புதன், 1 டிசம்பர், 2010

ஞானசூரியன் தொடர்-11

ஞானசூரியன் தொடர்-11

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010
2.கிரிமினல் சட்டத்தை யாவருக்கும் சமமாக ஆங்கிலேயர் எழுதிய காலத்தில் ஆரியர்கள் பலமான கண்டனங்கள் செய்தார்களென்று கேள்விப்படுகிறோம்.
3. விருஷலன் - தருமத்தைக் கெடுப்பவன்.
ஏட்டுச் சுரைக்காய் சமையலுக்கு உதவாததுபோல, இந்த இலக்கணம் கண்கூடாகப் பார்ப்பதற்கு இல்லை. எத்தகைய தீய ஒழுக்கமுடைய பார்ப்பனியின் பிள்ளையாயினும், தீய ஒழுக்கங்களில் தலைசிறந்து விளங்குவோனாயினும் ஒருவன், ஜாதிமாத்ரோப ஜீவீவா என்று தொடங்கிய பிரமாண வாக்கியங்களும், கட்குடி முதல் அய்ம்பெரும் பாதகங்களைச் செய்தாலும், பார்ப்பனன் பார்ப்பனனே என்பது முதலிய பிரமாணங்கள் சமயத்திற்கேற்றவாறு எடுத்துக் காட்டப்படும். ஆனால், மேற்குறித்த கீதா வாக்கியம் கிருஷ்ணனுடைய சொந்த வாக்கியம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதே கருத்துடைய ஒரு சுலோகம் புத்த பகவான் பாலிமொழியில் திருவாய் மலர்ந்தருளிய தம்மபதமென்னும் நூலில் 25-ஆவது அத்தியாயத்தின் கண்ணும் காணப்படுகிறது. 1ஆனால், நல்லோர்களின் இலக்கணம் கீதைக்கு முன்னரே சொல்லப் பட்டிருப்பினும், பார்ப்பனர் மாத்திரமே நல்லோர்கள் என்ற தன்கொள்கையை நிலைநிறுத்த விரும்பி, பிராஹ்மணோ மமதேவதா பிராமணனே என் குலதெய்வம் என்று கூறிய பார்ப்பனத்தாசனாகிய கிருஷ்ணன், தன் சொந்த வாக்கியமாகத் திருத்திக் கூறியிருக்கலாம். சங்கராச்சாரி யாரின் மதத்திற்கு இந்தக் கீதையே அடிப்படையான நீதி நூலாகும். (ஸ்மிருதியாகும்) சங்கரர் மதம் பெரும்பகுதியும் பொறாமைக் களஞ்சியமாதலால், அதில் சிலவிடங்களில் காணப்படும் சில உயர்ந்த கருத்துகளும் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வராமையால், குப்பைக்குள் புதைந்துகிடக்கும் மாணிக்கம் போல் மங்கி நிற்கின்றன. ஆகையால், இந்துமத முறைப்படிக்குப் பார்ப்பனியின் வயிற்றில் பிறந்தவனே பார்ப்பனன் என்று கருதப்படுகிறதென்பது மேற்கூறிய உதாரணங்களாலும் வழக்கத்தினாலும் பெறப்பட்டதன்றோ? இத்தகைய பார்ப்பனனுக்குரிய தொழில்களாவன:
அத்தியாயனம் சாத்தியனம்
யஜனம் யாஜனம ததா
தானம் ப்ரதிக்ரஹம் சைவப்
பிராஹ்மணானா, மகல்பயத (மனு)
பொருள்: கற்றல்-கற்பித்தல், யாகம் செய்தல்-செய்வித்தல், தானம் கொடுத்தல்-பெற்றுக்கொள்ளுதல் இவை கடவுளால் பிராமணனுடைய தருமங்களாக விதிக்கப்பட்டிருக்கின்றன.
1. தம்மபதம் எழுதியதற்குப் பிற்பாடு கீதை எழுதப்பட்டது என்பது, புத்த காலத்தையும் அதன் ஆசிரியர் காலத்தையும் ஆராய்ச்சி செய்தால் விளங்கும்.
இந்தத் தானமோ, இப்பொழுது சம்பளமென்று உருவத்துடன் விளங்கு கின்றது. ஆனால், தரும சாஸ்திர முறைப்படிச் ஜாதியைத் தெரிவிக்கிற சர்மா என்ற பட்டப்பெயருக்கு உரியவர்களான அய்யர், அய்யங்கார், நம்பூதிரி, போத்தி முதலிய ஜாதிப் பிராமணர்களுக்கு மட்டும்தான் உத்தியோகம் கொடுப்பது என்ற பிரிட்டிஷ் ஆட்சியில் வேற்றுமை காட்டாமல் இந்துக்கள் எல்லோரையும் சமமாகக் கருதி உத்தியோகத்தில் பார்ப்பனரல்லாதார் ஒருவர் இருந்தால், அவரை மேலேற ஒட்டாமல் தடுப்பதும், மனுவின் சட்டப்படி ஒழுங்குதானே. அன்றியும் 1ஆபத்துக் காலத்தில் வேறு சில சவுகரியங்களும் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டி ருக்கின்றன.
