திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-45

ஆகையால், ஓ பண்டிதரே! இடையூறை விளைவித்து நஷ்டப்படுத்த வேண்டாம்! 1சுவாஹா.

இது ஒரு வேடிக்கைக் கதையாயினும் ஆகுக. வேதங் களின் கருத்து இப்படியேயாம். இவ்விதமாக உடல் வருத்த மின்றி வயிற்றை நிரப்பிவரும் ஒரு சிலர் வேதங்களும் புராணங்களும் எல்லாம் தங்களுடையனவென்றும், தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத்தான் சொர்க்கவாசலைத் திறந்துவிடுவோம்; மற்றவர்களை நரகத்திற்கு அனுப்புவோம் என்றிவ்வாறு சொல்லுகிறார்கள். நமக்கு அவர்களின் சொர்க்கமும் வேண்டாம். நரகமும் வேண்டாம். புராணங்களும், வேதங்களும் உணர்த்துகிற விஷயம் இதை ஊன்றிப்படித்தால் அறிந்து கொள்வீர்கள். ஆதலால், அவைகளும் நமக்கு வேண்டாம். அவர்கள் பூமி தேவர்களாகவே வாழ்ந்துகொள்ளட்டும். ஆனால், நாமும் ஏனைய (பிற நாட்டிலுள்ள) மனிதர்களைப் போலாவது வாழ வேண்டாமா? அதற்காக முன்னேற்ற வழியில் முயற்சிப் போமாக. இம்மைக்கு வேண்டிய கல்வி, தொழில் முதலியவை களில் அவரவர்களின் இயற்கைக் குணத்திற்கேற்றவாறு நமது சிறுவர்களைப் பழக்க வேண்டும். மோட்சத்துக்கு உலகப் பற்றையொழித்தவன்தான் அதிகாரி. அதற்குத் தத்துவசாஸ்திர ஆராய்ச்சியும், நல்லோர்களின் கூட்டுறவும் வேண்டும். அதற்கு வேண்டிய நூற்கள் பல நம் மூதாதை யர்கள் இயற்றியிருக்கின்றனர்.
ஆதலால், இந்துக்கள் என்று நம்பியிருந்த மூட நம்பிக்கையை இதுமுதல் விட்டுவிட்டு, நம்மவர்கள் ஒவ்வொருவரும் விலகி விடுபட்டு, முன்னேற்றமடையும் வழியைக் கூறியுள்ளேன். இவ்வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, இதன்படி ஒழுகி, அதனால் நற்பயனையடையுமாறு சர்வேசுவரனாகிய ஞானகுரு அருள் புரிவானாக: (இத்தோடு மலையாள பாஷையில் முன்னமே இயற்றிய அப்ரஹ் மணோத் போதனம் முற்றிற்று)
அய்ந்தாவது அத்தியாயம்

ஆகமம் வேதஸ்மிருதியோடொத்தது
முனீந்திரர் - முனித்தலைவர் - அத்திரி, விஸ்வாமித்திரர், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர், மரீசியென்னும் எழு வரையும் மொழிகின்றது. முனிவர் - ரிஷி (மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள்; உண்டு பண்ணினவர்கள்.)

சித்தர் - மனிதர், ஜனகர், சனந்தனர், சனக்குமாரர், கபிலர், பிருகு, பஞ்சசிகர், சிவன், உருத்திரன் பவானி, பிரமன், விஷ்ணு, அக்னி, வாயு, எமன், சூரியன், சந்திரனென்னும் பதினெண்மரும் சித் தர்களென்று ததே மன்ஷ்யாஸனக என்றெழுதிச் சொல் லுஞ் சுலோகங்களின் வாயிலாக மேலைப் படலமே விளம்புகின் றது. இப்படலத்தின் திருபுண்டரதாரண அங்குலம் - அந்தணருக்கு 6, அரச ருக்கு 4, வைசியருக்கு 2, சூத்திரர் களுக்கு பெண்களுக்கும் 1 என விதிக்கப்பட்டமையாலும், இந்நூல் வருணத்திற்கும் வேறாய ஜாதியாருக்கும் அவ்வொன்று மின்றென்றமை யானும் அந்தணர் உத்தரீயம் (மேல் வேஷ்டி) அணியலாம். சூத்திரர் அஃதணிய வொண்ணாதென்றமையானும், சாலா லட்சண விதிப்படலத்தில் அந்தணர் முதலிய மூவருணத்தார் வீடுகள் இரட்டைத்தூண் நிறுவியும் மற்றையோர் வீடு ஒன்றைத் தூண் நிறுவியும் கட்ட கட்டுப்பாடாம். அந்தண ருக்கு 11 அடுக்கும், அரசருக்கு 5 அல்லது 7 அடுக்கும், வைசியர், சூத்திரர்க்கு 3 அடுக்குள்ள வீடுகளுரியன வென்றமையானும், பூகர்ஷண விதி படலத்திற் பயிரிடற் குரிய உழவு முறை - அந்தணர்க்கும், அரசருக்கும் 32, வைசியருக்கு 15, சூத்திரருக்கு 7 என்றமையானும்; ஆலயங் களிலும், கிராமங்களிலும், சிவத்துவிசரே (ஆதிசை வரென்னும் பிராமணர்) சிறந்தவர். தட்சணை பெறற்குரி யோரென்றாமையானும்; தந்தராவதார படலத்தில் ஆதி சைவ விப்பிரர்களாகிய ஆசார்ய பரம்பரையில் இவ்வாக மங்களை ஓதலும், ஓதுவித்தலும் இவ்வுலகம் செய்யத் தக்கன. மற்றவரைக் கொண்டு அவை செய்யத்தக்கனவல்ல. சூத்திரர், சவருணர் முதலியோரும், சிற்பிகளும், சித்திரம் தீட்டுவோரும் சைவாகமங்கள் படிப்பது பாவமென்றமை யானும், பூபரிக்ரஹ விதிப்படலத்தில் அவ்வாதி சைவ ஆசாரியார் முதலியோரைப் பூசித்து, அவருக்குத் தட்சணை கொடுத்திடுகவென்றும், பூகர்ஷண விதிப்படலத்தில் நிலத்தையுழுபடை கொண்டுழும்போதும் அவ்வாசாரி யாருக்குத் தக்ஷிணையாக 5 (நிஷ்கம்) வராகனெடைப் பொன்னும் மோதிர உபகாராகப் பசு, எருது முதலியனவும் ஈந்திடுகவென்றும், கர்ப்பந்யாச விதிப்படலத்தில் வஸ்திர மும், பொன்னும் மோதிர முதலிய அணிகளுமாகிய இவற் றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து உத்தமமாகப் பதினைந்து வராகனும் மத்திமமாக 10 வராகனும் அதமமாக 5 வராகனும், அவருக்குத் தட்சணையாக கொடுத்திடுக

- http://viduthalai.in/new/page-3/4351.html?sms_ss=blogger&at_xt=4d6b78cc85205ddb%2C0

வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-44

இத்தகைய உணர்ச்சி எப்போது உயிர்களுக்கு உண்டா கின்றதோ, அப்போதே முக்தி, பரமாத்மாவுடன் ஒற்றுமை நிர்வாணம் கைகூடுகின்றது என்று உபனிஷத்துகள் கூறுகின்றன. ஆனால், இது சங்கராச்சாரியாரின் கொள்கையே ஆகும். நீலகண்டர், இராமாநுஜர், மத்வர் முதலிய பலரும் பல திறப்பட்ட கொள்கைகள் உடையவர்கள். இவர்கள் அனைவரும் உபனிஷத்துகளையே முதல் நூலாக ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். ஒரு சொல்லிற்குப் பல பொருள்களையுணர்த்தும் வட மொழியானது மேற்கண்டவர் களின் மதியை மயக்கிப் பல துறைகளில் அலையச் செய்ததே இதற்குக் காரணம். ஆனால், சங்கராச்சாரியாரின் கொள்கைப்படி ஜீவனுக்கு இத்தகைய ஞானம் (பிரமம், சத்தியம், உலகம், மித்யை) வேண்டுமே ஒழிய, அவனுடைய செய்கை

எப்படியேனுமிருக்கலாம்.
அனுமேத ஸஹஸ்ராண் யப்யத:
குருதே ப்ரஹ்ம காத லக்ஷாணி:
பரமார்த்த விந்த புண்யைர் நச
பானபர் லிப்யத க்வாபீ (பரமார்த்தசாரம்)

பொருள்: ஆட்டையறுத்து ஆயிரம் யாகங்கள் செய்யினும், லக்ஷம் பிரம்மஹத்தி(பார்ப்பனக் கொலை) செய்யினும், உண்மையை அறிந்தவன் புண்ணியத்தினாலும், பாவத்தினாலும் பற்றமாட்டான். இது பரமார்த்தசாரம் என்னும் நூலில் உள்ளது. (இந்தப் பிரமாணம் உணர்ந்ததனால்தான் ஆரியர்கள் குற்றமற்ற பவுத்தர்களைப் பல தடவைகளில் ஆயிரமாயிரக்கணக் காகக் கொல்வித்தார்கள் போலும்)
கீதையிலும், ஜ்ஞானாக்நி: ஸர்வகர்மானி பஸ்மஸாத் குருதேர்ஜுன, ஞானத்தீ எல்லாக் கருமங்களையும், எரிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறது. புத்த பகவான் நல்லொழுக்கத்தினாலும், புத்த தத்துவ சாக்ஷாத் காரத்தினாலும் மனத்தூய்மை அடைந்தவனே மோட்சத்துக்கு அதிகாரி என்று சொல்லியிருக்கிறார். சூன்னியவாதம் மித்திய மிக ஸுத்ரம், ராகத்வேஷ மோஹக்ஷ யாத்பரி நிர்வாணம் காமம், வெகுளி, மயக்கம் இவைகளின் நீக்கமே முக்தியைத் தரும் என்பது இதன் பொருள். புத்தபகவான் திருவாய் மலர்ந்தருளிய தத்துவ சாஸ்திரங்களை எல்லோரும் எளிதில் உணர்ந்து பயனையுமடையலாம்.

வைதிகர்களைக் குறித்த ஒரு கதை

வைதிகர்களைக் குறித்த ஒரு கதை, இச்சமயம் நினைவிற்கு வந்ததையும் இங்குக் கூறிவிடுகிறேன்.

தென்னாட்டிலிருந்த ஒரு பிரபுவானவர் தம் குடும்பத்தில் அடிக்கடி மரணம் முதலிய கெடுதிகள் நேருவதைக் குறித்து வருந்திப் பண்டிதரான ஒரு பார்ப்பனனை வரவழைத்துத் தம் குடும்பத்தை க்ஷேமமடைவிக்கும் படிக்குப் பிரார்த்தித்தார். அவன் இவரது ஜாதகத்தைக் கொண்டு வரச் செய்து பார்வை யிட்டு, இத் தகைய துன்பங்கள் யமனது வாகன மாகிய எருமைக்கடாவின் கோபத்தால் உண்டாயினவென்றும், ஆதலால், அதன் தாயான பெண் எருமையை மகிழ்வித்தால், தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பிறகு பிள்ளையினால் தொந்தரவு உண்டாகமாட்டாதென்றும், அதற்கேற்ற யாகம் ஒன்று செய்யவும், அந்த யாக முடிவில் கொம்பு, குளம்பு இவைகளைத் தங்கத்தினால் பொதிந்த பெண் எருமைகளும் தன்னாலி யன்றவாறு பிற பொருட்களும் (சுவர்ணதானம், கோதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம் முதலியன) தட்சணையாக வழங்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

பிரபுவும் கட்டளையைச் சிரமேற்றாங்கி யாகமும் நடைபெற்றுக் கொண்டே வந்தது. சில நாள்கள் சென்றதும் வித்து வானாகிய மற்றொரு பார்ப்பனன் அவ்வூருக்கு வந்தவன், யாகம் நடைபெறுவதைக் கேள்வியுற்றுத் தனக்கு ஏதேனும் தட்சணை கிடைக்கு மென்றெண்ணி யாக சாலைக்கு வந்தான். வந்தவிடத்தில் எந்த நூலிலும் இல்லாத புது முறைப்படி யாகம் நடைபெற்று வரவே, சந்தேகத்துடன் ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்ததைப் பார்த்த பழைய புரோகிதன், வந்தவன் சொந்தக்காரனிடம் உண்மையைத் தெரிவித்து வரும்படியில் மண்ணைப் போட்டு விடுவானோயென்று பயந்தான். இரகசியமாக ஒன்றும் சொல்லவும் தக்க இடமில்லை. உடனே, சமயோஜிதமான ஒரு புத்தி ஏற்பட்டது. ஹோமத்திர வியங்களைக் கையில் எடுத்து இம்மந்திரத்தைச் சொல்லி நெருப்பில் போடும் பாவனையாக வந்தவனுக்குத் தன் கருத்தை வெளியிட்டுப் பிரபுவின் முகத்தில் கரி தடவி, இருவரும் சேர்ந்து தட்சணைப் பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மந்திரமாவது:
மஹா மூர்க்கஸ்ய யாகோயம்

மஹசீத தக்ஷிண:
மமாப்யர்த்தம் தவாப்யர்த்தம் விக்நம்
மாகுரு பண்டித ஸ்வாஹா
பொருள்: இந்த யாகம் செய்வோன் அறிவிலிகளுக்குத் தலைவனாவான். இதற்கு அநேக எருமைகள் தானமாக வழங்கப்படும். அவைகளில் உமக்குப் பாதியும், எனக்குப் பாதியும்.

