வெள்ளி, 26 நவம்பர், 2010

ஞானசூரியன்-7

ஞானசூரியன்

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010
சந்தோக்கியோப நிஷத்தில், பாலாகி என்ற பிராமணனுக் கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனை யோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப்பட்டார் கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.
மேலும், பகவான் புத்தரிடமிருந்தும் பல உயர்ந்த தத்துவங்கள் (அத்துவைதம்) உலகத்தில் வெளிப்பட்டன. இவரும் வருணமுறைப்படி அரச குடும்பத்தில் பிறந்தவ ரேயாவார். ஆயினும் இவருடைய கருத்துகள் பார்ப்பனர் களின் கருத்துக்கு ஒவ்வாதன. ஜாதியும் அந்தந்தச் ஜாதிக்கு என வகுக்கப் பெற்ற வெவ்வேறு ஒழுக்கங்களும் பொய்யுரைகள் எனவும், மனிதராகப் பிறந்த எல்லோரும் மோட்சம் அடைய அதிகாரிகள் என்றும், இதற்குக் கொலை முதலிய பாதகங்கள் கூடாதென்றும், பஞ்சமா பாதகர்களாகிய மேற்கூறிய சொர்க்கவாசல் திறவுகோல் காரர்களின் (key to the Heaven) தயவை எதிர்பார்க்க வேண்டியதில்லையென்றும் அவர் வெளிப்படுத்தியதனால், பார்ப்பனனின் சுயநலம் நாசமடைந்து, இவற்றோடு இவர்களது சொர்க்கமும் இந்திரனும், பிரார்த்தனைகளும் கண்டிக்கப்பட்டுப் போயின. அத்தருணத்தில் பார்ப்பனர் களுக்கு உண்டான வருத்தம் இத்தன்மையது என எங் ஙனம் எடுத்துக்கூறவியலும்? பவுத்தன் என்கிற சொல் காதில் விழுந்தாலே, இக்காலத்திய மக்களுக்குக்கூட வெறுப்பும், எடுத்துரைக்க முடியாத கோபமும் உண்டா கிறது! பவுத்தன் என்ற சொல்லிற்குப் புத்தனுடைய கொள்கையைப் பின்பற்றி ஒழுகுவோன் என்று மட்டுமே பொருளாயினும், பொதுமக்கள் வெறுப்பானது அக்காலந் தொடங்கிப் பார்ப்பனர்கள் செய்து வருகிற சூழ்ச்சியால் எழுந்த மதிமயக்கத்தினாலேயாம். கருணாமூர்த்தியான பகவான் புத்தர் மக்களின் தாழ்ந்த நிலையைக் கண்டு இரங்கிப் பேரின்ப நிலையைத் தன் அனுபவத்தாற் கண்டுவெளியிட்டார். அவ்வழியில் செல்ல விரும்பினவர் களையும் ஏமாற்றிப் பழைய நரகக் குழியிலே தள்ளி விட்டவர்கள் பார்ப்பனர்களே. தங்கள் விருப்பத்திற்குக் கீழ்ப்படியாத பலரையும் கொன்றும் கொலை செய்வித்தும் ஒடுக்கினார்கள். ஆயினும், பழைய பாட்டிக் கதைகளையே திருப்பித், திருப்பிப் பாடி வருவதைக் கேட்டு அமைதி அடையாத பொதுமக்களை மகிழ்வுறச் செய்யவும் தங்கள் சுயநலம் கெட்டுப் போகாமற் பாதுகாக்கவும் எண்ணிய போலிப் பார்ப்பனர்கள், புத்த தேவனுடைய தத்துவங்களை (பவுத்தர்களை அடிமைகளைப்போல் காட்டி) கிரகித்துக் கொண்டு, இவைகள் வேதத்தின் முடிவில் உள்ளவை; இவைதான் முக்தி வழியை விளக்கிக் காட்டுவன என்பன வாகிய பொய்யுரைகளைப் பகர்ந்து உபநிட தங்கள் என்ற பெயருடன் புதிதாக எழுதி வேதத்தில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், ஜாதி வருணாச்சிரமம், அதன் ஒழுக்கங்கள், யாகங்கள் இவை யாவும் மோட்ச வழி களன்று எனக் கூறினால், தங்களுடைய வருமானமும், பெருமையும் போய்விடுமே; இதற்கு என்ன செய்வதென்று யோசித்துக் கடைசியில் ஒரு சூழ்ச்சியும் செய்யலாயினர் அத்தந்திரமுறை பின்வருமாறு:
த்வே வித்யே வேதிதவ்யே அபார பராசேதி;
தத்ரா பார ரிக்வேதா, யஜுர் வேதோ: ஸிம்வேதோ,
தர்வ வேத :சிக்ஷா, கல்போ வியாகரணம், நிருக்தம்;
