செவ்வாய், 21 செப்டம்பர், 2010

செஞ்சியில் தந்தைபெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

செஞ்சி, செப்.19- செஞ்சியில் தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாளில் திராவிடர் கழக கொடியேற்றும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோபண்ணா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விவே கானந்தன், மாவட்ட அமைப்பாளர் துரை, செஞ்சி நகர துணை செயலாளர் இரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அனந்தபுரத்தில் தந்தைபெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கழகக் கொடி ஏற்றி வைத்து அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்தரி நடராசன், புலவர் எத்திராசன், திமுக அனந்தபுரம் நகர செயலாளர் கல்யாண்குமார், காணை ஒன்றியத் தலைவர் நாராயணன், செஞ்சி நகரத் தலைவர் அண்ணாமலை, நல்லாப் பாளையம் கலையரசன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நன்றி "விடுதலை" நாளிதழ் 19-9-2010