ரிதாம் ருதாப் யாம் ஜிவேத் ம்ரு
தேனப்ரம் ருதேனவா
ஸத்யான் ருதாப் யாமதவா
நஸ் வய்ருத்யாகதாசன (மனு)
இதன் பொருள்: அறுவடையான நிலத்தில் சிந்திக்கிடக்கிற தானியங்களைப் பொறுக்கியெடுத்து, அதனால் உயிர் வாழ்வதே ரீதம். பிச்சையேற்காமல் யாரேனும் கொடுக்கிற பொருளைப் பெற்றுக்கொண்டு ஜீவனம் செய்வது அமிருதம், பிச்சையேற்று உண்ணுவது மிருதம். உழுது பயிரிட்டு, அதனால் வரும் பொருளை வைத்துக்கொண்டு உண்பது பிரமிருதம், வியாபாரம் செய்வது சத்தியான்ருதம். பிராமணன் இந்தத் தொழில்களைப் பின்பற்றிக் கொண்டு, காலத்திற்கேற்றவாறு ஜீவிக்கலாம். ஆனால், அடிமையாகிய சூத்திரன் நாய்க்குச் சமானம். ஆகையால், அவனுடைய தொழிலினால் எக்காலத்தும் ஜீவனம் செய்யலாகாது. என்னே மனுவின் தருமம்!
இக்காலம்தான் பிராமணர்களுக்கு ஆபத்துக்காலம். ஆகையால், அவர்களின் ஆணைப்படி பிராம்மணோமமதை வதம் என்று நடக்கிற ஓர் அரசனை நியமிக்கும் பொருட்டு ஹோம்ரூல் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு முயற்சி நடத்துகிறார்கள். ஆயினும், கோரிய பலன் கூடவில்லை. இப்போது நேபாள தேசம் ஒன்று மட்டும் மனுஸ்மிருதி முறைப்படிப் பிராமணன் ஆணைக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடக்கிறது. ஏனைய இந்திய நாட்டுச் சிற்றரசர்களும் சிற்சில காரியங்களில் இன்றும் கட்டுப்பட்டே ஒழுகி 1. ஆபத்காலம் - பார்ப்பனன் சொன்ன மனுவை அனுசரித்து ராஜன் ராச்சியப் பரிபாலனம் செய்யாத காலம்.
வருகின்றார்கள். முற்கூறிய பிரமாணத்தைத் தெரிந்து கொண்டவர்கள் பிராமணன் தோற்கடை, செருப்புக் கடை சோற்றுக்கடை முதலியன வைத்து வியாபாரம் செய்யலாமோ என்று கேட்பார்களோ?
1. பிராஹ்மணோ ஜாயமானோ
ஹிப்ருதில்யாம் அபியாஜதே ஈஸ்வர:
ஸர்வபூதானாம் ப்ரஹ்ம
கோசஸ்ய குப்தயே
2. ஸாவஸ்வம்ப் ராஹ்மணஸ்யேதம்
யத்கிஞ் சிஜ்ஜகதீகதம்;
ஸ்ரைஷ்டைனா பிஜனேனேதம்
ஸர்வம் வைப்பிராஹமணோர் ஹதி
3. ஸ்வமேவப் ராஹ்மணோ
புங்க்தேஸ்வம் ததாதிச:
ஆன்ருமிம்ஸ்யாத் பிராஹ்மண
ஸ்யபுஞ்ஸதே ஹீதரேஜனா
இதன் பொருள்: சகல பிராணிகளுக்கும் தலைவனாயும், வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும் பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப் பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ள வனாவான். பிராமணன் பிச்சை எடுத்துண்பவனாயினும் உண்பதும், உடுப்பதும், கொடுப்பதும் அவன் பொருளேயாம்.
ஏனையோர் பிராமணனுடைய கருணையால் அவனால் கொடுக்கப் பட்ட சிற்சில பொருட்களைப் பெற்றுக்கொண்டு உயிர் வாழ்கின்றார்கள்.
பிரம்மதேவன் இந்த உலகத்தைப் படைத்துப் பிராமணர் களுக்குத் தான் வழங்கினான் என்னும் புராண வாக்கியமும் இதற்குச் சான்றாகும். இதே கருத்துடைய வாக்கியங்களை யாக்ஞவல்கியரும் கூறுகின்றார்.
தபஸ்தப்த்வாஸ்ருஜத் ப்ரஹ்மா
ப்ராஹ்மணோ கோசஸ் யேதகுப்தயே
த்ருபத்யர்த்தம் பித்ருதேவானாம்
தர்மஸம் ரக்ஷ்ணாயச்
ஸார்வஸ்ய ப்ரபவோவிப்ரா;
ஸ்ருதாத் யயனசீலின:
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101130/news17.html