சந்தஸ் ஜ்யோதி ஷமிதி, அதபரா யயா ததக்ஷா
மதிகம்யதே (முண்டகோபநிஷத்து)
வித்தையாவன பரை, அபரையென இருவகைப்படும். இவற்றுள், மோட்ச மார்க்கத்தை உணர்த்துகிற ஆத்ம வித்தை பரவித்தையும், வேதாகமங்கள் அபரவித்தையு மாம்.
இப்பிரமாணத்தால் அச்சூழ்ச்சியை அறிந்துகொள்க.
இவ்விரு வித்தைகளுள் ஜாதி தருமமாதிகள் இல்லாத பரவித்தையைப் பின்பற்றுவோன் ஊரில் இருக்கலாகாது; உடனே காட்டிற்குச் சென்று விடவேண்டும். லவுகிகர்கள் (உலகப்பற்றுடையவர்கள்) அபரவித்தையைப் பின்பற்றி அதன்படி வைதிகத் தருமமும் அதன்படி ஜாதியையும் கட்டாயம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். இம்முறையி னால் பூதேவத் தன்மையும் பிராமணத் தன்மையும் கெடாமல் இருக்குமென்பதே கருத்து. ஆயினும், சூத்திரன் பரவித்தையைப் பின்பற்றி உயர்ந்த நிலையை அடையக் கூடாதென்ற கொள்கையோடு, அதற்கு வேண்டிய பொய்யுரைகளை வேதத்திலும் ஸ்மிருதியிலும் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். மேலும் அபரவித்தையை அனுச ரித்து அதன்படிக்குள்ள கருமங்களைச் செய்யாதவனுக்குப் பரவித்தையில் அதிகாரமில்லை. உபநயனமில்லாத வனுக்குக் கல்வி கற்கவும், நல்லோர்களின் சேர்க்கைக்கும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆகையால் வியாவ ஹாரிக வித்தைக்கு உரியவன் யாவனோ, அவனே பர மார்த்திக வித்தைக்கும் அதிகாரியாவான் என்றும், கூறியிருக்கின்றது. சங்கராச்சாரியார் அபர வித்தையை வியாவஹாரிக வித்தை என்று;, பரவித்தையைப் பரமார்த்திக வித்தை என்றும் கூறுகிறார். இக்காலம் வரையிலும் இந்துமதம் இதே நிலையில்தான் இருந்து வருகிறது. தமிழர்கள் இன்னும் இச்சூழ்ச்சியினை உணர்ந்து கொள்ளாதது விந்தையே.
இவ்விதமாகச் சுயநலத்தைக் காப்பாற்றும் பொருட்டு உண்மைக் கருத்துகளைப் பொய்ப் பெட்டகத்துள் மூடி வைத்திருப்பதால்தான் வேதாந்தக்கருத்துகள்1 அனுபவத் திற்கு வராமல் சொல்லளவிலேயே இருக்கின்றன. இந்த வேதாந்த வாக்கியங்களைப் புத்தமத நூல்களோடு சேர்ந்து ஆராய்ந்து பார்த்தால், குற்றமற்றதும், முன் னுக்குப்பின் முரணின்றிச் சகல சம்மதமுமான ஒரு தத்துவ சாஸ்திரத்திலிருந்து எடுத்து, அதன் பழைய உருவத்தைச் சிதைத்து அனுஷ்டிக்க முடியாதபடி செய்துள்ளார்கள் என்பது2 வெளிப்படும்.
அபர வித்தையில் இம்மைக்குரிய விஷயங்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றனவென்று முன்னரே கூறியுள்ளோம். அனைச் சற்று ஆராய்வோம். ஜாதிப் பிரிவினை, அந்தந்தச் ஜாதியாரின் ஒழுக்க முறை, அவரவர்களுக்குரிய சடங்குகள் முதலியன தரும சாஸ்திரங்களில் கூறப்பெற்றி ருக்கின்றன. வேதங்கள் எல்லாம் யாகத்திற்கு உபயோக முள்ள விஷயங்களையே அதிகமாகக் கூறுகின்றன.
ஜாதிப் பிரிவினைகளைச் சொல்லுமிடத்து, அந்தந்தச் ஜாதியாரின் உயர்வுதாழ்வுகளை அனுசரித்து, இம்மைக் கும் மறுமைக்குமுரிய எல்லாச் சடங்குகளும் சொல்லப் பட்டிருக்கின்றன. இவையனைத்தையும் குறைவற அனுஷ்டிப்பவன் தேவலோகத்தை அடைவான். மோட்சம் என்று ஒன்றிருப்பதாக அக்காலத்தார் உணர்திருக்க மாட்டாராகையால், அவ்வகையில் இவர்களின் அறிவு எவ்வளவு தூரம் முயற்சியடைந்திருந்தது
(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101126/news06.html