ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஞானசூரியன்-8

ஞானசூரியன்

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928, 20 ஆம் பதிப்பு : 2010
1.வேத முறையாகப் பதினாறு சமஸ்கார கருமங் களைச் செய்தவனே ஞானமுணர்த்துங் குருமூலமாக வேதாந்தம் கேட்க வேண்டுமென்பது விதி. இவ்விதி பிராமணரல்லாதாருக்குக் கிடையாது.
2. வைதிக தாந்திரிகச் சைவமென்ற பெயரிடுவதற்கு முன்னுள்ள தமிழ்நாட்டு முதியோர்களால் அனுஷ்டித்து வந்த சித்தர் கொள்கையையும் புத்தமதக் கொள்கையையும் ஒருவாறு ஒத்திருக்கும். அப்படியே; சமணக் கொள்கையும் என்றறிக
என்பது சொல்லாமலே விளங்கும். இன்னும் இந்நூல்களின் உட்கருத்துகளையும் ஆராய்வோம்.
பிரம்மதேவனுடைய ஒவ்வொரு அங்கத்தினின்றும் பிராமணன் முதலிய ஜாதிகள் உண்டாயின. அல்லது தயானந்த சரஸ்வதியின் கொள்கைப்படி இவ்வங் கங்களோடு, (முகம், தோள் முதலிய பாகங்களை மற்றோரிடத்தில் கூறுகிறோம். இப்போது இந்த மதக் கொள்கைப்படிக்கு ஏற்பட்டிருப்பது ஜாதித் தொழிலினாலா? பிறப்பினாலா? என்பதைக் குறித்து ஆராய்வதே கடமை. இங்ஙனம் ஆராய்ச்சி செய்யப் புகுங்கால், நினைவிற்கு வருகிற பிரமாண வாக்கியங்களாவன:-
சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம், குணகர்மவிபாகச. (பகவத் கீதை)
நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப் பட்டவைகள்; அதுவும் குணங்களினாலும், கருமங்களி னாலுமே வேறுபாடன்றி மற்றைய வேறுபாடு கிடையாது.
ஜன்மனா ஜாயதே சூத்ரா;
கர்மணா ஜாயதே த்விஜ (சங்கர விஜயம்)
பிறக்கும் போது எல்லோரும் சூத்திரர்களாகவும், கர்மங்களாகிய கர்ப்பாதானம், உபநயனம் முதலியவை களால் மறுபிறப்பினனாகவும் (விப்ரன்) ஆகிறான்.
இக்கருத்தின்படி, யாவனாயினும் நல்லொழுக்கத்துடன் இருப்பானேல், பிராமணனாகலாமென்றாய் விட்டது. பறையனானாலும், யாகாதி கர்மங்களை அனுஷ்டித்தால் பிராமணன்தானே? பார்ப்பனியின் வயிற்றில் பிறந்தவர் களாயினும், இழிதொழிலுடையவர் புலையருமாவார்.
ஆனால், இத்தகைய பிரமாண வாக்கியங்கள் (சிற்சில இடங்களில் காணுவன) நம்மவர்களை ஏமாற்றும் படிக்குள்ள அநேக தந்திரங்களுள் இது ஒருவகையேயாகும். இவ்வுண்மையானது இத்தகைய (சூத்திரனைப் பிராமண னாக்கத்தக்க) கருமங்கள் யாவை? என வினவி, விடை தெரிந்து கொள்ளும்போது வெளியாகும். அதாவது-
கர்ப்பாதானம் முதல் அந்தியேஷ்டி வரையிலும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள்; வேதம் ஓதுதல், சாகை கோத்திரம், சூத்திரம், ப்றவரான்ஹம், நித்திய கருமங்கள் இவைகள்தாம் பிராமணத் தன்மையை உண்டுபண்ணு வதற்கு அடிப்படையாயிருக்கின்றன.
அஷ்டவர்ஷம், ப்ராஹ்மணமுபனயீத, தமத்யாபயீத எட்டாவது ஆண்டில் பிராமணனுக்கு உபநயனம் செய்து கல்வி கற்பிக்கவேண்டும் எனத் தொடங்கிய இக்கருமங்களை விதிக்கின்ற வாக்கியங்களினால் ஜாதிப் பிராமணனுக்கும், ஜாதிப் பிராமணத்திக்கும் பிறந்த பிள்ளைதான் அதிகாரியென்பது வெளிப்படையாதலால், முன்சொன்ன சாதுர் வர்ணியம் முதலிய வாக்கியங் களும், இதைப்போல் காணப்படும் வேறு சில வாக்கியங் களும், மயக்கத் தகுந்த வாக்கியங்களே என்பது புலப்படுகிறது மற்றும், ஒவ்வொரு ஜாதியார்க்கும் தொழில்கள் இன்னின்னவை என்று விதித்துக் கீதையில் கூறுவதைக் கேளுங்கள்:
ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண
பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய
பரதர்மே நிதனம் பயாவஹ
(பகவத்கீதை, அத்தியாயம் 3 - பாட்டு 35)
பொருள்: ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானுடைய தருமத்தை எவ்வளவு ஒழுக்கமாக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. ஆதலால், ஒவ்வொரு ஜாதியானும் தத்தம் தொழிலை இயன்றவாறு செய்து முடிப்பதே சிறந்தது. தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வள வாகக் குற்றமில்லை. பிறன் தொழில் பயத்தை உண்டு பண்ணக்கூடியது. ஆதலால், அதைச் செய்யலாகாது.
இத்தகைய வாக்கியங்களினால் நம்மவர்கள் பார்ப்பனருக்கு விதித்துள்ள தொழிலைச் செய்யக் கூடாதென்பதும், மீறிச் செய்பவனைக் கொலை செய்து விடுவோம் என்பதும் பயத்தை உண்டு பண்ணக்கூடியது என்ற கீதா வாக்கியங்களாலும், இதைப்போன்ற வேறு பல வாக்கியங்களாலும் இதுவரையில் நடந்து வந்ததும், இப்போது நடக்கிறதுமான ஒழுக்க முறையாலும் வெளிப்படுகிறது. இது நிற்க,
மறுமைக்குரிய துறையில் முக்கியமான துறவிக்கு உரிமையுடையவன் யாவன்? என்று கீழ்க்காணும் வேதவாக்கியத்தையும், மனுவின் வசனத்தையும் கவனித்து அறிந்துகொள்ளுங்கள்.
ப்ராஜாபத்யாம் மிஷ்டிம் நிருப்ய,
தஸ்யா ஸர்வவேதசம்
ஹுத்வா ப்ராஹ்மண:
ப்ரவ்ர ஜேத் (சதபதப்ராஹ்மணம்)