- http://viduthalai.in/new/page-3/4129.html?sms_ss=blogger&at_xt=4d663f18a82e9104%2C0

புதன், 23 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-43

வடமொழியின் ஆபாசம்

வடமொழியானது புலவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு பொருள்களைக் கற்பிக்க இடமுள்ளதாயிருக்கிறது. உபநிஷத்துகளை எழுதியவர்கள் கனவில்கூட நினைத்திராப் பொருள்களைச் சங்கராச்சாரியார் எழுதி, அவைகளைத் தம் மதமாக்கி, வேதத்தின் முடிவில் உள்ளவைகள் என்று உறுதிப்படுத்தினார்.

இதைப் போலவே காவியங்களிலும் மாறுபட்ட உரைகளைப் பார்க்கலாம். ஸ்புடபின்னார்த்த முதாஹாத்தச (மாகம்) என்று தொடங்கிய சுலோகங்களில் நிந்தையும், ஸ்துதியும் இருப்பதாக வியாக்கியானங்களால் தெரிகின்றது. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற பழமொழிக்கொப்பாக ஆபாசக் களஞ்சிய மாகிய வேதத்தை அறிவாளிகள் வெறுத்துத் தள்ளுவதைப் பார்த்த பார்ப்பனர்கள், வேதம் குற்றமற்றது என்று ஸ்தாபிக்கவேண்டி, சமஸ்கிருத பாஷைக்கு எதிர்பாராத பல அர்த்தங்களையும் உண்டு பண்ணி நிகண்டுகள் எழுதி வைத்தார்கள்.

இவ்வகைக் காரணங்களால் வடமொழியானது தத்துவசாஸ்திரம் எழுதத்தக்க மொழியன்று. தத்துவ நூற்கள் பார்ப்பனரால் எழுதப்பட வில்லை. அவைகளின் உண்மைக் கருத்துகளை உணர்ந்து கையாளப்படவு மில்லை. தத்துவத்தை முதன் முதலாக மனிதர்களுக்குப் போதித்தது 1பகவான் புத்தனேயாம். பிறகு சமணர்களின் நூற்கள் குரங்கின் கையிலகப்பட்ட பூமாலையைப் போல பார்ப்பனர் களின் கையிலகப்பட்டு உபனிஷத்து ரூபமாகச் சிதைவுற்றுக் கிடக்கின்றது.

மொழிகளுக்கு முரண்பட்ட பல பொருள்களைக் கற்பித்த தால் உண்டாகும் உயர்வும், தாழ்வும் அறிய விரும்புவோர், தஸாயன சாஸ்திரத்தில் சொற்களுக்கு முரண்பட்ட பொருட்களை உணர்த்துகிற பெயர்களை வைத்துப் பார்க்கட்டும். இவ்வைந்து வார்த்தைகளுக்கும் மார்ஜனில் காணுகிறபடிக்குள்ள பொருள்கள் இருந்தால், இந்த ரஸாயன சாஸ்திரம் என்ன பயனைத்தரும்?

புத்த பகவானுடைய தத்துவ சாஸ்திரம் ரஸாயன சாஸ்திரத்தின் உருவைச் சிதைத்து, வேதத்தில் உள்ளது எங்களுக்குச் சொந்த மானது என்று பிராமணர்கள் எழுதி வைத்திருக்கின் றார்கள். இதனால் மனிதர்களுக்கு ஒருபயனும் இல்லை. வடமொழியைப் படித்தும் பேசியும் வந்த பழைய காலத்திய பார்ப்பனப் பண்டிதரின் வஞ்சகத் தன்மைக்கு ஒரு சொல்லிற்குப் பல பொருள்களைப் உணர்த்துகிற இம் மொழியே உதாரணம். முன்னுக்குப் பின் முரணாகவும் சமயத்திற் கேற்றபடி பொருள் மாற்றிக் கூறுவதும் நல்லோர்களின் செய்கையல்லவே.

ஆனால், இந்துக்களின் பழைய சொத்து இதற்கு முன் கூறிய வாக்கியங் களைப் போன்ற பல வாக்கியங்கள் அடங்கிய வேதங் களும் ஸ்மிருதிக ளுமே. வேதத்தில் ஸோம(கள்ளு)த்தைக் குறித்துப் புகழ்ந்து பாடியுள்ள பல பாடல் களும், பசு யாகத்தின் மந்திரங்களும், இவை போன்ற பல விஷயங்களும், இதில் எடுத்துக்காட்டவில்லை. பௌண்ட ரீகம் என்னும் பெயரால் ஒரு யாகமுண்டு. அது விதவை யினுடையவும் பிரம்மச்சாரி யினுடையவும் சேர்க்கையால் நிறைவேறத்தக்கது.

இத்தகைய ஆபாச வாக்கியக் களஞ்சியத்தை அறிவாளிகள் எங்ஙனம் பிரமாணமாக ஒப்புக்கொள்ள இயலும்?

உபநிஷத்துகளில் பெரும் பகுதியும் புத்த பகவானுக்குப் பிறகு உண்டு பண்ணியவைகள் என்றும், அதற்குமுன் இரண்டொன்று உண்டாயிருந்தால், அவைகள் க்ஷத்திரியர் களின் சொத்தாக இருந்தனவென்றும் முன்னரே கூறியுள்ளோம்.

அத்தியாயத்ம வித்தைக்கு இராஜ வித்தையென்றும், மற்றொரு பெயருண்டு. இதனால் இது க்ஷத்திரியர்களின் சொந்தமென்றும் நன்கு விளங்குகிறது. 1ராஜ வித்தியாராஜ குஹயம் பவித்திரமித முத்தமம் என்கிற கீதா வாக்கியத்தால், கிருஷ்ணன் இவ்வுண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றார். கரும காண்டத்தைத் தழுவி நடக்கிற 2மீமாம்ஸ கர்கள் உபனிஷத்துகளை வேதப் பிரமாணமாக அங்கீகரிக்கமாட்டார்கள்.

முதன் முதலாக உபனிஷத்துகளை வேதத்தில் சேர்த்து ஒப்புக்கொள்ள வில்லை. பிறகு கருமகாண்டத்தில் மனிதர்களுக்கு நம்பிக்கை குறையவே பழைய குருட்டு நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் பொருட்டு உபனிஷத்துகளும் வேதங்களேயென்றும், ஆனால், முடிவில் இருப்பதால் கருமகாண்டப் படிக்குள்ள யாகம் முதலிய சடங்குகளை நிறைவேற்றி மனத்தூய்மை அடைந்தவன்தான் உபனிஷத் துகளை உணர்ந்து அவை களின்படி ஒழுக உரிமை உள்ளவன் என்றும் பொய்க்கதையைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

எக்காலத்தும் அழியாமலும் அனைத்திற்கும் காரணமாயும் இருக்கிற பரம்பொருள் ஒன்றே! என்றும், நிலைத்திருப்பது இவ்வுலகத் தோற்றம் மாத்திரமே.

1. அரசர்களின் வித்தை - அரசர்களின் இரகசியப் பொருள்.

