வெள்ளி, 1 அக்டோபர், 2010

அயோத்தி வழக்கு ஒரு பார்வை!


தலைநகர் புதுடில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். இது 7ஆம் நூற்றாண்டில் பல கோயில்களை உள்ளடக்கி கோயில் நகரமாக இருந் தது என்று சீனத் துறவி யுவான் சுவாங் தனது குறிப்பு களில் தெரிவித்துள்ளார். அங்கு ராமர் கோயில் இருந் ததாக 12ஆம் நூற்றாண்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.


பாபர் மசூதி இடிப்பதற்கு முன்...

1527: மொகலாய மன் னர் பாபர் இந்தியா மீது படையெடுத்தார். அவர் பல ஹிந்து மன்னர்களை வெற்றிகண்டார். தான் வெற்றிகண்ட பகுதிகளில் ஆட்சிபுரிய ஜெனரல் மீர் பாகியை வைஸ்ராயாக நியமித்தார். மீர் பாகி அயோத்திக்கு 1528 இல் வருகை தந்தார். சர்ச்சைக் குரிய இடத்தில் உள்ள கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறப் படுகிறது. பின்னர் பாபரின் பெயரை அந்த மசூதிக்கு சூட்டினார்.

1853: சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத் துவது தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம் களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த நேரத்தில் சீதா ரசோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (வேள்விக் கூடம்) கட்டப்பட்டன.

1855 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக் களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்துள்ள தாக பிரிட்டிஷ் காலனி ஆட்சி தகவல்கள் தெரிவிக் கின்றன.

1859: ராமஜென்ம பூமியில் இந்துக்கள் வழிபட தனி இடமும், முஸ்லிம்கள் வழிபட தனி இடமும் ஒதுக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்பி வலை அமைத்தனர்.


பாபர் மசூதியை இடிக்கும் இந்து மத வெறியர்கள்

1936 ஆம் ஆண்டுக்குப் பின் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்று ஹிந்துக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 1949 டிசம்பர் 22: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்துக்களும் முஸ்லிம்களும் அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்ற படி ஏறினர். அப்போது சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு வளாகத் துக்கு பூட்டுப் போடப்பட்டது.

1950: கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ச ராமச்சந்திர தாஸ் ஆகிய இருவரும் ராமர் சிலையை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உள்பகுதி பூட்டப்பட் டது. ஆனால் வளாகத்தில் பூஜை நடத்த அனு மதிக்கப்பட்டது.

1959: நிர்மோஹி அகடா என்ற இந்து அமைப் பினர் மற்றும் மஹந்த் ரகுநாத் ஆகியோர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய தாங்கள்தான் உரிமை உள்ளவர்கள் என்று அவர்கள் கோரினர்.

1961இல் சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதிக்கு உரிமை கொண்டாடியதோடு அதனைச் சுற்றியுள்ள இடம் சமாதி என்று கூறியது.

1986: ஃபைஸாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹரிசங்கர் துபே என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த பிப்ரவரி 1இல் அனுமதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூட்டுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முஸ்லிம் கள் சார்பில் பாபர் மசூதி நடவடிக்கை குழுஅமைக் கப்பட்டது.

1989: நவம்பர் 9 ஆம் தேதி ராமர் கோயில் கட்ட பூமி பூஜைக்கு அப்போ தைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதியளித்தார். இதே ஆண்டில் மசூதியை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் வழக் குத் தொடர்ந்தார்.

2002: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந் ததற்கான அடையாளங் கள் உள்ளதா என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக் கப்பட்டது.


பாபர் மசூதியை இடித்த பின்பு...

2010: இந்த பெஞ்ச் தனது விசாரணையை கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறைவு செய்து செப்டம்பர் 24இல் தீர்ப்பு என்று அறிவித்தது. ஆனால் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தடை உத்தரவை செப்டம்பர் 28ஆம் தேதி விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது.

-http://viduthalai.periyar.org.in/20100930/news09.html