வெள்ளி, 31 டிசம்பர், 2010

மனிதனை சிந்திக்க வைத்த சிந்தனைச் சிற்பி பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்றனர்!




தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு தந்தை பெரியாரின் பணிகளை தமிழர் தலைவர் தலைமையில் முடிப்போம் என்று உறுதி எடுத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத்தலைவர் அண்ணாமலை, சித்தரசூர் இராமநாதன், அனந்தபுரம் தண்டபாணி மற்றும் சிறப்பு அழைப் பாளராக அனந்த புரம் திமுக நகர செயலாளர் கல்யாண்குமார் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செய லாளர் கதிரவன் வரவேற்று பேசினார். காணை ஒன்றிய தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.