2. இவர்கள் சங்கர மதத்தைப் பிரசன்ன புத்தமதம் (வைதிகப் போர்வையுடைய பவுத்தர்கள்) என்று சொல்லுவார்கள். இதனால் பவுத்த சமயக் கூற்றுவனாயிருந்த சங்கரர், பவுத்தர்களின் தத்துவ நூற்களை வடமொழியில் எழுதி, உபனிஷத்துகள் என்ற பெயரைக் கொடுத்தார் என்று எண்ண இடமிருக்கிறது.

- http://viduthalai.in/new/page-3/4072.html?sms_ss=blogger&at_xt=4d651bb4297cb722%2C0

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம்


செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்




விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் 17.2.2011 மாலை செஞ்சி பேருந்து நிலை யம் அருகில் கெடார் சு.நடராசன் மூன்றாம் ஆண்டு நினைவு பகுத் தறிவுப் பிரச்சாரக்கூட் டம் எழுச்சியுடன் நடை பெற்றது.

விழுப்புரம் மாவட் ட தலைவர் ப.சுப்பராயன் தலைமையில் செஞ்சி நகர தலைவர் சு. அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பி னர்கள் நல்லாசிரியர் த.தண்டபாணி, புலவர் அ.எத்திராசன், சவுந்தரி நடராசன் முன்னிலை யில் கடலூர் மண்டல தலைவர் வ.சு. சம்பந்தம், கழக பேச்சாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ் சாக்ரடீஸ் சிறப்புரை யாற்றினார்.

விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசுபதி வரவேற்றார். செக்கடிக்குப்பம் பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன் பகுத் தறிவுப் பாடல்களைப் பாடினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், சென்னை சண்முகப்பிரியன், காணை ஒன்றிய செய லாளர் ரமேசு, கலையர சன், மலையரசன் குப்பம் சுப்பிரமணி, ஆறுமுகம், செஞ்சி நகர துணைச் செயலாளர் இரகுநாதன், மேல்மலையனூர் ஒன்றியத் தலைவர் மதியழகன், சிட்டிபாபு, மகளிரணி கலைச் செல்வி பசுபதி, பெரியார் பிஞ்சு கள் மதிவதனி, ஆற்ற லரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வழக்கு ரைஞர் அணி செயலா ளர் ந.விவேகானந்தன் நன்றி கூறினார்.

செஞ்சி யில் பகுத்தறிவுப்பிரச் சாரக்கூட்டம் நடைபெற்ற போது பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு கேட்டதோடு, சிறப்பு ரையாற்றிய தமிழ் சாக்ரடீசுக்கு மாலை அணிவித்துப் பாராட் டினர்.

- http://viduthalai.in/new/page-4/4005.html?sms_ss=blogger&at_xt=4d63be075829a2e0%2C0

திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் - தொடர்-42

இதன் விடை:
ஊர்த்வ மேனமுச் ச்ரயதாத்
கிரௌபாரம் ஹரன்னிவ
அதாஸ்ய மத்ய மேஜது
கீதே வாதே புனன்னிவ

பொருள்: முன்போலவே, இவள் என்ற இடத்தில் இவன் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

ஹோதாவென்பவன் மற்றொருத்தியை நோக்கிக் கூறுவது:
யதஸ்யா அம்ஹுபேத்யா
சூது ஸ்தூல முபாதஸத்
முஷ்காவி தஸ்யா ஏஜதோ
கோசபே சகுலாவிவ

பொருள்: எப்போது லிங்கம் யோனிக்குள் நுழை கின்றதோ, அப்போது நீர் நிறைந்திருக்கும் மாட்டுக் குளம்பில் இரண்டும், மீன்களிலிருந்து அசைவது போல் விதைக் கொட்டைகள் இரண்டும் வெளியில் அசைந்து கொண்டிருக்கும்.

இதன் விடை:
யத் தேவாஸோ லலாமகும்
ப்ரவிஷ்டீ மின மாவிஷு;
ஸக்த்னா தேதிச்யதே நாரீ
சத்யஸ் யாக்ஷி புவோ யதா

பொருள்: எப்போது ருத்விக் முதலியோர் புணர்ச்சி செய்யவிரும்பி லிங்கத்தை யோனிக்குள் நுழைக் கின்றார்களோ, அப்போது பெண்ணின் அங்கங்கள் ஆணினால் மறைக்கப்பட்டிருக்கும். ஆயினும், தொடை யைப் பார்த்துப் பெண்ணை வேறு பிரித்து அறிந்து கொள்ளலாம்.

க்ஷத்தா என்பவன் வெறொருத்தியிடம் கூறுவது:
யத்தரிணம் யவமத்திநபூஷ்டம் பசுமன்யதே
சூத்ரா யதர்ய, ஜாரா நபோஷாய தனாயதி

பொருள்: பயிரை மேயும் மானைப் பார்த்து பயிர்ச் சொந்தக்காரன் மான் சுகத்தையடையுமே யென்று எண்ணாமல், இம்மான் பயிரைத் தின்றுவிட்டதே யென்று வருத்தப்படுவதைப் போல் ஆரியர்களால் புணர்ச்சி செய்யப்பட்ட தன் மனைவியைப் பார்த்து சூத்திரன் துன்புறுகிறான்.

இதன் விடை:
யத்ஹரிணோ யவமத்தி
நபுஷ்டம் பகுமன்யதே:
சூத்ரோ யதர்யாயை ஜாரோ
நபோஷ மனுமன்யதே

பொருள்: முற்கூறியவாறு ஆரிய ஸ்தீரியைப் புணர்ந்த சூத்திரனைப் பார்த்து, ஆரியர்களும் வெறுப்படைகிறார்கள்.

இத்தகைய வாக்கியங்களால் ஆரியர்கள் 1வியபி சாரத்தை விளையாட்டாகவே நினைத்து வந்தார்கள் என்பதும், இவர்களுக்குப் புறம்பானவர்கள் தீய ஒழுக்கமென்று வெறுத்து வந்தார்கள் என்பதும் அறியக் கிடக்கின்றது.

இவ்விதமாக ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா தவைகளும் ஆபாசங்களுமான வாக்கியங்கள் நிரம்பியிருக்கிற வேதங்களின் சொரூபத்தை நம்மவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு மேற்கூறிய உதா ரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டன. இவைகள்தாம் யாக மந்திரங்கள். இவைகளைச் சொல்லி யாகம் செய்தால், பிராமணன் சுவர்க்கத்தை அடைவான். இச்சொற்களைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயமும், மெழுகும் உருக்கிவிடுவது பார்ப்பனரின் வழக்கம். ஆனால், நல்லோர்களுக்கு இத்தகைய ஆபாச வார்த்தைகளைக் கேட்பதே ஈயம் உருக்கிவிடு வதைக் காட்டிலும் கஷ்டமாயிருக்குமென்பதில் அய்யமில்லை.

