1987 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஒரு நாள். புதுடில்லியின் ஆடம்பர விடுதி ஒன் றின் அறையில் - இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் குழாய்ப்புகை பிடித்தபடி கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார். ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந் திய அரசும் இலங்கை அரசும் ஈழத்தில் அமை தியை ஏற்படுத்தத் திட் டம் போட்டிருந்த ஒரு யோசனைக்கு அவரின் சம்மதத்தை அளிக்கும் படி வற்புறுத்திக் கொண் டிருந்தார்.
தமிழர் பெரும்பான் மையாக வாழும் பகு திக்கு கூடுதல் அதிகா ரங்களை அளிக்கும் திட் டத்திற்கு நிபந்தனை - புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பதுதான் திட்டம். தனி நாடு கோரிக்கை யைக் கைவிடவேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. எதையும் ஏற் றிட பிரபாகரன் தயா ராக இல்லை.
நாங்கள் சொல்வ தைக் கேட்காவிட்டால், இந்தப் புகைக் குழாய்ப் புகையிலை தீர்வதற்குள் உம்மைத் தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அந்த அதிகாரி கூறி னார். அவர் இலங்கைக்கான அன்றைய இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித்.
நான்கு மாதங்களுக் குப் பிறகு விடுதலைப் புலிகளிடம் வசமாகச் சிக்கிக் கொண்டது இந்திய ராணுவம்தான்! ஒரே வாரத்தில் தீர்த்து விடுவோம் என்று போனவர்கள் - மூன்று ஆண்டுகள் போராடி னார்கள் - 1155 இந்திய ராணுவ வீரர்களைச் சாகக் கொடுத்தனர்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இலங்கை ராணுவம் விடு தலைப்புலிகளை முற்றி லுமாகத் தீர்த்துக் கட்டி விடும் என்றும் பிரபாக ரனை உயிருடனோ, இல் லாமலோ பிடித்து விடும் என்றும் கூறு கிறது. புதுக்குடியிருப் பைப் பிடித்துவிட்ட தாக ஏப்ரல் 5 இல் அறி வித்தது. 420 புலிகளின் உடல்களைக் கைப்பற்றி யதாகக் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங் களாக ஏதுமறியாத் தமி ழர்கள் கொல்லப்பட் டுக் கொண்டிருக்கும் போர் இல்லாப் பகுதி யில் 20 கி.மீ. பரப்பிற் குள் பிரபாகரன், அவ ரது மகன் சார்லஸ் ஆன்டனி, பொட்டு அம் மான் போன்ற தலைவர் கள் முடக்கி வைக்கப் பட்டிருப்பதாக ராணு வச் செய்தித் தொடர் பாளர் பிரிகேடியர் உதயா நானயக்கரா கூறுகிறார்.
அவர்கள் தப்பிப்ப தற்கு வழியே இல்லை என்று கொழும்பிலி ருந்து தெகல்கா இத ழுக்குக் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலை வர் நடேசன் இதனை ஏளனமாகப் புறந்தள்ளு கிறார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ராணு வத் தளபதி சரத் பொன் சேகா பத்திரிகையாளர் களிடம் பேசும்போது, கடல் வழியாக பிரபா கரன் தப்பிச் சென்று விட்டார் எனக் கூறி னார்.
ஏப்ரல் முதல் நாளன்று பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன் டனி சண்டையில் காய மடைந்தார் என்றனர். புலிகள் இதனையும் மறுக்கின்றனர். இப் போது இலங்கை ராணு வம் ஆன்டனியைத் தீவி ரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது. அவர் போர் முனையில் படையை நடத்துகிறார் எனத் தெரிகிறது.
ஆன்டனி இரண்டு சக்தி வாய்ந்த குண்டு களைத் தயாரித்துள் ளார் என இணைய தளத்தில் செய்தி வெளி யிட்ட இலங்கை ராணு வம், இதுபற்றிய விவ ரங்களைச் சொல்ல வில்லை. 2007 முதல் பல் வேறு குற்றங்கள் தொடர் பாக அவரைச் சம்பந்தப் படுத்துகிறது ராணுவம்.
அவர் சிறந்த தொழில் நுட்ப அறிவுள்ளவர்; அவர்தான் பிரபாகர னின் லட்சிய தீபத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிப்பவராக இருப் பார்.
இலங்கையின் நிலப் பரப்புக்குள், ஈழம் எனும் பெயரில் தனி மாநிலத்தை பிரபாக ரன் அமைத்துவிட் டார். 150-க்கு 100 கி.மீ. என்ற அளவில் இலங் கையின் வடபகுதியில் அமைத்து தங்களது நிருவாகம், நீதிமன்றம், ராணுவம், கடற்படை, விமானப் படை போன் றவற்றை அவர்கள் வைத் திருந்தார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராஜபக்சே அரசு மீறி விட்ட 6 ஆண்டுகாலத் தில் இவற்றைத் தாக்கி வந்து, கடந்த 2008 ஜனவரியில் நேரடியான போரையே தொடுத்து விட்டது.
