலைக் கழகம் நடத்தியது. அதில், ரூசோவின் கட்டுரைக்குப் பரிசு கிடைக்கிறது. தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறார்.

1760 இல் ஜீலி என்ற நூலை வெளியிடுகிறார். பாரிசில் இந்நூல் பெரும் பரபரப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது. 1762 இல் எழுதிய எமலி என்ற நூல் புகழின் உச்சிக்கே ரூசோவைக் கொண்டு செல்கிறது.

இலக்கியத்தில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாடு, மேற்கொண்ட முயற்சி, தாம் படைத்த இலக்கியங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களால் ஏற்பட்ட இன்னல்களை, எதிர்காலச் சந்ததியினரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால எழுத்தாளர்கள், தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களை எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதற்காக மகக் கடிதங்கள் என்ற நூலினை எழுதி வெளியிடுகிறார். உரையாடல், சிந்தனைகள் என்ற நூல்களும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவற்றையே தம் கொள்கைகளாகக் கொண்டு தமது படைப்புகளிலும் பிரதிபலிக்கச் செய்தவர்.

பரிசுகள், பாராட்டுகளோடு பல நூல்களையும் படைத்து ரூசோ இன்றும் புகழ் பெற்றிருக்கக் காரணம், இளமையில் நூல்களைப் படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வமும், அறிவை வளர்த்துக் கொண்டவிதமும், வளர்த்த அறிவாற்றலைச் சரியான இடங்களில் பயன்படுத்திய முறைகளும்தானே!

தாய், தந்தை இல்லாத நிலையில், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ரூசோவே நூல்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்ததோடு, தானும் பல நூல்களைப் படைத்துச் சாதித்துள்ளார். அப்படியென்றால், பெற்றோரின் அரவணைப்பில் _ அன்பில் வாழும் நீங்கள் எவ்வளவு நூல்களைப் படிக்க வேண்டும் _ படைக்க வேண்டும்?

செல்வா

- http://periyarpinju.com/2010/september/page04.php