ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

உறுதி ஏற்போம்.

இன்று திலீபன் நினைவு நாளாகும். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் பணி முடிக்க சூளுரை ஏற்கிறேன். வாழ்த்து தெரிவித்த அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் இதயமார்ந்த நன்றி.ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் மத்தியில் போராட்டத்தின் உள்ள உறுதியை உலகோருக்கு உணர்த்தி மாவீரன் திலீபன் வரலாறு படைத்து விட்டான். இனத்தின்பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ஓரணியில் திரண்டு வடிவம் எதுவாகினும், விடுதலைக் காற்றை தமிழர்கள் ஈழத்திலே சுவாசிக்கும் நாள் எந்நாளோ? அந்நாளே அனைவருக்கும் ஒரு பொன்னாளாகும். மண் விடுதலைக்காக போராடினாலும், முதலில் மக்கள் விடுதலை வேண்டும். ஆம். பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும். தமிழன் ஜாதிகளைக் கடந்து தமிழனாக வாழ்ந்திட வேண்டும். பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை அடையாளம்கண்டு நமக்கு உதவாத சாத்திரக்குப்பைகளை, கடவுள் கருத்துக்களை களைந்திட வேண்டும். பார்ப்பான் எப்போதும் தமிழன் தன்மானத்துடன் வாழ்ந்திட விடமாட்டான். எச்சரிக்கையுடனும், துணிவுடனும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை புரிந்து முறியடிக்க வேண்டும். நம்மை எது பிரிக்கிறது என்பதைவிட எது நம்மை இணைக்கிறது என்று பார்க்கவேண்டும். தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரம் ஒன்றுதான் தமிழனை அடிமைத்தளைகளில் இருந்து மீட்கும். ஆரியர்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழரை மீட்டு தன்மானம் உள்ள தமிழராக வாழ்வோம் என்று உறுதி ஏற்போம். நன்றி.