குசால் பெரரா எனும் இலங்கையின் இதழா ளர் ஒருவர் கூறுவது போல, இந்தக் குட்டி மாநிலத்தைச் சிறுகச் சிறுக அழித்துவிட்டார் கள். அதில் கடைசியாக அழிக்கப்பட்ட பகுதி தான் புதுக்குடியிருப்பு என அவர் கூறுகிறார். மறுதலிக்கும் லங்கா (Lanka Dissent) எனும் ஏட்டின் ஆசிரியர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வெளி யேற்றப்பட்ட இலங் கையின் கிழக்குப் பகுதி யில் இருந்து, கொரில்லா தாக்குத லைத் தொடங்க விடு தலைப்புலிகள் திட்ட மிட்டிருப்பதாக நம்புகிறார். (அரசின் கொள் கைகளைக் கண்டித்து எழுதிய காரணத்திற் காக பத்திரிகை ஆசிரி யர் வசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தன் பின்னர், இவரும் தன் இணைய தளத்தை மூடிவிட்டார்).
சிறீலங்காவின் கிழக் குப் பகுதிகளான பட்டி கோலா, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதி களுக்கு விடுதலைப்புலி கள் ஊடுருவிச் சென்றுள் ளதாகப் பெரரா கூறு கிறார். கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து அவர்கள் காவல்துறை, ராணுவம், அரசுக்கு ஆதரவான கரு ணாவின் கூட்டம் ஆகிய வற்றைத் தாக்கி வருகின் றனர்.
அம்பாறையில், ஏப் ரல் 5 ஆம் நாள் காவல் அதிகாரி எச்.எல். ஜமால் தீன் என்பவரைப் புலி கள் சுட்டுக் கொன்றுள் ளனர். இதற்கு 2 நாள் கள் முன்பாகத்தான் 13 புலிகளைக் கொன்ற தாக ராணுவம் கூறியது. ஏப்ரல் 1 இல் ஒரு ராணுவ வீரர் கொல்லப் பட்டார்; ஒருவர் கையெறி குண்டுத் தாக்குதலில் பட்டிகோலாவில் காய மடைந்தார். அதற்கும் சில நாள்கள் முன்ன தாக, அதே பகுதியில் 6 சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டனர். அம்பாறை யில் மார்ச் 26 இல் கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கும் ஒரு வாரத் திற்கு முன்பு பட்டி கோலாவில் சிறப்புப் பாதுகாப்புப் படையின ரைத் தாக்கி 3 வீரர் களைக் கொன்றுவிட்ட னர்.
இதுவரை அப்பாவி மக்கள் 3 ஆயிரம் பேர் தாக்குதலில் கொல் லப்பட்டுள்ளனர்.
இலங்கை ராணுவத் திற்கு ஏற்பட்ட சாவுக் கணக்கு பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுவது கிடையாது. இலங்கை எதிர்க்கட்சியான அய்க்கிய சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் சிறீ துங்க ஜயசூரியா, இது வரை 10 ஆயிரம் படை வீரர்கள் கடந்த 2 ஆண் டுகளில் கொல்லப்பட் டனர் எனக் கூறுகிறார். ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் இவர் போட்டியிட்டவர்; அர சின் கொள்கைகளைக் கடுமையாகத் தாக்குபவர்.
ராணுவத்தின் இணைய தளத்தில் உள்ள செய்தி இது: சமீப காலத்தில் திரி கோணமலை, பட்டி கோலா, அம்பாறை ஆகிய பகுதிகளில் நுழைந் துள்ள புலிகள் தாக்குத லில் ஈடுபட்டு மக்களை யும், படையினரையும் ஆத்திரமூட்டுகின்றனர்.
பல விடுதலைப்புலி கள் அடர்ந்த முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக் குள் நுழைந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் 1980 களில் இந்தியப் படையுடன் புலிகள் மோதிப் பலரையும் கொன்றனர். உண்மை யிலேயே, இந்தப் பகுதி புலிகளின் (குகைகள்) வாழ்விடம்தான். இந்தி யப் படையின் வலு வான தடுப்பு நடவடிக் கைகளுக்குப் பின்னரும் புலிகள் நிறைய படைக் கலன்களைக் கடத்தி வந்தனர் என்று 1987-இல் இப்பகுதியில் போர்ப் படைக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.
இதே கருத்தை யாழ்ப் பாணத்தின் நாடாளு மன்ற உறுப்பினர் என் சிறீகாந்தா எதிரொலிக் கிறார். ஆயிரக்கணக் கான புலிகள் காட்டுக் குள் கலந்து உறைகின்ற னர் என்று தெகல்கா ஏட்டுக்கு சிறீகாந்தா தெரிவித்தார்.
சிறீலங்கா படையி னரைத் தாக்கும் கொரில்லா போரை பிரபாகரனின் மகன் ஆன்டனி தலைமை தாங்கி நடத்துவார் என்று நோக்கர் கள் கருதுகின்றனர்.
பிரபாகரனைப் பேட்டி கண்டு பெயர் பெற்ற அனிதா பிர தாப், என்றாவது ஒரு நாள் ஆன்டனி தன் தந் தையிடம் இருந்து தலை மைப் பொறுப்பைப் பெறுவார் என்று கூறு கிறார்.
தலைமைப் பொறுப் பைப் பெறுவது எளிது: ஆனால், அவரின் லட்சி யத்தை வரித்துக் கொள் வது எளிதானதல்ல எனக் கூறும் இவர், அந்த ஆசைகளை நிறை வேற்றுவாரா என்ப தைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்.
தரவு: தெகல்கா, 18.4.2009
தமிழில்: அரசு
courtesy: viduthalai leading rationalist tamil daily. 30-4-2009