திங்கள், 8 நவம்பர், 2010

கிரந்த எழுத்து தமிழில் திணிப்பு!

தமிழின் முப்பத்தோரெழுத்து களும் அவ்வாறே யின்றளவு மிருக் கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்.. . . . தமிழுஞ் சம்ஸ் கிருதமுங் கலந்த மொழி கேள்விக் கின்பம் பயக்குமென்ற போலி யெண்ணமே இத்தகைய ஆபாச மொழி யொன்று வகுக்குமாறு தூண்டிற்று. என்று பரிதிமாற் கலைஞர் எழுதுவார். பாரதி பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்கு குறியீடுகள் உருவாக்க வேண்டும் என்று 1916 இல் ஞான பானு இதழில் தமிழில் எழுத்துக் குறை என்ற தலைப்பில் எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும், அன்போடு உறவுமுறையில் மாமா என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக் கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார். ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தைப் புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற் றொலிகள் வராமல் காக்க வேண்டும். வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம்) கட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன. அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழிலிருந்து சிதைவால் தோன்றின. இனியும் தமிழைச் சிதைக்க விட வேண்டா. கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று திரு நாக.கணேசன் முயல் கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர் கள் தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங் குறியில் - தமிழின் ஒலிச் சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில் தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 (ஜ,ஷ, ஸ, ஹ, க்ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளி யிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத் தினராலும் கட்டுரையாசிரியர்களா லும் கொண்டுவரப்பட்ட மணிப் பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்துத் தமிழின் தனித்தன் மையைக் கெடுத்து, மேலும் கன்னடம், மலையாளம்போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண் டும் என்னும் எங்களின் கருத்து. உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத் தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்திய தால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற் காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார்,டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருத சொற்களும் புகுந்து, தமிழ் மலை யாளம் மொழி 2என அழைக்கப் படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும், இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழி யியல் குறியீடுகள் போதும். எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேரா சிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக் கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை இன்றி இயங்கும். 2. அய்ந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லை. மொழி இயலார் பயன் படுத்தும் குறியீடுகளை (ஈஆ - ஈன் டெர்னடிஒனல் கொனெடி அல்ப்க பெட்ச்) பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக் காட்ட இயலும். அப்படி இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்? 3. இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங் குறியீடுகள் முதலியன ...தமிழ் எழுத் துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த எழுத்துகள் வலிந்து நுழைக்கப்படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.
4. கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு தமிழ்த் தாய் சீர்குலைப் புக்கு ஏதுவாகும் . இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படி இருப்பினும், கிரந்த எழுத் துகளின் படையெடுப்பை முறிய டிக்க வேண்டிய கடமை தமிழறிஞர் களுக்கு மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு
- முனைவர் பா. இறையரசன்

- http://www.viduthalai.periyar.org.in/20101108/news08.html