ஆரிய சமாஜத்திற்குத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி முற்கூறிய வாக்கியங்களுக்கு வேறு பொருள் கூறுகிறார். மஹீதராசாரியரைக் கண்டிக்கவும் செய்கிறார். அது, நம்மவர்களை ஏமாற்றி ஆரியமதத்தை நம்பச் செய்யவே ஆகும். ஆரிய சமாஜம் தோன்றி நாற்பது வருடங்களே ஆகின்றன. இக்காலத் தும் ஒரு சிலரே ஆரிய சமாஜத்தைத் தழுவுகின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்னிருந்த பிராமணரனை வரும், இக்காலத்தவரின் பெரும் பகுதியினரும் மஹீதர பாஷ்யத்தை ஒத்துக் கொள்ளுகின்றனர். ஆதலால், இதில் மேற்கோள்களாகக் கூறப்பட்டிருக்கும் வாக்கியங்களின் உரை மஹீதரரின் பாஷ்ய மொழி பெயர்ப்பேயாகும். தயானந்த மதப் பிரகாரம் 196 கோடி ஆண்டுகளாக இப்படி நடந்ததென்று சொல்ல வேண்டும். இந்த வேதத்திற்கு மாறிப் பொருளுரைக்க வந்தவர் 40 ஆண்டு காலம்தான் ஆகிறது. புத்த, சமணக்காலத்தில் மஹீதர பாஷ்யமே இருந்தது.

- http://viduthalai.in/new/page-3/3858.html?sms_ss=blogger&at_xt=4d6205b83e2ee8db%2C0

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-41

ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்
பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித்தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.
1ஸ்வர்க்கே லோகே ப்ரோணுவாதாம்

பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:
(ஃ) வருஷா வாஜி ரேதோதாரேதோ ததாது

பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக் கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.ஃ

உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா
வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன

பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.

2அத்வர்யு முதலிய அய்வரும் (அத்வர்யு பிரஹ்மா, ஹோதா, உத்காதா, க்ஷதா) குமாரிகளும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிற வாக்கியங்கள் வருமாறு:

முதலில் அத்வர்யு குமாரியை விளித்துத் தனது விரலால் அவளின் அல்குலைச் சுட்டிக்காட்டிப் பரிஹாசமாகச் சொல்லுகிறான்:

3யகாஸகௌ சகுந்தகா ஹலகிதி வஞ்சதி;
ஆஹந்தி கபே பஸோ நிகல்யா பீதி தாரகா

பொருள்: பெண்கள் விரைந்து நடக்கும்போதும், புணர்ச்சிக் காலத்திலும் யோனிக்குள் ஹலஹலாவென்னும் ஒலியுண்டாகிறது. பிறகு வீரியம் வெளிப்படுகிறது.

இதற்குக் குமாரியானவள் அத்வர்யுவின் லிங்கத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு விடையளிக்கிறாள்.

யகாஸகௌ சகுந்தகா
ஹலகிதி வஞ் சதி;
விவக்ஷத இவ தேமுக மத்வர்யோ
மநாஸ்த்வ மபி பாஷதா

பொருள்: அத்வர்யுவின் லிங்கத்தை விரலால் சுட்டிக்காட்டிக் கொண்டு, நுனியில் துவாரத்தையுடைய இது உன் வாய்போலிருக்கிறது. ஓ அத்வர்யுவே! அதிமாகப் பேச வேண்டாம்.

பிரஹ்மா மஹிஷியினிடம் சொல்வது:-
மாதாசதே பிதாசதே அகரம் வ்ருக்ஷஸ்ய ரோஹத:
ப்ரதிலா மீதிதே பிதா கபே முஷ்டி மதம் ஸயத்

பொருள்: மஹிஷியே! உன்தாயும், தந்தையும் கட்டிலின் மேல் ஏறிக்கொண்டு, உன் தாயின் பக்கத்தில்(யோனி) தந்தையார் முஷ்டியை (லிங்கம்) செலுத்தியதனால் நீ பிறந்தனை.

இதற்கு மஹிஷியின் விடை:
மாதாச பிதாச தேக்ரே வ்ருக்ஷஸ்ய க்ரீடத
விவக்ஷத இவதே முகம் ப்ரஹ்மன்
மாத்வம் வதோ பகு

பொருள்: உன் பிறவியும் இவ்வாறே, அதனால் அதிகமாகப் பேசாதே.
உத்காதா, குமாரிகளில் ஒருத்தியை நோக்கிச் சொல்லுவது.
ஊர்த்வமேனா முச்சராபய கிரௌ
பாரம் ஹரன்னிவ;
அதாஸ்யா மத்ய மேததாம் சீதே
வாதே புனன்னிவ

பொருள்: மலைக்குமேல் சுமையை ஏற்றுவது போலவும், குளிர்ந்த காற்று வீசுங்கால் தானியத்தின் பதர் தூற்றுவது போலவும் இவளை உயரத் தூக்கிப்பிடியுங்கள். இவளுடைய இடை அகலமாக ஆகட்டும்.

1. அதிவாஸேன ப்ரச்சாதயதி ஸ்வர்க்கே லோக இதி (காத்யாயன சிரவுத சூத்திரம்) ஸ்வர்க்கே லோக என்ற மந்திரத்தச் சொல்லி துணியைப் போட்டு மூடுகிறார்கள். ஏஷவை ஸ்வர்க்கோ யத்ரபசும் ஸம்ஜ்ஞபயந்தி எங்குப் பசு யாகம் செய்யப்படுகிறதோ அவ்விடம் சுவர்க்கமாம்.

(ஃ) அஸ்வசிச்ன முபஸ்தே குருதே வ்ருஷாவாஜீதி, (அஸ்வலிங்கம் ஹஸ்தேன த்ருத வாஸ்வ யோனித்வரா அர்ப்ப யதீத் யர்த்த) மஹிஷியானவள் குதிரையின் குறியைக் கையினால் பிடித்துத் தன் யோனித் துவாரத்தில் வைக்கிறாள் என்பது இதன் பொருள்.

2அத்வர்யு ப்ரஹ்மோத் காத்ருக்ஷத்தார குமாரீபத்நீபி; ஸம்வதந்தே யகாஸகா விதி தசர்ச் சஸ்ய த்வாப்யாம் ஹயே ஹயே ஸாவித்யா மந்தர்ய. (காத்யாயன சிரவுத சூத்திரம்)

3அத்வர்யு முதலியவர்கள் குமாரி பத்தினிகளுடன் பரிகாசமாகப் பேசுகிறார்கள். இம்மந்திரங்கள் 90 பாட்டுகள் அடங்கியது. யஜுர் வேதம் அத்தியாயம் 23-இல், 20-லிருந்து மஹீதர பாஷ்யத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

- http://viduthalai.in/new/page-3/3680.html?sms_ss=blogger&at_xt=4d5e818aefb9516d%2C0

பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு


பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு தமிழர் தலைவர் வெளியிட, பொருளாளர் பெற்றுக்கொண்டார்



