செவ்வாய், 19 அக்டோபர், 2010

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் விடுவிக்கப்பட்டாரா? இலங்கை-இந்தியாவின் பதிலென்ன?

புதுடில்லி, அக். 17- போர்க்களத்தில் கொல் லப்பட்டார் என இலங் கையும் இந்தியாவும் மாறி மாறி பிரபாகரன் மரணம் குறித்து கூறி வந்தபோதிலும், ராஜீவ் காந்தியின் கொலை வழக் கிலிருந்து பிரபாகரன் இன்னமும் விடுவிக்கப் படவில்லை.

தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய ஒருவ ருக்கு அளித்த பதில் மூலம் இதனை சிபிஅய் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணு வத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிர பாகரன் சுட்டுக்கொல் லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. இதனை இந்தியாவும் ஏற்றுக் கொண்டது.
அதே நேரம், இந்தி யாவின் முன்னாள் பிர தமர் ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக் கப்பட்டிருக்கும் நிலை யில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், முதன்மைக் குற்றவாளி களாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்கள் வழக்கிலிருந்து விடுவிக் கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜீவ் கொலை வழக் கில் இருந்து விடுவிக்கப் படவில்லை என்ற தக வல், சி.பி.அய்.யிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. திருப் பூர், குத்தூஸ்புரத்தை சேர்ந்த மணி என்பவர், சி.பி.அய்.,யிடம் தகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் கீழ் சில தகவல் களை கோரி இருந்தார். அதில்,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜீவ் கொலை வழக் கில் குற்றவாளியாக அறி விக்கப்பட்டுள்ளாரா?
இலங்கை அரசு, பிர பாகரன் சுட்டுக்கொல் லப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்துள் ளதா? இது தொடர்பாக அரசு ரீதியான தகவல் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள் ளதா?
பிரபாகரனின் இறப் புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து பெறப் பட்டுள்ளதா?
ராஜீவ் கொலை வழக் கில் பிரபாகரன் விடு விக்கப்பட்டுள்ளாரா?
என்ற கேள்விகளை எழுப்பி, தகவல் கோரி யிருந்தார்.
இந்நிலையில் இக் கேள்விகளுக்கு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சி.பி.அய்., பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், ராஜீவ் கொலை வழக்கில் விடு தலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குற்றவாளி தான் எனவும், பிரபாக ரன் இறந்து விட்டதாக, இலங்கை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்ப தாகவும், அரசு ரீதியான தகவல் பெறப்பட்டுள்ள தாகவும், பதில் அளிக் கப்பட்டுள்ளது.
அதே சமயம் இறப்புச் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு, அலுவலக ரீதியாக உறுதிப்படுத் தப்பட்டுள்ளது என்று மட்டும் பதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப் படவில்லை என்றும் சிபிஅய் தெரிவித்துள்ளது.

- http://www.viduthalai.periyar.org.in/20101018/news02.html