வியாழன், 18 ஜூன், 2009

அவர் சொன்னார், இவர் சொன்னார்...

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே என்று பகுத்தறிவு சுடரை ஏற்றியவர். எவரையும் தன்னுடைய அறிவுக்கு வேலை கொடுத்து சுயமாக சிந்திக்க சொன்னவர். தந்தை பெரியாரை ஆராய்வது என்பது கூட அவர் பணிக்கு கிடைத்த வெற்றி என்றாலும், தந்தை பெரியார் கூறியது போல் நன்றி என்பது செய்பவர் எதிர்பார்ப்பது இல்லை. பெறுபவர் செலுத்த வேண்டியது ஆகும். இன்றும் தந்தை பெரியாரின் தாக்கங்கள் என்பது பார்ப்பனர்களையும்,  பார்ப்பன அடிவருடிகளையும் தாக்குகிறது. எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பவருக்கு அய்யாவே சொல்கிறார், வேறு எவரும் இப்பணியை செய்ய முன்வராததால் என் மேல் நானே போட்டுக்கொண்டு செய்கிறேன் என்கிறார். பகுத்தறிவு என்பது இனம், மொழி என எல்லாவற்றையும் தாண்டியதே. மனிதநேயம் என்பதுதான் அடிப்படை என்பதால், மதம், ஜாதி, இதற்கெல்லாம் காரணம் கடவுள் என்பதால் அதையும் அழித்து ஒழிப்பேன் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவரைப்பற்றி அவதூறு பரப்புவது என்பது பிற்போக்குதனங்களை கட்டி காப்பவர்கள் என்று அடையாளம் காண்போம்.