சென்னை, பிப்.16- பகுத்தறிவு ஆசிரியரணி முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் விழுப்புரம் மாவட்டத் தலைவருமாகிய பெரி யார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் மறைவையொட்டி நினைவு நூலாக பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீட்டு விழா பெரி யார் திடலில் இன்று (16.2.2011) காலை நடை பெற்றது. தமிழர் தலை வர் கி.வீரமணி நூலை வெளியிட, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக் கொண்டார். தலைமை நிலைய செய லாளர் வீ.அன்புராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசு பதி, ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர். நூல் வெளி யீட்டு விழாவையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் நூறு தமிழர் தலைவரிடம் வழங்கப் பட்டது.

http://www.viduthalai.in/new/home/archive/3566.html

-

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-40

1அத்தகைய கொடுந்தொழில்கள் பிரிட்டிஷ் அரசாங்கத் திற்குப் பயந்து ஏடுகளிலும் வஞ்சகப் பார்ப்பனரின் உள்ளங்களிலும் அடைக்கலம் புகுந்திருக்கின்றன. இத் தகைய கொடுமைகளைக் காப்பாற்ற எண்ணியே ஹோம் ரூல் வேண்டுமென்கிறார்கள். எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டுமென்கின்றவர்களைத் தேசத் துரோகிகள் என்று வசை மொழிகளால் அலங் கரிக்கின்றனர். பல மனிதர்களை மிருகங்களைக் காட்டிலும் தாழ்வாகச் சில மனிதர்கள் நினைத்து வருகிற காலம் வரையில் சகோதரர்களே, உங்களுக்கு ஹோம் ரூல் வேண்டாம். நீங்கள் விரும்பினாலும், ஆங்கிலேயர்கள் கொடுக்க மாட்டார்கள்.

கொடுத்தாலும் இந்துக்களாகிய நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். ஒற்றுமையுள்ள புறச் சமயத்தாரால் துன்புறுத்தப்பட்டுக் கஷ்டப்படுவீர்கள். ஆதலால், சிலகாலம் மட்டும் (நமக்குள் ஒற்றுமை வருமளவும்) பொருத்திருந்து, வேத சாஸ்திரங்களை வாசித்து, அவை களின் உட்கருத்துகளை ஆராயுங்கள். அங்ஙனம் ஆராயுங் கால், அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத: தமத்யா பதீதா. இவை முதலிய வாக்கியங்கள் உங்கள் கண்களுக்குப் புலனாகும். வேதத்தைப் படிக்கிற உங்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள், நாஸ்திகோவேத நிந்தக என்றும் மற்றும் பரிகாசம் பண்ணினாலும் எடுத்துக் கொண்ட முயற்சியி னின்றும் பின்வாங்காமல் சாதாரண சமஸ்கிருதத்தினின்றும் மாறுபட்ட இவ்வேத மொழியை மஹீதரன் முதலிய பழைய ஆச்சாரியார்களின் பாஷியத்தை வைத்துக்கொண்டு, நம்மவர்கள் எல்லோருக்கும் பயன்படும்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய நம் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளிப்படுத்தவும் உறுதி செய்துகொண்டு, அதற்கேற்ற முயற்சியை ஒவ்வொருவரும் விரைந்து செய்யுங்கள்.

ஆனால், இக்காரியமானது வடமொழி, தென்மொழிப் புலமை வாய்ந்த அறிவாளர்களும், பொருளாளர்களும் கலந்து உழைத்தாலன்றி இலகுவில் முடிவுறாது. பாஷை, வேஷம், 2விசாரம் தேசம் இவைகளால் மாறுபட்ட மேனாட்டார் இக்காரியத்தில் எடுத்துக் கொள்ளுகிற முயற்சியைக் கூர்ந்து

கவனிக்கிற எந்த மனிதனும் சந்தோஷிக்கத்தக்கது. நடையிலும் உடையிலும் அய்ரோப்பியர்களைப் பின்பற்றுகிற நம்மவர்களைப் பின்பற்றி உழைத்து வருவார்களானால், நாட்டிற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்.

நிற்க, நம்மவர்களால் பரிசுத்தமென்று கருதப்பட்டு வருகிற வேதத்தினுடைய ஒரு பாகமாகிய மந்திரங்களிற் சிலவற்றை ஈண்டுக் கூறுவேன். விதி, மந்திரம், அர்த்த வாதம், நாமதேயம் என வேத வாக்கியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மந்திர மென்கிற சொல்லிற்கு நினைப்பூட்டுவது என்று பொருள். யாகத்தில் நிறைவேற்றுகிற ஒவ்வொரு சடங் கின் முதலிலும் இவைகளைச் சொல்லிப் பொரு ளையும் சிந்தித்தல் வேண்டும். இதன் கீழ்க் கூறப்புகும் மந்திரங்கள், வாஜ ஸனேயீ (சுக்ல யஜுர் வேதம்) சம்ஹிதையில் உள்ளன. இவைகளுக்கு மஹீதராசாரியார் தெளிவாகப் பாஷியம் எழுதியிருக்கிறார். ஒரே குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து வாசித்து மகிழத்தக்க புராணங்களோ, ஸ்மிருதிகளோ, வேதங்களோ இவை முதலிய எந்த இலக்கிய நூலும் இந்துக்களுக்கு இல்லை.
புத்திர காமேஷ்டி யாகம்

முற்காலங்களில் யஜமானனுக்கும், யாகஞ் செய் வோனுக்குப் பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில்3 பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதும் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும். அதன் விபரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத்தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும்,

பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-

1. கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே (வஸோமம)

பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக இருக்கவேண்டும். (மனைவிகளுள் தலைவியை 4மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராணசோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/3501.html?sms_ss=blogger&at_xt=4d5a9b984cbab94d%2C0

திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-39

புத்த பகவானையும் அவர் கொள்கைகளையும் மனிதர்கள் வெறுக்கும்படி எழுதிவைத்ததும், புத்த சமயத்தினரைப்போல வெளி வேடம் போட்டுத் தீய நெறியில் ஒழுகியும், இத்தாந்திரீக ஜனங்கள் உலகத்தை நரகக் குழியில் அமிழ்த்தியதோடு, அறிவிலிகளாகிய பல ஜனங்கள் அரசர்களுக்குச் சிற்சில 1உபகாரங்கள் செய்து, அவர்களின் உதவியினால் புத்மதத் துறவிகளையும், சமண முனிவர் களையும் சித்திரவதை செய்தார்கள்; கழுவிலேற்றினார்கள். அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!! அவர்களின் கோயில்களையும் மடங்களையும்2 கொலைக்கள மாக்கினார்கள். விக்கிரகங்களை உடைத்தார்கள். ஆனால், இக்கொடுந் தொழிலாளர்களால் புண்ணிய பூமியென்ற ழைக்கப்படுகிற இந்த நரகக்குழியில் புத்த சமயமும், பிக்ஷுக்களும் இல்லாமற் போயினும், இன்னும் பூவுலகில் மக்கள் தொகுதியில் புத்த சமயத்தினரே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பகுதியாரும் முழு உரிமையும் உடையவர்கள். சிலோன், பர்மா முதலிய இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் அடங்கிருப்பவர்களும் இந்நரகக் குழியில் கிடந்துழலும் இந்துக்களைப் போல் எல்லா வகையிலும் யாவருக்கும் அடிமைகளாக இருப்பதில்லை.

