புதன், 1 டிசம்பர், 2010

தமிழர் தலைவரின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் குருதிக்கொடை, உடற்கொடை, மரக்கன்றுகள் நடல் நாடெங்கும் இனஎழுச்சியுடன் கொண்டாட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப் பகுத்தறிவு பிரச்சாரம்
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதியில் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் நகர தலைவர் சி.அப்பாவு முன்னிலையில் மாவட்ட செயலாளர் ந.கதிரவன் வரவேற்றார்.
தமிழர் தலைவர் அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடு வது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 2,3,4,5,6 ஆகிய நாள்களில் கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எனவும், 2011 ஜனவரி 7,8,9 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொள்வதென்று எனவும், ஞானசூரியன் புத்தக விற்பனையில், தலைமைக் கழகத்திலிருந்து வரக்கூடிய தோழர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட ப.க செயலாளர் கார்வண்ணன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் கணபதிபட்டு வி.இராமச்சந்திரன், காணை ஒன்றிய தலைவர் மு.நாராயணன், திருநாவலூர் ஒன்றிய தலைவர் த.இராவணன், மாணவரணி சே.அன்பழகன், இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் பி.செகந்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.எடிசன் நன்றி கூறினார்.