புதன், 1 டிசம்பர், 2010

உம் வழி நடப்போம்!

உம் வழி நடப்போம்!

உலகத்தில் ஒரு தலைவன் உள்ளத்தில் உணர்ந்ததையே உதட்டாலும் பேசியவன்
உறவெல்லாம் எதிர்த்த போதும்
மலையாக நின்றவர்தான்; பெண்கள் தந்த பெயர் தானே! பெரியார் அவர் நம் உயிர்தானே!
அவர் வழியில் நாம் நடக்க இரவென்றும் பகலென்றும் இடையறாது உழைத்திடுமோர் இன்முகத்தைக் கொண்டவரே இணையற்ற பண்பாளா, உம் வழியில் நாம் நடப்போம் ! பிறந்த நாள் விழா வேண்டாம் பெருமைகளும் பரிசுகளும்
புகழ் மிக்க வார்த்தைகளும்
மணம் மிக்க மாலைகளும்
அனைத்துமே வேண்டாம் வேண்டாம் ! உங்கள் அன்பென்னும் வெள்ளம் போதும்; அருமையான உழைப்பே போதும்; பொருள் கேட்டு நான் வருவேன் கொள்கைப் போருக்கு ஆள் கேட்பேன் கேட்குமுன்னே தந்திடுவீர்
அந்த அன்புக்கு ஈடு உண்டோ!
அருமருந்தாம் அன்பு மழை
அதில் நனைந்த பின்னே
பொன்னென்ன பொருளென்ன
உடல் நலிவும் மறைந்திடுமே !
என் உயிரதுவும் மூச்சதுவும்
பெரியாரின் கொள்கைக்கே தோழர்களின் உறுதி கண்டேன் உழைப்பிலேதான் இன்பங் கண்டேன் வாழ்வென்றால் இதுவன்றோ! இதற்கு மேலும் பெருமையுண்டோ ? பிறந்த நாள் பரிசளிப்போம்- உம் வேண்டுகோள்கள் கட்டளைகள் எழுத்துக்கள் ஆணைகள்தாம் பரிசென்று நாம் அளிப்போம்
உம் வழி தனிலே நடந்திடுவோம் !
- மருத்துவர் சோம.இளங்கோவன்,
சிகாகோ

- http://www.viduthalai.periyar.org.in/20101201/news42.html