புத்த பகவானுடைய கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகி வந்த அசோகன் முதலிய பேரரசர்களின் காலங்களில் கொலை, காமம் முதலிய பாகங்கள் தலைகாட்டாமல் எல்லா உயிர்களும் சுகமாய் வாழ இடமிருந்ததால், 3விண்ணாட்டிற் கொப்பாயிருந்த நாட்டில் முற்காலங்களில் பார்ப்பன நூலார்களின் மூதாதைகள் அனுஷ்டித்து வந்த களவுப் புணர்ச்சி, கொலை முதலிய பாவங்களை வளரவொட்டாமல் புத்த சமய, சமண சமயங்கள் ஒடுக்கி வருவதைக் கண்டு அப்புனித மதத்தை ஒழிக்கக் கண்டு பிடித்த பல தந்திரங்களுள் முதன்மையானது இத்தந்திர சாஸ்திரமே. இதன் பெயரும் வழக்க, ஒழுக்கங்களுமே இதற்குச் சான்று கூறும். எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிய கடவுள், இத்தகைய வஞ்சக எண்ணத்துடன் பல நூல்களும், ஒழுக்கங்களும் உண்டு பண்ணின இவர்களைத் தன்வினை தன்னைச் சுடும் என்ற முறையாகப் பிறருக்கு அடிமையாகி வருந்தும்படியாக விட்டுவிட்டார்.

பர்த்ருஹரி என்னும் பெரியார் கூறுகிறபடி தஸ்மை நம: கர்மணே அத்தகைய பெருமைபொருந்திய வினைச் செயலின் பொருட்டு நமஸ்காரம்.

நான்காவது அத்தியாயம்

ராஜன் வாழும் நகரத்திற்கு வெகு தூரத்திலுள்ள ஒரு சிற்றூரில் குடியிருந்து வந்தவளும், நகரங்களைப் பார்த்திராதவளுமான ஒரு கிழவி நெடுநாள்களாக அரசனைப் பார்க்க அவாவுற்றிருந்தனள். ஒருநாள் குடிகளின் நன்மை தீமைகளை விசா ரிக்க எண்ணி, அவ் வூருக்கு அரசன் வருகிறான் என்று கேள்வியுற்று இந் தக் கிழவியானவள் எல்லோருக்கும் முன்னதாகவே அரசன் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள்.

யானைகள், குதிரைகள் மேளவாத்தியங்கள் எல்லாம் பார்த்த இவள், அரசனது உருவம் எப்படியிருக்குமோ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அரசன் இவளது கண்முன்னின்றும் மறைந்து சில தூரம் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்ததும் கிழவி, தான் கோரிய ஆள் இன்னாரென்று தெரிந்துகொண்டு, இவனா அரசன்? இவன் மனிதனாக வன்றோ இருக்கின்றான்! நான் என்னமோ எண்ணிவிட்டேன்.

இவனைப் பார்க்கும் பொருட்டு வீணே பொழுதைப் போக்கினேனே! என்று வருத்தத் துடன் வீட்டிற்குச் சென்றாளாம். இந்தக் கிழவி அரசனைப் பார்க்குமளவும் அவன்பால் வைத்திருந்த அளவுகடந்த மரியாதைக்கு அறியாமையே காரணமென்பது வெளிப்படை.

இதைப்போலவே, வேதாகமத்தைக் கற்றுணராத நம்மவர்களும் அதனிடத்துப் பரிசுத்தத் தன்மையைக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தில் நம்மவர்களிலும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்த மேதாவிகள் கூட வேதத்தைப் புகழ்ந்து கூறுவது வழிவழியாகக் கேட்டு வந்த மூடநம்பிக்கையினாலேயாகும். இந்த வேதம் கேட்கிறவனுடைய காதில் ஈயம் காய்ச்சி விடுவதும்,வேதப் பொருளை மனத்தில் வைத்திருப்பவன் நெஞ்சைப் பிளப்பதும் புண்ணியச் செயலாக நடத்தி வந்தார்களெனினும், கல்வி அறிவில்லாத உண்மைக் கருத்து விளங்காமையாலும், இவ்வேதமானது பரம்பரை யாக வந்த ஓர் ஆசானிடம் பொருள் கேட்டுத் தெரிந்து கொண்டாலன்றி, ஏனையோருக்கு விளங்காத (உலக வழக்கிலில்லாத) ஒரு மொழியில் இருப்பதாலும், வேத மென்பது தெய்வவொளி திகழ்வது: சொல்லிற்கடங்காப் பெருமையுடையது என்று இவ்வாறு நம்பிவிட்டார்கள்.

இங்ஙனம் கண்மூடி நம்புவதில் என்ன பயன்? வேதப் புத்தங்கள் அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கின்றன. நாக்கை அரிந்துவிடுவார்களே, நெஞ்சைப் பிளந்து விடுவார்களே, ஈயத்தைக் காய்ச்சிக் காதுகளிலே விட்டுவிடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.

- http://viduthalai.in/new/page-3/3412.html?sms_ss=blogger&at_xt=4d5944087cf8e3f9%2C0

ஞானசூரியன் தொடர்-38

இவர்களின் சமயத்திலுள்ள சில பரிபாஷைச் சொற் களின் பொருள் வருமாறு:

