புதன், 12 ஜனவரி, 2011

ஞானசூரியன் தொடர்-28

வால் எஜமானின் பத்தினிகளைச் சார்ந்தது. இவர்கள் இதை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கக்கடவர். வலத் தோளிலுள்ள மாமிசமும், மணியைப் போலிருக்கிற மாமிசமும், விலாப்புறத்தில் மூன்று பிரிவுகளாயிருக்கிற கீஸமும்

*க்ராவஸ்துத்திற்கும், இடத் தோளிலுள்ள மாமிச மும், வைகர்த்தமென்கிற மாமிசத்தில் பாதியும்

* இந்தக் குறிகள் இடப்பட்டவர்கள் ஒவ்வொரு புரோகிதர்க ளென்று அறிந்துகொள்க. யாகத்தில் மேற்கூறிய பெயர்க ளாகும்.

ஃ கை பாஹு என்று தனித்தனி சொல்வதால், ஒன்று மேல்பாகமும் மற்றது அடிப்பாகமும் என்று சாயனாச்சாரியார் கூறுகிறார்.

*உன்னேதாவிற்கும், வைகர்த்தத்தின் மற்றொரு பாதியும், க்லோமா என்கிற மாமிசமும் *கமிதாவிற்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும்.

ஆனால், இந்தக்கமிதா பிராமண ரல்லாத ஒருவனால் யாருக்கேனும் ஒரு 1பிராமணனுக்கே கொடுத்துவிட வேண்டும். தலை, சுப்பிரமணியனைச் சார்ந் தது. தோலை 2சக்தியை உச்சரித்த பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். இடையை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ஹோதா தனியாகவே எடுத்துக் கொள்ளலாம்3. ஆண்டுதோறும் பசு யாகம் செய்யவேண்டும் என்ற விதியின் கருத்து இத்தன்மையதென்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மாம்ஸீயந்தி ஹ்வா அக்னயோஜுஹ்வதோ யஜமா னஸ்யதே யஜமான மேவத்யாயந்தி; யஜமானம் ஸங்கல்ப் யந்தி; பசந்திஹ்வா அன்யேஷ்வ க்னிஷுவ்ருதா மாம்ஸம்: அதை தேஷாம் நான்யாமாம் ஸாசாவித்யதே யஸ்ய சைதே பவந்தி தம்ததோ நானீ ஜானம் பசுனா ஸம்வத்ஸரோவ்ய தீயாத் ஆயுஷயோஹ்வா அஸ்யைஷ ஆத்ம நிஷ்க்ரயண

பொருள்: மாமிச யாகம் பண்ணாத எஜமானின் அக்னி எப்போதும் மாமிசத்தையே விரும்பிக்கொண்டிருக்கின்றன. இவனையே தின்று விடலாமா என்றும் நினைக்கின்றது. இவன் தினந்தோறும் மாமிசத்தைச் சமைத்து உண்கிறா னாதலால், இவனுக்கும் சமையல், அக்னிக்கும் மாமிசம் கிடைக்கிறது. யாகம் செய்கிற காலம் தவிர, எங்களுக்கு மாமிசம் கிடையாது. அதுவும் அவ்வக்காலங்களில் இப்பாவி தருகின்றானில்லை என்றும், இவ்விதமாக அக்கினிகள் நினைப்பதனால், தன் ஆயுள் விருத்திக்குக்

1. நோச்சிஸ்டம் நஹவிஷ்க்ருதம் (யாகசேஷமாகிய அவிசைக் சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது) என்கிற மனுவின் வாக்கு இக்கருத்திற்கு ஒத்திருக்கிறது.

2. பசுக்கொலை செய்வதாக துருக்கர்களிடம் சண்டை தொடுக்கும் ஆரியர்கள் இத்தகைய வேதவாக்கியங்களை உணர்ந்திருந்தால், கலகத்திற்கு இடமுண்டாக மாட்டாது.

3. ஆமாம் அய்யரே! யாகத்தில் கொலையுண்ட பசு, ஆடு, மனிதன், முதலிய பிராணிகள் உயிர்கொடுத்து அனுப்புவது வழக்கம். எங்களுடைய ரிஷிகள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறீர். இப்படிப் பங்கு கேட்டுச் சாப்பிட்டால், எதை எழுப்புவது தெரியவில்லையே.
காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ் தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன்.

இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என் னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற் குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டை களையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்விதம் கொலையே பிரமா ணமாகவுடைய யாகமே சுவர்க்கமென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும். இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர் களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத் தில் வியாபிசாரத்திற்கு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம்.

இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதன் முதலாகப் பார்த்த புத்த பகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட்கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.

குசா: சாகம் பயோ மத்ஸ்யா:
கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;
மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்
ப்ரத்யாக்யேயம் நவாரிச

பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராமணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன் அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:

மஹோக்ஷம் லா மஹாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா, ஸேவனம்
ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ்தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன். இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என்னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற்குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டைகளையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதம் கொலையே பிரமாணமாகவுடைய யாகமே சுவர்க்க மென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும்.

- http://viduthalai.in/new/page-3/1191.html