புதன், 5 ஜனவரி, 2011

ஞானசூரியன்-27

அதற்கு உதாரணம்:
ஜாமிவா ஏதத் யஞ்ஸ்ய க்ரியதே
யகன்வஞ் செளபுரோடாசெள
புரோடாசம் மாத்திரம் உட்கொள்ளுவதால், யஜ்ஞ, புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக் கும் பொருட்டு மத்தியில் 1வபா ஹோமம் செய்யவேண்டும்.
யஜ்ஞார்த்தம் பசவ; ஸ்ருஷ்டா:
ஸ்வயமேவ ஸ்வயம்புவா;
யஜ் ஞஸ்ய பூத்யை ஸர்வஸ்ய
தஸ்மாத் யஜ்ஞே வதோவத:
பொருள்: உயிர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிய யாகத்தின் பொருட்டுப் பிரம்மன் மிருகங்களைச் சிருஷ்டித் தான். (மனிதர்கள் மிருங்களைக் கொன்று தேவர்களுக்குக் கொடுப்பதுதான்மிருகங்களைச் சிருஷ்டித்தன் கருத்துப் போலும்). அதனால், யாகத்தில் செய்யும் கொலை பாவமாகமாட்டாது.
கொலைத் தொழில் பாவத்தை உண்டாக்குமாயினும், யாகத்தின் பொருட்டுச் செய்யும் அத்தொழில் புண்ணி யத்தையே பயக்கும் என்பது
1. வபா என்பது மனிதன் முதலிய எல்லா ஜீவன்களுடைய சரீரத்திலும் இடப்பக்கத்தின் புறத்திலுள்ள ஒரு விதமான கொழுப்பு
வைதிக மதம். கொல்லப்பட்ட பசுவின் அவயவங்களைத் தேவர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய முறை கூறப் பட்டிருப்பதையும் கவனியுங்கள்.
ஹ்ருதயம் ஜிஹ்வா வக்ஷோ
யக்ரித் வ்ருக்வயள ஸ்வயம்
தோருபே பார்சுவே ஸ்ரோணிர்
குதத்ரிதீயமிதி தைவதானி:
தக்ஷிணம் தோஸ்ஸவ்யா ஸ்ரோணிர்
குதத்ரிதீயமிதி ஸௌவிஷ்ட
க்ருதானி; க்லோமானம் ப்லீஹாததம்
தனீஷ்டு மத்யூத்னீம் புரீனம்
மேதோ ஜாகனீ மித்யுத்தரதி (ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்)
பொருள்: ஈரல், நாக்கு, மார்பு 1யக்ருத் இரண்டு பக்கங்களிலும் உருண்ட வடிவாயிருக்கிற தசை, இடக்கை, இட விலாப்பக்கம், வலத் தொடையின் மேற்பக்கம், புட்டத் தின் மூன்றிலொரு பங்கு இவ்வளவும் தேவர்களுக்காகவும், வலக் கை, இடத்தொடையின் மேற்புறம், புட்டத்தின் மூன்றிலொரு பங்கு இவைகள் ஸ்விஷ்டக் ருத்ஹோமத்தின் பொருட்டும், யக்ருத்தைப் போன்றதும், திலகமென்ற பெயருள்ளதுமான மாமிசம், நுரையீரல், சிறுகுடல், மடி கொழுப்பு, வால் இவைகளும் எடுக்கவேண்டும்.