தீர்த்தம் என்றால், சக்தி பூசைக்குரிய மாமிசம்; இதற்கே சக்தி என்றும், புஷ்பமென்றும் சொல்லுவார்கள். தருதீயைச் சதுர்த்தி மாம்ஸம், மீன் சரவணயோனி முத்திரை, பஞ்சமி மைதுனம், ஜலதும்பிகை இவைகள் மீனைக் குறிக்கும் சொற்கள். தங்களின் தீய ஒழுக்கங்களைப் பிறர் அறிந்து நகைப்பார்களே என்றுதான் இங்ஙனம் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்தச் சமயத்திற்குக் கவுலன், சாம்பவன், ஆர்த்திர வீரன், கணேசன் இவ்வகையான பரிபாஷைப் பெயர்களும் உண்டு. பிறருக்குக் 1கண்டகன், விமுகன், சுஷ்கபசு இவை முதலிய இழிவான சில பரிபாஷைப் பெயர்களும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். 2பைரவி சக்கிரபூஜை பண்ணும் தருணத்தில் கட்குடத்தை வைத்துப் பூசித்து, ஓ கள்ளே! நீ பிரம்மனது சாபத்தினின்னும் விடுபட்டிருக்கின்றனையெனப் பிரார்த்தித்துப் பிறகு அங்குக் கூடியிருக்கிற ஆண், பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுள் ஓர் ஆண் மகனையும் ஒரு பெண்மணியையும் நிர்வாணமாக உட்கார வைத்துப் பெண்களெல்லாம் ஆண்மகனுடைய மர்மஸ்தானத்தையும் இலக்காக்கிப் பூசை செய்கிறார்கள். பூசை முடித்தும் மிச்சமான சாராயத்தை இவர்களுக்குத் தலைவனான ஆசாரியன் கையிலெடுத்துப் பைரவோஹம் (நானே பைரவன்) என்று குடித்துவிடுகிறான். பிறகு அதே எச்சில் பாத்திரத்தில் சாராயத்தைப் பகிர்ந்து எல்லோரும் குடிக்கிறார்கள். பழையபடி இருவரையும் நிர்வாணமாக இருக்கச் செய்து யோனி பூசை நடத்து கிறார்கள். இத்தருணத்தில் பெண்ணின் கையில் ஒரு வாளும் புருஷன் கையில் ஒரு சூலமும் கொடுப்பார்கள். இவ்விருவர்களையும் கள்ளையும், இறைச்சியையும் தின்னச் செய்து, பிறகு எல்லோரும் கள்ளையும் இறைச்சியையும் உட்கொள்ளுகிறார்கள். பிறகு பெண்களின் சில ரவிக்கை அல்லது அடையாளத் துணிகளை அவிழ்த்தெடுத்து ஒன்றாகக் கலந்து ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எடுத்துக் கொள்ளுகிறார்கள். எந்தப் பெண்ணின் உடை எந்த ஆணின் கைக்கு வந்ததோ அன்று அந்தப் பெண் அவனுக்குச் சொந்தம். ஆயினும், தாய்க்கு மட்டும் விலக்கு ஏற்பட்டிருக்கிறது. சகோதரி முதலிய யாராயிருப்பினும் குற்றமில்லை. இச் செயலைப் பெரும் புண்ணியமாகவும் இவர்கள் நினைக்கி றார்கள்.

இந்தத் தந்திர(ஆகம) சாஸ்திரத்தின் உற்பத்தியைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியதன்றோ? புத்த சமயத்தை நாசம் பண்ணக் கங்கணங் கட்டிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. உயிர்கள் பொதுவாக அருந்தல், பொருந்தல் என்கிற இரு விஷயங்களில் பிரியமுள்ளவைகள். இவ்விரண்டும் இச் சமயத்தில் எல்லோருக்கும் எக்காலத்தும் எளிதாகக் கிடைக்கும். புத்த சமயத்தில் இவ்வகை விஷயங்களில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ள இடங் கொடுக்கவில்லை. மனத்தைத் தூயதாக்கும் பொருட்டு உணவில் பாகுபாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, இல்லறத்தார் பிறர் மனைவியை மனத்தில் கூட விரும்பலாகாதென்றும், அவளைப் பார்க்கும் போது, வயதில் மூத்தவளைத் தாய் போலவும், இளைய வளைத் தங்கை அல்லது மகளைப் போலவும் நினைக்க வேண்டுமென்றும், இதற்காகவே சதாபவித்ரோகம் (நான் எப்போதும் தூயவனாகவே இருப்பேன்) என்று எண்ணிக் கொண்டு அதன்படி ஒழுகி வரவேண்டும் எனறும் சொல்லப் பட்டிருக்கிறது. துறவிகள் எப்போதும் பெண் களைப் பார்த்தல் தொடுதல் இவைகளினின்றும் விலகி, ஆத்ம பாவனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. புத்த சமயத்தில் பிறப்பினால் ஜாதிவேற்றுமை இல்லாவிடினும், ஒவ்வொருவனுடைய மனோ நிலைமைக்கேற்றவாறு உயர்வு, தாழ்வு ஏற்பட்டிருக் கிறது. இத்தாந்திரீக மதத்தில் பணக்காரன் எந்த ஜாதி யானா யிருப்பினும், அவன் தீக்ஷை பெற்றுக்கொண்டு பூசைக் காலத்தில் ஒன்றாக இருக்கலாம். பூசைக்காலத்தில் எல்லோரும் துவிஜாதிகள்தான் (இரு பிறப்பாளர்). மற்ற காலங்களில் தத்தம் ஜாதி 3முறைப்படியே ஒழுக வேண்டும். இதற்குப் பிரமாணம்:-

ப்ரவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே
வர்ணா த்விஜாதய;
நிவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே
வர்ணா ப்ருதக்ப்ருதக்

பொருள்: பைரவீசக்கிர பூசையின் போது எல்லோரும் துவிஜாதி (பிராமணர்)களே பூசை முடிந்ததும் அந்தந்த வருணத்தான் தனித் தனியாகவே இருக்கவேண்டும்.

இவ்விரண்டு சமயங்களில் அறிவில்லா மாந்தர்களின் கருத்திற்கு இணங்கியது எது? புத்த சமயமா? நாகரிக சமயமா? உள்ளத்தையும், உடலையும் வாட்டியதன் பயனாக அடையும் முக்தியைக் காட்டிலும் ஒருவகை வருத்தமின்றி இம்மையிலும் சுகம், மறுமையிலும் கைலாசம் தங்களுக்கே சொந்தம்! ஆதலால், பகுத்தறிவில்லா மனிதர்களுக்குப் பார்ப்பனத் தந்திரமாகிய தந்திர சமயமே சிறந்தது. ஆனால், இதற்குப் பொருள் செலவழியும். இதை முன்னதாகவே தெரிந்துகொண்ட பார்ப்பனர்கள், பணக்காரன் தீக்ஷை பெற்றுக்கொள்ள அதிகாரியென்றும் பிரமாணம் எழுதி வைத்தார்கள். சக்கரவர்த்தியின் பிள்ளையாகப் பிறந்து, அரச போகத்தை அருவருத்துத் தள்ளி, முற்றுந் துறந்து முனிக்கோலம் பூண்ட பகவான் புத்தன், தனக்கொப்பான வர்கள் முக்தியடையத் தகுதி எனக் கூறினார். நிற்க. பார்ப்பனர்களில் புத்தமதத்தைக் கெடுக்க எண்ணி, அம்மதத்தைச் சார்ந்த துறவிகளைப் போல் வேடம் போட்டுக் கொண்டு சமயத்தைக் கெடுத்ததோடு, இத்தகைய கயவர்களை ஜீவகாருண்யத்தினால் தங்கள் குலத்துள் சேர்த்துக் கல்வி கற்பித்த புத்தமதக் குருமார்களையும் கழுவிலேற்றிக் கொன்றார்கள். இத்தோடு, தாங்கள் உணர்ந்துகொண்ட தத்துவக் கருத்துகளை அனாதியென் றும், உபநிஷத்தென்றும் எழுதி வைத்தார்கள். இதை வைத்துக்கொண்டுதான் பார்ப்பன மக்கள், தங்கள் மதத்திற்குச் சமமான மதம் வேறெதுவுமில்லையென்று சொல்லி, இக் காலத்தும் நம்மவர்களை ஏமாற்றுகின்றார்கள்.

- http://viduthalai.in/new/home/archive/3360.html?sms_ss=blogger&at_xt=4d5943727c6a65e0%2C0