வியாழன், 14 அக்டோபர், 2010

யார் இந்த ஆர்க்காடு இரட்டையர்கள்?

பொதுவாக இந்த நாட்டில் ஜாதி முறை புகுத்தப்பட்டதால், பார்ப்பனரல்லாத மக்களிடையே சிறந்து விளங்கிய பெரிய பெரிய அறிவாளிகளைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது. பல சமுதாயத் தடைகளை உடைத்து எறிந்து, முன்னணிக்கு வந்த தங்கள் தலைவர்களையும் பார்ப்பனரல்லாத மக்கள் பாராட்டத் தவறிவிட்டார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறந்து விளங்கிய ஆர்க் காடு இரட்டையர்களான சர் ஏ.இராமசாமி (முதலியார்) டாக்டர் ஏ. லட்சுமணசாமி (முதலியார்) இவர்களைப்பற்றிப் பார்ப் பனரல்லாத பொது மக்கள் ஓரளவுதான் அறிந்துகொண்டார்கள். அவர்களுடைய நூற்றாண்டிலாவது அவர்களைப்பற்றி மேலும் சிறப்பாக அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
கல்வித் துறையில் அரசுப் பதவிகளில் சமுதாயத் துறையில், பார்ப்பனரல்லாத மக்கள் தற்போது ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காண்கிறோம். இந்த முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெரிய வர்கள் பலர். அவர்கள் வரிசையில் வைத்து எண்ணக் கூடியவர்கள் இவ் விரட்டையர்கள் ஆவார்கள்.
அடித்தளம் போன்றவர்கள்
பார்ப்பனரல்லாதார் ஒன்று கூடித் தங்களுடைய உரிமைகளைத் தட்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்ந்த பார்ப்பனர்கள் தங்களுடைய பலமான பலதிறப்பட்ட எதிர்ப்புகளை ஆரம்பத்தில் அதிக அளவில் தெரிவித் தார்கள். பார்ப்பனரல்லாத தலைவர் களுக்குப் பல தொல்லைகளைத் தந் தார்கள், அவர்களைத் தனிப்பட்ட முறை யிலும், தரங்கெட்ட நிலையிலும் தாக்கி னார்கள். பார்ப்பனரல்லாத பொதுமக்களே தங்கள் தலைவர்களை வெறுக்கும்படியும் தூற்றும்படியும் ஆன சூழ்நிலைகளைப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக உருவாக் கினார்கள்.
‘‘Any one who identified himself with the movement had to be prepared for any amount of misunderstanding, abuse and obloquy - justice year-book-1929.’’
பார்ப்பனர்களின் இவ்வித சூழ்ச்சி களை முறியடித்து முகிலைக் கிழித் தெறிந்து வெளிவந்த நிலவுபோல் இவ்விரட்டையர்கள் பார்ப்பனரல்லாத மக்களிடையே தோன்றியது மிக மிக வியப்பளிப்பதொன்றாகும். பார்ப்பனரல் லாத மக்கள் இக்காலை பெற்று அனு பவித்து வரும் பல சமுதாய நலன் களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவ்விரட்டையர்கள் தங்கள் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார்கள்.
தாலியறுத்த ராமசாமியாம்!
பார்ப்பனர்கள் எவ்வளவு தொல்லை களை சர் ஏ.ராமசாமி (முதலியார்)க்கு அளித்தார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு சர் ஏ.இராமசாமி தேர்தலில் நின்றபோது, தாலி அறுத்த ராமசாமி முதலியாருக்கா ஓட்டு என்ற உண் மைக்கு மாறான குற்றச்சாற்றை அவர் மீது சுமத்தி புழுதிவாரி இறைத்தார்கள் அப்போது.