ப்ராஜாபத்யாம் நிருப்யேஷ்டிம்
ஸர்வவேத ஸதக்ஷிணம்;
ஆத்மன்யக்னீ, ஸமாரோப்ய ப்ராஹ்மண;
ப்ரவ்ர ஜேத்கர் ஹாத் (மனு)
பொருள்:- தன் பொருளனைத்தும் தானம் செய்து நிறைவேற்றத்தக்க பிராஜாபத்ய யாகத்தைச் செய்து அதன் முடிவான அந்தியேஷ்டி ஹோமத்தில் குடுமி, பூணூல் இவைகளை நெருப்பிலிட்டும், பிறகு ஒன்றுமில்லாதவனாக ப்ராஹ்மணன் வீட்டைவிட்டு வெளியேறக்கடவன்.
இதற்கு ப்ராஹ்மணன் நீங்கலாக ஏனையோர் அதிகாரிகளல்லரே? இதோடும் நிற்கவில்லை. தன் தொழிலைச் செய்யாமல் வேறு தொழில் செய்தால், அரசன் கவனித்து அடக்க வேண்டும் என்ற மனுவின் வசனம் வருமாறு:
வைஸ்ய சூத்ரௌ ப்ரயத்நேந: ஸ்வானிகர்மாணி காரயேத் தௌ ஹியுதௌ ஸ்வக்ர்மப்ய: ப்லாவயே தாமிதம் ஜகத் (மனு)
பொருள்: வைசியனும், சூத்திரனும் தத்தம் தொழிலைச் செய்கின்றார்களா என்பதை அரசன் கவனித்துச் சரிவர ஒழுகச் செய்யவேண்டும். அவர்கள் தத்தம் தொழிலைச் செய்யாவிட்டால், உலகம் வறுமையில் முழுகிப் போகுமன்றோ! (தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101127/news11.html