செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-31

இனி ஆகமங்களின் கருத்துகள்:

இதுவும் தவிர, சில உபாசனைகளின் ஆபாசங்களையும் ஈண்டுக்கூறுகிறோம். அவற்றுள் காளிகாதேவியின் தியான சுலோகமும் பூசை முறையும் கீழ் வருமாறு:-

ஸத்ய: ச்சின்னசிர:க்ருபாணமபயம்
ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்
கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா
ஸுருசிராமுன் முக்த கேசாவலீம்:
ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்
சவகரைர் தேவீம் பஜேகாளிகாம் (மந்த்ர மஹோததி)

பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளையுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழத்துவிட்ட கூந்தலும், கடைவாயினின்றும ஒழுகுகின்ற இரத்தப் பெருக்கும், சவங்களைத் தோடாக உடைய காதுகளும், சவத்தினது கைகளின் வரிசையே ஒட்டியாணமாக அணிந்திரா நின்ற

1 மைத்திரி மித்திரத்தன்மை அதாவது நட்புரிமைக் குணம். இதன் உண்மையைக் கண்டனுபவித்து உலகத்தாருக்கு அருள் புரிந்த கருணாமூர்த்தி பகவான் புத்தனன்றோ!

இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடுகிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வரு ணிப்பது:-

அஸ்மின்வீடே யாஜேத் தேவீம்
சிவரூப சவஸ்திதாம்:
மஹாகால ரதாஸக்தாம்
சிவாபிர்திக்ஷு வேஷ்டிதாம்

பொருள்: சவ ரூபாமாயிருக்கிற சிவனுடைய உடலை மிதித்துக் கொண்டிருப்பவளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடைய வளும், பெண் நரிகளால் சூழப்பெற்றவளுமான தேவியைப் பீடத்தின் கண் ஆவா கித்துப் பூசிக்கவேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை.

ஸுத்ருசோ மதனாவாஸம்
பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்:
அயுதம் ஸோசி ராதேவ
வாக்பதே: ஸமதாமியாத்

பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு, பத்தாயிரம் மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமனாவான். மந்திரம் ஜபிக்க வேண்டிய முறை மற்றொன்று:-

திகம்பரோ முக்தகேச: ஸ்மசானஸ்தோ தியாமினி:
பேத்யோ யுதமேலஸ்ய பவேயு: சர்வகாமனா:
பொருள்: இரவு சுடுகாட்டின்கண் நிர்வாணமாக இருந்து கொண்டு தலைமயிரை அவிழ்த்துவிட்டுப் பதினாயிரம் உரு செபிக்கிறவனுக்குக் கோரிய பலன் கைகூடும்.
சாவம் ஹ்ருதயமாருஹ்ய
நிர்வாஸா: ப்ரேத பூகத;
அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப் யக்தேன
ஸ்வீயரேதஸா. தேவீம் ய: பூஜயேத் பக்த்யா
ஜபன்னே கைக சோமனும்
ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத் (மஹோததி)

பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம்பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரம் சொல்லித் தேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவன்.
1
ரஜ: கீர்ணபகம் நார்யா
த்யாயன்யோ யுத மாஜபேத்;
ஸகவித்வேனரம்யேண ஜனான்
மோஹயதி த்ருவம்
பொருள்: தூரமான பெண்ணின் இரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு செபிக்கிறவன் மதுரமான செய்யுட்களால் உலகத்தை மயக்குவான்

..........................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்;
மஹாகாலேனதேவேன மாரயுத்தம் ப்ரகுர் வதீம்,
தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸுரதம் ஸவயம்
ஜபேத் ஹைஸ்ரமபிய: ஸசங்கரஸமோ பவேத்

பொருள்: பிணத்தின் மார்பில் இருந்து மஹா காலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்துக் கொண்டு ஒரு பெண்ணுடன் சம்போகித்துக் கொண்டே ஆயிரம் உருவேனும் சபிக்கிறவன் சிவனுக்கு ஒப்பாவான். பூனை, ஆடு இவைகளின் எலும்பு, மயிர், தோல் இவை களும் தசையும் அஷ்டமி இரவு நடுச்சாமத்தில் பலி கொடுத்து மந்திரம் செபிக்கிறவனுக்கு மூன்றுலகமும் கீழ்ப்படியும், பகலில் தேவிக்கு நிவேதித்த அவிசையும், இரவில் மைதுனம்

1 விளம்பரத்தில் கண்ட (3) மூன்றாவது கேள்வியில் உற்பத்தி காலத்திற்கு முன்புள்ள நிலை எவ்வாறு இருந்தது? மேற்கூறியவாறு சைவம், வைதிக மதம் இவைகள் இருந்தது (சைவமும், சாந்தமும் அல்லது தாந்திரீக மதமும்) திருஞான சம்பந்தருக்கும், புத்த, சமணருக்கும் முன்ஒன்றுபோலவே இருந்தது.

பண்ணிக்கொண்டும். லட்சம் தடவை ஜெபித்தால் அரசனாவான். எருமை முதலிய உயிர்களின் இரத்தத்தைத் தர்ப்பணம் செய்துகொண்டு மந்திரம் ஜெபித்தால், எல்லாச் சித்திகளையும் அடைவான்.

- http://viduthalai.in/new/page-3/2531.html?sms_ss=blogger&at_xt=4d4843cb519031e2%2C0