அவிசு பங்கிடும் முறை

அதாத; பசோர் விபக்திஸ்தஸ்ய விபாபகம் வக்ஷயாம்: ஹனூஸ ஜிஹ்வே ப்ரஸ்தோது: ஸ்யேனம் வக்ஷஉத்காது: கண்ட: காகுதர: ப்ரதிஹர்த்து: தக்ஷிணாஸ் ரோணிர் ஹோது: ஸவ்யா ப்ராஹ்மண: தக்ஷிணம் ஸக்தி: மைத்ரா வருணஸ்ய ஸவ்யம் ப்ராஹ்ம ணாச் சம்ஸின: தக்ஷிணம் பார்ஸ்வம் மாம்ஸ மத்வர்யோ: ஸவ்யமுப காத் ரூணாம் ஸவ் யாம்ஸ: ப்ரதிப்ரஸ் தாது: தக்ஷிணம் தோர்நேஷ்ட: ஸ்வயம் போது: தக்ஷிண ஊருரச்சாவாகஸ்ய ஸவ்ய ஆக்நீத்ரஸ்ய தக்ஷிணோ பாகுராத் ரேயஸ்ய ஸவ்யஸ் ஸதஸ்யஸ்ய ஸதம் சானூகஞ்ச க்ருஹபதே: தக்ஷிணௌ பாதென 1. இந்தச் சூத்திரத்திற்குப் பொருள் தயானந்த சரஸ்வதியை (ஆர்ய சாம்ராஜ்யத்தை)க் கேட்டால், என்ன உத்தரவு சொல்லுமோ அறியேன். ஆனால், இன்றுநாள் வரைக்கும் ஜனங்கள் அனுஷ்டித்து வந்த முறையை இங்கு வரைந்துள்ளேன்.
க்ருஹபதே வ்ரதப் ரதஸ்ய ஓஷ்ட ஏதயோ ஸாதாரணோபவதி தம் க்ருஹபதி ரேவ ப்ரசிம்ஷயாத் ஜாகனீம் பத்னீப்யோ ஹரந்தி தாம் பாஹ்மணாயதத்யு: ஸ்கந்தாஸ் சமணி காஸ்திரஸ்ச கீகஸா க்ராவஸ்துத: திஸ்ரஸ்சைவ கீகஸா அர்த்தஞ்ச வைகர்த்தஸ் யோன்னேது: அர்த்தஞ் சவைகர்த்தஸ்ய க்லோமாசகமிது தத்ப்ராஹ்மணாய தத்யாத் யத்யப்ராஹ்மனஸ் ஸ்யாத்: சாரஸுப்ரஹ்மண்யாயைய்யஸ் வஸ்ஸய்த்யாம் ப்ராஹ தஸ்யா ஜினமினி ஷர்வேஷாம் ஹோதுர்வா

(அய்தரேய ப்ராஹ்மணம்)

பொருள்: கொல்லப்பட்ட பசுவைப் பங்கிடும் வகை சொல்லப்படுகின்றது. நாக்கு **ப்ரஸ்தோதாவிற்கும், பருந்தின் வடிவத்தையுடைய மார்பு *உத்காதாவிற்கும், கழுத்தும் முதுகிலிருக்கிற கொண்டையும் *ப்ரதிஹர்த்தா விற்கும், வலத் தொடை *ஹோதாவிற்கும் இடத் தொடை *பிரம்மாவிற்கும், வலத் தொடையின் அடிப்பக்கம் மைத்திரா வருணனுக்கும், இடப்பக்கம் *ப்ராம்மணாச் சம்சிக்கும், வல விலாப்புறமும், வலது தோளும் அத்வர்யு வுக்கும், இடது விலாப்புறம் *உபாகாதாக்களுக்கும், இடத்தோள் ங*ப்ரதிப்ரஸ்தாவிற்கும், வலக்கை *நேஷ்டா விற்கும், இடக்கை *போதா விற்கும், வலத் தொடை *அச்சாவாகனுக்கும், இடத்தொடை ஆக்னீத் ரனுக்கும், ஃவலக்கை *ஆத்ரேயனுக்கும், இடக்கை *ஸதஸ்யனுக்கும், வல விலாவெலும்பும் அலைதாடியும் *க்ருஹபதிக்கும், வலக் கால் போஜன தாதாவாகிய *க்ருஹபதிக்கும், இடக் கால்*க்ருஹபதி மனைவிக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். உதடு கணவனுக்கும் மனைவிக்கும் உரித் தானது. அதை க்ருஹபதி கையாலெடுத்து இது உன்னு டையது என்று சொல்லி மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/728