தமிழ்நாட்டில் தென்னிந்திய ரயில்வே நிருவாகத்தினர் பல புகைவண்டி நிலையங்களிலேயே பல சிற்றுண்டி - உணவு சாலைகளை நடத்தினார்கள். அங்கு பார்ப்பனர்களுக்கு மட்டும், பார்ப்பனரல்லாதார்க்கு மட்டும் என்ற பெயர்ப் பலகைகளைத் தொங்கவிட்டு பழம் பெரும் புகழும், பெயரும் பெற்று விளங்கிய இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களாகிய பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தினார்கள். இச்சமுதாய இழிவை - அவமானத்தைத் துடைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். தென் ஆப்பிரிக்காவில் கையாளப்பட்டு வரும் இன ஒதுக்கல் (Apartheid) கொள்கையிலும் மிகவும் மோசமானது இவ்வின ஒதுக்கல் ஏற்பாடு. தந்தை பெரியாரின் போராட்டத்தின் வலிமை யையும், நியாயத்தையும் ஆதரித்து அன்றுள்ள வெள்ளையர் ஆட்சி ரயில்வே சிற்றுண்டி உணவுச் சாலை களில் தொங்கவிடப்பட்ட பெயர்ப் பலகை களை எடுக்கும்படி 20.3.1941 இல் உத்தரவு இட்டார்கள். இந்த முயற்சிக்கு பெரும் உதவியாக இருந்தவர் சர் ஏ. இராமசாமி ஆவார். அப்பொழுது அவர் டில்லி மத்திய அரசில் வர்த்தக மந்திரியாக இருந்தார்.
தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டினால்தான் பார்ப்பனரல் லாத தலைவர்கள் பெரிதும் மதிக்கப் பட்டார்கள், பாராட்டப் பெற்றார்கள் என்ற உண்மையை யாரும் உணர்வர். வாய்ப்பும், வசதியும் அளித்தால் பார்ப் பனரல்லாதவர்களும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர்கள் இவ்விரட்டையர்கள் அந்தக் காலத்தில்.
பார்ப்பனரல்லாத மக்களிடையே பார்ப்பனர்களுக்குமேல் பொதுவாழ்வில் சிறந்து விளங்கிய ஆங்கிலப் பேச்சாளர் சர் ஏ. இராமசாமி ஆவார். அவர் சான்பிரான்சிஸ்கோ (Sanfrancisco) மாநாட்டில் பேசிய பேச்சு நயாகரா நீர்வீழ்ச்சிபோல இருந்தது என்று உலகத் தலைவர்கள் எழுந்து நின்று அவருக்கு அன்று புகழாரம் சூட்டினார் கள். மருத்துவத் துறையில் பெண்கள் மகப்பேற்றுத் துறையில், சிறப்பாக விளங்கியவர் டாக்டர் ஏ. லட்சுமணசாமி ஆவார். அவர் தொடர்ந்தாற்போல் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவராக இருபத்தைந்து ஆண்டு கள் சிறந்து விளங்கினார்.
இவர்களுடைய தனிச்சிறப்பிற்கு அடித்தளமாக அமைந்தது அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்காக தங் களால் இயன்றளவு செய்த தொண்டுதான் என்பதை இன்றுள்ள இளைஞர்கள் உணரவேண்டும். அதைவிட சிறப்பானது இவ்விரட்டையர்கள் தந்தை பெரியாரின் பாராட்டுதல்களைப் பெற்றவர்கள். சிறந்த கல்வியாளர்களாக, அரசியல்வாதிகளாக, நிருவாகத் திறனுடையவர்களாக, அறி வாளிகளாகத் திகழ்ந்த இவ்விரட்டையர் களை நினைவு கொள்ள வேண்டியது பார்ப்பனரல்லாத மக்களின் நீங்காக் கடமையாகும்.
ஒரு சமயம் எனது நண்பர் ஒரு வருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவேண்டியதாயிற்று. நான் தந்தை பெரியார் அவர்களை அணுகி டாக்டர் லட்சுமணசாமி (முதலியார்) அவர்களுக்கு ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். தந்தை பெரியார் அவர்கள் உடனே டாக்டர் அவர்களுக்கு ஒரு சிபாரிசு கடிதத்தை என்னிடம் அளித் தார்கள். தன் கைப்பட அந்த சிபாரிசுக் கடிதத்தை எழுதியவர் நமது பெருமதிப் பிற்குரிய ஆசிரியர் கி. வீரமணியே ஆகும். டாக்டர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய கடிதத்திற்குப் பெருமதிப் பளித்து, அந்த அறுவை சிகிச்சையை அவரது மகன் டாக்டர் வேணுகோபால் செய்யும்போது, தானும் உடனிருந்து கண்காணித்து வந்தார். இது, அவர் தந்தை பெரியார் அவர்களிடம் கொண் டிருந்த அன்பையும், மதிப்பையும் காண் பிக்கிறது.
வாழ்க இரட்டையர்களின் புகழ்! வாழ்க அவர்களின் பொதுத்தொண்டு!
- திருச்சி சி. ஆளவந்தார்
நன்றி: ஆர்க்காடு இரட்டையர்கள் நூற்றாண்டு விழா மலர் (1887-1987)

-http://www.viduthalai.periyar.org.in/20101014/news10.html